பொய்யை விரும்புவது போல
உண்மையை யாருமே
விரும்புவது இல்லை!
உண்மையைக் கண்டு நாம்
அஞ்சி நடுநடுங்குகின்றோம் !
ஏனென்றால்
உண்மை பாரபட்சம் அற்றது-
வேண்டியவர் - வேண்டாதவர்
இருவரையுமே அது
ஒரே தராசில் வைத்து
நிறுத்திப் பார்க்கிறது;
தீர்ப்பு சொல்கிறது!
பின் எப்படி நாம்
உண்மையை உண்மையாகவே
விரும்ப இயலும்?
பஞ்சபூத இயற்கையும்
பாரபட்சம் அற்றதே!
ஓரம் சாராததே!
தீயை தொட்டால்
புத்தர்களையும் அது சுடுகிறது!
பனிக்கட்டியோ
எவருக்குமே குளிர்கிறது!
ஆக,
உண்மையின் இன்னொரு பெயர்
"இயற்கை"!
அது சரி!
இயற்கைக்கு மற்றுமொரு
பெயரும் உண்டு!
அது என்ன தெரியுமா?
அதுதான் "சத்-குரு"!
- மோகன் பால்கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: