Translate this blog to any language

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

Splays in Roads a Must in Chennai : சென்னை சாலைகள் எப்படி இருக்கவேண்டும்?


ஒரு நீரோட்டம் எப்படி செல்கிறதோ அப்படியே வழி விட்டால்தான் எந்த ஒரு போக்குவரத்தும் தடையின்றி செல்ல இயலும்! சென்னையில் பெரும்பாலான இடங்களில் வாகன நெரிசலுக்குக் காரணம் வழி நெடுக காணப் படும் தடைகள்தாம்!


A Wrong Road without Splay



A rightly 'splayed' Road

நீரோட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! அது எப்போதுமே செங்குத்தான திசையில் திரும்புவதில்லை. சற்று வளைந்து, வளைகிற இடத்தில் கொஞ்சம் விசாலமான இடத்தை எடுத்துக் கொண்டே அது திரும்பி பயணம் செய்கிறது!


ஒரு தண்ணீருக்கு இருக்கிற அறிவு நமது சாலை உருவாக்க பொறியாளர்களுக்கு (Road Construction Engineers) இருப்பதில்லை போலும்!!
இங்கு, நமது தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களை நான் சொல்லவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளை காணும்போது, நானும் ஒரு பொறியாளர் என்னும் வகையில் சொல்வதானால், குறைந்தது 80-90% தர நிர்ணயம் அங்கு நிச்சயம் காணப் படுகிறது!

ஆனால், சுதந்திரம் பெற்று சுமார் 65 வருடங்கள் ஆகும் நிலையிலும், சென்னை நகரத்தில் பெரும்பாலான இடங்களில் கிட்டதட்ட "L" வடிவத்தில் திரும்பும் தெருக்களை சாலைகளை நாம் இன்றும் பார்க்கலாம்! இதனால், எவ்வளவு மோசமான நெரிசல், வேகத்தடை, எரிபொருள் விரயம் ஏற்படுகிறது என்று எவரும் உணர்வதில்லை! சில நேரங்களில் காரணம் புரியாமல் மணிக்கணக்கில் சென்னையில் வாகனங்கள் நகரும். ஏதோ விபத்து போலும் என்று நாம் எல்லோரும் நினைப்பதுண்டு. ஆனால், குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும் போது தான்...(Contd,,)
நமக்குத் தெரியவரும்-அது வேறு ஒரு புண்ணாக்கும் இல்லை, குறுகிய ஒரு சாலை சந்திப்பில் ஓரம்கட்டி நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் ஒரு சிறு வாகனத் தடை, அல்லது ஒரு சிறு பள்ளம், அல்லது ஒரு சின்ன இடப் பற்றாக்குறையின் விளைவு என்று!!


இதையெல்லாம் கவனித்து அது போன்ற தடைகளை போக்க முதலில் 'நீரோட்ட- ஞானம்' அவசியம்! அல்லது ஒரு 'ஹெலி-காப்டரை' வைத்துக் கொண்டு ஒரு நல்லவனைப் போட்டு வான்வழி இருந்து, காலை மாலையில் போக்குவரத்து தடைகள் எங்கு ஏன் ஏற்படுகிறது என்று கவனித்து அதைக் களைய முயற்சி செய்ய வேண்டும்! குறைந்தது, லாரி, பேருந்துகள் போன்ற கனரக வாகனங்கள் செல்லும் பாதைகளையாவது சரி செய்வது தமிழக வளர்ச்சிக்கு நல்லது! வெறுமனே 'சிங்கப்பூர்' ஆக்கப் போகிறோம் என்று வாயால் சொல்லிக் கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது சார்!


ஆங்கிலத்தில் 'splay' என்று சொல்வார்கள். இத்தனை அடி சாலைக்கு இத்தனை அடி 'splay' வளைவு இருக்கவேண்டும் என்று உலக தர-நிர்ணயம் உண்டு-அதைக் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்! அது போன்ற 'வளை' நிலங்களை உடனடியாக தமிழக அரசு, சம்பந்தப் பட்ட தனியாரிடம் இருந்து நியாயமான சந்தை விலைக்கு வாங்கிக் கொண்டால் கூட அது நல்லதுதான்! ஒரு 20'-00"x 20'-00" பரப்புள்ள நிலத்தை 'ஸ்ப்ளே' செய்யும் போது சுமார் 250 சதுரஅடி வரும் - சாலையின் இருபுறம் சேர்த்தால் சுமார் 500 சதுர அடிதான் ஆகிறது!



இதே பத்துக்கு பத்தடி 'ஸ்ப்ளே' என்றால் மொத்தமே வெறும் 250 சதுர அடிதான் வரும்! விலை என்னவோ, அண்ணா சாலை, அடையார், அண்ணாநகர் போன்ற மதிப்பு மிக்க இடங்களிலேயே சில இலட்சங்களுக்கு மேல் போகாது! (வெகுஜன மக்களுக்கு நன்மை தரும் ஒரு நிலத்தை அரசு, இலவசமாகவே கையகப் படுத்த உரிமையும் உண்டு!)





கர்நாடக ஆந்திரா மாநிலங்கள் அந்த விஷயத்தில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது கண்கூடு!  (Bengaluru & Hyderabad) அங்கு எந்த அளவுக்கு சாலை-வளர்ச்சி அடைந்தது என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்! அவர்களது  ஆட்சியில் நிறைய சாலைகள் உடனுக்குடன் விசாலப் படுத்தப்பட்டு சீர்திருத்தம் செய்யப் பட்டன! சீர்திருத்தம் பெற்ற அது போன்ற சாலைகள் வழியாய் தடையின்றி செல்லும் வாகனங்களால் மறைமுகமாக மக்களுக்கு எவ்வளவு எரிபொருள் சிக்கனம், ஒலி மாசு கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி என்று பார்த்தால், இந்த செலவெல்லாம் நல்லதோர் அரசுக்கு ஒரு செலவே அல்லவே!


முக்கிய சாலைகளுக்காவது இது போன்ற கையகப்படுத்தல்கள் மிக்க அவசியம்! நாம் வாழ்கிற காலத்திலேயே நாம் அனைவரும் சேர்ந்து சென்னையை சீர்திருத்தம் செய்ய நாம் முடிவெடுக்க வேண்டும்! அதற்கு இன்னும் நூறு வருடங்கள் தேவையா என்ன? இல்லாவிட்டால் நமது சந்ததிகள் இன்னும் சில வருடங்களில் இன்னும் மோசமாகக் கஷ்டப் படப் போவது நிச்சயம்!

இதை கவனித்து சரி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் உடனடியாக களம் இறங்க வேண்டும்!

நடக்கும்! நான் நம்புகிறேன்-இதுவே தக்க சமயம்!


-Yozenbalki

திங்கள், 15 ஜூலை, 2013

என் செய்வாய் நீ இறைவா....? (கவிதை)




மெல்லிய பூஞ்சாரலாய்

இறங்கிவந்த இறைவன் ஒருநாள்

தனித் தனியே எம்மையணுகி

என்ன வேண்டுமென

அன்பில் வினவினான்!



எனது முறையும் ஆங்கு வர

'எதுவும் வேண்டாம்' என்றேன் யான்!

ஒராச்சர்யக் குறியாய் நிமிர்ந்த இறைவன்

'ஏனென உரக்கக் கேட்க

'அப்படி மேன்மையாய் யாதொன்றையும்

தருவதற்கான சாத்தியம்

இல்லையே உன்னிடம் !

என்றேன் யானும்!


புரியுமாறு எனைப் பேசப் பணித்தான்!

பேசலானேன்:

'அண்டம் படைத்த அன்பனே-அய்யா!

"நரை-திரை-பிணி-மூப்பு-சாக்காடு

இவையெலாம் என்னை

அண்டமுடியாமல் செய்திடுவாயா?

என் மழலைநாட்களின் மகிழ்ச்சி யாவையும்


ஒரு பையில் போட்டு கையளிப்பாயா?

என் அன்புக்குரியோர்க் கதுவே செய்து

என்னுடன் வசிக்கும் பரிசளிப்பாயா?

நன்னீர் உணவு உறைவிடம் தந்து

வெள்ளம் வறட்சி நிலமழியாவொரு

நிலை செய்வாயா?"


என்ன செய்திட முடியும் உன்னால்...?" 


இப்படி கேட்டதும் அதிர்ந்த இறைவன்

இளித்தவாறே இறைஞ்சலானான்!

"இழிவு படுத்தாதே; எதையாவது கேளேன்!

ஒரு பொருளோ பதவியோ உயரிய பரிசோ

ஏதோ ஒன்று கேட்டால் மகிழ்வேன்;

கேட்டுதான் தொலையேன்!


"ஒன்றுமே வேண்டாம் இறைவா!

உன்னைக் கண்ட மகிழ்ச்சியே

இன்றைக்குப் போதுமே!

உன்னைக் காணாத போதும்

அப்படியே இருந்தேன்!

இன்பதுன்பமாம் இருமைகள் தம்மை

நீநினைத்தாலும் நிறுத்த முடியாதென

எனக்குத் தான் தெரியுமே!


வெற்று இன்பம் திகட்டும் தினத்-தேன்!

துன்பம்-பனிமலை உருகிக் கரையும்!

ஆசைக் குரங்கு பற்றும் பலகிளை

வேசை மனத்தால் ஆசை நிற்குமா?

இரவு பகலென வரட்டும் இரண்டுமே!

நடுவில் நின்றிடும் நாடகம் அறிவேன்!

நீயே படைத்த பிரபஞ்ச வெளியில்

நிதமும் குழப்பம்... போயதைப் பாரேன்!

வணக்கம் இறைவா! வருகிறேன்" என்றேன்!


மூலையில் கிடந்த மானிடன் ஒருவன்

முண்டியடித்து என்னிடம் வந்தான்!

'விட்டுவிடாதே அரிய வாய்ப்பிது

போனால் வராது....!

நோபெல் பரிசும் பிரதமர் பதவியும்

கேட்டு வாங்கென" காதில் ஓதினான்!


சிரித்தேன் சிரித்தேன்...

அழுகை வரும்வரை விடாது சிரித்தேன்!

கடலில் நுரைக்கும் குமிழிகள் நினைத்தும்..

நோபெல் பரிசில் பிரதமர் பதவியில்

இன்பம் இருப்பதாய்

நினைக்கும் மானுடர்

நினைப்பை நினைத்தும்...

சிரித்தேன் சிரித்தேன்....

அழுகை வரும் வரை விடாது சிரித்தேன்!

-yozenbalki

சனி, 9 பிப்ரவரி, 2013

பெயரொன்று வைத்தானதால் வந்த பீழை இது!



பெயரொன்று வைத்தானதால்

வந்த பீழை இது!


வரிஎன்றும் வார்த்தைஎன்றும்

அறிவென்றும் பெரிதென்றும்


இறுமாறும் 'வெளிஞானம்'

உயர்வென்று தடுமாறுது!


விஞ்ஞானம் பெயர் வைக்கும்

நீருக்குள் நெருப்பிருக்க


வழியில்லை என்றெண்ணும்!

பின்னோர் நாள் 'ஆம்' ஆனால்


நெருப்பின்னை 'தொருப்பென்னும்!

வேறென்ன சொல்லி விடும்?


அலங்காரப் பொருள் செய்யும்

அதுபோதும் என்றெண்ணும்!


உயர் வாழ்வையோ தள்ளும் 

வேறென்ன செய்து விடும் ?


அண்டத்தில் பிண்டமுள

பிண்டத்தில் அண்டமுள


என்றவனை பரிகசித்து

நீர் நெருப்பில் பெருவெடிப்பில்


பனியுருகும் பரிதவிப்பில்

"விஞ்ஞானச் சிற்றெறும்பு"


பொந்துக்குள் புலம்பி அழும்!

அருவொன்று உருவாகும்


உருவொன்று திடமாகும்

திடம் நீராய் காற்றாகி


மறைந்தங்கு மீண்டுவரும்!

பெயர் மாறும் அதற்கென்றும்


ஒலிக்கின்ற பெயரில்லை !

இதழ் சப்தம் பெயராமோ?


இயற்கை ஓர் பெரும் வியப்பு!

ஆதியந்தம் அற்ற வழி!


பிரபஞ்ச சமுத்திரத்தில்

சின்னதொரு சிப்பிகள் நாம்!


பெயரொன்று வைத்தானதால்

வந்த பீழை இதாம்!

திங்கள், 28 ஜனவரி, 2013

Never take anyone for granted

When we are in danger of losing a thing it becomes precious and when it is around us, it seems in tedious abundance and then we take it for granted as if we are going to live forever, which we are not.

-John McGahern

ளிதில் கிடைக்கும் எதையும் நாம் எளிதாகவே எடுத்துக் கொள்கிறோம்!
அது கைதவறி அல்லது கைமாறிப் போகும் வாய்ப்பை அறியாமலே மதிப்புள்ள சிலவற்றை விரைவில் இழந்தும் விடுகிறோம். வாழ்வு சிறியது என்பதை நாம் சிறிதும் உணர்வதில்லையே!










-YozenBalki

செவ்வாய், 1 ஜனவரி, 2013

Gone very far : வேகம் வேகமென வெகுதூரம் போய்விட்டோம்!!


   

பேராசை உருவாக்கும் பெருந்துயர்கள் என்சொல்வேன்!
நூறாசை கொண்டலையும் நரிக்குணங்கள் பெருகுதையோ!

வெறித்தனங்கள் வீணாசை அலங்காரப் பெருவாழ்வு 
தடித்தமனம் திகிடுதத்தம் அகங்கார பேயாட்டம் 

பரபரப்பு பழிகூறல் தீயறிவின் பிணவாசம் 
மரமரத்த நல்லுணர்வு தன்னனலத்துப் புழுவாழ்வு 

நாளும் வளர்க்கின்ற  சூழலிலே கிடக்கின்றோம்  
மேலும் தீவினையே எந்நாளும் புரிகின்றோம்!

நல்லோர் கூட்டுறவில் நாட்டமெதும் கொள்ளாமல்
அல்லவை சேர்ப்போரை அண்டியே பிழைக்கின்றோம்!

பணம்பொருளை பெருக்குதற்கே சிந்தனை செய்கின்றோம்
விதவிதமாய் வித்தகங்கள் பொய்யையே விற்கின்றோம்!  

வேதிப் பொருள்கூட்டி ஓராயிரம் பண்டம் 
தீதுதர இராப்பகலாய் உற்பத்தி பண்ணுகிறோம்!

அண்டமுள ஒருபூமி உருண்டை ஒழிப்பதற்கு
யாண்டும் பேய்களென திட்டங்கள் தீட்டுகிறோம்! 

'வேகம் வேகமென வெகுதூரம் போய்விட்டோம்'
பக்கமுள பந்தமின்றி 'பேசியிலே'  யாருக்கோ ஈசுகிறோம்!

புன்மை விஞ்ஞானம் அருளழித்துப் பொருள் பெருக்க 
உண்மைகளை உதறிவிட்டு பொய்யுடனே வாழுகிறோம்!

அய்யகோ! அழிக்கின்றோம் அன்னைஇயற்கை தனை 
உய்யவழியில்லை உதிரும்  இனிமனிதம்  தான்!

செவ்வாய், 25 டிசம்பர், 2012

Depression kills infamy and celebrities unanimously! What are the remedies?


There was an unprecedented shocking incident happened on 20th December 2012 
at Kotturpuram - Chennai due to mere depression!

At about 1.00 pm, the popular Carnatic vocalist Nithyasree’s husband
V. Mahadevan (45) was jumped off in to the Adyar river from Kotturpuram bridge
 in a fraction of second with his Honda city car keys still inside his pocket.

Though the driver Mr. Suresh was accompanying him, he was unable to predict his next move and stop him from doing it. The cause for jumping to death and committed suicide seems he was grieving for his mother's death and could not handle the pain any longer!!


On inquiring further about this with Mahadevan's car driver Suresh and other people their statement was true and that he had been suffering from depression for the past 5 years and had been receiving treatment for it from a reputed hospital in Chennai too.

Following this statement and other facts the police have concluded that Mahadevan's suicide was indeed due to mere depression.

Though this sudden incident to Nithyashree Mahadevan's family has broken down all of our little hearts and conscience, what is the lesson we have to learn from? And what would be the preventive measure to stop/control these like unpredictable negative exertion?


The worthy points on Depression to be noted down here are:

1. Depression kills people very easily and instantly.
2. Even the normal healthy people, if get sudden little Psy. disorders are taking tablets for it for a longer periods like 5 years, but found no reliable/permanent remedy.
3. Even the reputed medical institutions are still struggling to treat with these kind of ordinary Psy. ailments.
4. Even for the celebrities, the treatment methodologies, medicines and outcomes seems roundabout.
5. Even for a natural phenomenon like mother's death seems intolerable to few which leads to suicide, and the symptoms though presumed by relatives and medical people, could not stop them/prevent their self-ruining attitude.

What to do for your dears and nears if they get sudden depression?

1. Be loving to your beloveds and take care to watch their behaviors and self-talk / talks with others.
2. If any tragedy happens to your beloveds, however little it is, be more concern vigilant and take time to cheer them up.
3. Never leave them gloomy, depressed or see them to be in solitude for longer hours.
4. Try to find out their non-laughable state, and make them know the reality of life.
5. Go to a good Doctor /Institution/ Counselor / Guru, who can treat the patient with utmost care.
6. Put tablets as the Doctors say. But, never keep too much trust on tranquilizing tablets for a very longer period as any good doctors never recommend it to. Take it only as a temporary measure and then ask your good doctor to give a complete counseling/therapy to uproot the root cause.
7. Teach them to practice Pranayama (breath control) or simple meditation for 10-15 min a day.


How to measure your beloved became perfectly normal from depression?

1. He/She should be seen with smiling face, moving with normal life and people.
2. He/She should have a sense of humour.
3. Brisk walk and merry talk with everyone.
4. He.She should not be addicted to tranquilizing tablets and external supportive systems.
5. He/She should openly admit to you that he has totally come out of the past nightmares and feeling happy.
6. His/Her performance in studies/ career/ daily day-to-day life should expose his well being after-all..!!

Though the Almighty is paving the way and destination to everyone of us, it is our prime duty to look after our beloved friends and relatives, kith and kin, dears and nears when they are passing through their tough times in life. As the wise men used to say, always ever, all our distress and misfortunes... "Those-too-will-pass away", if only we are little bit careful and the Province also is helping us to be alertful so!!

Take care!
Lot of blessings!

_____________________________________________________
Photos & news contents, courtesy: From various on-line news papers.

திங்கள், 15 அக்டோபர், 2012

டெங்கு காய்ச்சலில் தப்புவது எப்படி? Ways to escape from Dengue fever!


டெங்கு, பகலில் கடிக்கும் கொசுக்களால் பரவுகிறது: 

டெங்கு காய்ச்சலில் தப்புவது எப்படி?




எலிக் காய்ச்சல், பறவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று உலகில் உருவெடுக்கும் புது புது காய்ச்சல்கள் அத்தனையும் நம்மை ஒரு புரட்டு புரட்டி விட்டது. இப்போது “டெங்கு” காய்ச்சல் மிரட்டுகிறது. லேசான உடல் வலி... கொஞ்சம் வெப்பம் உடலில் தெரிந்தாலே டெங்குவாக இருக்குமோ என்ற பயம் தொற்றிக் கொள்கிறது.

டெங்குவை நினைத்து பீதி அடைவதை விட அதைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக கொசுக்களால்தான் பல வியாதிகள் பரவுகிறது.ஆனால் டெங்குவை பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்தில்தான் கடிக்கும் ஏடிஸ் ஏஜிப்டி என்ற வகையை சேர்ந்த இந்த கொசுக்கள் தென் கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய வெப்ப மண்டல நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.

இக்கொசுக்கள் தேங்கியுள்ள மழைநீரில், நன்னீரில் இனப்பெருக்கம் செய்யும். சூரிய உதயத்திலிருந்தது 2 மணி நேரமும் சூரியன் மறையும் மாலையில் 2 மணி நேரமும் இவை கடிக்கும்.

டெங்கு வைரசில் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 அகிய 4 வகை வைரஸ்கள் உள்ளது. தண்ணீர் தேங்கும் பகுதிகள், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்கள், பாசன பகுதிகளில் ஈடிஸ் கொசுக்கள் உற்பத்தி தாராளமாக இருக்கும். டெங்கு காய்ச்சலாக இருந்தால் காய்ச்சல் திடீரென ஏற்பட்டு திடீரென உடல் வெப்பம் அதிகரிக்கும். தலைவலி, உடல்வலி, எலும்பு மூட்டுகளில் வலி இருக்கும்.

2 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சல் இருந்து கொண்டே இருக்கும். காய்ச்சல்தானே ஒரு மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும் என்று நாமே மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும்.



டெங்கு டைப்-1 பாதிப்பால் தொடர்ந்து ஒரு வாரம் காய்ச்சல் இருக்கும். வேறு பாதிப்புகள் இருக்காது. ஒரு முறை டெங்குவால் பாதிக்கப்பட்டு சில நாட்கள் இடை வெளியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் வந்தால் 2-ம் நிலையில் இருப்பவர்களாக கருதப்படுவார்கள். ரத்தம் உறைவதற்கு தேவையான ரத்த வட்டுகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும், வாய், மூக்கு பகுதிகளில் ரத்தம் வெளிவரும். இதில் நோய் முற்றியவர்கள் டைப்-3க்கு தள்ளப்படுகிறார்கள்.

இவர்களுக்கு ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து ரத்த அழுத்தம், நாடி துடிப்பு குறையும். மயக்கம் ஏற்படும். உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் ஏற்படும். டைப்-2, டைப்-3 நிலையில் இருப்பவர்கள்தான் அபாயம் ஏற்படும். ஆனால் இப்போது முதல் நிலை பாதிப்பு மட்டுமே இருப்பதால் பீதி அடைய வேண்டியதில்லை.

டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த:- வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோ சைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பரிசோதனை செய்தல். எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படும்.

கொசுக்கடியில் இருந்து காப்பதன் மூலம் டெங்கு வராமல் தடுக்கலாம். எனவே வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தொட்டிகள், குடங்களில் பல நாட்கள் தண்ணீரை சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். எப்போதும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.



டெங்கு சுரத்திற்கு தடுப்பு மருந்துகள் உள்ளனவா?

ஆங்கில மருத்துவத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை
என்கின்றனர் !

சித்த, ஆயுர்வேத மருந்துகள் பெரிதும் பயனளிக்கின்றன.

நிலவேம்பு கசாயம் தினம் - காலை / மாலை 30 மிலி வெறும் வயிற்றில் 3 வாரம் தொடர்ந்து பருகினால் டெங்கு உள்ளிட்ட வைரஸôல் பரவும் சுரங்களைத் தடுக்க முடியும்.

ஆயுர்வேதத்தில் அம்ருதாரிஷ்டம் (Amrutha Aristitam) 25 மிலி மருந்து சமஅளவு வெந்நீருடன் கலந்து காலை, மாலை பருகினால் டெங்குவை தடுக்க முடியும்.

சித்த மருந்துகளில் பிரமானந்த பைரவம், வாதசுர குடிநீர் போன்றவை டெங்கு சுரத்தைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகின்றன.
____________________________________________________________

எனது அணுக்க நண்பர் ஒருவர் தன் 17 வயது மகனுக்கு டெங்கு சுரம் வந்து ரத்தத் தட்டணுக்கள் குறைவு ஏற்பட்டதையும், பிறகு அதனை பப்பாளி மரத்தின் இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து ஒரு நாளைக்கு அரை தம்ளர்/ இருவேளை வீதம் இரண்டு நாட்கள் மட்டுமே கொடுத்து அதிசயப் படும்படி குணப்படுத்தியதையும் அடிக்கடி குறிப்பிடுவார். மூன்றாம் நாளே அவரது மகனுக்கு இலட்சக்கணக்கில் ரத்தத் தட்டணுக்கள் கூடியதைக் கண்டு அவரது குடும்ப மருத்துவரே ஆச்சர்யப் பட்டு அந்த வழிமுறையை கேட்டுக் குறித்து வைத்துக் கொண்டாராம்.

Accordingly it is raw papaya leaves, 2 pcs just cleaned and pound and squeeze with filter cloth.
You will only get then one tablespoon per leaf. So two tablespoon per serving once a day is enough. Do not boil or cook or rinse with hot water, it will loose its strength. Only the leafy part and no stem or sap. It is very bitter and you have to swallow it. But it works.
மேலதிகச் செய்திகளுக்கு: http://www.herbalpapaya.com/blog/increase-platelet-count

-Yozen Balki
________________________________________________________________

ரத்தத் தட்டணுக்கள் ( PLATELETS) குறையாமல் காக்கவும், அதனை வேகமாக அதிகரிக்கச் செய்யவும் ஆடாதோடை மூலிகை (ஆரம்ப நிலை தட்டணு குறைவு உள்ளபோது - 1 லட்சம் To 11/2 லட்சம் அளவுக்குள் இருக்கும்போது) சாற்றினை சற்று சூடாக்கி தினம் 10 மி.லி. வீதம் 1 வாரம் சாப்பிட்டால் Platelets அதிகரிப்பதைக் கண்கூடாக காணலாம். (ஆடாதோடை பச்சை இலை கிடைக்காவிட்டால்.... பொடியாக, மாத்திரையாக கிடைத்தாலும் பயன் படுத்தலாம்)

(குறிப்பு : Platelets எண்ணிக்கை மிகவும் குறைந்தால் ரத்தம் செலுத்துவது மிகவும் அவசியம்; நல்லது.)

‘டெங்குவை’ அடங்கச் செய்ய ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளனவா?


உலகப்புகழ் பெற்ற சுமார் 25 ஹோமியோபதி மருந்துகள் வரலாறு நெடுகிலும் டெங்கு, சிக்கன் குனியா, பன்றி சுரம், பறவை சுரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக பயன்பட்டுள்ளன.

1996-ல் டெல்லியில் டெங்கு பேரளவில் தாக்கிய போது அரசின் உத்தரவுக்கிணங்க, டெல்லி மாநில ஹோமியோபதி கவுன்சில் ‘Eupatorium Perf ’ என்ற ஹோமியோபதி மாத்திரையை பல்லாயிரம் பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தாக வழங்கி முழுவீச்சில் டெங்கு சுரத்தைக் கட்டுப்படுத்தினார்கள். மேலும் டெங்கு சுரம், ரத்த கசிவு டெங்கு சுரம் இரண்டையும் (ஆங்கில மருத்துவத்தில் உரிய மருந்துகள் இல்லாத நிலையில்) ஆற்றல்மிக்க 25 ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்திக் காட்டினர்.

ஆதாரம் :http:/www.delhihomeo.com/php/treatment/dengu-pre.htm.

நண்பர்களே! அச்சம் வேண்டாம்!

பெருவாரி நோய்கள் பரவும் காலங்களில்நம் உடலின் தற்காப்புத் திறனை மேம்படுத்திக் கொண்டு நோய் வராமல் தடுக்க முடியும்! நோயின் ஆரம்ப நிலையிலேயே பக்கவிளைவு இல்லாமல் முழுமையாக குணப்படுத்த வாய்ப்புள்ள ஹோமி யோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்துங்கள்.

எளிய கிருமிகளால் மனித உயிர்கள் அழிவது மாபெரும் வீழ்ச்சி! அறியாமை! மனிதன் மகத்தானவன்! மனித உயிர் விலை மதிப்பற்றது! மனித உயிருக்கு அரணாய் திகழும் மாற்று மருத்துவங்கள் இருக்க வீண் பயமும் பீதியும் எதற்கு? டெங்கு சுரத்தை முறியடிப்போம்!

Web source: