Translate this blog to any language

சனி, 14 மார்ச், 2020

"திரு" என்று தமிழில் துவங்கும் அழகிய ஊர்ப் பெயர்கள்!


திரு அம்பர்மாநகர்
திரு அரத்துறை
திரு ஆப்பாடி
திரு ஆலங்காடு
திரு ஆலவாய் நல்லூர்
திரு ஆவணம்
திரு ஆவிநன்குடி
திரு ஆனைக்கா
திரு எவ்வுள்
திரு எடகம்
திரு ஏரகம்
திரு ஐயாறு
திருக்கச்சூர்
திருக்கடவூர்
திருக்கடையூர்
திருக்கண்டியூர்
திருக்கண்டீஸ்வரம்
திருக்கண்டீச்சுரம்
திருக்கண்ணபுரம்
திருக்கண்ணன்குடி

திருக்கண்ணமங்கை
திருக்கயிலாயம்
திருக்கருகாவூர்
திருக்கழிப்பாலை
திருக்கழுக்குன்றம்
திருக்களர்
திருக்காரிகுடி
திருக்காரிக்கரை
திருக்காவலூர்
திருக்காளத்தி மலை
திருக்குவளை
திருக்குறுங்குடி
திருக்கோடிகா
திருக்கோணமலை
திருக்கோலக்கா
திருக்கோவலூர்
திருக்கோழீச்சுரம்
திருக்கோளிலி
திருச்சம்பள்ளி
திருச்சாத்தமங்கை
திருச்சாத்துறை
திருச்சானூர்

திருச்சாய்க்காடு
திருச்சிரபுரம்
திருச்சிராப்பள்ளி
திருச்சிற்றம்பல நல்லூர்
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றேமம்
திருச்சீர் அலைவாய்
திருச்சுகனூர்
திருச்சுரம்
திருச்செங்காட்டங்குடி
திருச்செங்குன்றம்
திருச்செங்கோடு
திருச்செந்தில்
திருச்செந்துறை
திருச்செந்தூர்
திருச்செம்பொன்பள்ளி
திருச்சேலூர்
திருத்தண்கா
திருத்தணிகை
திருத்தவத்துறை
திருத்தளூர்

வியாழன், 30 ஜனவரி, 2020

On Wealth : Albert Einstein


Mein Weltbild, Amsterdam: Querido Verlag, 1934.

"I am absolutely convinced that no wealth in the world can help humanity forward, even in the hands of the most devoted worker in this cause. 

The example of great and pure individuals is the only thing that can lead us to noble thoughts and deeds.

Money only appeals to selfishness and irresistibly invites abuse.

Can anyone imagine Moses, Jesus, or Gandhi armed with them money-bags of Carnegie?"

-Albert Einstein


சனி, 18 ஜனவரி, 2020

இப்படியே போய்விடாதே காலமே!


இன்னும் செய்ய
ஆயிரம்
இருக்கையில்
முகநூலில் மூழ்கியும்
குறுந்தகவல்களில் குலைந்தும்
தூரத்து மின்மினிகளில்
இலயித்தும்
ஒரு சுனாமியின் பாய்ச்சலாய்
கடந்துபோய் கழிந்துவிடாதே!
என் புத்திக்குள் சக்தியேற்று!
வேண்டிய பலவற்றை
விடாது செய்யவும்
வேண்டாத சிலவற்றை
யான் விலக்கி வைக்கவும்
வீரிய விருப்பம்
என்னுள் திணித்துவை!

வெறும் "முப்பத்தாறாயிரத்து
ஐநூற்று சொச்சத்தை"
அடிக்கடி நினைவூட்டு;
சீர்வாழ்வின் வீணை மீட்டு!
இருந்தவர் மறைந்த
ஏழாயிரம் கதையளி!
இருப்பதில் சிறப்பது
எதுவெனத் தெளிவி!
உள்ளம் உடையாதிருக்க
காலத்தில் அருள்செய்!
'இருமை' கடந்தேக
இதமாய்க் கற்பி!
என்னுள் கிடக்கும்
ஏகாந்தம் உணர்த்து!

எளிய உயிர்களையும்
ஏற்று 'மதிக்கும்' இங்கிதம் தா!
ஆனபணிகளை ஆற்றும் போது
அடங்கிநிற்கும் உள்ளம் உதவு!
சிறிது பெரிதென பேதமொழித்த
சீரிய சமநிலை தவறாது அளி!
குழந்தைகள் போற்று !

கூடி வாழ்ந்திடும் கூடுகள் கொடு!
நிலாச்சோறுண்ட அற்றைநாட்களை
அப்படியே மீண்டும் கையளித்துப்போ!
வீதியில் முளைத்த மூங்கில் கட்டிலில்
முதியவர்கள் 'கதைக்க'
இளைஞர்கள் 'கலக்கும்'
கலகலப்பு காட்டு!
எங்கள் வானத்தில்
மகிழ்ச்சியின் பூரிதத்தை
தாய் மழையாக்கு !

அன்பின் தலைமையில்
அறிவின் "சிறுபண்டங்கள்"
தொல்லை தராமல்
இருந்து கொள்ளட்டும்!

-YozenBalki

(Will continue... sometime if destiny permits...)
**********
www.yozenmind.com

ஞாயிறு, 17 நவம்பர், 2019

திருக்குறளை பழித்தாரா பெரியார்? இல்லவே இல்லை!

குறளை பழித்தார் பெரியார் என்று யாராவது சொன்னால் இதைப் படிக்கச் சொல்லுங்கள்!
_________________________________________

"குறளும் - நானும்" : தந்தை பெரியார் பேசிய உரை இது!

பேரன்பு படைத்த தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே, வணக்கம்!


வள்ளுவர் குறளையும், அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன்.
எல்லாவற்றையும் குறை சொல்லும்போது, பலர் என்னிடம், 'எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான், 'இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது, அதை எடுத்து விடு என்று 
கூறினால் - அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?' என்று பதில் கூறுவேன்.

ஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில் மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக்கூடாது என்று கருதி அந்தப்படியே பிரச்சாரம் புரிந்து வந்தேன். பிறகு நாளாக ஆக நல்ல அறிவாளிகளோடு - அறிவாளி என்றால்
பண்டிதர்களோடு அல்ல, பொது அறிவுள்ள மக்களோடு, திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு - நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகியபோது குறளின் மேன்மை பற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள். 

நான், 'இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே, இந்த இடத்தில் இப்படியிருக்கிறதே என்று கேட்டேன். அது பரிமேலழகரின் உரை: அது குறளாசிரியர் கருத்தல்ல' என்று எடுத்துக்கூறி உண்மை  உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாத்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து, குறளின் உண்மைக் கருத்தை எடுத்துக் காட்டினார்கள்.

அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றிப் பேசுகிறேன். அதுவும் அதையே ஆதாரமாக (Authority) எடுத்துக்
கொண்டல்ல! 'நான் சொல்லுகிற கருத்து - அதிலும் இருக்கிறது பார்!" என்று கூறிவந்தேன்.

அதில் சிறிது குறை இருந்தால் இப்போதைக்கு அது இருக்கட்டும் என்று கருதினேன்.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

கேரள வெள்ளம் உணர்த்தும் வாழ்க்கைப் பாடம் !

“இந்தப் பகுதி இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும். 
முக்கியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்”



இதைக் கேட்டபோது அவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு இருந்தனர்! 

இப்போது அவர்கள் பிரச்சினை
எதையெல்லாம் எடுத்துக்கொள்வது என்பதல்ல
எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான்.

முதலில் கைகளில் எதையெல்லாம் தூக்கிக் கொள்ள முடியாதோ அதையெல்லாம் கைவிட்டார்கள். 

பிறகும் கைவிடுவதற்கு ஏராளமாக இருந்தன!


பரிசுப்பொருள்கள்
தெய்வப்படங்கள்
புகைப்பட ஆல்பங்கள்
ஆடைகள்
உள்ளாடைகள்
புத்தகங்கள்
இசைக்கருவிகள்
இசைப்பேழைகள்
ஸ்பூன்கள்
கண்ணாடிக் கோப்பைகள்
பொம்மைகள்
கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள்
உடல் வாசனையுள்ள போர்வைகள்

அழகு சாதனப்பொருள்கள்

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

இட ஒதுக்கீடு என்பது நீதியா அநீதியா? பொருளாதார அளவுகோல் சரியா?

💛💚❤💚💛💜❤💚💙

உலகில் வேறெங்கும் காணப்படாத ஒரு மாபெரும் அநீதி இந்தியாவில் இன்றும் உண்டு! அது என்னவென்றால் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தில் பிறப்பதனால் குத்தப்படும் "பிறப்பின் அடிப்படையிலான சாதி முத்திரையே ஆகும்!"



இந்த நாட்டில் மட்டுமே ஒருவனின் கல்விப் பெருமையினாலோ அல்லது அவனது நன்னடைத்தை பற்றியோ அன்றி, இன்ன சாதித் தந்தைக்கு பிறப்பதினாலேயே ஒரு குழந்தை பிறப்பிலேயே உயர்ந்த சாதிக் குழந்தையாக மதிக்கப்படுவது, அல்லது பிறப்பின் அடிப்படையிலேயே "தீண்டத்தகாத சாதி குழந்தையாக ஒதுக்கப்படுவது", எனும் அவலம் ஆயிரம் ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றது! 

அப்படி குழந்தை பருவத்திலேயே முக்கியமாக பள்ளிப் பருவத்தில், பிற மாணவர்களால் ஆசிரியர்களால், சாதி அடிப்படையில் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கப்பட்டவரே டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் ஆவர்!


ஆதி தமிழர்களுக்கு பிறவியின் அடிப்படையிலான சாதிமுறை இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் இல்லை! தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பழைய இலக்கிய நூல்கள் வழியாகவும் திராவிட சிந்து சமவெளி நாகரிகம், தமிழக கீழடி நாகரிகம் போன்ற புதைபொருள் ஆராய்ச்சியின் வழியாகவும் ஆய்வு செய்தபோது தமிழர்களின் சாதியற்ற சமுதாயம் தெரியவந்தது!

சனி, 3 ஆகஸ்ட், 2019

டெங்கு: தோலுரிக்கும் கட்டுரை !

இது வாட்சப்பில் வந்தது! மிக அருமையான பதிவு, அதை அப்படியே விட்டுவிட மனமில்லாமல் அப்படியே இங்கு படியெடுத்து ஒட்டி உள்ளேன்! இதை எழுதிய ஹீலர்.இரா.மதிவாணன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் பலவும்!
-yozenbalki 
-----------------------------------------------------------


இயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செறிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் இதைக் கட்டாயம் படிக்க வேண்டும்.

டெங்கு காய்சலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்ச்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

மனித உடல் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 37.2 Trillion செல்கள் என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு செல்லும் உணவு அருந்தி, சக்தியை கொடுத்து, கழிவுகளை வெளியேற்றுகிறது.

இது தொடர்ந்து நடைபெற்று வரும், நமது தவறான உணவு மற்றும் வாழ்கைமுறை காரணமாக செல்களின் கழிவுகளை வெளியேற்றும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது.

எனவே கழிவுகள் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. சரி இப்பொழுது குழந்தைகளின் பால் புட்டியை எந்த தண்ணீரில் கழுவுவீர்கள் ? சுடு தண்ணீரில் தானே. ஏன் ? அழுக்குகள் நீங்கும், கிருமிகள் அழியும்.

சரி சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கிறார்கள். ஏன் ? கிருமிகள் அழியும். கொதிக்கவைத்து குடிப்பது தவறு தான் அதனுள் இப்பொழுது செல்ல வேண்டாம்.

தண்ணீரை சூடு செய்யும் போது அதில் சில பொருட்கள் நகர்வதை நீங்கள் பார்க்கலாம். சூடு ஆகும் போது நீரின் Molecules அனைத்தும் நகரத்துவங்கும்.

உணவுப் பொருட்களை சூடு செய்யும் போது அதில் இருந்து மணம் வெளிப்படுவதை  நீங்கள் அறிவீர்கள். உணவில் உள்ள மணத்தை சூடு நகர்த்தி வெளி கொணர்ந்தது.

நமது நாட்டில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டு, காரணம் வெப்ப மண்டல நாடு. சூடு பூவின் மணத்தை நகர்த்தி வெளி கொணர்ந்தது.

ஊட்டி போன்ற குளிர் பிரதேச பகுதிகளில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டா ? என நீங்களே பரிசோதித்து பாருங்கள். பூ அழகாக இருக்கும் மணம் இருக்காது.

வயதான முதியவர் இறந்துவிட்டார் கையை தொட்டு பார்த்தால் ஐஸ் போல் உள்ளது. அசைவுகள் இல்லை. உயிருடன் இருந்த போது சூடு இருந்தது, அசைவு இருந்தது.