Translate this blog to any language

சனி, 14 ஏப்ரல், 2012

Mobile Number Portability (MNP) - 7 Easy steps!

 


Do you want to change your service provider 
for some bitter reasons, 
keeping your same mobile number?

For e.g. you may like to migrate from Aritel to Vodafone or vise versa or any existing "X" to "Y" (new) mobile service provider as you like. Then what should you do? Many of us not aware how to port away from one provider to another one and we assume that it is an arduous job. 

No, it is not so and in fact it is a very easy process simplified by TRAI which any one can do for himself. I myself migrated few times and assisted many of my friends to change over to other good service providers!! 

My ambition here is, if many Indians are aware of these migrating possibilities and easy process in that, they will choose good companies and will migrate to them as and when required. It will create an impact in some of the mobile service providers and they in turn 'may' come down a little, will provide good services and may stop fraud billings to their poor Indian customers. 

However, until a parallel measuring device/server, set up by TRAI  to monitor all mobile services and billing methods, the persisting basic issues of the millions of mobile customers of India would not be solved ever!


OK. let us know the 7 easy steps: 


(MNP - step by step process  involved in porting/migrating)

First Step: Take your mobile and type 'PORT' leave one space and type your mobile number
(for e.g. PORT 9840042904) and send by sms to
1900....(Contd.)

புதன், 4 ஏப்ரல், 2012

Get a Patent & Fool those Ducks: அப்படி சொறியாதே...நான் காப்புரிமை வாங்கி இருக்கிறேன்!

       

(தாத்தா அங்கு தெருவோர திண்ணையில் அமர்ந்து வெற்றிலை குதப்பியபடி இருக்கிறார்..குண்டூஸ் அப்போது விளையாடிவிட்டு அங்கு வருகிறான்)

குண்டூஸ்: தாத்தா! நான் ஒன்னு கேப்பேன் பதில் சொல்றீங்களா?

தாத்தா: கேளு கண்ணா! ஆனா குண்டக்க மண்டக்க கேக்கக் கூடாது...ஜென்யுனான கேள்வியா இருந்தா பதில் சொல்வேன்.

குண்டூஸ்: இது நான் ரொம்ப நாளா கேட்கனும்னு இருந்தேன் தாத்தா; கிண்டல் கேள்வி எல்லாம் இல்ல!

தாத்தா: அப்பன்னா கேளு!

குண்டூஸ்: இந்த (patent right) 'பேடன்ட் ரைட்'-ன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்ன தாத்தா?

தாத்தா: அதுவா..? அதாவது நான் ஒரு புதுமையான கருவியை ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சி மார்கட்டுல விற்பனைக்கு அனுப்புறேன். ஒருத்தன் அதே மாதிரி ஒன்னை காப்பி அடிச்சி என்னை விட குறைச்ச விலைக்கு வித்தா எனக்கு நஷ்டம் தானே? அப்போ, அதை தடுக்க நான் என் கருவிக்கு 'காப்புரிமை' வாங்கி வச்சிக்குவேன். அதுதான் 'பேடன்ட் ரைட்' கண்ணா!

குண்டூஸ்: அதாவது நீங்க கண்டுபிடிச்ச கருவியை நீங்க யானை விலை குதிரை விலை வச்சி விப்பீங்க! வேற எவனும் அதே மாதிரி கருவியை குறைஞ்ச விலைக்கு கூட விக்கக் கூடாது! அதை தடுக்க ஒரு குறுக்கு வழிதான் இந்த பேடன்ட் ரைட்...அப்படிதானே தாத்தா?

தாத்தா: டேய்! நீ ஏன்டா எப்பவும் தப்பு தப்பாவே யோசிக்கிற? நீயே நாளைக்கு தண்ணிய பெட்ரோலா மாத்துற மாதிரி ஒரு கருவி கண்டு பிடிச்சி அதுக்கு ஒரு பேடன்ட் ரைட் வாங்கி வச்சிட்டா உலகம் முழுசும் இருந்து உனக்கு கோடி கோடியா.....(Contd..)

வெள்ளி, 30 மார்ச், 2012

100 Ways to Raise Intelligent, Kind Children: உங்கள் குழந்தைகள் மேன்மையாய் வளர 100 வழிகள்!!



குண்டூஸ்: அங்கிள்! உங்க வீட்டு பின் பக்கம் இருக்கிற தோட்டம் ரொம்ப நல்லா இருக்கு. நான் உள்ள வந்து கொஞ்சம் சுத்திப் பாக்கலாமா?

பத்ரி: டேய் குண்டூஸ்! என்ன இளக்காரமா? என் வீட்டுப் பின்னாடி ஒரு ரெண்டடி இடம் இருக்கு. அதுல ஏதோ கொஞ்சம் செடி கொடி வளக்கிறோம். அது போயி உனக்குத் தோட்டமா? கொழுப்புதானே?

குண்டூஸ்: சாரி அங்கிள்! நெஜமாவே அது தோட்டம் மாதிரியே இருக்கு. அதுவும் அந்த பட்டு-ரோஸ்...வந்து....!

பத்ரி: சரி சரி! நீ எங்க வர்றேன்னு எனக்குத் தெரியுது! உனக்கு மறுபடியும் ஒரு பட்டு-ரோஸ் செடி வேணும்..அதக் கொண்டுபோய் உங்க வீட்டுத் தொட்டியிலே நட்டுவச்சிட்டு நாலு நாலு கழிச்சி காய்ஞ்சி போச்சின்னுட்டு திரும்ப வந்து...உங்க தோட்டம் நல்லா இருக்குன்னு எனக்கு ஐஸ் வைப்பே! உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா?

குண்டூஸ்: அப்படி இல்லை அங்கிள்... நானும் என்னென்னமோ பண்ணி பாக்கிறேன்...எனக்கு மட்டும் வளர மாட்டேங்குது அங்கிள்! செம்மண்ணு, உரம், காத்து, தண்ணி, சூரிய வெளிச்சம் இப்படி எல்லாமே கவனமா பாத்தும் ஏன் வளர மாட்டேங்குதுன்னு தெரியல்ல. நான் நினைக்கிறேன்...தொட்டியில வளராதுன்னு...உங்கள மாதிரி பூமியில வளர வைக்கவும் இடம் இல்லியே..?

பத்ரி: அடேய்...குரங்கு குண்டூஸ்! ஏதோ நட்டோமா...அதுக்கு எல்லாம் தந்தோமா பாதுகாப்பு பன்னோமான்னுட்டு இல்லாம நீதான் அது பக்கத்துலேயே இருவத்து நாலு மணி நேரமும் நின்னுகிட்டு "வேவு" பாத்தபடியே இருக்கியே...அப்புறம் எப்படி செடி வளந்து பூ பூக்கும்? அதுல வேற ஒரு நாள் நீ பொறுமை இல்லாம செடி வேர் பிடிச்சி இருக்கான்னு மண்ணை தோண்டி பாத்தியாமே! எனக்கு தகவல் வந்துது. போடா முட்டாள்!

குண்டூஸ்: திட்டாதீங்க மாமா! நீங்கதானே எனக்கு மானசீக குரு...உங்க கிட்டத்தானே அத எல்லாமே கத்துக்கிட்டேன்!

பத்ரி: டேய் என்ன உளர்ற?

குண்டூஸ்: ஆமா மாமா! உங்க ரெண்டு குழந்தைகளையும் நீங்க அப்படித்தானே.....(Contd..)

புதன், 21 மார்ச், 2012

Chennai: Bullock-Cart Roads & Exploding Multitudes: சென்னை: கோச் வண்டி சாலைகள்-விரியும் நெரிசல்!



குண்டூஸ்: என்ன மாமா! வரவர சீக்கிரமா வீட்டிலே இருந்து கிளம்புறீங்க, ரொம்ப லேட்டா வீட்டுக்கு வர்றீங்க..போற போக்கே சரியில்லையே! அக்கா கிட்ட போட்டு கொடுக்கவா? 

மாமா: டேய் குரங்கு குண்டூஸ்! ஏற்கனவே நிலைமை சரியில்ல! நீ வேற எண்ணெய் ஊத்தாதே!
உனக்கு வேண்டியதெல்லாம் அப்பப்ப வாங்கி தர்றேன் இல்ல...என்னைய சொல்லணும்!

குண்டூஸ்: கோச்சிக்காதீங்க மாமா! உங்கள பாத்தா பாவமா இருக்கு! போறப்போ நல்லாத்தான் போறீங்க, ஆனா வரும்போது மழையில நனைஞ்ச கோழிக்குஞ்சு மாதிரி வீட்டுக்கு வறீங்களேன்னு வாஞ்சையா கேட்டா உங்களுக்கு அது தப்பாப் படுது!

மாமா: நீ சொல்றது சரிதாண்டா! வர வர இந்த சென்னை போற போக்கே சரியில்லை. முன்னெல்லாம் கால்மணி நேரத்துல போன ஊருக்கு இப்பல்லாம் ஒரு மணி நேரம் தேவைப் படுது. அவ்வளவு மோசமான டிராபிக் நெரிசல்! போலிஸ் காரங்க பாடு அதை விட திண்டாட்டம்! ஊர்ல இருக்கிற புகை-தூசு எல்லாமே அவங்க தான் எட்டுமணி நேரம் சுவாசிக்கிறாங்க! தெருக்களும் இப்ப வர வர மோசமாத்தான் ஆகிகிட்டு வருதே தவிர ஒரு புண்ணாக்கு முன்னேற்றமும் இல்ல. அதான் வீடு வர்றதுக்குள்ள ரொம்ப ரொம்ப சோர்வா ஆயிடுதுடா!

குண்டூஸ்: மாமா!  நீங்க டிராபிக் இல்லாத தெருவுக்குள்ள புகுந்து புகுந்து போக வேண்டியது தானே! எதுக்கு மெயின் ரோடாவே போகணும்? உங்களுக்கு ஷார்ட்-கட் தெரியல?



மாமா: போடா மாங்கா மடையா! அது எனக்குத் தெரியாதா? நாலு தலை முறை சென்னைவாசி நான்...எனக்கே நீ ஐடியா சொல்லித் தர்றியா? நான் போடற 'ஷார்ட்-கட்'..."குறுக்கு-வழிக் கணக்கை" வேற எவனும்....(Contd..)


செவ்வாய், 20 மார்ச், 2012

Can my Tamil-Culture & Morals be managed? கரை-உடையும் நம் தமிழ் கலாசாரம்: மீட்க என்ன வழி?

 
குண்டூஸ்: தாத்தா! நம்ம தமிழ் பேச்சாளர்கள் எல்லாம் கலாசாரம்...கலாச்சாரம்-ங்கறாங்களே. அப்பிடின்னா என்ன தாத்தா?

தாத்தா: கண்ணா...! அந்தந்த ஊர் மண்ணுக்குன்னு ஒரு குணம் இருக்கும் இல்லையா...தட்ப வெப்பம், சூழல் சார்ந்து சில பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் உருவாகும் இல்லையா? அதுக்குப் பேரு தான் கலாசாரம்ன்னு சொல்லுவாங்க! 

குண்டூஸ்: புரியல தாத்தா! விளக்கமாத்தான் சொல்லுங்களேன்!

தாத்தா: இப்பப் பாரேன்! காஷ்மீர் ரோஜா இங்க விளையாது..ஐரோப்பிய செர்ரி மரங்களும் இங்கே வளராது! அதே மாதிரிதான் நம்ம ஊர் பொன்னி நெல்லு மேல் நாடுகளில் விளையாது. அதே மாதிரி, ஐரோப்பிய குளிர் காலமும் அதற்க்கு அவங்க அணியும் உடைகளும் பற்றி நமக்குத் தெரியாது. அதே போல் இங்குள்ள சித்திரை வெயிலை வெள்ளையர்களால் தாக்குப் பிடிக்கவும் முடியாது. அந்த வெயிலுக்கு நாம போட்டுக்குற மெல்லிய பருத்தி-குறைந்த அளவான ஆடைகள்  பற்றியும் ....(Contd..)


வெள்ளி, 16 மார்ச், 2012

நம் அன்னைத் தமிழ் வளர முதலில் நாம் என்ன செய்ய வேண்டும்? What do we do to protect our Tamil Language?


முதியவர்: என்ன தம்பி! உங்கப்பா ஒரு நல்ல தமிழ் பேச்சாளர். நீ போயி ஃபிரெஞ்சு பாட மொழி எடுத்திருக்கே!

மாணவன்: போங்க "அங்கிள்"! உங்களுக்கு விவரம் பத்தாது! தமிழ்ல என்னதான் நல்லா எழுதினாலும் இந்தத் தமிழ் ஆசிரியர்களுக்கு மார்க்கு போடவே மனசு வராது. அது என்னமோ அவங்க அப்பன் வீட்டு சொத்து மாதிரி பாத்துப் பாத்துப் பிச்சை போடுவாங்க! அதுவே சான்ஸ்க்ரிட், பிரெஞ்சு, ஹிந்தி ஆசிரியர்கள் நல்லவர்கள், அவங்க மார்க்க அள்ளி விடுவாங்க! அதான் அங்கிள் நான் தமிழ எடுக்கல!

முதியவர்: என்ன இருந்தாலும் நம்ம தாய் மொழிய நாம மறக்கலாமா தம்பி?

மாணவன்: அங்கிள் 'டோடல் மார்க் குறைஞ்சா எனக்கு நல்ல காலேஜ்-நல்ல வேலை கெடைக்குமா அங்கிள்? அதுவும் பாக்கணும் இல்லியா? தமிழ் மட்டும் நல்லா இருந்து தமிழன் நல்லா இருக்கலன்னா அது பரவா இல்லியா உங்களுக்கு? தமிழன் இல்லாத இடத்தில் தமிழ் மட்டும் எப்படி வாழுமாம்?

முதியவர்: அது சரி! தமிழ்ல மாணவர்கள் உங்களுக்கு அப்படி என்னதான் பிரச்னை? ஏன் நல்ல மார்க் உங்களால...(Contd...)

சனி, 10 மார்ச், 2012

Tamil Poetry on Mosquitoes: வலிய முற்றுகை!

 

கலிரவு என்ற பேதமற்று

ஓயாத அவர்களின்

தொந்தரவும் சூழ்ச்சியுமே

சூழ்ந்த என்னுலகில்

ஆனவரை செய்தலுத்து

எஞ்சியதெல்லாம் வெறும்

கையறுநிலையின் மிச்சங்களே!


எல்லாவித எனதான நகர்வுகளையும்

அதிதீவிர போர்த்தந்திரங்களையும்

சகலவித போர்க்கருவிகளையும்

அவதானிக்கும் ஒரு

தேர்ந்த பகைமுனையில்

எவ்வித முன்னெச்சரிக்கையுமற்ற

போர்க்களச் சூழலில்

இழப்பின் வலியோடு

இடறித் தடுமாறியே

நகர்கிறது என் சுயம்!



உறக்கம் தொலைத்த இராத்திரிகளை

ஆங்கு அடிமைப்பட்ட கணங்களை

யாதொரு சிரமுமின்றி கச்சிதமாய்

நான் மறந்துவிடுகிறேன்...

எனக்கே உரித்தானதொரு

அசவுகர்ய காரணியால்

பிரதி நாளும் !



என் அதிதீவிர புரிதலில்

படர்ந்த நிம்மதி யாதெனின்..

அடியேன் ஒன்றும் தனியனில்லை-

என்னை யொப்பவே

இப்பூமி வெளிஎலாம்

வித்தகம் பேசும்

அறிவியல் மானுடர்

'விண்வெளி சென்று வீடுதிரும்பி

அணுவுலை மெச்சி

வாய்கிழித்த கையொடு

போர்வையில் சுருட்டிய

சவத்தைப் போன்றே

அடக்க-நித்திரை செய்கின்றார்கள்...

அந்தச் 'சின்னக் கொசுக்களின்'

முற்றுகைச் சிறையில்!



-யோஜென் பால்கி