Translate this blog to any language

திங்கள், 6 நவம்பர், 2017

"கடவுளைக்" கொணராதீர்கள்!

தமிழர் ஒற்றுமைக்கு நடுவில் இந்தக் "கடவுளைக்" கொணராதீர்கள்!


பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மமுடைய கற்கோவில்கள் தமிழர் வாழ்வியல்; அதை இடித்துவிட்டால் நமக்கு என்ன மிஞ்சும்?

தம்பி கோவிலுக்கு போகட்டும்;
அண்ணன் கடவுளை மறுக்கட்டும்!
அதைத்தாண்டி நிலவும் அன்பை "மின்மினியறிவு வார்த்தைகளால்", இருவருமே உடைத்துவிடாதீர்கள்!

இது காலமற்ற காலம்; எண்ணறு புத்தர்கள் வழிகடந்து போயினர்!!

பொதுப் பகைவன் மீது கண்வைத்து 
தமிழ்ச்சமூகம் காத்தல் கடன்!

This is an ever expanding, beginningless and endless universe having timeless time of eternity!

Here, speaking for or against God is like a short living firefly arguing about our planet Earth & its thousands of attributes !!

Never do that mistake labeling as a theist or atheist, that is an utter foolishness! You can live in to either side of the shore without negating any, from time to time of your short span. Yet, criticize not the other one ever Sir!

-யோஜென் பால்கி
Yozenbalki 
www.yozenmind.com

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

ஊழல் தேசத்துரோகம் எனும் மாய்மால வித்தை!


ந்திய உயர் சாதி வர்க்கமும், ஆளும் பனியாக்களின் வர்க்கமும் உழைக்கும் இந்திய மக்களிடம் வைக்கும் நஞ்சுதடவிய வாதம் ஒன்றுண்டு! அது என்னவெனில், ஊழலுக்கும் தேசத் துரோகத்துக்கும் எதிரான போர் என்பதுதான்!

இந்த வாதம் மிக மிக அழகான பாம்பு போன்றது!

எதையாவது எதிர்ப்பது போல் பாவலா காட்டுவதும், ஒரு "உட்டோப்பியன்" சமூகம் காண மக்களை இழுத்துச் செல்லும் போலி நம்பிக்கையை ஊட்டி தங்களுக்கான தன்னல வேலைகளை முடித்துக்கொள்வதும் தான் இந்த மாயாவாதத்தின் நோக்கமாகும்.

ஊழலுக்கு எதிர்ப்பென்பது சின்ன சின்ன அரசுப் பணியாளர்களை எப்போதாவது ஒருமுறை, சின்னதாக தண்டிப்பது ஆகும்!

தேசத் துரோகம்  என்பதோ பார்ப்பனீய இந்துத்வ நெறிமுறைகளுக்கு  எதிராக இயங்குவது ஆகும்!

(இங்கு எவரும் ஊழலை ஆதரித்து ஊர்வலம் போகவில்லை. பிடிபட்டவர்களைப் பிடித்து தூக்கில் போடுங்களேன், யார் அழுதார்கள்? )

இது தவிர ஊழல் என்ற பெயரில் பெரிய பெரிய அரசியல் திமிங்கலங்களை கட்சிப் பாகுபாடின்றி ஜெயிலுக்கு அனுப்புவதோ, பெரிய பெரிய பதவிகளில் ஒட்டிக் கொண்டு கொள்ளையடித்த, கொள்ளையடிக்கின்ற அரசு உயர் அதிகாரிகளை ஜெயிலில் தள்ளுகிற தூய்மை உள்ளம் இந்த நாட்டில் இருப்பதாக எனக்குப் படவில்லை. மேலும், சுவிஸ் வங்கி போன்ற வெளிநாட்டு வங்கியில் போட்டு வைக்கப்பட்டுள்ள மக்களின் பணத்தை மீட்டு வரும் முயற்சிகளும் இங்கு தெரியவில்லை.

தேசத்து துரோகம் என்பதும், இந்த நாட்டில், இந்த பன்முகத்தவ மக்கள் புழங்கும் பெருநிலப் பரப்பில் வாழும், பல்வேறு இன, மொழி, சமய பண்பாடுள்ள அனைவரையும் ஒன்றே போல் கற்பனையாக கருதி வரையறை செய்வதாகும்!

இங்கு, அடக்குகின்ற இனம் விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏமாறுகின்ற இனம் ஏற்பதே தேசப்பற்று என்ற அளவுகோலை வலிந்து திணிக்கிறது இந்திய ஒன்றியம்.

நான்கு பேர் சேர்ந்து பணம் போட்டு குடை வாங்கி அதனடியில் மழை வெயிலுக்கு நிற்கிறார்கள். ஒருநாள், வலிமை நிறைந்த ஒருவன் இந்த குடை முழுவதும் எனக்குச் சொந்தம்; நீங்களும் எனது அடிமைகள். எனது, மொழி,  பண்பாட்டையே இனி நீங்களும் பின்பற்ற வேண்டும் என்பது போன்றது, இந்த தேச பற்று பற்றி பார்ப்பனர்களும் வியாபார பனியாக்களும் பேசும் வஞ்சகப் பேச்சு ஆகும்.


ந்த வஞ்சக நோக்கத்தில் மண்சார்ந்த விவசாயிகளும் பழங்குடி மக்களும் அவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த நிலங்கள் மீதான உரிமை குறைக்கப்பட்டு மறுக்கப்பட்டு, ஒரு  அரசிடமோ அல்லது திடீர் கையளிப்பு மூலம் ஒரு உள் நாட்டு வெளிநாட்டு நிறுவனத்திடமோ, ஒரு கிராமம் அல்லது காடு, தேச முன்னேற்றம் என்ற பெயரில் திருடப்பட்டு விடும்! அங்கு உண்டாக்கப்படும் (உள்ளபடியே பார்த்தால் மாசுண்டாக்கும்) ஏதோ ஒரு தொழிற்சாலையில் உயர்பணியில் சில பார்ப்பனர்களுக்கு மேலான்மைப் பணிகள் கிடைக்குமல்லவா?

சுருங்கச் சொன்னால், விவசாயம் அது சார்ந்த துணைத் தொழில்கள் என்பன உழைக்கும் வர்க்கத்தினரது ஆகும். அதில் பார்ப்பன பணியாக்களுக்கு கொள்ளையடிக்க பெரிதாக ஏதுமில்லை. எனவே நிலம் என்பதை, ஒரு தொழிற்சாலையாக மாற்றும் போது மேற்படி  இருவருக்கும் கொள்ளை இலாபம் உண்டாக எதுவாக இருக்கிறது அல்லவா? இதனால் தான், இந்தியாவை மாசு மருவற்ற ஒரு பசுமை தேசமாக மாற்றுவதை விட அம்பானிகளும், சாமியார்களும் இதை ஒரு ஒற்றை தொழிற்சாலைகளின் தேசமாக மாற்றுவதை தலையாயக் கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.

இதை நிரூபிக்க என்ன வழி?

இருவருமே, அதாவது பார்ப்பனர்கள், பனியாக்கள் இருவருமே, அதனால்தான் விவசாய முன்னேற்றம், பசுமைப் புரட்சி, நதிகள் இணைப்பு, காடுகள் வளர்ப்பு, விவசாய இடுபொருள்கள் விலை குறைப்பு, நன்னீர் சேமிப்பு, ஏரிகள் குளங்கள் பராமரிப்பு, விவசாயிகள் தற்கொலை இதுபற்றியெல்லாம் பேசவே மாட்டார்கள். மாறாக, புதிய தொழிற்சாலைகள் துவங்குவது பற்றியே பேசிப் பேசி இந்தியக் காற்றை மேலும் மாசு படுத்துவார்கள்.

ஒரு தொழிற்சாலை என்பது, அது அமைந்த நிலம் மீதான சிலபேருக்கான வேலைவாய்ப்பு. அவ்வளவுதான்! ஆனால், அந்த தொழிற்சாலையின் கழிவுகள், சுற்றி உள்ள பத்து கிராமங்களின் அதன் ஆயிரக்கணக்கான மக்கள், ஆடு மாடுகள், மீன்கள், பறவைகள், பிற பூச்சி புழுக்கள், நுண்ணியிரிகளின் நீராதாரத்தைக் கெடுத்து, நீர், நிலம், காற்றில் ஏற்படுத்தும் நிரந்தர மாசு ஏற்படுத்துவது பற்றி பார்ப்பன பனியாக்களுக்கு எந்தக் கவலையும் எந்நாளும் இருந்ததில்லை. அது ஏனெனில், அவர்களுக்கு, மண் மீதான பற்று  இல்லாத நாடோடி குணமே ஆகும்!


என்னைக் கேட்டால், இந்த கலர் கலராக (வண்ணம் வண்ணமாக) விளையாடும் 'சொப்புகள்', (Be it anything, from simple toys to sophisticated cars and luxuries)  செய்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று 'டாலர்' பணத்துக்கு ஆசைப்பட்டு நமது மண்ணை மாசு படுத்தும் தொழில் அதிபர்கள் கால்களில் விழுந்தாவது ஒவ்வொரு தொழிற்சாலையாக மூடச் சொல்லுங்கள். அப்புறம் பாருங்கள், நமது, கிராமங்களை, அங்கு தன்னிறைவடைந்த பொருளாதாரத்தை!

கண்ணை விற்றுவிட்டு எவனாவது  சித்திரம் வாங்குவானா?

இன்றைக்கு, விவசாயத்தை மதிக்காத அரசுகளால் தவறான "தொழிற்சாலை வழி பொருளாதாரக் கொள்கைகளால்", விவசாய வாழ்க்கை ஏறத்தாழ அழிந்து விட்டது. அதன் விளைவு, நீராதாரம் பெருக்க, காக்க, நீர்வழிகளை முறைப்படுத்த அறியாத ஒரு அறிவீன மக்கள்  சமுதாயத்தை நாம் இன்று உண்டாக்கி வைத்திருக்கிறோம். இதனால் தான், சாதாரண மழைக்கு கூட தாங்காத கிராமங்கள், நகரங்களை இன்று அடிக்கடி காண நேரிடுகிறது.

சிறுமழைத் தண்ணீர் கூட, ஓடை, ஏரி, குளம், கால்வாய், குட்டைகள் எதிலும் நிரம்பாமல் நேரடியாக சாலைகள், வீடுகளில் நுழைந்து, நாசம் செய்து கடலை அடைந்து விடுகிற காட்சிகளை வருடம் தோறும் உலகம் முழுதும் பார்க்க முடிகிறது!

என்னவொரு கேவலமிது?

மீண்டும், மழைக்காலம் முடிந்த கையோடு, தண்ணீர் தேடி பிச்சையெடுக்க வேண்டும். தண்ணீரை வியாபாரம் செய்ய வெட்கமின்றி பலப்பல பகாசுர கம்பெனிகள் சந்தைக்கு வந்து விடும்.

என்னவோ போங்கள் !

எதிலோ ஆரம்பித்து, எங்கேயோ சென்றுவிட்டது. அதனாலென்ன? எனக்கா  இணைக்கத் தெரியாது!

ஆக, ஊழல் என்பது, விவசாயத்துக்கு எதிராக செய்யப்படும் அனைத்து வேலைகளும் பெரும் ஊழலே ஆகும்!

தேசத் துரோகம் என்பது, அந்தந்த மண் சார்ந்த மண்ணின் மைந்தர்களின், சொந்த மண்ணில் வாழும் உரிமையை பறிக்க, ஏதோ ஒரு சட்டம் எங்கிருந்தோ போட்டு ஏமாற்றுவதே ஆகும்!

இந்த வலி வேதனையை, உங்கள் ஊரில் பயிரிட என்று ஒரு பத்து சென்ட் நிலமோ, சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஒரு கிராமமோ இல்லாத வரையில் புரிந்து கொள்ளவோ, நியாயம் பேசவோ முடியவே முடியாது!

நாடோடிகள், அதனால்தான், மண் குறித்த எந்த "சென்டிமென்டும்" இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுடன், உலகில் எந்த நிலம் மாசு படுவது பற்றியும் எந்தவித அக்கறையும் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களால், சுட்டிக்  காட்டப்படும், உட்டோப்பியன் ஆட்சி, எப்படி தன்னலம் நிறைந்ததாய் இருக்கும் என்பதும் இதிலிருந்தே உங்களுக்குத் புரியும்!

இன்னொரு முறை வேறொரு தலைப்பில் சந்திப்போம் நண்பர்களே!

-யோஜென் பால்கி

(Yozen Balki)
29th October 2017

சனி, 3 செப்டம்பர், 2016

ஜாதி ஒழிய என்ன வழி?

How to abolish #CasteSystem

என்ன பெரிய கஷ்டம்?

வெவ்வேறு சாதி சார்ந்த இருவர் மணம்புரிந்து பிறக்கும் குழந்தையை
"சாதி அற்றது" என்று அரசே அறிவி!

அக்குழந்தைக்கு கல்வி, வேலைவாய்ப்பு, எதிலும் முன்னுரிமை கொடு.

ஜாதி ஒழிந்து விடும்.

பெரியாரும் அம்பேத்கரும் அரும்பாடு பட்டு வளர்த்த ஒரு இந்திய சமூகம் இன்று பின்னோக்கி காட்டுமிராண்டி காலத்துக்குப் போவதை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது.

மொழிகள் அழிவது பற்றிய உணர்வின்றி இன்று நாம் ஜாதிகளை உரம் போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறோம். எங்கே போய் முடியுமோ?

If there is a will; there is a way!

But, autocracy and elite segments wants to keep the caste system for their ulterior motives. So that the Caste survives on...

-Yozenbalki
https://www.facebook.com/yozenbalki

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

Rohit Vemula Suicidal Note: A Caste Based Apartheid


Good morning,

I would not be around when you read this letter. Don't get angry on me. I know some of you truly cared for me, loved me and treated me very well. I have no complaints on anyone. It was always with myself I had problems. I feel a growing gap between my soul and my body. And I have become a monster. I always wanted to be a writer. A writer of science, like Carl Sagan. At last, this is the only letter I am getting to write.

I loved science, stars, nature, but then I loved people without knowing that people have long since divorced from nature. Our feelings are second handed. Our love is constructed. Our beliefs coloured. Our originality valid through artificial art. It has become truly difficult to love without getting hurt.

The value of a man was reduced to his immediate identity and nearest possibility. To a vote. To a number. To a thing. Never was a man treated as a mind. As a glorious thing made up of stardust. In very field, in studies, in streets, in politics, and in dying and living.

I am writing this kind of letter for the first time. My first time of a final letter. Forgive me if I fail to make sense.

May be I was wrong, all the while, in understanding world. In understanding love, pain, life, death. There was no urgency. But I always was rushing. Desperate to start a life. All the while, some people, for them, life itself is curse. My birth is my fatal accident. I can never recover from my childhood loneliness. The unappreciated child from my past.

I am not hurt at this moment. I am not sad. I am just empty. Unconcerned about myself. That's pathetic. And that's why I am doing this.

People may dub me as a coward. And selfish, or stupid once I am gone. I am not bothered about what I am called. I don't believe in after-death stories, ghosts, or spirits. If there is anything at all I believe, I believe that I can travel to the stars. And know about the other worlds.

If you, who is reading this letter can do anything for me, I have to get seven months of my fellowship, one lakh and seventy five thousand rupees. Please see to it that my family is paid that. I have to give some 40 thousand to Ramji. He never asked them back. But please pay that to him from that.

Let my funeral be silent and smooth. Behave like I just appeared and gone. Do not shed tears for me. Know that I am happy dead than being alive.

"From shadows to the stars."

Uma anna, sorry for using your room for this thing.

To ASA family, sorry for disappointing all of you. You loved me very much. I wish all the very best for the future.

For one last time,

Jai Bheem

I forgot to write the formalities. No one is responsible for my this act of killing myself.

No one has instigated me, whether by their acts or by their words to this act.

This is my decision and I am the only one responsible for this.

Do not trouble my friends and enemies on this after I am gone.

-Rohit Vemula

Refer more details from

www.wikipedia.com/Rohit Vemula

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

Splays in Roads a Must in Chennai : சென்னை சாலைகள் எப்படி இருக்கவேண்டும்?


ஒரு நீரோட்டம் எப்படி செல்கிறதோ அப்படியே வழி விட்டால்தான் எந்த ஒரு போக்குவரத்தும் தடையின்றி செல்ல இயலும்! சென்னையில் பெரும்பாலான இடங்களில் வாகன நெரிசலுக்குக் காரணம் வழி நெடுக காணப் படும் தடைகள்தாம்!


A Wrong Road without Splay



A rightly 'splayed' Road

நீரோட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! அது எப்போதுமே செங்குத்தான திசையில் திரும்புவதில்லை. சற்று வளைந்து, வளைகிற இடத்தில் கொஞ்சம் விசாலமான இடத்தை எடுத்துக் கொண்டே அது திரும்பி பயணம் செய்கிறது!


ஒரு தண்ணீருக்கு இருக்கிற அறிவு நமது சாலை உருவாக்க பொறியாளர்களுக்கு (Road Construction Engineers) இருப்பதில்லை போலும்!!
இங்கு, நமது தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களை நான் சொல்லவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளை காணும்போது, நானும் ஒரு பொறியாளர் என்னும் வகையில் சொல்வதானால், குறைந்தது 80-90% தர நிர்ணயம் அங்கு நிச்சயம் காணப் படுகிறது!

ஆனால், சுதந்திரம் பெற்று சுமார் 65 வருடங்கள் ஆகும் நிலையிலும், சென்னை நகரத்தில் பெரும்பாலான இடங்களில் கிட்டதட்ட "L" வடிவத்தில் திரும்பும் தெருக்களை சாலைகளை நாம் இன்றும் பார்க்கலாம்! இதனால், எவ்வளவு மோசமான நெரிசல், வேகத்தடை, எரிபொருள் விரயம் ஏற்படுகிறது என்று எவரும் உணர்வதில்லை! சில நேரங்களில் காரணம் புரியாமல் மணிக்கணக்கில் சென்னையில் வாகனங்கள் நகரும். ஏதோ விபத்து போலும் என்று நாம் எல்லோரும் நினைப்பதுண்டு. ஆனால், குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும் போது தான்...(Contd,,)
நமக்குத் தெரியவரும்-அது வேறு ஒரு புண்ணாக்கும் இல்லை, குறுகிய ஒரு சாலை சந்திப்பில் ஓரம்கட்டி நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் ஒரு சிறு வாகனத் தடை, அல்லது ஒரு சிறு பள்ளம், அல்லது ஒரு சின்ன இடப் பற்றாக்குறையின் விளைவு என்று!!


இதையெல்லாம் கவனித்து அது போன்ற தடைகளை போக்க முதலில் 'நீரோட்ட- ஞானம்' அவசியம்! அல்லது ஒரு 'ஹெலி-காப்டரை' வைத்துக் கொண்டு ஒரு நல்லவனைப் போட்டு வான்வழி இருந்து, காலை மாலையில் போக்குவரத்து தடைகள் எங்கு ஏன் ஏற்படுகிறது என்று கவனித்து அதைக் களைய முயற்சி செய்ய வேண்டும்! குறைந்தது, லாரி, பேருந்துகள் போன்ற கனரக வாகனங்கள் செல்லும் பாதைகளையாவது சரி செய்வது தமிழக வளர்ச்சிக்கு நல்லது! வெறுமனே 'சிங்கப்பூர்' ஆக்கப் போகிறோம் என்று வாயால் சொல்லிக் கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது சார்!


ஆங்கிலத்தில் 'splay' என்று சொல்வார்கள். இத்தனை அடி சாலைக்கு இத்தனை அடி 'splay' வளைவு இருக்கவேண்டும் என்று உலக தர-நிர்ணயம் உண்டு-அதைக் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்! அது போன்ற 'வளை' நிலங்களை உடனடியாக தமிழக அரசு, சம்பந்தப் பட்ட தனியாரிடம் இருந்து நியாயமான சந்தை விலைக்கு வாங்கிக் கொண்டால் கூட அது நல்லதுதான்! ஒரு 20'-00"x 20'-00" பரப்புள்ள நிலத்தை 'ஸ்ப்ளே' செய்யும் போது சுமார் 250 சதுரஅடி வரும் - சாலையின் இருபுறம் சேர்த்தால் சுமார் 500 சதுர அடிதான் ஆகிறது!



இதே பத்துக்கு பத்தடி 'ஸ்ப்ளே' என்றால் மொத்தமே வெறும் 250 சதுர அடிதான் வரும்! விலை என்னவோ, அண்ணா சாலை, அடையார், அண்ணாநகர் போன்ற மதிப்பு மிக்க இடங்களிலேயே சில இலட்சங்களுக்கு மேல் போகாது! (வெகுஜன மக்களுக்கு நன்மை தரும் ஒரு நிலத்தை அரசு, இலவசமாகவே கையகப் படுத்த உரிமையும் உண்டு!)





கர்நாடக ஆந்திரா மாநிலங்கள் அந்த விஷயத்தில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது கண்கூடு!  (Bengaluru & Hyderabad) அங்கு எந்த அளவுக்கு சாலை-வளர்ச்சி அடைந்தது என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்! அவர்களது  ஆட்சியில் நிறைய சாலைகள் உடனுக்குடன் விசாலப் படுத்தப்பட்டு சீர்திருத்தம் செய்யப் பட்டன! சீர்திருத்தம் பெற்ற அது போன்ற சாலைகள் வழியாய் தடையின்றி செல்லும் வாகனங்களால் மறைமுகமாக மக்களுக்கு எவ்வளவு எரிபொருள் சிக்கனம், ஒலி மாசு கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி என்று பார்த்தால், இந்த செலவெல்லாம் நல்லதோர் அரசுக்கு ஒரு செலவே அல்லவே!


முக்கிய சாலைகளுக்காவது இது போன்ற கையகப்படுத்தல்கள் மிக்க அவசியம்! நாம் வாழ்கிற காலத்திலேயே நாம் அனைவரும் சேர்ந்து சென்னையை சீர்திருத்தம் செய்ய நாம் முடிவெடுக்க வேண்டும்! அதற்கு இன்னும் நூறு வருடங்கள் தேவையா என்ன? இல்லாவிட்டால் நமது சந்ததிகள் இன்னும் சில வருடங்களில் இன்னும் மோசமாகக் கஷ்டப் படப் போவது நிச்சயம்!

இதை கவனித்து சரி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் உடனடியாக களம் இறங்க வேண்டும்!

நடக்கும்! நான் நம்புகிறேன்-இதுவே தக்க சமயம்!


-Yozenbalki

திங்கள், 15 ஜூலை, 2013

என் செய்வாய் நீ இறைவா....? (கவிதை)




மெல்லிய பூஞ்சாரலாய்

இறங்கிவந்த இறைவன் ஒருநாள்

தனித் தனியே எம்மையணுகி

என்ன வேண்டுமென

அன்பில் வினவினான்!



எனது முறையும் ஆங்கு வர

'எதுவும் வேண்டாம்' என்றேன் யான்!

ஒராச்சர்யக் குறியாய் நிமிர்ந்த இறைவன்

'ஏனென உரக்கக் கேட்க

'அப்படி மேன்மையாய் யாதொன்றையும்

தருவதற்கான சாத்தியம்

இல்லையே உன்னிடம் !

என்றேன் யானும்!


புரியுமாறு எனைப் பேசப் பணித்தான்!

பேசலானேன்:

'அண்டம் படைத்த அன்பனே-அய்யா!

"நரை-திரை-பிணி-மூப்பு-சாக்காடு

இவையெலாம் என்னை

அண்டமுடியாமல் செய்திடுவாயா?

என் மழலைநாட்களின் மகிழ்ச்சி யாவையும்


ஒரு பையில் போட்டு கையளிப்பாயா?

என் அன்புக்குரியோர்க் கதுவே செய்து

என்னுடன் வசிக்கும் பரிசளிப்பாயா?

நன்னீர் உணவு உறைவிடம் தந்து

வெள்ளம் வறட்சி நிலமழியாவொரு

நிலை செய்வாயா?"


என்ன செய்திட முடியும் உன்னால்...?" 


இப்படி கேட்டதும் அதிர்ந்த இறைவன்

இளித்தவாறே இறைஞ்சலானான்!

"இழிவு படுத்தாதே; எதையாவது கேளேன்!

ஒரு பொருளோ பதவியோ உயரிய பரிசோ

ஏதோ ஒன்று கேட்டால் மகிழ்வேன்;

கேட்டுதான் தொலையேன்!


"ஒன்றுமே வேண்டாம் இறைவா!

உன்னைக் கண்ட மகிழ்ச்சியே

இன்றைக்குப் போதுமே!

உன்னைக் காணாத போதும்

அப்படியே இருந்தேன்!

இன்பதுன்பமாம் இருமைகள் தம்மை

நீநினைத்தாலும் நிறுத்த முடியாதென

எனக்குத் தான் தெரியுமே!


வெற்று இன்பம் திகட்டும் தினத்-தேன்!

துன்பம்-பனிமலை உருகிக் கரையும்!

ஆசைக் குரங்கு பற்றும் பலகிளை

வேசை மனத்தால் ஆசை நிற்குமா?

இரவு பகலென வரட்டும் இரண்டுமே!

நடுவில் நின்றிடும் நாடகம் அறிவேன்!

நீயே படைத்த பிரபஞ்ச வெளியில்

நிதமும் குழப்பம்... போயதைப் பாரேன்!

வணக்கம் இறைவா! வருகிறேன்" என்றேன்!


மூலையில் கிடந்த மானிடன் ஒருவன்

முண்டியடித்து என்னிடம் வந்தான்!

'விட்டுவிடாதே அரிய வாய்ப்பிது

போனால் வராது....!

நோபெல் பரிசும் பிரதமர் பதவியும்

கேட்டு வாங்கென" காதில் ஓதினான்!


சிரித்தேன் சிரித்தேன்...

அழுகை வரும்வரை விடாது சிரித்தேன்!

கடலில் நுரைக்கும் குமிழிகள் நினைத்தும்..

நோபெல் பரிசில் பிரதமர் பதவியில்

இன்பம் இருப்பதாய்

நினைக்கும் மானுடர்

நினைப்பை நினைத்தும்...

சிரித்தேன் சிரித்தேன்....

அழுகை வரும் வரை விடாது சிரித்தேன்!

-yozenbalki

சனி, 9 பிப்ரவரி, 2013

பெயரொன்று வைத்தானதால் வந்த பீழை இது!



பெயரொன்று வைத்தானதால்

வந்த பீழை இது!


வரிஎன்றும் வார்த்தைஎன்றும்

அறிவென்றும் பெரிதென்றும்


இறுமாறும் 'வெளிஞானம்'

உயர்வென்று தடுமாறுது!


விஞ்ஞானம் பெயர் வைக்கும்

நீருக்குள் நெருப்பிருக்க


வழியில்லை என்றெண்ணும்!

பின்னோர் நாள் 'ஆம்' ஆனால்


நெருப்பின்னை 'தொருப்பென்னும்!

வேறென்ன சொல்லி விடும்?


அலங்காரப் பொருள் செய்யும்

அதுபோதும் என்றெண்ணும்!


உயர் வாழ்வையோ தள்ளும் 

வேறென்ன செய்து விடும் ?


அண்டத்தில் பிண்டமுள

பிண்டத்தில் அண்டமுள


என்றவனை பரிகசித்து

நீர் நெருப்பில் பெருவெடிப்பில்


பனியுருகும் பரிதவிப்பில்

"விஞ்ஞானச் சிற்றெறும்பு"


பொந்துக்குள் புலம்பி அழும்!

அருவொன்று உருவாகும்


உருவொன்று திடமாகும்

திடம் நீராய் காற்றாகி


மறைந்தங்கு மீண்டுவரும்!

பெயர் மாறும் அதற்கென்றும்


ஒலிக்கின்ற பெயரில்லை !

இதழ் சப்தம் பெயராமோ?


இயற்கை ஓர் பெரும் வியப்பு!

ஆதியந்தம் அற்ற வழி!


பிரபஞ்ச சமுத்திரத்தில்

சின்னதொரு சிப்பிகள் நாம்!


பெயரொன்று வைத்தானதால்

வந்த பீழை இதாம்!