Translate this blog to any language

புதன், 1 செப்டம்பர், 2010

Never Free download Uniblue Registery Booster! It will not work-and will sit in the Desktop! Way to Delete Uniblue !


Dear Friends!
I recently Free downloaded the Uniblue registry booster.  
It does not work at all
But, when i just wanted to delete and get rid of it, it has never gone from my desktop by various methods.
When i started searching in the web, there are forums criticizing the intention of Uniblue and alike companies doing mishap to users.
Many of such Free Soft wares do not work properly, but sit with our computer adamantly and asking for money to move on. When we want to delete it at last , it can not be deleted by any number of methods. We can find lot of such unwanted junks in our PC which slow down our computers.

OK. Here, at last i found a (forgotten easy) way as one said it in the forum. 

I just want to make it easier to understand. 
Just go to My computer> 
(C:/)>
Programme files>
Uniblue (will be there, some times these people will be hiding in some other name too). 
Then you open the ‘Uniblue’ folder. 
Open it and you will find some bunch of sub folders and files in it. 
You find out ‘uninstall’ and click open. 
It will uninstall completely. 
Your head ache will be gone! 
Good Luck!

For more Tips and ideas
go to: http://www.techontour.com

-Mohan balki

ஈழம்: தவறுகளைக் களைந்து ராஜ தந்திரம் கைக்கொள்ளும் நேரமிது!

அமெரிக்கா, இந்தியா, சீனா என்கின்ற தோணியிலும் பிரிந்து பிரிந்து பயணம் செய்கின்ற பொழுது, ஏதாவது ஒரு தோணியாவது எங்களைக் கரை கொண்டுபோய் சேர்த்துவிடும்: நிராஜ் டேவிட்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 11:43.14 AM GMT +05:30 ]
விடுதலை வேண்டிப் போராடிவரும் ஈழத்தமிழ் இனம் ஒரே நேரத்தில் பல தளங்களிலும் பயணம் செய்யவேண்டும் என்று நீண்டகாலமாக சில புத்தி ஜீவிகள் வலியுறுத்தி வருகின்றார்கள்.
உலக அரங்கில் ஒரு பக்கத்திற்குச் சார்பாக நிலைப்பாடு எடுப்பதென்பது எமது போராட்டத்தை பின்தள்ளிவிடவே வழி கோலும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள்

ஒரு தரப்பை அல்லது ஒரு நாட்டை மாத்திரம் நம்பி தமது இருப்பு, நகர்வுகள், எதிர்காலம் போன்றனவற்றை ஒப்படைப்பதைத் தவிர்த்து, பல நாடுகள், பல அமைப்புக்கள், என்று ஈழத் தமிழர் வியூகம் அமைத்தால் எம்மால் ஒரு விடுதலையை நோக்கிப் பயணிக்க முடியும் என்ற சிலரது வாதம் பற்றி நாம் சற்றுச் சிந்தித்துத்தான் ஆகவேண்டி இருக்கின்றது.
அதாவது நாம் உதவி பெறுவதோ, தங்கியிருப்பது ஒரு நாடு என்றிருக்காமல் முடியுமான பக்கங்களில் இருந்தெல்லாம் உதவிகளைப் பெற்று, பல தளங்களிலும் காய்களை நகர்த்தி எமது விடுதலையை நோக்கிப் பயணிக்கவேண்டும்.

உதாரணத்திற்கு நாம் அமெரிக்காவுடனும் நட்பு பேணவேண்டும். கியூபாவுடனும் பேசவேண்டும். இந்தியாவையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். முடியுமானால் சீனாவிடமும் பொருளாதாரம் செய்யவேண்டும். இது அனைத்தையும் இழந்துவிட்டு நம்பிக்கை என்கின்ற ஒன்றை மாத்திரமே பலமாகக் கொண்டு நகர முற்படுகின்ற எமது இனத்திற்குப் பெரிதும் பலம் சேர்க்கின்ற ஒன்றாக இருக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.....

சிறிலங்கா தேசம் அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்கியது. சீனாவைத் துணைக்களைத்துச் சண்டை போட்டது. பாகிஸ்தானின் விமானங்களை வரவழைத்து குண்டு வீசியது. இந்தியாவிடம் இருந்து ராடர் கருவிகளைப் பெற்று தன்னைக் காத்துக்கொண்டது. இஸ்ரேலுக்கு தனது படைவீரர்களை அனுப்பி பயிற்றுவித்தது. ஈரானுக்கு தனது அரச தலைவரை அனுப்பி கைலாகு கொடுத்தது. இப்படி பல தளங்களிலும் நின்று இராஜதந்திரம் செய்ததால்தான் சிறிலங்கா தேசம் ஒரு இமாலய வெற்றியை அதனது வரலாற்றில் பெற முடிந்தது........

இதைத்தான் இராஜதந்திரம் என்று கூறுவது. இந்த ராஜதந்திரத்தை நாம் சரியாக எமது கடந்த காலத்தில் செய்யவில்லை.

இந்தியாவை நம்பியிருந்த பொழுது இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக நாம் அமெரிக்காவைப் புறக்கணித்தோம். எம்.ஜீ.ஆரைச் சார்ந்திருந்த பொழுது அவரைத் திருப்திப்படுத்த கருணாநிதியைப் புறக்கணித்தோம்.

திராவிடக் கட்சிகளைத் திருப்திப்படுத்த விஷ்வ இந்து பரிசாத் தலைவர் பால்தாக்ரே நீட்டிய நேசக்கரத்தை தட்டிவிட்டோம். மேற்குலகைத் திருப்திப்படுத்த போராடும் இனங்களின் காவலன் என்று கூறப்படுகின்ற கியூபாவையும், ரஷ்யாவையும் நிராகரித்தோம். கடைசியில் எந்தத் தோணியிலும் நாம் ஏறாமல் நடுக் கடலில் தத்தளித்துக்கொண்டு நிற்கின்றோம்.........

அந்த நேரத்தில் இந்தியாதான் ஈழத் தமிழருக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமாக இருந்தது. அந்த நேரத்தில் அமெரிக்காவுடன் நாம் கைகோர்த்திருந்தால் இந்தியா எங்களை கைகழுவி விட்டிருக்கும் என்று சிலர் வாதாடலாம். அந்த வாதத்தில் உண்மையும் இருக்கத்தான் செய்கின்றது.

இதற்கும் சிங்கள தேசத்திடம் இருந்தே நாம் கற்றுக்கொள்ளவேண்டும். சிங்கள தேசம் எப்படி எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் நாடுகளை, சக்திகளை தனக்கு ஏற்றாற்போன்று கையாளுகின்றது என்று ஆராய்ந்து பார்த்தால் சில விடயங்களை எங்களால் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

ஜே.ஆர். அமெரிக்காவுடன் பேசுவார். இஸ்ரேலை அழைத்து இலங்கையில் நிறுத்துவார். அதேவேளை, சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் ஏ.சீ.எஸ் கமீது அரபு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரபு நாடுகளைச் சமாளிப்பார். அரபு நாடுகளிடம் இருந்து நிதி உதவிகளைப் பெற்று வருவார்.
ஒரு பக்கம் சந்திரிக்கா இந்தியாவுக்குச் சென்று கூடிக் குலாவுவார். மறுபக்கம் மகிந்த பலஸ்தீன உதவி வழங்கும் அமைப்புகளுக்கு தலைமை வகிப்பார். அதேவேளை லக்ஷ்மன் கதிர்காமரோ மேற்குலக ராஜதந்திரிகளைச் சமாளிப்பார்.

மகிந்த இந்தியாவுடன் ஒப்பந்தம் பற்றிப் பேசுவார். ஜே.வி.பி அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து சீனாவுடன் சிறிலங்கா தேசத்தை நட்பாக வைத்திருக்கும். – எப்படி பல தோணிகளில் பயணம் செய்வதென்பதும், எப்படி பல தரப்புக்களில் இருந்தும் நன்மைகளைப் பெற்று எமது பாதையைச் செப்பனிடுவது என்பதும்- நாங்கள் சிங்களத்திடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.

எமது போராட்ட வரலாற்றில் இடம்பெற்ற ஒரு உதாரணத்தை இந்த இடத்தில் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
இந்தியாவைத் தளமாகக் கொண்டு, உலகளாவிய ரீதியில் மிகவும் பலமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு இந்து அடிப்படைவாத அமைப்புத்தான்: ‘விஷ்வ இந்து பரிஷாத் அமைப்பு‘. இந்த அமைப்பின் தலைவராக இருந்த பால்-தர்க்கரே இந்தியாவில் மிகவும் பிரபல்யமான ஒரு தலைவர். இந்தியாவின் ஆட்சியைத் தீர்மானிப்பதில் முக்கியமானவர். இவர் ஒரு சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளை நோக்கி நேசக்கரம் நீட்டியிருந்தார்.
„பிரபாகரன் ஒரு இந்து. விடுதலைப் புலிகள் இந்துக்கள். ஈழத் தமிழர் இந்துக்கள். எனவே அவர்களை காப்பாற்றும் கடமையும், அவர்களுக்கு ஆதரவு வழங்கும் கடமையும் ஒவ்வொரு இந்துவுக்கும் உள்ளது. அந்த வகையில் விஷ்வ இந்து பரிஷாத் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்க விரும்புகின்றது“ என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.

ஆனால் அந்த நேசக் கரத்தை விடுதலைப் புலிகள் தட்டிவிட்டார்கள்.
விடுதலைப் புலிகளின் மதச் சார்பற்ற கொள்ளை, நிலைப்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அத்தோடு இந்தியாவில் விடுதலைப் புலிகளின் மிக நெருங்கிய ஆதரவாளர்களாகவும், நண்பர்களாகவும் இருந்தவர்கள், விஷ்வ இந்து பரிசாத் அமைப்பின் மிக மோசமான விரோதிகளான திராவிடக் கட்சிகள். எனவே திராவிட அமைப்புக்களின் தோழமையை இழந்துவிடாமல் இருப்பதற்காகவும் விஷ்வ இந்து பரிசாத் அமைப்பின் சேநக்கரத்தை விடுதலைப் புலிகள் பற்றிப்பிடிக்கவில்லை.
இதனைத் தவறு என்று நான் கூறவரவில்லை. விடுதலைப் புலிகள் செய்தது சரியான ஒரு நடவடிக்கைதான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதில் எமது சமூகத்தின் தவறைத் தான் நான் இங்கு சுட்டிக்காண்பிக்க விரும்புகின்றேன்.

விஷ்வ இந்து பரிஷாத்தின் நேசக்கரத்தை விடுதலைப் புலிகள் பற்றிப் பிடிக்காதிருந்தாலும், ஈழத்தில் இருந்த இந்து அமைப்புக்கள் நிச்சயம் பற்றிப் பிடித்திருக்கவேண்டும். விடுதலைப் புலிகள் ஒரு விடுதலை அமைப்பாக விஷ்வ இந்து பரிசாத்தின் உதவிகளைப் பெறுவதில் சிக்கல்கள், சங்கடங்கள் இருந்திருந்தாலும், வேறு ஒரு அமைப்பை மறைமுகமாக ஊக்குவித்திருப்பதன் ஊடாக, உலக இந்துச் சமூகத்தின் நட்பு வலயத்தை உருவாக்கியிருக்கலாம்.

ஏனெனில், உலகில் மூன்றாவது பெரிய மதம் இந்து மதம்தான். கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களுக்கு அடுத்ததாக உலகில் அதிமானோர் வழிபற்றும் மதம் இந்து மதம்தான். உலகில் சுமார் 837 மில்லியன் மக்கள் இந்து மதத்தை பின்பற்றி வருகின்றார்கள். உலக சனத்தொகையில் சுமார் 13 வீதமானவர்கள் இந்துக்கள். இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈழத் தமிழரின் போராட்டத்தில், உலகம் முழுவதும் பரவி வாழும் இந்துக்களை நாம் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதும், இந்து ஆதரவுத் தோணியில் நாம் பயணிக்கவில்லை என்பதும் ஈழத் தமிழர் விட்ட மிகப் பெரிய தவறுகளில் ஒன்று என்றுதான் கூறவேண்டி இருக்கின்றது.

வாசல்தேடி வந்த ஒரு நட்பு சக்தியை சரியாகக் கையாளாதது உண்மையிலேயே ஈழத் தமிழர் விட்ட பெரிய பிழை என்றுதான் நான் கூறுவேன்.

வடக்கு கிழக்கில் சிறிலங்கா இராணுவம் கால் வைத்த ஒவ்வொரு தெருக்களிலும் இந்து ஆலயங்கள், வழிபாட்டு தலங்கள், கடைசி ஒரு சூலமாவது நட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்தியப் படைகள் நுழைந்த ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறைகள் இருக்கத்தான் செய்தன. நாங்கள் உலக இந்து அமைப்பை சரியாகக் கையாண்டிருந்தால், எந்த தெருக்களில் சிறிலங்கா இராணுவத்தின் சப்பாத்துக் கால்கள் நடந்திருந்தாலும், தமிழரின் எந்த வீட்டின் மீது குண்டுகள் வீசப்பட்டாலும், அது இந்து வழிபாட்டுத் தலங்களின் மீதான தாக்குதல்களாக மாற்றப்பட்டு உலகளாவிய ரீதியில் ஒரு பெரிய எதிர்பினை ஏற்படுத்தியிருக்கலாம்.

இதேபோன்றுதான், கிறிஸ்தவர்கள் என்கின்ற ஒரு பெரிய தோணியையும் ஈழத் தமிழர் தமது விடுதலைப் பயணத்தில் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

உதாரணத்திற்கு கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் உலகின் பல நாடுகளிலும், குறிப்பாக மேற்குலகின் பல தெருக்களிலும் ஈழத் தமிழர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள். அவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தமது கைகளில் புலிக்கொடிகளையும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படங்களையும், வன்னியில் படுகொலை செய்யப்பட்டு மக்களின் இரத்தம் தோய்ந்த காட்சிகளையும் தாங்கிக்கொண்டு வீதிகளில் இறங்கியிருந்தார்கள். உலகத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் இந்த கவனயீர்ப்புப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதில் எங்களால் பெரிதாக வெற்றி காண முடிந்ததா என்று பார்த்தால்;- அதில் பாரிய அளவிற்கு எம்மால் வெற்றியீட்டியிருக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

அதேவேளை, ஈழத் தமிழரில் ஒரு சிறிய குழு கைகளில் சிலுவைகளையும், பைபிளில் அநீதிக்கு எதிராக கூறப்பட்டிருக்கின்ற சில வாக்கியங்களையும், பாதிக்கப்படுகின்றவர்களுக்கு உதவேண்டும் என்ற கிறிஸ்துவின் போதனைகள் அடங்கிய பதாதைகளையும், வன்னியில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், தேவாலயங்கள் போன்றனவற்றின் காட்சிகளைக் கொண்ட புகைப்படங்களையும் சுமந்தபடி வீதிகளில் இறங்கியிருந்தால், மேற்குலகின் அத்தனை கவனமும் நிச்சயம் எம்மை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எங்களில் ஒரு தரப்பு அவ்வாறு செய்திருந்தால், எமது பிரச்சனையையும், எமக்கு நடந்த அநீதிகளையும் உலகம் பார்த்திருக்கும். எமக்கெதிரான அவலத்தைத் தடுக்க மேற்குலகம் நிச்சயம் முயன்றிருக்கும்.
புலம்பெயர்ந்த நாடுகளில் சுமார் 500 இற்கும் அதிகமான கிறிஸ்தவ சபைகள் ஈழத் தமிழர்களால் நடாத்தப்படுகின்றன. இந்தச் சபைகளை நாம் எமது போராட்டத்தின் ஒரு அங்கமாக மாற்றவில்லை என்பது உண்மையிலேயே ஒரு பின்னடைவு என்றுதான் நான் கூறுவேன்.

போராட்டத்தின் அங்கமாக மாத்திரமல்ல போராட்டத்தின் எதிரிகளாகவும் கூட சில பொறுப்பாளர்களால் இந்தச் சபைகள் கையாளப்பட்ட சம்பவங்கள் ஏராளம் இருக்கின்றன. புலம் பெயர் தமிழ் தேசிய ஊடகமாக ஒரு காலத்தில் அடையாளப்படுத்தப்பட்ட ரி.ரி.என் தொலைக்காட்சி ஒரு கிறிஸ்தவ சபையின் விளம்பரத்தை ஒளிபரப்புவதற்கு மறுத்ததை அந்தச் சபையின் போதகர் ஒரு தடவை என்னிடம் கூறி மனவருத்தப்பட்டார்.

விடுதலைப் புலிகளால் சுவிஸ்சில் வெளியிடப்பட்ட ஒரு பத்திரிகையில் கிறிஸ்தவ சபை ஒன்றின் முக்கிய நிகழ்ச்சி பற்றி வெளிவந்த விளம்பரம் தொடர்பான பிரச்சனை வன்னிவரை செய்றிருந்தது.
இப்படி கிறிஸ்தவ மத அமைப்புகளுக்கு எதிராக தேசியம் பேசிய எம்மில் சிலரால் மேற்கொள்ளப்பட்ட அசம்பாவிதங்கள் பற்றி பல முறைப்பாடுகள் இருக்கின்றன.

தேசிய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பொறுப்புக்களில் இருந்த சிலரது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, மதநம்பிக்கை காரணமாக இடம்பெற்ற இதுபோன்ற சம்பவங்கள், புலம்பெயர் நாடுகளில் இருந்த கிறிஸ்தவ மத அமைப்புக்களை போராட்டத்தில் இருந்து அன்னியப்படவைத்திருந்தது என்பதான ஒரு சுயவிமர்சனத்தை இந்தச் சந்தர்பத்தில் செய்வது அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்.

இதேபோன்றுதான் இலங்கையின் தமிழ் பேசும் சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் இஸ்லாமிய சமூகத்தை எமது போராட்டத்துடன் இணைத்துக்கொள்ளாததையும் குறிப்பிட வேண்டும்.

தமிழ் மக்களைப் போலவே இலங்கையில் ஏராளமான அடக்குமுறைகளை எதிர்கொண்ட, எதிர்கொண்டுவருகின்ற ஒரு சமூகம்தான் இஸ்லாமிய சமூகம். ஈழத் தமிழருடைய போராட்டத்தில் இணைந்து போராட ஒரு சந்தர்ப்பத்தில் அந்த இஸ்லாமிய சமூகம் முன்வந்திருந்தது. ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகளில் தம்மை இணைத்துக்கொண்டு தம்மை ஆகுதியாக்கிக்கொண்ட இஸ்லாமிய இளைஞர்கள் எத்தனையோ பேர்.
 'தமிழீழத்தை அமிர்தலிங்கம் கைவிட்டாலும், நான் கைவிடமாட்டேன்" என்று பிரகடனம் செய்தவர்தான் மறைந்த அஷ்ரப். ஆனால் வளமையான எமது பிறவிக் குணம், இஸ்லாமியர்களை வேறுபிரித்து எமது போராட்டத்தில் இருந்து அவர்களை அன்னியப்படுத்தி – அவர்களை எமது போராட்டத்தின் எதிரிகளாக்கிவிடும் சிங்கள பேரினவாதத்தின் திட்டத்திற்கு துணைபோயிருந்தது......

அதுமட்டுமல்ல ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு ஈழத் தமிழனும் வெட்கித் தலைகுனியவேண்டிய அளவிற்கான சில சம்பவங்களை எம்மைப் போன்றே அடக்கப்படுகின்ற ஒரு சமூகத்திற்கு எதிராக யாழ்பாணத்திலும், காத்தான்குடியிலும் நாம் செய்திருந்தோம்.
எமது போராட்டப் பயணத்தில் இஸ்லாமிய படகிலும் பயணிக்கும் சந்தர்ப்பத்தை நாம் இழந்துவிட்டிருந்தோம்.

பல தளங்களில் எமது போராட்டம் சமாந்தரமாகப் பயணிக்கவில்லை என்பதை உணர்த்தும் நோக்கோடு நாம் மேலே பார்த்திருந்த விடயங்கள் வெறும் உதாரணங்கள் மாத்திரம்தான். பல தளங்களை எமது போராட்டத்திற்குச் சாதகமாக மாற்றிக்கொள்வதென்பதுதான் தொடர்ந்து நாம் எமது விடுதலை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

நாங்கள் எதோ செய்து அமெரிக்காவை எமது விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஐரோப்பாவை எமது முக்கிய தளமாகத் தொடர்ந்தும் பேண வேண்டும். இந்தியாவிடம் இருந்து எத்தனை தூரம் எமக்கு உதவிகளைப் பெற முடியுமோ அத்தனை தூரம் பெற்றுக்கொள்ளவேண்டும். இதற்குப் பல வழிகள் இருக்கின்றன.

எதிர் எதிர் துருவங்களில் இருக்கும் சக்திகளைச் சமாளித்து அவர்களிடம் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு முதலாவது வழி, எங்களுக்கு இடையே காணப்படுகின்ற பிளவுகளைப் பிரிவுகளைக் கூட எப்படி எமது இனத்தின் நன்மைக்காகப் பயன்படுத்துவது எப்படி என்று நாம் யோசிக்கவேண்டும். நாங்கள் பிரிந்து நின்றாவது எமது இனத்தின் விடுதலைக்காகப் பயணம் செய்யவேண்டும்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச இராஜதந்திரத்தைக் கையாண்டால், மக்களவை புலம் பெயர் ஆதரவுத் தளத்தை தக்கவைக்கும் நகர்வினை எடுக்கலாம்.

பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய அரசைக் கையாண்டால், கனடிய தமிழ் காங்கிரஸ் கனடிய அரசைக் கையாளலாம்.
குளோபல் தமிழ் போரம் மேற்குலகைக் கையாண்டால், எம்மிடையேயுள்ள இடதுசாரிகள் ஒன்றிணைந்து கிழக்கு உலகைக் கையாளமுனைய வேண்டும்.

த.தே.கூட்டமைப்பு இந்தியாவின் காலில் விழுந்து கிடக்கின்றது என்று நாம் குறைகூறுவதை விட, தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக இந்தியாவை நாம் எப்படிக் கையாளலாம் எப்பது பற்றி யோசிக்கவேண்டும்.
அதேபோன்று, வெவ்வேறு நாட்டு அரசியலில் காணப்படுகின்ற முரண்பாடுகளைக் கூட எமக்குச் சாதகமாக்கிக் கொள்வது எப்படி என்று நாம் சிந்திக்கவேண்டும்.

எமது விடுதலையின் பாதையில் பயணம் செய்கின்ற பொழுது, வியூகம் அமைத்து இராஜதந்திரத்துடன் பயணிக்கின்ற பொழுது, எமது இனத்தில் உள்ள நல்ல கெட்ட அத்தனை அம்சங்களையும் நாம் எவ்வாறு எமது இனத்தின் விடுதலைக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று யோசித்து, கையாண்டு பயணிக்கின்ற பொழுது,- விடுதலை என்கின்ற விடயம் எங்களால் பெறமுடியாத ஒரு விடயம் இல்லை என்பதுதான் உண்மை.
nirajdavid@bluewin.ch
source: http://www.tamilwin.com/view.php

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

You can save your drowned Mobile Phone! நீரில் நனைந்த உங்கள் செல்பேசியை காப்பாற்றும் வழிகள் !


Ever dropped your mobile phone in the sink, or even worse... the toilet? 

Did you ever leave it in your pocket and run it through the washing machine?

Did you ever drenched it in the heavy rain? 

It usually means you have to replace your phone, but sometimes if you're fast, you can save the phone! It's not being wet that kills a cell phone, it's being on and wet at the same time. This can short-circuit your mobile and do harm. If you're able to turn your phone off before it affects, you may well be able to save your drowned phone!  

10  important steps to save your mobile phone:
  
1.  Get it out of the water as soon as possible. The plastic covers on cell phones are fairly tight, but water can enter the phone in a short period of time, perhaps only 20 seconds or less. Grab your phone quickly! If you can't get to it in time, your best bet is to remove the battery while it is still under water. Water helps dissipate heat from shorts that can damage the phone, so most damage occurs when the inside of the phone is wet and connected to a power source.  
   
2.  Don't panic. Your phone will probably not be too damaged if you take it out of the water right away. 

3.  Remove the battery. This is one of the most important steps. Don't take time to think about it; electricity and water do not mix. Cutting power to your phone is a crucial first step in saving it.

4.  Remove the SIM card if you have a GSM carrier, . Some or all of your valuable contacts (along with other data) could be stored on your SIM. To some people, this could be more worth saving than the phone itself.

5.  Dry your phone. You can put it in a bag of rice. Obviously you need to remove as much of the water as soon as possible, so you can save it from getting into the phone. Shake it out without dropping it, then use a towel or paper towel  to gently remove as much of the remaining water as possible. Dry the excess moisture by hand.

Remove any covers and external connectors to open up as many gaps, slots, and crevices in the phone as possible. 

6.  Use a vacuum cleaner if possible.  
Do not use a hair dryer (even on a "cold" mode) to dry out the phone, as this may force moisture further into the small components and likely melt them, deep inside the phone.  Using a hairdryer might be a temporary fix, but this will eventually cause component failure inside the phone. Instead, remove all residual moisture by drawing it away with a vacuum cleaner held over the affected areas for up to 20 minutes in each accessible area. This is the fastest method and can completely dry out your phone and get it working in 30 minutes.

7.  Use a substance with a high affinity for water to help draw out moisture. Leave the phone in a bowl or bag of uncooked rice overnight. The rice would absorb any remaining moisture. Turn the phone to a different position every hour until you go to sleep. This will allow any water left inside to run down and hopefully find an opening to escape. 

8.  Let the phone sit on absorbent towels, napkin, or other paper. Remember that the goal is to evacuate all the moisture and humidity, not to trap it or add even more. Check the absorbent material every hour for 4 to 6 hours. If moisture is evident, repeat the vacuuming step and desiccant steps. 

9.  Test your phone. After you have waited a day or so, make sure everything is clean and looks dry, and re-attach the battery to the phone. Try turning it on. If your phone still does not work, try plugging it into its charger without the battery. If this works, you need a new battery. If not, try taking your cell phone to an authorized dealer. Sometimes they can fix it. Don't try to hide the fact that it has been wet. There are internal indicators that prove moisture. 

10. Take the phone apart if your phone doesn't turn on at all. If you feel comfortable doing this, try taking it apart. First, make sure that you have ALL the right parts and know exactly where they go. Be sure to put everything back in its proper place once finished. As you're disassembling it, pat each individual part dry with a small towel and use the vacuum cleaner once more on the parts.

11.  If this and all do not work, go to the professionals.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

Child Prodogies! மேதைக் குழந்தைகள் - பிறவிக் கலைஞர்கள்!

               3 Year Old Drummer !!!

                3 Year Old Violinist !!!

                   3 Year Old Pianist !!!

புதன், 4 ஆகஸ்ட், 2010

"Akshardham"in New Delhi - Wonder of the World: தெரியுமா அக்ஷர்தாம் கோவில் உலக அதிசயம் !!

உலகப் புகழ் பெற்ற "சுவாமி நாராயணா மந்திர்" பற்றிய காணொளி:
(சுவாமி நாராயணாவின் காலம் 2nd April 1781 – 1st June 1830. He also known as Sahajanand Swami )


கீழே உள்ள காணொளி "சுவாமி நாரயணா" என்னும் அந்த ஞானியின் வரலாறு பற்றி காட்டுகிறது! 
______________________________________________________________________________
வணங்குதலுக்கு உரிய மிகப் பெரும் சாதனையாளர் உயர்திரு Pramukh Swami மகாராஜ் அவர்களின் திரு உருவப் படங்கள்:
___________________________________________________________________________
லகத்திலேயே மிகச் சிறப்பான ஈடு இணையற்ற ஒரு இடம் எது' ,என்று கேட்டால்  நான்,  'அது இந்தியாவில் உள்ள அக்ஷர்தாம் '(Akshardham ) என்றுதான் கூறுவேன். நான் கற்பனை செய்ததை விட அக்ஷர்தாம் மிக மிக அழகாக உள்ளது. தாஜ்மஹால் என்னமோ அழகுதான். ஆனால் இந்த அக்ஷர்தாம், அழகுடன் சேர்த்து நமக்கெல்லாம் ஒரு அழகிய செய்தியையும் சொல்கிறது"   
- பில் கிளிண்டன்
 ________________________________________________________________________

"அக்ஷர்தாமை  உருவாக்கிய "பிரமுக் சுவாமிஜி மகாராஜ் அவர்கள்" ( Pramukh Swamiji Maharaj ) இது போன்ற ஒரு அழகிய பண்பாட்டுக் கலைக் கூடத்தை உருவாக்கி உலக மக்கள் உள்ளத்தில் இடம் பிடித்துவிட்டார். அக்ஷர்தாம் ஒரு அற்புத கலாசாலை, உன்னத அனுபவம், ஞானஸ்தலம்.
 இந்த அக்ஷர்தாம் கலைக் கோவில், விடாமுயற்சியும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள் நம் உலகிற்கு தந்த  21 - ஆம் நூற்றாண்டின் பரிசு ! இது போல் அக்ஷர்தாமில் முடியும் என்றால், இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான எழுச்சி பெற்ற இளைஞர்களால் வரும் 2020 -க்குள் நிச்சயம் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எனக்குள்  வந்துவிட்டது".  
-அப்துல் கலாம்  
_____________________________________________________________________
இப்படி பலரும் போற்றும் டெல்லியில் உள்ள "அக்ஷர்தாம்", "சுவாமி நாராயணா மந்திர்" என்னும் ஹிந்துக் கோவில், உலகில் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடமாகும்! குறிப்பாக இந்தியர்கள், அதிலும் குறிப்பாக ஹிந்துக்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்.   

அக்ஷர்தாம் கோவிலின் சிறப்புகள்:
1 .  யமுனை நதிக் கரையில் சுமார் 60 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. 

2 .  நவம்பர் 2000 த்தில் துவங்கி , நவம்பர் 2005 வரை, சுமார் ஐந்து ஆண்டுகள் கோவில் பணிகள் நடைபெற்றன.

3 .  இதன் மாதிரி வடிவமைப்பு செய்வதற்குமுன், சிற்ப கலை வல்லுனர்கள், மற்றும் சாதுக்கள் சேர்ந்து இந்தியா முழுவதும் சென்று அங்கோர் வாட், ஜோத்பூர், ஜகன்னாத் புரி, கோனார்க் மற்றும் தென்னிந்தியக் கோவில்களைச் சுற்றிப் பார்த்து, எட்டாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான சிற்பக் கோவில்களை ஆய்வு செய்தனர்.

4 .  சுமார் 7000 சிற்பக் கலைஞர்கள், 3000 தன்னார்வத் தொண்டர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றினார்.

5. 6000 டன் எடை கொண்ட இளஞ் சிவப்பு நிற பளிங்குக் கற்கள் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப் பட்டு, முதலில் இயந்திரம் மூலமும் பிறகு நுட்ப வேலைகள் யாவும் வெறும் கைகளாலும் செதுக்கப் பட்டது. 

6 .  2005 ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று "சுவாமி பிரமுக் மகராஜ் அவர்கள்' (His Holiness Pramukh Swami Maharaj, revered spiritual leader of BAPS )  இதனை நாட்டுக்கு அர்ப்பணித்தார். திறப்பு விழாவில், குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், பிரதம மந்திரி திரு.மன்மோகன் சிங், எதிர்க் கட்சித் தலைவர் திரு. எல்.கே.அத்வானி மற்றும் 25000 பிரதிநிதிகள், லட்சக்கணக்கான மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

7 .  "உலகின் மிக விசாலமான ஹிந்துக் கோயில்" World’s Largest Comprehensive Hindu Temple என்று, 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று கின்ன்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது.
(Three temples, the Meenakshi Amman Temple in Madurai, the Sri Ranganathaswamy Temple in Srirangam, and the Arunachaleswarar Temple in Thiruvannamalai, all located in Tamil Nadu, India, are claimed to be larger than Akshardham. The trustees of these temples have reportedly disputed the Guinness World Record)

8 .  இதே போன்ற "சுவாமி நாராயணா" கோவில்கள் Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS)சுவாமி நாராயணா சான்ச்தா என்னும் அமைப்பின் மூலம் உலகின் பல பாகங்களில் 700 -க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டப்பட்டு உள்ளன.  
(மேலே கிளிக் செய்து பாருங்களேன்! ஆச்சர்யத்தில் எனது தலை சுற்றுகிறது. இந்த ஒரு கோவிலே உலக அதிசயம் போன்றது -மற்றவை யாவும் அதேபோல் குறைவின்றியே இருக்கும் என்று சத்தியமாய் நம்பலாம்! இதையெல்லாம் சாத்தியம் ஆக்கிய தெய்வத்திரு பிரமுக் சுவாமிஜி மகாராஜ் அவர்களை, மற்றும் அவரது சக சாதுக்களை என்ன சொல்லி வணங்குவது/வாழ்த்துவது? எந்த வார்த்தைகளும் என்னிடத்தில் இல்லை!)

About BAPS
BAPS is a worldwide socio-spiritual organization in consultative status with the Economic and Social Council of the United Nations dedicated to peace and harmony. BAPS strives to provide spiritual, cultural and social care for society as a whole and is known for its strict observance of ahimsa, the Hindu code of nonviolence. BAPS conducts humanitarian work through a worldwide network consisting of over 8,100 centers, including 4,070 children's centers. Some examples of BAPS' work include natural disaster relief, water conservation and reforestation. Most recently, BAPS was instrumental in the recovery, relief and rehabilitation efforts of the state of Gujarat after the devastating earthquake in January 2001. In North America, over 50,000 families carry out the vision of BAPS.
For more information on BAPS, visit its website at www.swaminarayan.org.

___________________________________________________________________________
 
அது போகட்டும். நாம் எப்போது அக்ஷர்தாம் கோவிலுக்குப் போகலாம்? 


ஆயிரம், வானளாவிய கட்டிடங்களை நவீன தொழில் நுட்பம் கொண்டு உலகில் ஒருவர் கட்ட முடியும். ஆனால், இது போன்ற உயிரோட்டமான சிற்பங்களை நம் இந்தியா தவிர உலகில் வேறெங்கும் காண முடியுமா?


உலகின் உயர்ந்த பல மாடிக் கட்டிடங்கள், இங்குள்ள கோவில்களின் ஒரு தூணுக்கு இணையாகுமா? 


பல்லாயிரம் வருடங்கள் தாண்டியும் தூய்மையும், அழகும், தெய்வீகமும், கலைநுட்பமும் ஒருங்கே சேர்ந்து கம்பீரமாக நிற்கும் நமது இந்துப் பண்பாட்டுக் கோவில்களைக் கண்டு களியுங்கள்! 
அவற்றைக் காப்பாற்றுங்கள்!

அதன் சிற்பங்களை வடிக்கும்-இன்னும் உயிர்வாழும் அந்த உன்னதக் கலைஞர்களைக் காப்பாற்றுங்கள்! 

நமது இந்தியப் பாரம்பர்யம். பண்பாடு கலாசாரத்தை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்-இந்தியாவின் பிற பகுதிகளுக்குச் சென்று வாருங்கள்!

பெருமை கொண்டு தலை நிமிர்ந்து நில்லுங்கள்! 


-Yozenbalki
(மோகன் பால்கி)

சனி, 31 ஜூலை, 2010

இந்திய உணவுக் கழகத்தின் அசட்டை - வீணாகும் தானியங்கள்!


இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை 42 கோடி! 
இவர்களிடம் அதிகம் இல்லாதது சத்துணவு! சரிவிகித ஊட்டச் சத்துள்ள உணவுப் பழக்கம் இல்லாமை அல்லது இயலாமை இவர்களது பொதுக்காரணி.

ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் இத்தனை பேர் தவிக்கையில், இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் விநியோகிக்க முடியாத அளவுக்கு கெட்டுப்போய்க் கிடக்கும் அரிசி, கோதுமை அளவு, ஜூலை 1-ம் தேதி கணக்கீட்டின்படி, மொத்தம் 11,708 டன் என்று தெரியவந்தால், இத்தகைய அக்கறையின்மையை என்னவென்று சொல்வது?இதில் அதிகபட்சமாக, பஞ்சாபில் 7,066 டன், மேற்கு வங்கத்தில் 1,846 டன், பிகாரில் 485 டன், குஜராத்தில் 1,457 டன், மகாராஷ்டரத்தில் 278 டன் தானியம் வீணாகிப்போனது. இதில் மிகக் குறைவான அளவு தானியத்தை வீணடித்த மாநிலங்கள் இரண்டுதான். ஆந்திரம் 6 டன், தமிழ்நாடு 1 டன். இதற்காக நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.இந்தியாவில் தானியங்களை விளைநிலத்திலிருந்து நேரடியாக கொள்முதல் மையத்துக்கு தானியத்தைக் கொண்டுசெல்லும் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருக்கின்றன. இதனால், விளையும் தானியங்களில் 20 விழுக்காடும், அழுகும் காய்கனிகளில் 30 சதவீதமும் வழியிலேயே வீணாகிப் போகின்றன என்கிறார் வேளாண்மை ஆர்வலர் மோகன் தாரியா.


இந்த நிலைமைகளையும் தாண்டித்தான், உணவு தானியங்கள் இந்திய உணவுக் கழகக் கிடங்குகளுக்கு வருகின்றன. அதையும் சரியாகப் பாதுகாக்காமல் வீணடித்தால் நெஞ்சு பொறுக்குதில்லை.இந்த நிலைக்கு அடிப்படைக் காரணம் இந்திய உணவுக் கழக அதிகாரிகள்தான். தானியங்களை முறையாக, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அடுக்கி வைக்காமலும், திறந்தவெளியில் அடுக்கி வைத்தும் தானியங்களைப் பாழ்படுத்திய  இந்த அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

தானியங்களைப் பாதுகாக்கப் போதுமான கிடங்குகளை சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் நாம் இன்னும் ஏற்படுத்தாமல் இருப்பது யாருடைய குற்றம்? உலகத் தரத்திலான விமான நிலையங்கள், மோட்டார் வாகனங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வளாகங்கள், சாலைகள் என்று பெருமை பேசும் நாம், உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை முறையாகப் பாதுகாக்கவும் சேமிக்கவும் தரமான கிடங்குகளையும் குளிர்பதனக்கூடங்களையும் அமைக்காமல் இருக்கிறோமே, ஏன்?நாட்டில் ஓர் இடத்தில் மழை பொய்த்தாலும், இன்னொரு பகுதியின் விளைச்சலைக் கொண்டுபோய்ச் சேர்த்து, பஞ்சத்தைப் போக்கிவிட முடியும் என்பதால் இனி பஞ்சமே வராது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. 

இதைச் சாத்தியமாக்க உருவான இந்திய உணவுக் கழகம், தானியத்தை வீணடித்துக் கொண்டிருப்பது தொடர்பாக உச்ச  நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு தானியம் வீணாகிப் போனது என்பதை உணவுக் கழகத்தின் மூலம் அறியவந்த நீதிபதிகள் கொதிப்படைந்துவிட்டனர். "சாப்பிட வழியில்லாத ஏழைகள் வாழும் இந்த நாட்டில் ஒரேயொரு மணி தானியம் வீணாவதும்கூட குற்றமாகும்' என்று கூறியுள்ள நீதிபதிகள், இந்த தானியங்களைக் கெட்டுப்போகிற வரை வைத்திருக்காமல், தேவைப்படும் மக்களுக்கு உடனடியாக விநியோகம் செய்தால் என்ன? என்று கேள்வி எழுப்பி, ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.இந்திய உணவுக் கழகத்தின் ஊழலும், சிதறிப்போகும் தானியத்தின் அளவும் அதிகமாக இருப்பதால், ஏன் அனைத்து நடைமுறையையும் கணினிமயமாக்குதல் கூடாது என்றும் நீதிபதிகள் ஆலோசனை கூறியுள்ளனர். இந்த தானியங்கள் எதற்காக பல கிடங்களுக்கு மாறிச்செல்ல வேண்டும்?


உணவுக் கழக கிடங்கிலிருந்து நேரடியாக பொதுவிநியோக மையத்துக்கு அளிக்கும் முறையை உருவாக்கினால் என்ன என்றும்கூட நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இவ்வாறு பல கிடங்குகளுக்கு மாற்றுவதன் நோக்கமே அரசியல் பின்புலம் உள்ளவர்களின் லாரிகளுக்கு வாடகை கொடுப்பதற்கே என்பது ஊர் அறிந்த ரகசியம்.சேமித்து வைக்க இடம் போதவில்லை என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், தனியார் இடங்களை வாடகைக்கு அமர்த்தவும் இவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் செய்வதில்லை. தானிய மூட்டைகளில் பொத்தல் போட்டு ஒவ்வொன்றிலும் கொஞ்சம் தானியத்தைப் பிரித்தெடுத்து, விற்றுக் காசு பார்க்கும் கூட்டம் உணவுக் கழகத்தில் இருப்பதால், தானியம் கெட்டுப்போனால்தான் இவற்றையெல்லாம் மூடி மறைக்க முடியும்.

இந்தியாவில் பல கோடி ஏழைகளின் வீட்டுக்குப் போக வேண்டிய தானியத்தை தங்கள் சுயநலத்துக்காக ஏமாற்றி வெளியே கொண்டுபோய் விற்கிறோம் என்றோ, இவை கெட்டுப்போய், நியாயவிலைக்கடைகள் மூலம் கிடைக்கும் நேரத்தில் உண்ணவும் தகுதியில்லாததாக மாறுகிறது என்கின்ற எண்ணமோ இல்லாத அளவுக்கு இவர்கள் மனம் ஊழலாலும் அதிகார மமதையாலும் மரத்துப்போய்விட்டது. 

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?- என்கிறான் மகாகவி பாரதி. இந்திய உணவுக் கழகத்தின் அலட்சியம் மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கத்தின் எச்சம்தானே!

Courtesy: http://www.dinamani.com/edition/

வெள்ளி, 30 ஜூலை, 2010

இது போன்ற கருவிகள் இல்லாமல் "சாலை-தர-நிர்ணயம்" சாத்தியம் இல்லை! Standardize Everything - To ensure Quality!


ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளில் நல்ல சாலைகள் போடப் படுவதை உறுதிப் படுத்திக் கொள்ள,  "சாலைத் தரம்- கண்காணிக்கும் கருவிகள்" உள்ளன! 


முதலில் காண்பது "தரம் காணும் இயந்திரம்-கருவி".

இரண்டாம் படம், தெரு/சாலைகளில் உள்ள மேடு-பள்ளங்களின் அளவை "map " -ஆகக் காட்டுவது!  
அதாவது சாலையின் மேடு பள்ளங்களை அளவிடும் கருவி மூலம் பெருகின்ற
வரைபடம். மூன்று கோடுகள் முறையே, சாலையின் அகலத்தில் மூன்று இடங்களில் உள்ள சமம்-சமமற்ற தன்மையை பிரதிபலிக்கின்றன. இன்னும் அகலமான சாலைகளுக்கு நான்கு, ஐந்து என்று சென்சார்களை கூட்டிக் கொள்ளலாம்-அதன் மூலம் அதற்குத் தக்கபடி நான்கு, ஐந்து வரை படங்கள் நமக்குக் கிடைக்கும்.

 

இது போன்று, தரம் பார்ப்பது என்பது "இந்திய-நெடுஞ்சாலைத் துறையில்' சற்றே காணப் படுகிறது!  ஆனால், உள்வட்டச் சாலைகளில் அது பூஜ்ஜியம்!

மேற்படி கருவிகள் செய்வது ஒன்றும் ராக்கெட்  அனுப்பும் செலவு போன்றது அல்ல! விட்டால் நம்ம ஊரில் சேலம்-திருச்சி கல்லூரிகளில் படிக்கும் நம் கிராமப் புற மாணவர்களே இதை விட சிறப்பான கருவியை ஒரு வாரத்தில் ஒரு லட்சம் ரூபாய் தாண்டாமல், செய்து தந்து விடுவார்கள்! ( ஏற்கனவே பல சிறப்பான கருவிகள் செய்து 'பேடன்ட் ரைட்' உட்பட வாங்கியுள்ளனர் )அது போன்ற கருவியை ஊருக்கு ஒன்று செய்து போட்டு-தரம் கண்காணித்து நமது நாட்டையும்  ஐரோப்பிய நாடு போல நம்மால் செய்ய இயலும்-அரசுக்கு மனம் இருந்தால்!

"அரங்கின்றி வட்டாடியற்றே" என்பது போல, இது போன்ற கருவிகள் இல்லாமல் நம்மூர்  "தெருக்கள்/சாலைகள் - தர-நிர்ணயம் / மற்றும் மீள் பரிசோதனை" சாத்தியம் இல்லை!
மேலும், அப்படிக்கின்றி, சம்பந்தப் பட்ட அதிகாரிகளை தோளில் துண்டு போட்டு பிடித்து வைத்து, "தரம்-பற்றிய" கேள்வியையும் ஆதாரத்தோடு எவரும் கேட்க இயலாது! 

நாம் யோசித்து என்ன ஆகப் போகிறது - நாடு உருப்பட, ஆளும் மகானுபாவர்கள் தான் கொஞ்சம் மனது வைக்கவேண்டும்! 

மகாஜனங்களும், "அப்படி என்ன அவர் தப்புப் பண்ணிட்டார்...மத்தவா பண்ணாத தப்பா...?"என்று சப்பைக் கட்டு கட்டாமல், தவறு செய்யும் அதிகாரிகள், ஒப்பந்தக் காரர்கள் போன்றோரை தண்டிக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டும்! 

குறைந்தது, குற்றம் செய்பவர்களுக்குப்  பரிந்து பேசாமல் வாயைப் பொத்தி வைத்துக் கொண்டு இருந்தாலே போதும்! அது, இந்த நாட்டு வருங்கால சந்ததிகளுக்கு எவ்வளவோ நல்லது!

-மோகன் பால்கி

உருக்குலைந்த, உருப்படாத சாலைகள்-மெத்தன அரசுகள்!


இந்தியாவை நினைத்தால் பாவமாக இருக்கிறது! 

அதற்குள் இருக்கும் மாநில-அங்கங்களின் கதி அதோ கதி! குறிப்பாக உள்வட்டச் சாலைகள் பற்றிப் பேச வருகிறேன்! அது ஏன் நமக்கு நல்ல சாலைகள் பற்றிய விழிப்புணர்வே இல்லை என்று தெரியவில்லை. நம்மூர் தெருக்கள்/சாலைகள் எவ்வளவு கேவலமாக இருந்தாலும் 'சர்கஸ் காரர் ஓட்டுவதை விட லாவகமாக அடிக்கொரு தரம் வளைந்து நெளிந்து, ஏறி இறங்கி, எகிறி குதித்து, இடுப்பு சுளுக்கி படுக்கையில் படுத்தாலும், "ஐயோ! இது இப்படி இருக்கிறதே இது தகாதே", என்று எவரும் நினைப்பதே இல்லை. வயதானவர்களுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு எத்தனை கஷ்டம்? இந்த ஊர் மன்னனாய் இருந்தாலும் அவரது  மனைவி மக்கள் உட்பட இந்த சாலைகளில் தானே எல்லாப் பயணங்களும் போக வேண்டும்! அட! திடீர் நோயாளி ஒருவரை காரில்/ஆட்டோவில் வைத்து அந்தப் பள்ளங்களில் ஏற்றி இறக்கி மருத்துவமனை செல்வதற்குள் அவர் பரலோகம் போய்விடுவாரே !

நானும் பார்க்கிறேன்! எனக்கும் 48 வயது நடக்கிறது. இதே சென்னையில் பிறந்து வளர்பவன் என்ற முறையில் சென்னையின் எல்லா தெருக்கள்-சாலைகளையும்  நான் நன்றாக அறிவேன்! எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ஆட்சிகள் பல மாறிய போதும் இந்த சிங்கார சென்னையின் அலங்கோல தெருக்கள்-சாலைகளின் காட்சி மட்டும் மாறவே இல்லை! எல்லா ஆட்சிகளும் இதில் ஓட்டு மொத்தமாக தோற்றுப் போயின என்றுதான் நான் சொல்வேன்! 

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை கிழவிக்கு மேக்-அப் போடுவது போல் தெருக்களுக்கு இங்கு ஒட்டு-வேலை போட்டு, அதன் மூலம் ஓட்டு வாங்க நினைப்பது. அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் யாராவ்து பொதுக் கூட்டம் பேசி ஓட்டு வாங்க வரும் போது மட்டும்  குப்பை பெருக்கி, தெரு ஓரங்களில் வெள்ளை சுண்ணாம்பு மாவு தூவுவது! ஏற்கனவே நன்றாக இருக்கும் சாலைகள்/தெருக்களை மட்டும் செலக்ட் செய்து கொண்டு காண்ட்ராக்டர்கள் மீண்டும் அங்கேயே மாவரைப்பது! அரசு தரும் தார்-களில் குறைந்தது 40 முதல் 60 %-த்தை வெளி மார்கெட்டில் விற்று விடுவது! கால காலமாக இருக்கின்ற பள்ளம் மேடுகளை சமப்படுத்தாமல் இருந்தமேனிக்கு தோசை சுடுவது போல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தரம்/அளவு குறைந்த சரக்கை போட்டு ஒப்பேற்றுவது! (அதனால் தானே சென்னையில் குறிப்பிட்ட பல இடங்களில் மழை தூறும் !! காலங்களில் தண்ணீர் குட்டை போல் தேங்குகின்றது?) 

தெருக்களை, ஏதேனும் பெயர் சொல்லி அடிக்கடி குத்திக் குடைவது! அந்தச் சமாதிப் பள்ளங்களின் மீது முதலில் தோண்டிய மண்ணையே எடுத்துப் பாதியைத் தூவி விட்டு  மீதியை தெரு முழுதும் விநியோகம் செய்வது! வாகனங்கள் விழுந்து எழுந்து செல்லும் அந்தப் பிறை வடிவ பள்ளங்களில் குப்பைக் கூளங்களும்-மழை நீரும் சேர...கொசுப் பண்ணைகளை இலவசமாக உற்பத்தி செய்வது! தெருவில் பள்ளம் தோண்டியதால் இறைந்து கிடக்கும் மீதி மண் கெட்டி தட்டிப் போய், மேடு மேடாய், திட்டுத் திட்டாய் வருடக் கணக்கில் கிடக்க, முக்கால்வாசி தெருவை யாரும் உபயோகிக்க முடியாமல், ஒற்றையடிப் பாதை போல வளைந்து நெளிந்து இருசக்கர - பல சக்கர வாகனங்கள் 'சர்க்கஸ்" செய்வது சென்னையில் இங்கு கண்கொள்ளாக் காட்சி போங்கள்! இது போல ஒரு தெருவுக்கு பத்து இருபது பள்ளங்களும் அதற்க்குச் சப்பைக் கட்டுகளும், இது விரிந்து விரிந்து  வட்டம்-வார்டு-மாவட்டம் என்று இந்த வியாதி ஒழிக்கவே முடியாத பெரு-நோயாய் போய்விட்டது போங்கள் ! 

நீங்கள் வேண்டுமானால் உங்களை ஒரு மனசாட்சியுள்ள பறவையாய் கற்பனை செய்து கொண்டு, வானத்தில் இருந்து இந்த சென்னை மாநகரைப் பாருங்களேன்! ஒரு அரை நூற்றாண்டுகால சீர்கேடு-அப்படியே கிடக்கிறதே! ஏன்? 

தி-நகரை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்! நார்த் உஸ்மான் ரோடு மேம்பாலம் முடிந்து ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையிலும் அதன் இருபுறம் உள்ள கீழ் வழி சாலைகள் இன்னும் சீர்திருத்தம் இன்றி படு-கேவலமாக உள்ளனவே!

கோடிக்கணக்கில் மேம்பாலங்கள் கட்டுவது-ஆனால் சாலைகள்/தெருக்களை வருஷக் கணக்கில் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது என்பது என்ன நியாயம்?

அது போக, மேற்படி உஸ்மான் சாலையின் இருபுறத் தெருக்களில் மழைக் காலங்களில், படகு விடும் அளவுக்குத் தண்ணீர் தேங்குவதை நாம் மாற்றவே முடியாதா? அதே போன்று, திருமலைப் பிள்ளை சாலையின் மேற்குப் பகுதி தெருக்களில், குறிப்பாக ஓட்டல் Breez அருகில், பெரிய வாகனங்கள் கூட நின்றுவிடும் அளவுக்கு மழைக்கால ஏரிகள் போன்ற  நிலை தலைமுறையாக தொடர்வதை நாம் மாற்றவே முடியாதா? அதே போல, ஸ்டேர்லிங் ரோடு, வேலு மிலிடரி ஹோட்டல் அருகில், ..........வருடா வருடம் மழைக் காலத்தில் பேருந்து தவிர எந்த வண்டியும் போக முடியாத அளவுக்கு பள்ளம்-வெள்ளம்!

இது போன்ற சீர்கேடுகளை எந்த ஆட்சியும்  கண்டு கொள்வதில்லை-அதன் நிரந்தரத் தீர்வுகள்  பற்றி யோசிப்பதே இல்லை! ஆனால், இந்தியா ஒரு வல்லரசு நாடு -சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புகிறோம் -அணுசக்தி- நானோ தொழில் நுட்பம்- இந்தியப் பொருளாதார வளர்ச்சி- அது இது என்று நாம் இங்கு மார் தட்டி என்ன பிரயோஜனம்? அடிப்படையே சரியின்றி ஆகாயத்தில் கோட்டை கட்டி என்ன பயன்? இங்கே வாழும் எவரும் தனது அழகிய மாளிகையை விட்டு இறங்கி நல்லது-கெட்டதுக்கு ஒரு நாள் தெருவுக்கு வரத்தானே வேண்டும்? ஒரு அரசு தான் நிர்வகிக்கும் தெருக்களை அழகு படுத்தாமல், தனி மனிதன் வைத்திருக்கும் கார்களையும்  மாளிகைகளையும் அழகு படுத்தி என்ன பயன்?  இது, இது வரை வந்த எல்லா அரசுகளுக்கும்  பொருந்தும்-இதில் யாருமே மகாத்மா இல்லை என்பதே என் கருத்து!  நம்மிடம் நல்ல தெருக்களை உருவாக்க, அவற்றைப் பராமரிக்கத் தேவையான அனைத்து வசதிகளும், மனித சக்தியும் நிறையவே உள்ளது. ஆனால், நம்மிடம் இல்லாதது "அழகுணர்ச்சிதான்" என்று தோன்றுகிறது!

இதன் நிரந்தரத் தீர்வு தான் என்ன?

1. தெருக்களை / சாலைகளை சரிவர நிர்வகிக்காத, பொறுப்பற்ற அரசுப் பணியாளர்களைஅதிகாரிகளை, கடுமையாக தண்டிக்கும் சட்டங்கள் இயற்ற வேண்டும்!

2. அழகாக நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கு பரிசுகள்-பதவி உயர்வு-மரியாதை  தர வேண்டும்!

3.  ஓரிடத்தில் ஒரு ரோல்-மாடல் தெரு/சாலை ஒன்றை உருவாக்கி, அதிகாரிகளுக்கு அவ்விடத்தைக் காட்டி 'இது போல' உங்கள் பகுதி இருக்க வேண்டும் என்று கண்டிப்பாக ஆணை இட வேண்டும். 

4. தெருவின் இருபுறங்களில், முப்பது அடிக்கு ஒரு இடம் வீதம், ஒரு மின்-இணைப்பு, ஒரு தண்ணீர் குழாய், ஒரு கழிவு நீர் குழாய்,ஒரு தொலைபேசி, ஒரு-பிற இணைப்புக்காக என்று நான்கைந்து கான்க்ரீட் பைப்புகளை சாலை போடும் முன்னரே பதித்து வைக்கவேண்டும்.

5. புதிய இணைப்புகள் தரும்போது சாலைகளில் பள்ளம் போடாமல் 99 % பார்த்துக் கொள்ளவேண்டும். 

6. இணைப்புகள் தருவது, வருடத்தில் சில மாதங்கள் என்று வரையறுக்க வேண்டும். மழைக்காலத்தில் இணைப்புகள் தருவது கூடவே கூடாது. 

7. தவிர்க்க இயலாமல் பள்ளம் போட்டால், ஓரிரு நாளில் அதை மூடி, இருந்த இடம் தெரியாமல், மீண்டும் அதே போல தார் போட்டு சமப் படுத்துவதை சம்பந்தப் பட்ட ஒரு அதிகாரி உறுதி செய்ய வேண்டும். எஞ்சிய மண்ணை அன்றைக்கே அப்புறப் படுத்தி, தெருவை பெருக்கி விட வேண்டும்!

8. இப்படி எல்லாம் ஒரு அரசினால் செய்ய முடியாது என்றால், வரி வாங்குவதை நிறுத்திக் கொண்டு, தெருக்களை அவரவர்களே இனி பராமரித்துக் கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையாக சொல்லி விடலாமே.

முடிந்தவர்கள், தங்கள் வீதிகளுக்கு பழ மரங்கள் நட்டு வளர்த்து,கான்க்ரீட் சாலை போட்டு, தங்க முலாம் பூசி வைத்து மகிழ்வார்களே! தங்களுக்குள் எந்தத் தெருவுக்கு பரிசு என்று விழாக் கோலம் பூணுவார்களே! இப்படி மாறி மாறி வரும் அரசுகள், நானேதான் அந்த அநியாயத்தை செய்வேன் என்று தன்னால் முடியாத வேலைக்கு  மல்லுக்கு  நிற்க வேண்டாமே!

  • அரசும் அரசு அதிகாரிகளும் இது பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டும்!

  • நமது வருங்கால சந்ததிகள் நல்ல சுகாதாரமான தெருக்களில் விளையாட- நடமாட!
        -மோகன் பால்கி 

வியாழன், 22 ஜூலை, 2010

நினைவாற்றல் உங்களிடமும் மறைந்து கிடக்கிறது-அதை பயன்படுத்துங்கள்!


* நான் ஞாபக சக்தி மிகவும் குறைவாக உள்ளவன்.

* படித்தது எனக்கு ஞாபகத்திற்கு வருவதில்லை.*
* நினைவாற்றலில் நான் மற்றவர்களோடு ஒப்பிடுகையில்    
   பின்தங்கியுள்ளேன்.

இது போன்ற கருத்துகள் உங்களிடமும் இருக்கலாம்.
ஆம் எனில், ஓர் அறிவியல் பூர்வமான உண்மையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த மனிதனுக்கும் இவருக்கு குறைந்த அளவு ஞாபக சக்தி அதிக அளவு ஞாபக சக்தி என்று கூற இயலாது. ஒவ்வொருவரும் அதை எப்படி பயன்படுத்துகிறார்களோ அவ்வாறு தான் அவர்களுடைய நினைவாற்றல் அமைகிறது.
உதாரணமாக: நினைவாற்றலை ஒரு நூலகத்தோடு ஒப்பிடுவோம். அதில் எவ்வாறு குறிப்பிட்ட ஓர் இடத்தில் பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை வைத்திருந்தாலும் நமக்குத் தேவையான ஒரு புத்தகத்தை எடுக்க முடியுமோ, அதுபோல் நம் நினைவாற்றலை தேவையான முறையில் பயன்படுத்த முடியும்.
எப்படி?
நூலகத்தில் ‘‘Index’’ என அழைக்கப்படும் முறையின் மூலமாக புத்தகங்கள் வரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதுபோல் நம் நினைவில் உள்ள விஷயங்களை சரியாகப் பாகுபடுத்தினால் அவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ள எளிதாய் இயலும்.
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதைப்பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.  

1. கற்றல் மற்றும் மனப்பாடம் செய்தல்: (Reading and Memorizing)

நாம் பாடங்களை படிக்கின்றபொழுது, அவற்றின் பொருளை நன்றாகப் புரிந்து கொண்டு படிக்க வேண்டும். புரிந்து கொண்டு படிப்பதே நம் நினைவில் ஆழமாகப் பதியும். நமக்குத் தேர்விலும் பயன்படும். புரிந்து கொள்ளாமல் படித்தால் அது உடனே மறந்து போய்விடும். ஆகையால் பயனில்லை. அதேபோல் நாம் ஆர்வத்துடன் படித்தால் அவை நீண்ட நாள்களுக்கு நம் நினைவில் இருக்கும். ஆர்வமில்லாமல் படிப்பவையும் புரிந்துகொள்ளாமல் படிப்பதைப்போன்று மறந்து போய்விடும். எனவே படிப்பில் ஆர்வம் தேவை.

2. நினைவிலிருத்தல் (Retention):
நாம் படித்தவற்றை நம் நினைவில் ஆழப்படியும் படி நிறுத்தி வைத்தலே நினைவிலிருத்தல் ஆகும். நன்றாகப் பொருளுணர்ந்து படித்தால் நினைவிருத்தல் தானாக நிகழும்.

3. நினைவுக்கழைத்தல் (Recall):
நாம் படித்த பாடங்களை அவ்வப்பொழுது நாம் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். நாம் படித்தவை பதிந்து உள்ளதா என்பது இவ்வாறு செய்து பார்க்கும் பொழுது தெரிந்து விடும். இப்படிச் செய்தால் நாம் தேர்வில் நன்றாக எழுத முடியும்.

4. நினைவு கூர்தல் (Recognition):
நம் பாடங்களை நினைவுபடுத்திக் கொள்வது நினைவு கூர்தல் ஆகும். உதாரணமாக கணிதத் தேர்வு எழுதும்பொழுது அறிவியல் பாடம் நினைவில் வராமல் கணிதம் மட்டுமே நினைவில் வரும்படி குறுக்கீடுகள் இல்லாமல் நன்றாகப் படித்துக் கொள்ள வேண்டும்.

5. மீண்டும் கற்றல்: (Re-reading again and again)

தேர்வு சமயங்களில் புதியதாக ஒரு பாடத்தைப் படிப்பது கூடாது. நாம் ஏற்கெனவே படித்தவற்றை மீண்டும், மீண்டும் படித்தால் நம் நினைவில் நன்றாகப் பதிந்து விடும்.

திறமையுடன் மனப்பாடம் செய்யும் முறை:

இடைவிட்டு கற்றலும் மொத்தமாக கற்றலும் (Spaced and massed learning):
ஒரு பாடத்தைப் படிக்கும்போது அவற்றில் உள்ள வினா - விடைகளை தனித்தனிப் பிரிவாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பிரிவாகப் படித்து முடித்த பின்பும் சிறிது நேரம் இடைவெளி விட்டு பின்பு படிக்க வேண்டும். ஒரே நேரத்தில் மொத்தமாகப் படித்தால் நினைவில் வைத்துக் கொள்வது கடினமாகும். உடனடித் தேவைக்கு மட்டும் மொத்தமாகப் படிக்கலாம். ஆனால் இவை நீண்ட நாள்களுக்கு நம் நினைவில் நிற்காது. ஆனால் இடைவெளிவிட்டுப் படித்தால் நீண்ட நாள்களுக்கு நம் நினைவில் பதிந்து இருக்கும்.

முழுமையாகக் கற்றலும், பகுதியாக கற்றலும் (Whole and part learning):
அதாவது நாம் சிறிய அளவில் உள்ள செய்யுளையோ அல்லது விடையையோ முழுமையாகக் கற்க இதுவே சிறந்ததாகும். மனப்பாடம் செய்வதற்கு இவ்விரு முறைகள் பயன்படுகின்றன. ஆனால் பெரிய அளவில் உள்ள செய்யுளையோ அல்லது விடைகளையோ பகுதி, பகுதியாகக் கற்றால் நன்றாக நினைவில் பதியும். மேலும் இவ்விரு முறைகளையும் சேர்த்துப் படித்தால் அதாவது முதலில் பகுதி, பகுதியாகப் படித்து விட்டுப் பிறகு முழுமையாகப் படித்தால் நன்றாக மனப்பாடம் செய்ய இயலும். அதாவது நன்றாக நம் நினைவில் நிற்கும்.

ஒப்பித்தல் முறை (Recitation method):
இம்முறையில் நாம் கற்றவற்றை நாமே தொடர்ந்து பார்க்காமல் சொல்லிப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்யும்பொழுது பிழைகள் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம். தனக்குத்தானே ஒப்பித்துப் பார்த்துக் கொள்ளும் பொழுது கடினமானப் பகுதிகளை முதலிலேயே தெரிந்து கொண்டு அதற்குத் தனிக் கவனம் செலுத்திப் படித்துக் கொள்ளலாம்.

நினைவுக்குறிப்புகள் (Mnemonic Devices):
கற்பவற்றை நாம் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள நாம் கற்கும் செய்திகளுக்கு அல்லது விடைகளுக்கு அவற்றோடு தொடர்புடைய ஒரு பொருளையோ அல்லது எண்களையோ நினைவுக்குறிப்புகளாக எடுத்துக் கொண்டு படித்தால் நன்றாக நினைவில் இருக்கும்.

உதாரணமாக Vibgyor என்ற சொல் தெரிந்தால் போதும் நிறமாலை (வானவில் நிறங்கள்) Violet, Indigo, Blue, Green. Yellow. Orange and Red  என்று நமக்குத் தெரிந்துவிடும்.

நினைவு என்பது நம்மிடம் உள்ள தனிச்சிறப்புத் தகுதியாகும். இதைச் சரியாக கைகொள்ளும்போது நம் குறையாய்த் தென்பட்ட பல விஷயங்கள் திருத்தப்பட்டு நினைவுத்திறன் சிறப்பாய் இருக்கும்.

நினைவாற்றல் உங்களிடமும் மறைந்து கிடக்கிறது-அதை
பயன்படுத்துங்கள்!

திங்கள், 19 ஜூலை, 2010

இரண்டது ஒன்றே!


பாறையில் கசியும் பெருமித அன்பு
ஒன்றது இரண்டோ- இரண்டும் ஒன்றோ?


மீண்டும்...

இரண்டொரு பிழையென 'இதயம்' சொன்னது!
இதயம் சொன்னதும்-சொல்வதும் உண்மை!

ஒன்றாய் பிறந்து ஒன்றாய் இருந்து
ஒன்றில் ஒன்றி ஒருமை கொள்வது...

என்றென என்றோ கேட்டது இன்றும்-என்றும்
நினைவில் உள்ளது - ஒன்றது அன்பு !

இதயம் விழைவது நடக்கும் - நட்பே!
அன்பில் நுழைபவர் காலம் அற்றவர்!

-மோகன் பால்கி 

வியாழன், 15 ஜூலை, 2010

A Golden Story ! Enough for your Bookshelf !

 

Dear Friends! 

One day in the late 1990s while reading a particular story, I found myself with tears streaming down my cheeks. It was probably the first time I ever read a book by Osho, introduced to me by a friend who later became a sannyasin in the Osho commune.

After finishing the story, my atheistic defenses crumbled, and I felt transported to a new world of love and spirituality. I devoured hundreds of Osho's books and listened to his audio and video recordings. As time passed, my logical, reasoning mind grew quieter, and a deep sense of surrender to the vastness of Life-Love – or the Beyond – began to bloom in my heart. During this phase, I experienced a deeper peace than I had ever known before.


My spiritual exploration expanded to include the works of

J. Krishnamurti, Sri Ramakrishna Paramahamsa, Yogis, and various saints and seers from around the world. I had already delved into the philosophies of Buddha, Periyar E.V.R., Lenin, Gandhiji, Ambedkar, Dr. Kovoor, and others. As a child, around the age of 10, I developed an insatiable appetite for reading, devouring books from various libraries. This obsession, my constant "dis-ease," has led me to read approximately 6,000 to 10,000 books throughout my life. Now, in my late 50 s, I have curated my own library at home, comprising a few thousand books.


The essence of my journey can be distilled into a single story: "Keep this one story and forget everything else!" In my opinion, this story alone is worthy of your bookshelf. I have long wanted to share this story with you. Although I once lost it, I have since re discovered it – just for you.


 Osho Discourses: What is Love?

This is one of my favorite Osho discourses, explaining the differee and ego. It reminds of the wonderful book The Giving Tree.



It is so beautiful!

The photos shown are about me and The Love Tree that I found in Sweden. This beautiful tree has a heart shaped naturally on its trunk.


This is Osho Discourses 
from the book  

From Sex to Superconsciousness


"I have heard that there was once an ancient and majestic tree, with branches spreading out towards the sky. When it was in a flowering mood, butterflies of all shapes, colors and sizes danced around it. When it grew blossoms and bore fruit, birds from far lands came and sang in it. The branches, like outstretched hands, blessed all who came and sat in their shade. A small boy used to come and play under it, and the big tree developed an affection for the small boy.


Love between big and small is possible, if the big is not aware that it is big. The tree did not know it was big; only man has that kind of knowledge. The big always has the ego as its prime concern, but for love, nobody is big or small. Love embraces whomsoever comes near.


So the tree developed a love for this small boy who used to come to play near it. Its branches were high, but it bent and bowed them down so that he might pluck its flowers and pick its fruit. Love is ever ready to bow; the ego is never ready to bend. If you approach the ego, its branches will stretch upwards even more; it will stiffen so you cannot reach it.


The playful child came, and the tree bowed its branches. The tree was very pleased when the child plucked some flowers; its entire being was filled with the joy of love. Love is always happy when it can give something; the ego is always happy when it can take.


The boy grew. Sometimes he slept on the tree's lap, sometimes he ate its fruit, and sometimes he wore a crown of the tree's flowers and acted like a jungle king. One becomes like a king when the flowers of love are there, but one becomes poor and miserable when the thorns of the ego are present. To see the boy wearing a crown of flowers and dancing about filled the tree with joy. It nodded in love; it sang in the breeze. The boy grew even more. He began to climb the tree to swing on its branches. The tree felt very happy when the boy rested on its branches. Love is happy when it gives comfort to someone; the ego is only happy when it gives discomfort.


With the passage of time the burden of other duties came to the boy. Ambition grew; he had exams to pass; he had friends to chat with and to wander about with, so he did not come often. But the tree waited anxiously for him to come. It called from its soul, "Come. Come. I am waiting for you." Love waits day and night. And the tree waited. The tree felt sad when the boy did not come. Love is sad when it cannot share; love is sad when it cannot give. Love is grateful when it can share. When it can surrender, totally, love is the happiest.


As he grew, the boy came less and less to the tree. The man who becomes big, whose ambitions grow, finds less and less time for love. The boy was now engrossed in worldly affairs.
One day, while he was passing by, the tree said to him, "I wait for you but you do not come. I expect you daily."



The boy said, "What do you have? Why should I come to you? Have you any money? I am looking for money." The ego is always motivated. Only if there is some purpose to be served will the ego come. But love is motiveless. Love is its own reward.


The startled tree said, "You will come only if I give something?" That which withholds is not love. The ego amasses, but love gives unconditionally. "We don't have that sickness, and we are joyful," the tree said. "Flowers bloom on us. Many fruits grow on us. We give soothing shade. We dance in the breeze, and sing songs. Innocent birds hop on our branches and chirp even though we don't have any money. The day we get involved with money, we will have to go to the temples like you weak men do, to learn how to obtain peace, to learn how to find love. No, we do not have any need for money."

The boy said, "Then why should I come to you? I will go where there is money. I need money." The ego asks for money because it needs power.

The tree thought for a while and said, "Don't go anywhere else, my dear. Pick my fruit and sell it. You will get money that way."


The boy brightened immediately. He climbed up and picked all the tree's fruit; even the unripe ones were shaken down. The tree felt happy, even though some twigs and branches were broken, even though some of its leaves had fallen to the ground. Getting broken also makes love happy, but even after getting, the ego is not happy. 


The ego always desires more. The tree didn't notice that the boy hadn't even once looked back to thank him. It had had its thanks when the boy accepted the offer to pick and sell its fruit.


The boy did not come back for a long time. Now he had money and he was busy making more money from that money. He had forgotten all about the tree. Years passed. The tree was sad. It yearned for the boy's return -- like a mother whose breasts are filled with milk but whose son is lost. Her whole being craves for her son; she searches madly for her son so he can come to lighten her. Such was the inner cry of that tree. Its entire being was in agony.


After many years, now an adult, the boy came to the tree.
The tree said, "Come, my boy. Come embrace me." (listen)
The man said, "Stop that sentimentality. That was a childhood thing. I am not a child any more." The ego sees love as madness, as a childish fantasy.


But the tree invited him: "Come, swing on my branches. Come dance. Come play with me."
The man said, "Stop all this useless talk! I need to build a house. Can you give me a house?"
The tree exclaimed: "A house! I am without a house." Only men live in houses. Nobody else lives in a house but man. And do you notice his condition after his confinement among four walls? The bigger his buildings, the smaller man becomes. "We do not stay in houses, but you can cut and take away my branches -- and then you may be able to build a house."


Without wasting any time, the man brought an axe and severed all the branches of the tree. Now the tree was just a bare trunk. But love cares not for such things -- even if its limbs are severed for the loved one. Love is giving; love is ever ready to give.


The man didn't even bother to thank the tree. He built his house. And the days flew into years.
The trunk waited and waited. It wanted to call for him, but it had neither branches nor leaves to give it strength. The wind blew by, but it couldn't even manage to give the wind a message. And still its soul resounded with one prayer only: "Come. Come, my dear. Come." But nothing happened.
Time passed and the man had now become old. Once he was passing by and he came and stood by the tree.


The tree asked, "What else can I do for you? You have come after a very, very long time."
The old man said, "What else can you do for me? I want to go to distant lands to earn more money. I need a boat, to travel."


Cheerfully, the tree said, "But that's no problem, my love. Cut my trunk, and make a boat from it. I would be so very happy if I could help you go to faraway lands to earn money. But, please remember, I will always be awaiting your return."
The man brought a saw, cut down the trunk, made a boat and sailed away.


Now the tree is a small stump. And it waits for its loved one to return. It waits and it waits and it waits. The man will never return; the ego only goes where there is something to gain and now the tree has nothing, absolutely nothing to offer. The ego does not go where there is nothing to gain. The ego is an eternal beggar, in a continuous state of demand, and love is charity. Love is a king, an emperor! Is there any greater king than love?


I was resting near that stump one night. It whispered to me, "That friend of mine has not come back yet. I am very worried in case he might have drowned, or in case he might be lost. He may be lost in one of those faraway countries. He might not even be alive any more. How I wish for news of him! As I near the end of my life, I would be satisfied with some news of him at least. Then I could die happily. But he would not come even if I could call him. I have nothing left to give and he only understands the language of taking."


The ego only understands the language of taking; the language of giving is love.
I cannot say anything more than that. Moreover, there is nothing more to be said than this: if life can become like that tree, spreading its branches far and wide so that one and all can take shelter in its shade, then we will understand what love is. There are no scriptures, no charts, no dictionaries for love. There is no set of principles for love.


I wondered what I could say about love! Love is so difficult to describe. Love is just there. You could probably see it in my eyes if you came up and looked into them. I wonder if you can feel it as my arms spread in an embrace.


Love.


What is love?


If love is not felt in my eyes, in my arms, in my silence, 
then it can never be realized from my words.
I am grateful for your patient hearing. 
And finally, I bow to the Supreme seated in all of us.


Please accept my respects.

- Osho Rajneesh 
Osho Discourses: from the book
Chapter No. 4 - Sex, the genesis of love