கவிதை: இது என்-குணம்: Pardon me for what I am! (Lyric poem)

புதன், 7 செப்டம்பர், 2022

யார் தீண்டத்தகாதவர்கள்?

மீன்கள் வாசமில்லா
குளங்கள் கொண்ட
கோவில்கள் உண்டா?

சந்தையில் வாங்கிய
பூக்கள் யாவும்
எந்த விரல்கள்
பறித்த பூக்கள்?

காய்ந்த
மாட்டின் சாணம்
வரட்டியில்
எங்கள் கைபடாத
விபூதி தான் உண்டா?

உங்கள்
ஆராதனை தட்டில்
விழுந்த காசுகளை
மனுதர்மப்படி
எப்படிப் பிரிப்பீர்?

எங்கள்
ஆடு மாடு கோழி
மேய்ந்து திரிந்து
போட்டக் கழிவுகளில்
முளைத்த
தர்பைப் புற்கள்
உங்கள் கைகளில்!

இப்போது
சொல்லுங்கள்
யார்
தீண்டத்தகாதவர்கள்?

-கவிஞர் கு.தென்னவன்

Courtesy:
WhatsApp University 

எனது நீண்ட கால நண்பர் "சமூக நீதிக் கவிஞர் தென்னவன்", அவர்கள் இன்று எழுதிய கவிதை!
🌸☘️❣️❣️☘️🌸


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: