Translate this blog to any language

ஞாயிறு, 8 ஜூலை, 2012

ஹிக்ஸ்-போசான்(Higgs-Boson)எனும் கடவுள்-துகள் (God-Particle) பற்றி ஒரு அறிமுகம்:




ஹிக்ஸ்--போசான் ( God-particle or Higgs-Boson particle) என்பது என்ன?

தற்போது அது ஏன் பரபரப்பாக விஞ்ஞானிகளால் பேசப்பட்டு வருகிறது
அதற்கு முன்னர் நான் வேறு ஒரு விஷயம் பேசுவேன்!
அறிவியலாளர்களுக்கு வெகு காலமாய் ஒரு கேள்வி இருந்து வருகிறது.
பருப் பொருள்களுக்கு எடை எப்படி உண்டாகிறது என்பதே அது!!

ஒரு அங்குலம் கன சதுர வடிவமுள்ள ஒரு இரும்புத் துண்டுக்கும், அதே அளவுள்ள ஒரு தங்கத்துக்கும் அடிப்படையில் எடை மாறுபாடு ஏன் உண்டாகிறது (வெவ்வேறு தளங்களில் இயங்கும் ஈர்ப்பு விசையை (Gravity) அங்கு கணக்கில் கொள்ளாமல்)?

உதாரணமாக இரும்பின் அடர்த்தி சுமார் 7.874 g.cm -3
அதுவே தங்கத்தின் அடர்த்தி 19.30 g.cm -3
இரும்பின் அணு எடை 55.847
தங்கத்தின் அணு எடை 196.9655

அவற்றின் எடைக்குக் காரணம், அவற்றின் அணுவுக்குள் ஒளிந்திருக்கும் எலெக்ட்ரான், ப்ரோடான், நியூட்ரான் (Electron, Proton, Neutron the three fundamental

sub-atomic particles. There are more sub-atomic particles and antiparticles in a single atom) என்று சொன்னாலும் கூட, அந்த மூன்றும் வெறும் அலைகளே அல்லவா? அலைகளுக்கு எப்படி எடை வந்து அவை பொருளாக மாற இயலும்? அதுவும் அந்தப் பொருள்கள் வெற்றிடத்தில் இருந்து...கருந்துளைகளில் இருந்து எப்படி வெளியாக இயலும்?
வெற்றிடம் அல்லது வளி மண்டலம் ( The Space) என்பது சார்பற்றதா அல்லது சார்புற்று தனித் தனியே தாம் சார்ந்த பொருள்களுடன் நகரும் இயல்புடையதா? அப்படியாயின் எண்ணற்ற வளி மண்டலங்கள் உள்ளனவா? அதாவது பூமிக்கு ஒரு வளிமண்டலம்-அதாவது பூமியோடு நகரும் வான வளி. அதே போன்று, சந்திரனுக்கு ஒரு வளி மண்டலம்-சந்திரனோடு நகரும் வான வளி. இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள வளி..அது யாருடையது அய்யா?? அதேபோன்று, எனக்கென்று ஒரு வளிமண்டலம், உங்களுக்கென்று ஒன்று...இந்த அணுவுக்கு இந்தவொரு சிறு வளி-அந்த அணுவுக்கு இன்னொன்று.. இவ்வாறாக?

நீரில் வாழும் மீன்களுக்கு நீர் ஒரு கவசம் போல இருக்கிறது. எனினும் அங்கு தனித் தனி நீர் நிலை என்பது கிடையாது-அங்கு நீர் என்பது ஒரு ஒரே தொகுப்பு. ஆனால், இங்கே நமது வளி மண்டலம் அப்படி ஒன்றே ஒன்றாக இல்லை என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். பார்ப்பதற்கு வானம் என்பது ஒரு மாறாத ஒற்றைப் பின்புலம் போலத் தோன்றினாலும்.....

வெள்ளி, 8 ஜூன், 2012

Jadav "Molai" Payeng, Single man Planted 1,360 Acre Forest in India!


More than 30 years ago, a teenager named Jadav "Molai" Payeng began planting seeds along a barren sandbar near his birthplace in India's Assam region, the Asian Agereports.

It was 1979 and floods had washed a great number of snakes onto the sandbar. When Payeng -- then only 16 -- found them, they had all died.

"The snakes died in the heat, without any tree cover. I sat down and wept over their lifeless forms," Payeng told the Times Of India.

"It was carnage. I alerted the forest department and asked them if they could grow trees there. They said nothing would grow there. Instead, they asked me to try growing bamboo. It was painful, but I did it. There was nobody to help me," he told the newspaper.

Now that once-barren sandbar is a sprawling 1,360 acre forest, home to several thousands of varieties of trees and an astounding diversity of wildlife -- including birds, deer, apes, rhino, elephants and even tigers.

The forest, aptly called the "Molai woods" after its creator's nickname, was single-handedly planted and cultivated by one man -- Payeng, who is now 47.

According to the Asian Age, Payeng has dedicated his life to the upkeep and growth of the forest. Accepting a life of isolation, he started living alone on the sandbar as a teenager -- spending his days tending the burgeoning plants.

Today, Payeng still lives in the forest. He shares a small hut with his wife and three children and makes a living selling cow and buffalo milk, OddityCentral.com reports.

According to the Assistant Conservator of Forests, Gunin Saikia, it is perhaps the world’s biggest forest in the middle of a river.

"We were surprised to find such a dense forest on the sandbar," Saikia told the Times Of India, adding that officials in the region only learned of Payeng's forest in 2008.

Finally, Payeng may get the help -- and recognition -- he deserves.

"[Locals] wanted to cut down the forest, but Payeng dared them to kill him instead. He treats the trees and animals like his own children. 



"We're amazed at Payeng," says Assistant Conservator of Forests, Gunin Saikia. "He has been at it for 30 years. Had he been in any other country, he would have been made a hero."

Yes! A real Hero labelled "uneducated" is educating our educated world by his dedicated deeds rather than mere articulating words!!


What are we going to do?

-Yozenbalki

உன்னத மனிதர் திரு. ஜாதவ் பயேங் (Jadav Payeng)


இந்தியாவின் பெருமை திரு. ஜாதவ் பயேங் (Jadav Payeng. Called as 'Mulay')!

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது... நம் எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். கேட்டால் 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை ' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி அடக்கமாய் முடித்துக் கொள்கிறார். அப்படி என்ன செய்தார்?!! 

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் 
தனி நபராக ஒரு அழகிய பசுமைக் காட்டை
உருவாக்கி இருக்கிறார்...!

யார் இவர் ?  

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண கிராமவாசி 
திரு.ஜாதவ் பயேங் , அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அன்புடன் அழைக்கின்றனர். 

பிரம்மபுத்திரா நதியில் 1979ம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வரப்பட்டிருக்கிறன. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால்தான் இந்நிலை எனப் புரிந்து கொண்டபோது இவரது வயது 16! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம் முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்... ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார்.

1980ம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் அங்கு வாழும் மக்கள் மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்றுவிட, இவர் மட்டும் மரக்கன்றுகளை பராமரித்துக் கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும் மற்றவர்களும் இதனை அப்படியே மறந்து விட்டனர். அந்த பக்கம் யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு:

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்... ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்புகளை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு வெகு விரைவில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்... இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள்!!

இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும்,உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008ம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என்று வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக ஆச்சர்யம்  அடைந்திருக்கின்றனர்.

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்துக் கொள்கிறார்.

டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபடத் தயார்," என்கிறார் இந்தத் தன்னலமற்ற மாமனிதர்!!
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இதுவென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த, எந்தப் பெரும் படிப்பும் படிக்காத பாமரர் இவரை என்ன சொல்லி எந்த மொழியில் பாராட்ட?

மெத்தப் படித்தவர்கள் கேள்வி முறையின்றி மரங்களை வெட்டிச் சாய்த்து 'கான்க்ரீட் சிறை-நகரங்களை' உருவாக்கிக் கொண்டிருக்க, படிக்காத பாமர தெய்வங்கள் அழகிய வனங்களை இந்நாட்டில் சப்தமின்றி உருவாக்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்! வெட்கப்பட வேண்டும் நாம்! 

ஜாதவ் போன்ற மனித தெய்வங்களை வணங்கி, அவரளவுக்கு இல்லாவிட்டாலும் நம் வாழ்வில் குறைந்தது பத்து மரங்களாவது நட்டு வளர்ப்போம்!

புவி வெப்ப மயமாவதை தடுத்து நமது வருங்கால சந்ததிகளுக்கு இந்த பூமியை ஒரு 'வாழும்-நிலையில்' நாம் விட்டுச் செல்லுவோமே!

- நன்றி: http://tamil.webdunia.com
                   http://www.huffingtonpost.com
                   http://www.treehugger.com
_________________________________
மேலதிக விவரங்களுக்கு: Jadav "Molai" Payeng
Go to Google and just type "Jadav Payeng" or 'Jadav "Molai" Payeng.

ஞாயிறு, 20 மே, 2012

Bad to Heaven & Good to Hell? சிடுமூஞ்சிக்கு சொர்க்கம்-சிரித்த முகத்துக்கு ஏன் நரகம் ?


ஒரு ஊரில் இரண்டு பாட்டிகள் இருந்தார்கள்.
ஒன்று சிடுமூஞ்சி, இன்னொன்று சிரித்த முகம்!


இரண்டு பேரும் அதே ஊரில் ரெண்டு தெருக்களில் இட்லி சுட்டு விற்று வந்தார்கள்! காலம் வருகையில் காலன் அழைக்க முன்பின்னாக மேலோகம் சென்றார்கள். 'சிரித்த முக' பாட்டிக்கு ஏனோ நரகம் சித்திக்க அவளுக்கு அப்போது 'சிடு மூஞ்சி' பாட்டியின் நினைவு வந்தது. நமக்கே இந்த கதி-அவளுக்கு என்ன கதியோ என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்! அவள் சித்திர குப்தனை அணுகி விசாரிக்க "ஒ ! அவர்களா..? அவர்கள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள்" என்றான் அவன்!

வந்ததே கோபம் சிரித்த முகப் பாட்டிக்கு! "அவள் போய் இங்கு -'அவர்களாமா'? தாம்-தூம் என்று எகிறிக் குதித்த சிரித்த முகப் பாட்டி, அப்போது இராட்சசி ஆனாள். "உங்கள் எமலோக அரசு, இந்திய அரசை விட படு மோசம்..நல்லவர்கள் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. கெட்டவர்களுக்கு சொர்க்கமும், நல்லவர்களுக்கு நரகமும் தருவதா எமதர்ம ராஜனின் தர்மம்.." அது இது என்று வசை பாடி வாய்க் கூசும் கெட்ட வார்த்தைகளில் பழி தூற்றினாள். எமபட்டணமே அங்கு வந்து குவிந்து இந்த சண்டையை வேடிக்கைப் பார்க்க, சித்திர குப்தனுக்கு அப்போது மஹா கோபம் வந்தது. அவன் தனது "தர்மப் பேரேட்டை" விரித்து அதற்கான காரணம் கணக்கு கூறலானான்!

சிரித்த முகப் பாட்டி:

அடுத்தவர்களுக்கு உதவியாய் இருந்த கால அளவு: 13,14,000 நிமிஷங்கள் 
பதிமூன்று இலட்சம் நிமிஷங்கள் என்க!
( ஒரு நாளைக்கு காலையில் மட்டும் நான்கு மணி நேரம் - பல நாட்கள் கோவில் குளம், 
நல்லது கெட்டது என்று சென்று வாயாடிக் கொண்டு 'கடை' திறப்பதே இல்லை.  
எனவே, சராசரி மூன்று மணி நேரம்- 25 வாடிக்கையாளர்கள், 
இருபது வருட உழைப்பு மட்டுமே!)
சுட்டுப் போட்ட இட்டிலிகள் 20x25x365x5 = 9,12,500
ஒன்பது இலட்சம் இட்லிகள்...
(ஒருவருக்கு சராசரி ஐந்து இட்லிகள் (கொஞ்சம் ருசியாய் இருக்கும்) வீதம்)

ஆக, இவளால் உலகுக்குப் பயன் குறைவு! நான் எதையாவது செய்தால் நூறு சதவிகிதம் அர்ப்பணிப்போடு செய்வேன்- இல்லையா வருஷக் கணக்கில் சோம்பேறியாய் இருப்பேன் என்று சொல்லும் ரகம் இவள்!

சிடு மூஞ்சிப் பாட்டி: 
அடுத்தவர்களுக்கு உதவியாய் இருந்த கால அளவு: 1,05,12,000 நிமிஷங்கள் 
ஒரு கோடி நிமிஷங்கள் என்க! (அம்மாடியோவ்...)
( ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வீதம் அறுபது 
வருட உழைப்பு மட்டும் சேர்க்க)
ஒரு நாளைக்கு காலை-மாலை என்று பயன் அடைந்தவர்கள் விகிதம் 
சராசரி 60 பேர்கள் 
சுட்டுப் போட்ட இட்டிலிகள் 60x60x365x4 = 52,56,000
ஐம்பத்தி இரண்டரை இலட்சம் இட்லிகள்..
(ஒருவருக்கு சராசரி நான்கு இட்லிகள் (கொஞ்சம் ருசி குறைவுதான்) வீதம்)

ஆக, இவள் ஒரு நிஷ்காம்ய கர்மி! நிறைய மக்களுக்கு தொண்டு செய்தவள். எண்ணற்ற வயிறுகள் பசியாற உதவியாய் இருந்தவள். தரத்தை விட, நேரம் தவறாமையும் தொடர்ந்த உழைப்பும் உடையவள்.

சித்திர குப்தன் தொடர்ந்தான்: 

"நீ நல்லவள், நல்ல தோற்றம் உடையவள், இனிய பேச்சு பேசுபவள் என்பதெல்லாம் உன்னை உயர்ந்தவளாக காட்டிக் கொள்ளும் கர்வம் தவிர வேறென்ன? உன்னால் இந்த உலகத்துக்கு என்ன பயன் என்பதை வைத்தே எங்களுடைய 'எமலோக-கணக்கு வழக்குகள் அமையும். 'நிஷ்காம்ய கர்மமே' உயர்ந்த தவம்; கர்ம யோகமே இறைவனை அடையும் பாதை! நீ அன்றைக்கு பூவுலகில் இனிய மொழி பேசி நல்லவளாக நடித்து இன்றைக்கு இழிந்த மொழி பேசுவதை சற்று நினைத்துப் பாரேன்! 
நீ, பொறுமை இழந்தவளாகவும், அடுத்தப் பெண்ணை ஒப்பிட்டுப் பார்க்கும் குயுக்தி மனப்பான்மை கொண்டவளாகவும், மேலும் உயர்ந்தவர்களையே சந்தேகப்படும் இயல்பு கொண்டவளாகவும் இருக்கின்றாயே! எங்கள் தரப்பு நியாயங்களைக் கேட்கும் முன்பாகவே நிதானம் தவறி நீ கொட்டிய வார்த்தைகளை மீண்டும் எப்படிப் பொறுக்கி எடுக்கப் போகிறாய்! அதற்கொரு நரகமும் எங்கள் பேரேடுகளில் தானாகவே (Akashic Records) எழுதப் பட்டு விட்டது", என்று அமைதியாய் சொல்லி முடித்தான்!

அதைக் கேட்ட சிரித்த முகப் பாட்டியின் கண்களில் கண்ணீர் வற்றாத ஆறாக ஓடிக் கொண்டிருந்தது! மேலும் கேள்வி கேட்க பயந்து அவள் மவுனமாய் நின்றாளே தவிர, 'சித்திரகுப்த' உண்மையை அவள் இன்னும் உணர்ந்த பாடில்லை!

திங்கள், 14 மே, 2012

"கணினி" கண்-நோய்- நீங்கள் ஜாக்கிரதை - Computer Vision Syndrome


"நவீன உலகில் இன்று நாம் அதிக நேரம் செலவிடும் கணினி, செல்பேசி, தொலைக் காட்சி மூலமாக நமது கண்களுக்குத்தான் அதிக வேலைத் துன்பம் தர ஆரம்பித்து விட்டோம். அத்தோடு தூரம்-வானம்-பறவை என்றெல்லாம் பார்க்க நேரமும் வாய்ப்புமின்றி மனிதக் கண்களுக்கு தூரம் பார்க்கிற திறமையும் மங்கி வருகிறது."



இப்பல்லாம் எனக்குத்தான் எத்தனை தொல்லை..???
அடப் பாவிங்களா!!


நவீன அறிவியல் நமக்கு பல வசதிகள் தந்துள்ளது.

அத்தோடு சில தீமைகளையும் தான்!

நவீன எந்திரங்கள் நமது கை-கால்களை- உடலை அதிகம் அசைக்கத் தேவை இல்லாத படி செய்து விட்டன. எல்லாமே விரல் அசைவில் கிடைக்கும் அளவுக்கு மனித வேலையை எந்திரங்கள் பலவும் செய்து தந்து விடுகின்றன.

அதனால், தற்காலத்தில் நமது கண்களுக்கு அதிக வேலை பளு உருவாகி விட்டது. சொல்லப் போனால்....(Contd....)

புதன், 9 மே, 2012

Visibility Road Splays: A must in Chennai !! நமது சென்னை சாலைகள் 'அப்படி' இருக்கிறதா?

ஒரு நீரோட்டம் எப்படி செல்கிறதோ அப்படியே வழி விட்டால்தான் எந்த ஒரு போக்குவரத்தும் தடையின்றி செல்ல இயலும்! சென்னையில் பெரும்பாலான இடங்களில் வாகன நெரிசலுக்குக் காரணம் வழி நெடுக காணப் படும் தடைகள்தாம்! 


                A Wrong Road without Splay


               A rightly 'splayed' Road

நீரோட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! அது எப்போதுமே செங்குத்தான திசையில் திரும்புவதில்லை. சற்று வளைந்து, வளைகிற இடத்தில் கொஞ்சம் விசாலமான இடத்தை எடுத்துக் கொண்டே அது திரும்பி பயணம் செய்கிறது! 

ஒரு தண்ணீருக்கு இருக்கிற அறிவு நமது சாலை உருவாக்க பொறியாளர்களுக்கு (Road Construction Engineers) இருப்பதில்லை போலும்!! 
இங்கு, நமது தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களை நான் சொல்லவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளை காணும்போது, நானும் ஒரு பொறியாளர் என்னும் வகையில் சொல்வதானால், குறைந்தது 80-90% தர நிர்ணயம் அங்கு நிச்சயம் காணப் படுகிறது! 

ஆனால், சுதந்திரம் பெற்று சுமார் 65 வருடங்கள் ஆகும் நிலையிலும், சென்னை நகரத்தில் பெரும்பாலான இடங்களில் கிட்டதட்ட "L" வடிவத்தில் திரும்பும் தெருக்களை சாலைகளை நாம் இன்றும் பார்க்கலாம்! இதனால், எவ்வளவு மோசமான நெரிசல், வேகத்தடை, எரிபொருள் விரயம் ஏற்படுகிறது என்று எவரும் உணர்வதில்லை! சில நேரங்களில் காரணம் புரியாமல் மணிக்கணக்கில் சென்னையில் வாகனங்கள் நகரும். ஏதோ விபத்து போலும் என்று நாம் எல்லோரும் நினைப்பதுண்டு. ஆனால், குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும் போது தான்...(Contd,,)

சனி, 5 மே, 2012

"I am-the God" Vulgarians!! தன்னையே கடவுளாக வரித்துக் கொள்ளும் 'ஈனப் பிறவிகளுக்கு 'ஒரு கேள்வி?


இன்று மாலை காலாற நடந்து செல்கையில் "பெரம்பூர் அன்ன தான சமாஜம்" அருகில் ஒரு மமதை மிக்க உபன்யாசக் குரல் கேட்டுக் கொண்டு இருந்தது! போகிற வழியில் ஒரு பார்வையில் மக்கள் சில நூறு பேர் அங்கு அமர்ந்திருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.

அந்த உபன்யாசக் குரலில் ஒருவித எல்லாம் தெரிந்த பாவம், வாழ்க்கையைக் கரைத்துக் குடித்த அஹங்காரம், இளக்காரமான தொனியை உணர்ந்தேன். 

எனக்கு கருத்துக்களை விட கருத்தறிவிக்கும் கருவிகளே முக்கியமாகப் படும்! ஏனெனில், கருத்துக்கள் எப்போதுமே உலகில் இங்கு புதியனவல்ல; அது பலராலும் பல காலத்திலும் சொல்லப் பட்டுவந்தவைதான்

சுரேஷ் என்பவர் சொன்ன ஒரு கருத்தை ரமேஷ் என்பவர் கொஞ்சம் கூட்டியும் குறைத்தும் சொன்னால் அது ஒரு புத்தம் புதிய கருத்தாகிவிடுமா? ஆறுமுகம் இன்று நெய்த புடவை தான் உலகில் புத்தம் புதிதானதா? அல்லது அதில் தொங்க விடப் பட்ட குஞ்சலங்கள்தான் புதிய படைப்பா? அப்படி இருக்க, இந்த உபன்யாசிகளும், ஆன்மிக சொற்பொழிவாளர்களும், சாமியார்களும் தம்மை புத்தம் புது கருத்தாளர்களாக மமதையோடு கருதிக் கொள்வதும், கர்வத்தோடு பேசுவதும் அதற்கொப்ப நமது அப்பாவி மக்களும் குற்ற உணர்வோடும் பய பக்தியோடும், மெய் ஒடுங்கி அமர்ந்து கிடப்பதைப் பார்க்கும் போது எனக்கு பெருஞ் சிரிப்பு தான் வருகிறது! 

பத்து புத்தகங்களை படித்த ஒருவன் பதினோராவது புத்தகம் எழுதுவது போல, இந்த 'ஞான-வேஷம்' போடுபவர்கள் நிறைய புத்தகங்களைப் படித்துவிட்டு அப்படியே வாந்தி எடுப்பதை ....(Contd..)