Translate this blog to any language

திங்கள், 15 அக்டோபர், 2012

டெங்கு காய்ச்சலில் தப்புவது எப்படி? Ways to escape from Dengue fever!


டெங்கு, பகலில் கடிக்கும் கொசுக்களால் பரவுகிறது: 

டெங்கு காய்ச்சலில் தப்புவது எப்படி?




எலிக் காய்ச்சல், பறவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று உலகில் உருவெடுக்கும் புது புது காய்ச்சல்கள் அத்தனையும் நம்மை ஒரு புரட்டு புரட்டி விட்டது. இப்போது “டெங்கு” காய்ச்சல் மிரட்டுகிறது. லேசான உடல் வலி... கொஞ்சம் வெப்பம் உடலில் தெரிந்தாலே டெங்குவாக இருக்குமோ என்ற பயம் தொற்றிக் கொள்கிறது.

டெங்குவை நினைத்து பீதி அடைவதை விட அதைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக கொசுக்களால்தான் பல வியாதிகள் பரவுகிறது.ஆனால் டெங்குவை பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்தில்தான் கடிக்கும் ஏடிஸ் ஏஜிப்டி என்ற வகையை சேர்ந்த இந்த கொசுக்கள் தென் கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய வெப்ப மண்டல நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.

இக்கொசுக்கள் தேங்கியுள்ள மழைநீரில், நன்னீரில் இனப்பெருக்கம் செய்யும். சூரிய உதயத்திலிருந்தது 2 மணி நேரமும் சூரியன் மறையும் மாலையில் 2 மணி நேரமும் இவை கடிக்கும்.

டெங்கு வைரசில் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 அகிய 4 வகை வைரஸ்கள் உள்ளது. தண்ணீர் தேங்கும் பகுதிகள், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்கள், பாசன பகுதிகளில் ஈடிஸ் கொசுக்கள் உற்பத்தி தாராளமாக இருக்கும். டெங்கு காய்ச்சலாக இருந்தால் காய்ச்சல் திடீரென ஏற்பட்டு திடீரென உடல் வெப்பம் அதிகரிக்கும். தலைவலி, உடல்வலி, எலும்பு மூட்டுகளில் வலி இருக்கும்.

2 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சல் இருந்து கொண்டே இருக்கும். காய்ச்சல்தானே ஒரு மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும் என்று நாமே மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும்.



டெங்கு டைப்-1 பாதிப்பால் தொடர்ந்து ஒரு வாரம் காய்ச்சல் இருக்கும். வேறு பாதிப்புகள் இருக்காது. ஒரு முறை டெங்குவால் பாதிக்கப்பட்டு சில நாட்கள் இடை வெளியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் வந்தால் 2-ம் நிலையில் இருப்பவர்களாக கருதப்படுவார்கள். ரத்தம் உறைவதற்கு தேவையான ரத்த வட்டுகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும், வாய், மூக்கு பகுதிகளில் ரத்தம் வெளிவரும். இதில் நோய் முற்றியவர்கள் டைப்-3க்கு தள்ளப்படுகிறார்கள்.

இவர்களுக்கு ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து ரத்த அழுத்தம், நாடி துடிப்பு குறையும். மயக்கம் ஏற்படும். உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் ஏற்படும். டைப்-2, டைப்-3 நிலையில் இருப்பவர்கள்தான் அபாயம் ஏற்படும். ஆனால் இப்போது முதல் நிலை பாதிப்பு மட்டுமே இருப்பதால் பீதி அடைய வேண்டியதில்லை.

டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த:- வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோ சைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பரிசோதனை செய்தல். எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படும்.

கொசுக்கடியில் இருந்து காப்பதன் மூலம் டெங்கு வராமல் தடுக்கலாம். எனவே வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தொட்டிகள், குடங்களில் பல நாட்கள் தண்ணீரை சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். எப்போதும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.



டெங்கு சுரத்திற்கு தடுப்பு மருந்துகள் உள்ளனவா?

ஆங்கில மருத்துவத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை
என்கின்றனர் !

சித்த, ஆயுர்வேத மருந்துகள் பெரிதும் பயனளிக்கின்றன.

நிலவேம்பு கசாயம் தினம் - காலை / மாலை 30 மிலி வெறும் வயிற்றில் 3 வாரம் தொடர்ந்து பருகினால் டெங்கு உள்ளிட்ட வைரஸôல் பரவும் சுரங்களைத் தடுக்க முடியும்.

ஆயுர்வேதத்தில் அம்ருதாரிஷ்டம் (Amrutha Aristitam) 25 மிலி மருந்து சமஅளவு வெந்நீருடன் கலந்து காலை, மாலை பருகினால் டெங்குவை தடுக்க முடியும்.

சித்த மருந்துகளில் பிரமானந்த பைரவம், வாதசுர குடிநீர் போன்றவை டெங்கு சுரத்தைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகின்றன.
____________________________________________________________

எனது அணுக்க நண்பர் ஒருவர் தன் 17 வயது மகனுக்கு டெங்கு சுரம் வந்து ரத்தத் தட்டணுக்கள் குறைவு ஏற்பட்டதையும், பிறகு அதனை பப்பாளி மரத்தின் இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து ஒரு நாளைக்கு அரை தம்ளர்/ இருவேளை வீதம் இரண்டு நாட்கள் மட்டுமே கொடுத்து அதிசயப் படும்படி குணப்படுத்தியதையும் அடிக்கடி குறிப்பிடுவார். மூன்றாம் நாளே அவரது மகனுக்கு இலட்சக்கணக்கில் ரத்தத் தட்டணுக்கள் கூடியதைக் கண்டு அவரது குடும்ப மருத்துவரே ஆச்சர்யப் பட்டு அந்த வழிமுறையை கேட்டுக் குறித்து வைத்துக் கொண்டாராம்.

Accordingly it is raw papaya leaves, 2 pcs just cleaned and pound and squeeze with filter cloth.
You will only get then one tablespoon per leaf. So two tablespoon per serving once a day is enough. Do not boil or cook or rinse with hot water, it will loose its strength. Only the leafy part and no stem or sap. It is very bitter and you have to swallow it. But it works.
மேலதிகச் செய்திகளுக்கு: http://www.herbalpapaya.com/blog/increase-platelet-count

-Yozen Balki
________________________________________________________________

ரத்தத் தட்டணுக்கள் ( PLATELETS) குறையாமல் காக்கவும், அதனை வேகமாக அதிகரிக்கச் செய்யவும் ஆடாதோடை மூலிகை (ஆரம்ப நிலை தட்டணு குறைவு உள்ளபோது - 1 லட்சம் To 11/2 லட்சம் அளவுக்குள் இருக்கும்போது) சாற்றினை சற்று சூடாக்கி தினம் 10 மி.லி. வீதம் 1 வாரம் சாப்பிட்டால் Platelets அதிகரிப்பதைக் கண்கூடாக காணலாம். (ஆடாதோடை பச்சை இலை கிடைக்காவிட்டால்.... பொடியாக, மாத்திரையாக கிடைத்தாலும் பயன் படுத்தலாம்)

(குறிப்பு : Platelets எண்ணிக்கை மிகவும் குறைந்தால் ரத்தம் செலுத்துவது மிகவும் அவசியம்; நல்லது.)

‘டெங்குவை’ அடங்கச் செய்ய ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளனவா?


உலகப்புகழ் பெற்ற சுமார் 25 ஹோமியோபதி மருந்துகள் வரலாறு நெடுகிலும் டெங்கு, சிக்கன் குனியா, பன்றி சுரம், பறவை சுரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக பயன்பட்டுள்ளன.

1996-ல் டெல்லியில் டெங்கு பேரளவில் தாக்கிய போது அரசின் உத்தரவுக்கிணங்க, டெல்லி மாநில ஹோமியோபதி கவுன்சில் ‘Eupatorium Perf ’ என்ற ஹோமியோபதி மாத்திரையை பல்லாயிரம் பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தாக வழங்கி முழுவீச்சில் டெங்கு சுரத்தைக் கட்டுப்படுத்தினார்கள். மேலும் டெங்கு சுரம், ரத்த கசிவு டெங்கு சுரம் இரண்டையும் (ஆங்கில மருத்துவத்தில் உரிய மருந்துகள் இல்லாத நிலையில்) ஆற்றல்மிக்க 25 ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்திக் காட்டினர்.

ஆதாரம் :http:/www.delhihomeo.com/php/treatment/dengu-pre.htm.

நண்பர்களே! அச்சம் வேண்டாம்!

பெருவாரி நோய்கள் பரவும் காலங்களில்நம் உடலின் தற்காப்புத் திறனை மேம்படுத்திக் கொண்டு நோய் வராமல் தடுக்க முடியும்! நோயின் ஆரம்ப நிலையிலேயே பக்கவிளைவு இல்லாமல் முழுமையாக குணப்படுத்த வாய்ப்புள்ள ஹோமி யோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்துங்கள்.

எளிய கிருமிகளால் மனித உயிர்கள் அழிவது மாபெரும் வீழ்ச்சி! அறியாமை! மனிதன் மகத்தானவன்! மனித உயிர் விலை மதிப்பற்றது! மனித உயிருக்கு அரணாய் திகழும் மாற்று மருத்துவங்கள் இருக்க வீண் பயமும் பீதியும் எதற்கு? டெங்கு சுரத்தை முறியடிப்போம்!

Web source:

திங்கள், 8 அக்டோபர், 2012

அணு உலையா? ஐயோ வேண்டவே வேண்டாம்! ? We don't need Nuke danger!



நண்பர்களே! 

அணு உலைகளால் கிடைக்கும் அபாய- மின்சாரம் நமக்குத் தேவை இல்லை!
அணுஉலை வெடித்துச் சிதறி ஏற்பட்ட கோரமான பேராபத்துக்கள்
உலகில் பல!

எனினும், மக்கள் விரோத அரசுகள் மக்களுக்கும், மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுக்கும் அதில் துளியும் விருப்பம் இல்லாத போதும், சில பல மறைமுக சுயநல காரணங்களால், அணுஉலைகளை ஏமாந்த மக்களின் தலையில் கட்டுவதையே வாடிக்கையாக கொண்டு இருக்கின்றன. இத்தனைக்கும், அணுஉலைகள் வழியாக வரும் 'அபாய'-மின்சாரம் நமது நாட்டில் 4%-க்கு மேல் கிடையாது. மிச்சமுள்ள 96% 'அபய'- மின்சாரம் அனல், புனல், காற்று, சூரிய ஒளி போன்ற பிற வழிகளில்தான் நமக்குக் கிடைக்கிறது.

மேலும், அணுஉலைகளில் உண்டாகும் அணுக்கழிவுகள் பத்திரமாக பலநூறு ஆண்டுகள் சேமித்துவைக்கப் படவேண்டும். இந்தியர்கள் நாம் அதை ஒழுங்காய்ச் செய்வோமா-நம்பிக்கை உள்ளதா ? தெருக்களில் இருக்கும் குப்பைக் கழிவுகளையே நாம் ஒழுங்காய்க் கையாளுவதில்லையே! அப்படியிருக்க அணுக்கழிவுகளில் கசிவு ஏதேனும் ஏற்பட்டால் அது பல லட்சம் வருடங்களுக்கு கதிர்வீசும் அபாயமும், அதனால் புல்பூண்டுகள் கூட அழிந்துபோகும் நிலையும் உள்ளதை நாம் தெளிவாய் அறியவேண்டும்! 

எதையும் கவனமாய் அழகாய்ச் செய்யும் ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளே அணு உலைகளால் மரண அடிபட்டுக் கிடக்க, ஒன்றையும் உருப்படியாய் இதுவரை செய்யாத நமது அரசுகளின், மற்றும் நம்மைக் கொள்ளையடிக்கும் பன்னாட்டு உள்நாட்டுத் தொழிலதிபர்களின் உதட்டளவு உறுதிமொழியை யார் நம்புவது? (ஒன்று தெரியுமா? புக்குஷிமா பேரழிவுக்குப் பிறகு ஜப்பான் பயந்துபோய் தனது அணு உலைகளை இயங்கவிடாமல் நிறுத்தி வருகிறது)

http://www.youtube.com/watch?v=SUy-iPvd4lc

சரி! ஒருவேளை ஏதேனும் அப்படி கூடங்குளத்தில் அணுஉலை விபத்து ஏற்பட்டால் பாதிக்கப் படும் பொது மக்களுக்கு இழப்பீடு தருவது பற்றிகூட இதுவரை மத்திய அரசு பேச தயாராயில்லையே! இது என்ன நியாயம்?

ஆக, அப்படிப்பட்ட அபாயமான அணுஉலைகளை நல்லறிவும் நியாய உணர்வும் உள்ள நாம் எல்லோரும் நம் குழந்தைகளின்/சந்ததிகளின் நலன் கருதி பலமாய் எதிர்க்கவேண்டும். இதில் தேவையில்லாமல், 'மதம்' அது-இது என்று வீண் பேச்சு பேசி குழப்புவது அறியாமை ஆகும். சமீபத்தில் அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ் மற்றும் கேஜ்ரிவால் போன்றோர் இதேபோன்று ஊழலை எதிர்த்த போதும், அவர்களை ஒரு காங்கிரசை எதிர்க்கும் இந்துமத வெறியர்கள், பாகிஸ்தான் கைக்கூலிகள் என்று விமர்சனம் செய்து அவர்களது பொது-நோக்கத்தை கொச்சைப் படுத்திப் பேசியதை நினைத்துப் பாருங்கள். பொது விஷயங்களை நாம் எப்போதும் பொதுவாகவே பார்க்கவேண்டும். அதில் மதச் சாயம் பூசக்கூடாது. ஏனென்றால்...

அணுஉலை விபத்து ஏற்படும்போது எந்த மதத்தின் கடவுளும் அந்த மதத்துக் காரர்களை மட்டும் தனியாக வெளியில் எடுத்து கைதூக்கி காப்பாற்றிவிட மாட்டார்? அப்படி ஏதாவது உலக வரலாற்றில் நடந்துதான் இருக்கிறதா? 
மத விஷயங்கள் வேறு, பொது விஷயங்கள் வேறு!



அழிவு என்று ஒன்று வரும்போது அது எல்லோருக்கும்தானே வரும்? வெள்ளம், புயல், பூகம்பம், கடற்கோள், காட்டுத்தீ, கொள்ளைநோய்கள் என்று வரும்போது அது 'ஜாதி-மதம்' பார்ப்பதில்லை. நாம் எல்லோரும்தான் மொத்தமாக பாதிக்கப் படுகிறோம்! இதுவும் அதுபோலத்தான். நம் எல்லோரின் பாதுகாப்பு பற்றித்தான் இந்தப் போராட்டம்.

வெடிக்கும்போது ஏற்படும் விபத்தினால் பல கிலோமீட்டர் தூரம் கிராமங்கள் நகரங்கள் பாதிக்கப்படும் என்பது ஒருபுறம் கிடக்க, கடலில் அணுஉலையின் நச்சு கலந்துவிட்டால் அது உலகம் முழுவதும் சிறுக சிறுக பல லட்சம் வருடங்களுக்குப் பரவி உயிர்களைக் கொல்லாதா? இது போன்ற விஷப்-பரிட்ஷை நமது சந்ததிகளுக்குத் தேவையா?
________________________________________________

சில கேள்விகளுக்கு பதில்கள்:

திடீர் போராட்டம் ஏன்?
பதில்: கூடங்குளம் அணு உலைக்கு பூஜை போட்ட காலம் தொட்டு அவர்கள் போராடி வருகிறார்கள். ஆனால், ஜப்பானில் உள்ள புக்குஷிமா (Fukushima Nuclear Power Plant) அணு உலை போன வருடம் 11th March 2011-இல் சுனாமி அலையால் பெரும் அழிவை ஏற்படுத்தியதற்கு பிறகு அதைக்கேள்விப்பட்ட கூடங்குளம் அதன் சுற்றுப்புறத்து மக்கள், மேலும் பயந்து போராட்டத்தைத் தீவிரப் படுத்திவிட்டனர். ஒரு வருடத்துக்கும் மேலாக தற்போது நடந்துவரும் தொடர் போராட்டம் வழியாக அணு உலை எதிர்ப்பு நிலை என்பது இப்போதுதான் உலகத்தின் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது.

அத்தனை கோடி ரூபாய் வீணாகி விட்டதே?
பதில்: யாரைக் கேட்டு ஆரம்பித்து இப்படி வீணாக்குகிறீர்கள்? முன்பு எதிலுமே அப்படி அமைச்சர்கள்நீங்கள் மக்கள் பணத்தை வீண் ஆக்கியதில்லையா? வெளிநாடுகளில் பதுக்கப் பட்ட பணம், உள்நாட்டு மெகா கொள்ளைகள், தவறான பொருளாதாரக் கொள்கைகள், இதிலெல்லாம் வீணானது மக்கள்-எங்களது வரிப்பணம்தானே? எங்கள்பணம் வீணாவது பற்றி உங்களுக்கு என்ன திடீர் அக்கறை? "கணக்குப் பிள்ளைகளுக்கு "போலிக் கரிசனம் எதற்கு? எங்களின் உயிரைவிட எங்களது வரிப்பணம் வீணாவதொன்றும் பெரிதில்லை என்று 'கணக்குப் பிள்ளைகள்' உங்களுக்குத் தெரியாதா? எங்கள் சந்ததிகளின் "உயிரை அடகு வைத்து" மின்சாரம் எடுத்து, அதை உடனே இப்போது எங்களுக்குத் தாருங்கள் என்று நாங்கள் உங்களிடம் எப்போதாவது கையேந்திக் கெஞ்சினோமா? 
____________________________________________

எனவே நண்பர்களே! உங்களுக்காகவும் நம் எல்லோருக்காகவும் போராடும் சிற்சில போராட்டங்களையாவது, அவை பொதுவான போராட்டம் என்று உங்கள் இதயத்தால் அறியுங்கள்! நியாயத்துக்காக போராடும் அவற்றில்எல்லாம் 'மதம்' 'ஜாதி' என்று வழக்கமான அசிங்கமுத்திரை குத்தி, அதுபோன்ற போராட்டங்களை நசுக்கப் பார்க்கும் தீயசக்திகளுக்கு நீங்கள், அதில்உள்ள சூதறியாமல் ஒருபோதும் துணை போகாதீர்கள்.

என்றைக்குமே தர்மம்தான் வெல்லும்!

-யோஜென் பால்கி 
________________________________________

Thousands of fishermen from 40 villages around the Kudankulam Nuclear Power Plant in Tamil Nadu have surrounded the area from about 500 metres in the sea and are shouting slogans to protest against the plant. This is a token seige of the plant, since they will not be allowed by policemen to get any closer. Activist SP Udhayakumar, who is spearheading the anti-plant protests, today said in their next action, protestors would lay siege to the Tamil Nadu Assembly in Chennai on October 29, 2012.

http://www.youtube.com/watch?v=iZnh8EWaluo

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

Oh Tamils! Be scattered as the homeless emigrants! இனிபூமியெலாம் நாடிலியாய் சிதறிப் போவோம்!




இதுசென்னை இதுசென்னை இதுதான் சென்னை
விதிஎன்னை விதிஎன்னை வைத்த தென்னே?

எதையெண்ணி எதைஎண்ணி பீடு கொள்வேன் 
விதையெல்லாம் வீணான பூமி தன்னில்!

தமிழ்பேசும் மக்களுக்குத் தலையூர் என்பார் 
தமிழர் கூவத்தூர்சேரியிலே ஓரம் வாழ்வார்!

பிழைப்புக்கு வந்தவனை 'ஆண்டை' ஆக்கி  
உழைப்புக்கு அவன்காலை நக்குவோர் யார்?

வழிப்போக்கர்  வாழ்வதற்கு வசதி செய்தே
வழிவந்த முதுநிலத்தை இழப்பார்தான் யார்?

மண்ணரசன்  குடிசைக்குள் முடங்கிச் சாக
நாடோடி நாலடுக்கில் வாழ்வ துண்டா?
   
என்பாட்டன் முப்பாட்டன் இங்கிருந்தான் 
எண்ணற்ற சொந்தங்கள் இங்கே உண்டாம்!

அதனாலே வியப்பொன்றும் உள்ளே உண்டு 
"எதனாலே நமக்கிங்கு நிலங்கள் இல்லை?

உயர்ந்துள்ள மாளிகையில் நண்பர் இல்லை?
பெயர்கின்றோம் ஊர்விட்டு ஏனாம்" என்றே!

தெருப்பெயரில் முதலியார்கள் செட்டியார்கள் 
வன்னியர்கள் பிள்ளைமார்கள் பழைய சேதி!

அந்நியர்கள் தமிழறியார் பிழைக்க வந்தார்  
தமிழ்வீதி தமிழூர்தான் வாழ்வோன் வேற்றான்!!

புரியாத மொழிச் சத்தம் வீதியெல்லாம் 
ஒருவீட்டில் தமிழனி(ல்)லை என்ன நியாயம்?

தெருத் தெருவாய் ஊர்வூராய் கொள்ளைபோக
நறுந்தமிழர் நாடுஇனி இல்லை ஆகும்!

இலக்கியத்தோர்  'பட்டிமன்றப்' பேதையரே கேளீர்!
நம்இனமழிந்த பின்னாலே தமிழ் எதற்காம்?

சுற்றியொரு முற்றுகைக்குள் சுருங்கிக் கொண்டு
பழம்பாட்டி 'தமிழ்க் கனவு' கதைப்பார் உண்டோ?

இன்னும்நாம் 'ஒருதேசக்' கதைகள்  பேசி 
இருக்கின்ற மண்விட்டே ஓடு கின்றோம்!

உன்திண்ணை  உன்வாசல் உந்தன் கூடம் 
நீயுறங்கும் கட்டில்மேல் அந்நியன் வாசம்!

'அண்ணனுக்கு' அங்குலமும் தருவதிலை நாமே
அன்னியர்க்கோ அன்னைநிலம் தந்துவிட்டோம்!

நம்வாசல் நம்கோயில் முடிந்த தென்க!
வந்தவனோ வரலாற்றில் புரட்டு செய்வான்!

பளிங்குநிற 'மந்திர்கள்' பல்லடுக்கம்  கட்டி
தெளிவாகச்  சொல்வான் 'நீ நாடிலி' என்றே!

இனி,

வாபோவோம் பாலைவனம் ஒட்டகம் மேய்ப்போம்!
பணிவாக அன்னியர்கள் தாள்பணிவோம் வா!

ஊரூராய் நாடோடி வாழ்க்கை 'தாழ்ந்து'
நாடாண்ட பழங்கதைகள் பிதற்றுவோம் வா!

தென்னிலங்கை தமிழ்மக்கள் சீரழிந்த கதையாய் 
நாம்பூமியெலாம் அகதிகளாய்ச்  சிதறிப் போவோம்!

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

Are Tamils the migrating species & Homeless? தமிழன்தான் புலம் பெயர்ந்து சாகின்றான்!


சிவகாசி என்றவுடன் தீக்குச்சி குழந்தைஎலாம் 

சின்னேரம்  மனத்திரையில் நம்முள்ளே மின்னலிடும்!
சிவகாசி அம்மட்டோ! அச்சகத்தில் அரும்புரட்சி
சிருங்கார பட்டாசு உலகமெலாம் ஏற்றுமதி 
ஆயிரம் கோடிகளில் புரளுகின்ற செலவாணி 
அத்தனையும் உள்ளத்தில் சட்டென்று நினைவுவரும்!
நேற்றொரு நாள் மதியத்தில் மனமொடிந்தேன்
முதலிப் பட்டென்னும் ஊரொன்றில் வெடிவிபத்தாம்!

ஆறெட்டு அறைமுழுதும் நாலாறு ஆள்வீதம் 
முன்னூறோ நானூறோ தொழிலாளர் பணிபுரிய 
ஓரறையில் தவறுதலாய் தீப்பற்றி வியாபித்து 
ஒவ்வொன்றாய் வெடிவெடித்து சிதறிப் புகைசூழ 
பட்டாசுத் தொழிற்சாலை மண்மூடிப் போனதம்மா!
பெருஞ்சப்தம் தொடர்ந்துவர ஊர்மக்கள் சிலநூறும்
அருமைச் சொந்தங்கள் உறவுகளை காப்பாற்ற 
முன்னேறிச் செல்கையிலே பெருஞ்சோகம் இன்னொன்றாம்!

பட்டாசுக் கிட்டங்கி வெடித்துச் சிதறியதால் 
உள்ளிருந்த தொழிலாளர் காப்பாற்றப் போனவரும் 
செல்லரித்த புத்தகமாய் சிதறிச் செத்தொழிந்தார்!
அம்மவோ! ஆற்றாமை உள்ளமெலாம் எரியுதம்மா 
விம்மி அழுவதற்கோ இருபத்து கோடிவிழி?
படித்தவர் படிப்பெதற்கோ காப்பதவர் கடனிலையோ?
அரசும் அறிஞர்களும் இம்மட்டும் செய்ததென?
வறியவரை காப்பதற்கு வகுத்தாண்ட முறைகளென?

வருமுன்னர் காவாதான் கதைகள் அறியேமோ ?
எண்ணிக்கை சொல்வதெலாம் உண்மை எனலாமோ? 
உளர்-இலர் மெய்க்கதைகள் கணக்கும் சரிதானோ ? 
உழைத்துப் பிழைக்கின்ற தமிழ்மக்கள் கதிஇதுவோ 
உலகமெலாம் நீர்-நெருப்பால் அழிவதே நம்விதியோ?
தமிழ்உயிர்க்கு மதிப்பிலையோ வெறும் மயிரோ? 
அமிழ்கடல்சூழ் நிலமெங்கும் இப்பேதை போலெவரோ?
வெறும்தூசு கண்பட்டால் சினந்தெழுஊம் இனமுண்டே! 

பெருஞ்சாவு இனமொத்தம் எரித்தொழிப்பு நிகழ்ந்தாலும் 
வெறும்பேச்சு கடுதாசி கால்நக்க வடக்கேகும் 
தெருவோரத் திருத்தலைமை உணர்வற்ற தலைமுறைகள் 
ஆண்டவன் பேர்சொல்லி தப்பிக்கும் ஆளுமைகள்!
ஆளுமையை குறைசொல்லும் முன்னாள் ஆண்டவர்கள் 
வேலைமட்டும் நடக்காமல் வீணாய்நாம் போனவராம்!
ஈழம் என்றாலும் இடிந்தகரை என்றாலும் 
தமிழன்தான் புலம் பெயர்ந்து சாகின்றானே!

உலகெங்கும் உதைவாங்கி உளம்நோகவோ-தமிழன்!
தலையொன்று சரிஇருந்தால் நலம்பலவும் கிடைத்திருக்கும்! 
விலைபோன கதையால்தான் வில்லங்கம் வந்ததம்மா!
பின்னொருநாள் நம்நிலத்தில் நன்மை பெருகுமெனும்
விண்மீன்கள் தென்படலை நம்பிக்கை அழிந்ததம்மா!
ஊரடித்து உலையிலிடும் உன்மத்தம் வளருதிங்கு!
சாதியினால் சமயத்தால் பிட்டுவைத்தக் கட்சிகளால்  
திரையுலக மாயை யினால் தீமை நிலைத்ததம்மா!

இலஞ்சப் பேய்களினால் இரக்கமற்ற இராட்சதரால் 
பொய்யையே விதைக்கின்ற அரசப் புன்மையரால் 
ஆள்பவர்க்கு அடிவருடும் உயர்ந்த பதவியரால் 
ஏழை படும்பாடு எள்ளளவும் உணராமல் 
உள்ளவர்கள் படித்தவர்கள் நாட்டை நடத்துகிறார்!
வெட்கப்பட வேண்டும் வெறும்சின்ன தேசங்கள் 
ஒற்றுமையால் தியாகத்தால் ஓங்கி வளர்ந்ததம்மா
இவர்மட்டும் தேய்கின்றார் நாடிலி ஆனாரே! 

இனி ஊழிஒன்று  வேண்டுகிறேன் வேண்டுகிறேன் யானே!
தமிழ்ச்சங்கம் அழிந்தது போல் ஊரழிக அழிக ! 
இங்கு ஆழிசூழ்  நிலமெல்லாம்  தீப்பற்றி எரிக! 
நிலம்பிளந்து மனிதமெலாம் மண்ணுக்குள் மறைக! 
பொய்மை பொசுங்கிடவே புதுக்குலமது தோன்றிடுக!  
முதுகுடி ஒன்றதுவும் முடிவதுமே நன்றாம்!
தனியொரு தமிழர்க்கு வாழ்வில்லையென்றால்
தரணியம் எதற்கோ மொத்தமுமே மறைக!  

-யோஜென் பால்கி 
www.yozenmind.com





சனி, 11 ஆகஸ்ட், 2012

Law & Dharma ? சட்டமும் தர்மமும்:

              
ஒரு நாட்டை நிர்வகிக்க பற்பல சட்டங்கள் இயற்றப்படுகின்றன. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு சட்டங்கள் உண்டு. ஒரு நாட்டுக்குப் பொருந்தும் சட்டங்கள் இன்னொரு நாட்டுக்குப் பொருந்தாது. நாடுகளுக்கு உள்ளேயே கூட ஒரு சமயத்தை பின்பற்றும் ஒருவனுக்குப் பொருந்தும் சட்டம் இன்னொரு சமயனுக்குப் பொருந்துவதில்லை. ஆணே உயர்ந்தவன் என்னும் ஆதிக்க நாடுகளில்/ஆணாதிக்கக் காலங்களில், பெண்ணுக்குப் பொருந்திய சட்டங்கள் ஆணுக்குப் பொருந்தியதில்லை. உழைக்கும் வர்க்கங்களுக்கு ஒரு சட்டமும், பெருமுதலாளிகளுக்கு என்று ஒரு சட்டமும், உலகெங்கும் எல்லாக் காலங்களிலும் உண்டுதான். 

ஆக, சட்டத்தின் சாரம்சம் இதுதான்: ஆளும் வர்க்கம், பெருமுதலாளிகள், சமயத் தரகர்கள் ( இங்கு ஆ,பெ, ச என்று நாம் குறிப்பிடுவோம்), இம்மூவரையும் காப்பாற்றும்படிதான் உலகில் எக்காலங்களிலும் சட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கின்றன-இருக்கும்! அப்படிப் பட்ட மறைமுக சட்ட முறைமையை உடையாமல் பராமரிக்கும் பணியை பூடகமாய் செய்ய, தெரிந்தும் தெரியாமலும் நிர்ப்பந்திக்கப் படுபவர்கள்தான் இராணுவம், நீதித்துறை மற்றும் காவல் துறையினர் ஆவர். ஏன் எனில், இந்த மூன்று துறையினருக்கும் சம்பளம், பதவி உயர்வு, சலுகைகள், ஒய்வு ஊதியம், பணிக்குப் பின் பாதுகாப்பு  இன்னபிற நன்மைகளை மேற்படி ஆ,பெ, ச எனும் மூவரே  செய்து தரவேண்டிய கையறு நிலை உலகில் உள்ளது. இந்த நடைமுறை எந்தக் காலத்திலும் எந்தவொரு நாட்டிலும் மாறியது கிடையாது-மாற வழியும் இல்லை. மேற்படி மூவருக்கு-மேற்படி மூவர் ஒத்தாசையாகவும் உறுதுணையாகவும் இருக்கும் காட்சிகளை நாம் நுட்பமாய்ப் பார்த்தால் நன்கு உணர முடியும்! 

சுருக்கமாய் சொன்னால், சட்டம் என்பது, ஒரு நாட்டில் உள்ள ஒரு கிராமத்தின் அடித்தட்டு சாமான்ய மனிதன் ஒருவனுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு சாமான்ய மனிதனுக்கும்  ஏதோ ஒரு சண்டை வந்து, காவல் நிலையம் செல்லும் போது, சட்டம் அங்கே தன் கடமையை சரிவர செய்யும். நீதிமன்றமும் தன் கடமையை சரிவர செய்து அங்கு பாரபட்சமின்றி நீதியை நிலை நாட்டும் என்று நாம் நம்பலாம் ! ஆனால், அதுவே அந்த கிராமத்தின் ஓர் சாமானியனுக்கும் மேற்படி ஏதோ ஒரு ஆ,பெ, ச வுக்கும் சச்சரவு வந்து காவல் மற்றும் நீதித் துறையை அணுகும் போது, நிலைமை எவ்வாறு இருக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள்! 

அந்த சாமான்யனின் பக்கம் 100% நியாயம் இருந்தாலும், ஒரு காவல் துறை உயர்அதிகாரி மற்றும், நீதிஅரசர் ஒருவர், மேற்படி வானளாவிய அதிகாரம் கொண்ட ஆ,பெ, ச க்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி சட்டத்தை நிலை நிறுத்துவார் என்று நாம் சிறுபிள்ளைத்தனமாக நம்ப இயலுமா? உலகில் அது போல எங்காவது நடந்துள்ளதா? அட! எப்போதாவது நூறு முறைக்கு ஒரு முறை, அவ்வாறு விதிவிலக்காக சில நிகழ்வுகள் நடந்து இருக்கலாம்-ஆனால், விதிவிலக்குகள் என்றுமே விதிகள் ஆகாவே!

உங்களில் ஒருவர் இங்கு, ஆ,பெ, ச க்களுக்கு இடையில் சச்சரவு வந்தால் நிலைமை எப்படி போகும் என்று கேட்பது எனக்குக் கேட்கிறது. சமயத் தரகர்களுக்கு சிற்சில நாடுகளில் செல்வாக்கு இருந்தாலும், பொதுவாகவே முடிவில் ஆளும் அரசியல் வர்க்கங்களே, காவல்துறை மற்றும் இராணுவ பலத்தைப் பிரயோகம் செய்து தம்வெற்றியைத் தற்காலிகமாகத் தக்கவைத்துக் கொள்வர். அடுத்தவன் ஒருவன் வந்து அந்தத் தலைமையையும் அழித்துவிட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அதிகார சுகம் தேடுவான்-அவனும் மறைவான், இது என்றும் தொடர்கதை! 

அது ஒரு புறம் கிடக்க, உள்நாட்டுச் சட்டங்கள் என்றுதான்  இல்லை, பன்னாட்டுச் சட்டங்கள் என்று வரும்போதும், அமெரிக்கா செய்கிற அதே 'சட்டாம்பிள்ளைத் தனமான' காரியத்தை உலகில் வேறு எந்த நாடுகளும் இன்னொரு நாட்டின் மீது செய்ய இயலுமா? சொத்தைக் காரணங்கள் சொல்லி ஒருவனைத் தூக்கில் போடுவது, இன்னொருவன் வீடு புகுந்து கொள்ளை அடிப்பது போல, இன்னொருவன் நாட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து கொள்வது, வேவு பார்ப்பது, கைது செய்வது, கொலை செய்வது இன்ன பிற காரியங்கள்??

"தடி எடுத்தவன் தண்டல் காரன்", "பேட்டை-ரவுடி", "பசை-உள்ளவன்", "ஏழை சொல் அம்பலம் ஏறாது", "செல்வாக்கு-உள்ளவன்", இது போன்ற சொற்றொடர்கள் நமக்குப் போதிப்பவை என்ன?
"சட்டம்" என்பது, வலுத்தவன் கையில் கிடைத்த ஒரு நுட்பமான 'அறிவாயுதம்' என்பதே! அறிவு என்பதோ, எப்போதுமே தன்னை பிறரிடம் இருந்து தற்காத்துக் கொள்ள சட்டம் (வழி) ஒன்றை வகுத்து வைத்துவிட்டு,  அந்தத் தவறை தான் செய்யும்போது தப்பித்துக் கொள்ள அங்கு ஒரு ஓட்டையையும் முன்கூட்டியே போட்டு, மறைத்து வைக்கும் இயல்புடையது. 

அதனால்தான், பெருமன்னர்களும், பெரும் பணக்காரர்களும், அறிவாளிகளும் சட்டத்தின் சந்து பொந்துகளில் இருந்து மிக எளிதாகத் தப்பித்து விடுகிறார்கள். மிஞ்சி மிஞ்சி, இந்த உலகில் பார்த்தால், சிறையில்/தண்டனையில் மாட்டிக் கொண்ட வெகு சிலரும், பெரிய நாட்டை பகைத்துக் கொண்ட சிறிய நாட்டினர், பெரிய கட்சியைப் பகைத்துக் கொண்ட சிறிய கட்சியினர், பின்புலம் அற்ற சின்னஞ்சிறு பணக்காரர்கள், சிறிய கூட்டத்தை வைத்திருக்கும் சமயவாதிகள் இப்படித்தான் இருப்பர்!

எனவே, சட்டத்தின் வீச்சம், பயன்பாடு  இதுதான்.


ஆனால், "தருமம்" என்பது வேறு ஆகும்! 

தர்மம் என்பது நம்மிரு கண்கள் என்று நாம் கொண்டால், அதன் மீது நம் விருப்பப்படி அணியும், வண்ணவண்ணக்  'கண்ணாடி'க்கு பெயர்தான் சட்டம் ஆகும்! சட்டங்கள் காலத்துக்குக் காலம், நாட்டுக்கு நாடு மாறும். ஆனால், தருமம் என்பது (அறன் என்பர்), மூவுலகங்களுக்கும், மூன்று காலங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் பொருந்துவதாகும்!

உதாரணமாக, சாலையில் அடிபட்டு உயிர் துடித்துக் கொண்டு இருக்கும், ஒரு மனிதனை/ ஒரு விலங்கை நீங்கள் காப்பாற்றியே ஆகவேண்டும் என்று எந்தவொரு சட்டமும் இல்லை. அதனால்,  நீங்கள் சட்டத்தின் "மூக்குக் கண்ணாடி" வழியாகப் பார்த்தால் அங்கு குற்றவாளி இல்லை. ஆனால், தர்மத்தின் "கண்கள்" வழியாக  நீங்கள் அங்கு ஒரு குற்றவாளி ஆவீர்கள்!

இன்னொரு உதாரணம், நீங்கள் உங்கள் மனைவி, ஒரு குழந்தை கொண்ட மூன்று பேர் குடும்பத்துக்கு மூன்று கிரவுண்டு நிலம் வாங்குகிறீர்கள், அங்குள்ள முப்பது மரங்கள், முன்னூறு செடிகொடிகள், அவற்றை சார்ந்து வாழும் லட்சக்கணக்கான உயிர்களை அழித்து, மூன்று மாடியில் ஒரு மாளிகை கட்டுகிறீர்கள். இதில் சட்டப்படி எதுவும் தவறில்லை. ஆனால், தர்மத்தின் படி நீங்கள் ஒரு பெரும் பாவி! தேவையை மீறாமல், இயற்கையை நீங்கள் மரியாதை செலுத்தி பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே 'ஹிந்து-தர்மமாகும்"

இதனையே நமது ஹிந்து-மதம் மென்மையாய் சுட்டிக் காட்டுகிறது! வாழும் வழி முறைகளை அது நமக்கு இதமாய் போதிக்கிறது! ஹிந்து-மதம் வெறும் சட்டங்களை வாய் கிழியப் பேசுவதில்லை. உயிர்களை நேசிக்கவும், பூஜிக்கவும் அது நமக்குச் சொல்லி தருகிறது! இங்குள்ள மண், மரம், செடி-கொடிகள், விலங்குகள், பறவைகள், நதிகள், கடல், காற்று என்று இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களையும், உயிரற்றவற்றையும்  வணங்கச் சொல்லி, மதிப்பு தரச் சொல்லி கற்றுத் தருவதும் அதனால்தான். 

அப்படிப்பட்ட "தர்மம்" பற்றி வேறொரு சமயத்தில் நான் விரிவாய் எழுதுவேன்! 

"அன்பும் அறனும் (தர்மமும்) உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது!  -குறள்

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

Rain-clouds & Concrete Jungles! மழை பொழிவதில்லை-கான்க்ரீட் காடுகளில்!

I am a Conscious Rain-Cloud - "I chose" 
only the Green fields!
I prefer like this fields 
This place....I like to rain here!
I often visit here to drizzle....









I roll over here in the meadows...
Concrete - Jungle with No Green Trees 













Look at these machines and cranes! You greedy people! Day and night you uproot trees and green plants at these once-existed garden places, creating now, the men-made concrete shells & eternal Hell for you!

Here...You men uproot trees & greeneries!


No grass fields - but piling wastes!

Not on grass fields - your kids playing on garbage!
Mounting wastes & garbage of the present world!
your deserting civilization....

Result would sooner be: 
Desert & Barren lands everywhere in the World!
Reasons I, the Rain can say:

1. Industrialization produces more and more "colorful synthetic wastes" which destroys my soil and my water resources.

2. You refuse to respect Agriculture and Natural living.

3. Hence, you destroy Green fields and Forests and creating acres of huge-mega sized industries and concrete IT parks, only to destroy the 100s of Trees and plants living over there for decades.

4. You never take care to plant trees and grow greeneries over there, but take full precautions to prevent them growing in the fully paved concrete floors and path ways.

5. You consciously cut even the road/street side Trees which are planted and maintained by Govt local authorities, so as to have a clear view of  your mega malls and concrete parks!! You uproot trees and grass fields, strange, but placing plastic green-plants for your pleasing vision!!

So, 

When there is no Trees and grass fields, 
Why should I Rain?
For whom?
that too on these lifeless 'concrete Deserts'???

Rain-I am! A thinking-genius, you will realize it soon...!!

Devastated land 
Miles to go....
Kids bearing water...barren land
No Green, no Life.. 
The Exsiccation & The End
-YozenBalki

சனி, 28 ஜூலை, 2012

ஸ்ருதிக்கு பிறகு (LKG) சுவிதா, பள்ளிப் பேருந்து மேலேறி...xxx! திருந்தாத நாடு!

சேலையூரில் சுருதி (6) மீது பேருந்து ஏறிய குருதி காய்வதற்கு முன்பே இதோ இன்னொரு அதே போன்ற சம்பவம்: இது ஆம்பூர் சுஜிதா (3)

Sujitha LKG - Ambur
Embesso MHS School
Bus-Wheel death
27th July 2012

ஊரும் பேரும்தான் மாறுகிறதே ஒழிய நமது மக்களின் அசட்டை, அலட்சிய மனோபாவம், திமிர்த்தனம் இதெல்லாம் ஒரு போதும் மாறுவதே இல்லை!

நமது நீதியரசர்கள், உங்கள் மீதுதான் நாங்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளோம் -நீங்கள்தான் இதற்கு சரியான வழிகாட்டுதலும் கடுமையான தண்டனைகளும் உடனுக்குடன் தரவேண்டும்! 


-Yozenbalki
_________

பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி எல்.கே.ஜி., மாணவி சுஜிதா பலி: 
பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012,23:43 IST


வேலூர்:வேலூம் மாவட்டம், ஆம்பூர் அருகே பள்ளி பஸ் மோதியதில், அதே பள்ளியின் எல்.கே.ஜி., மாணவி சிறுமி சுஜிதா  இறந்தார்.

ஆம்பூர் அடுத்த உம்மராபாத் அருகே, ஈச்சம்பட்டு மீனாட்சி காலனியைச் சேர்ந்தவர் குமார். கூலித் தொழிலாளி. இவர் மகள்கள் ஸ்விதா,10, சுஜிதா, 3, உறவினர் மகன் அசோக், 12, ஆகியோர் மாரப்பட்டு எம்பேசோ (EMBESSO) மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். 


சுஜிதா, எல்.கே.ஜி., படிக்கிறார். பள்ளியின் சார்பில், 20க்கும் மேற்பட்ட எய்ச்சர் மினி பஸ்கள் உள்ளன. நேற்று வாணியம்பாடியைச் சேர்ந்த டிரைவர் கிருஷ்ணன், 35, பள்ளி பஸ்சை ஓட்டி வந்தார். மாலை, 5 மணிக்கு மாணவ, மாணவியரை பள்ளியில் இருந்து ஏற்றிக் கொண்டு, ஒவ்வொரு கிராமமாகப் போய் இறக்கி விட்டு வந்து கொண்டிருந்தனர். மாலை, 5. 15 மணிக்கு, ஸ்விதா, சுஜிதா வை, அவர்கள் வீட்டுக்கு அருகில் அருகன் துருகம் என்ற இடத்தில் உள்ள முருகன் கோயில் அருகே, பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர். இறங்கிய உடன் வீட்டுக்கு போகும் ஆவலில், ஸ்விதா, சுஜிதா ஆகியோர் பஸ்சுக்கு முன் பக்கமாக ஓடி, எதிர் புறமும் இருந்த சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது டிரைவர் வேகமாக, பஸ்சை எடுக்க, பஸ்சின் முன் பக்க டயரில் சுஜிதா சிக்கிக் கொண்டார். இதை கவனிக்காத டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டினார். சுஜிதாவின் உடலில் முன்புற சக்கரம் ஏறி இறங்கியது. சுஜிதா உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.அப்பகுதியினர், பஸ் சக்கரத்தில் சிக்கிய சுஜிதாவை மீட்கப் போராடினர். இதை பார்த்த டிரைவர் கிருஷ்ணன் தப்ப முயன்ற போது, பொது மக்கள் அவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

பின் மாணவி சாவுக்கு காரணமான பஸ்சை கொளுத்த அப்பகுதியினர் மண்ணெண்ணெய் கேன்களுடன் வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உம்மராபாத் போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.பின் பஸ் டிரைவர் கிருஷ்ணனை கைது செய்தனர். பள்ளி தாளாளர் சண்முகத்திடம் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி பஸ் டிரைவர் கிருஷ்ணன், மண்பாடி லாரி ஓட்டிக் கொண்டு இருந்தார் என்றும், அவரை பகுதி நேரமாக பஸ்சை ஓட்டச் சொன்னதால் விபத்து நடந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுஉள்ளனர்.

நன்றி தினமலர்: http://goo.gl/sgp9j