Translate this blog to any language

வெள்ளி, 1 ஜனவரி, 2010

2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புத்தாண்டு பிறந்து விட்டது நண்பர்களே !
எப்போதும் போல இந்த 2010 ஆம் ஆண்டு நமக்கு நன்மைகள் பலவும் கொண்டு வரும் என்று நன்றாக நம்புவோம். என்ன செய்வது நம்பிக்கை தானே வாழ்க்கை. 2009 ஆம் ஆனது நமக்கு பல சோகங்களை கொணர்ந்து தந்து விட்டு சென்று உள்ளது. ஆறாத ரணங்களையும் வரலாற்றில் அவப்பெயரையும் தான். ஆம் ! என்னதான் போராடினாலும் சில சமயம் உண்மை தற்காலிகமாக தோற்று அதர்மம் ஜெயித்து விடுகிறதே. அதைதான் விதி என்றார்களோ?
ஈழத் தமிழர்களின் முடிவற்ற துன்பம், முத்துக் குமாரின் தியாகம் வீண் போனது, இந்திய இலங்கை அரசுகளின் துரொகம் மத்திய மாநில அரசுகளின் நாடகம், இன்னும் உலக நாடுகளின் பாரபட்ச-பாராமுகம் போன்ற அதிர்ச்சியான காட்சிகள் கண்டேன். எனினும் உலகம் தன்னை தொடர்ந்து செப்பனிட்டே வந்துள்ளது உண்மை. எனவே, நம்புவோம்! கதி இழந்த நல்லவர்களுக்கு நன்மைகள் வந்து சேரும் என்றும் "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பின்னொரு நாள் தர்மம் வெல்லும்" என்றும்!
சரி! நீங்கள், உங்கள் குடும்பம், தெரு, ஊர் யாவும் நன்றாக இருக்க வாழ்த்துக்கள்!
-மோகன் பால்கி