Translate this blog to any language

சனி, 28 மார்ச், 2020

Virus: அச்ச நெருப்பை அச்சில் ஏற்றும் பேராசை!

எதை வேண்டுமானாலும் 
விற்று பணமாக்கிவிட 
முடிகிறது அவர்களால்!
அதுபோன்றே
தெளிந்த உண்மைகளைத்
தெளித்து விடவும்
முடிவதில்லை நம்மால்!

ஒருதுளி நெருப்பை 
கோடை காலத்து 
இலையுதிர் காட்டில் 
வைத்தால் போதும்! 
என்ன நடக்கிறது 
என அறியும் முன்னே 
எரிந்து போகிறது காடு! 
நாடும் அங்ஙனமே!

அச்ச நெருப்பை 
அச்சில் ஏற்றி விதவிதமாகப் பரப்பினால் போதாதா,
விற்க முடியாதவை எல்லாம் 
விற்றுப் போய்விடுமே!


இனி விற்பனையில் வரும் 
உலக சந்தைக்கு ஒன்று!

நோயில் நொந்து 
"அவ்விடம்" போனவன், 
சீரிய அறிவினன் 
கொடுத்து வைத்தவன்! 

இருப்பவர் கோடிதான் 
இல்லாமலாகி 
இருந்த மதிப்பும் கெட்ட புழுக்களாய் பூமியின் மீதில் 
அகதிகளாகியே 
அல்லல் படுகிறார்!

உறிஞ்சும் அட்டைக்கு 
செந்நீரோ கண்ணீரோ 
எல்லாம் ஒன்றுதான்!
பணத்தை நோக்கியே ஓடும் முதலைக்கு பற்கள் பெரிதன்றோ?

தேவையோ இல்லையோ 
தேவைக்கு மீறியே ஏழைகளை 
அடித்து உலையில் போடுகிறது உலகப் பேராசை!

பெரிய நாடகம் இறைவன் போட
"அதுகளே" போட்ட நாடகம் என்று கரிய பாம்புகள் கருதுகின்றன பாவம்!


குண்டு போடும் விமானங்களுக்கும் மேலாய் 
விசும்பில் சிரித்தபடி
குறி பார்த்து நிற்கும் கூற்றுவன்
நீ அறிகிலாய்!

நீ போடும் கணக்கெல்லாம் உனக்கே பிணக்காய் உடனே திரும்பும் பார்! 
உன் வரவுப் புத்தகத்தில் செலவின் பக்கத்தில் இதை அழுத்தி எழுதிக் கொள்ளேன்!

"நல்ல நாடகமே எனினும் 
கொள்ளை முடிந்து பங்கு பிரிக்கும் நேரம் நெருங்குகையில் இலாபக் கணக்குகளைச் எழுத முடியாதபடி உங்கள் உட்பிரிவில் உயிர்-மை தீர்ந்திருக்கும்!"

ஆனாலும் எப்பொழுதும் போலவே பசுமை போர்த்திய இந்த பூமியில் அருவிகளின் இசையையும், பறவைகளின் பாடல்களையும் 
கேட்ட வண்ணம் நடக்கும்
அந்தக் கள்ளம் கபடறியா ஏழைகளின் ஓய்வறியாப் பாதங்களை 
இறைவன் தொழுதிருக்க 

நெடும் பயணமது 
நில்லாமல் தொடரும்!

-யோஜென் பால்கி

திங்கள், 23 மார்ச், 2020

பயத்தை விரட்டாமல் நோயை விரட்ட முடியாது!


நண்பர்களே!

அரசும், மருத்துவர்களும் சொல்கிற பாதுகாப்பு முறைகளை தவறாமல் கடை பிடியுங்கள்! 

கீழே மருத்துவர்களால் சொல்லப்பட்ட சில எளிய உணவு முறைகளைப் பின்பற்றுங்கள்!


அதே சமயம் நீங்கள்,

1. எப்பொழுதும் அந்த 'கர்ண-பரம்பரைக்' கதைகளை கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்! 

2. அந்தக் கதைகளை கொஞ்சமாவது தொடர்ந்து கேட்பதைப் பார்ப்பதைத் புறந்தள்ளுங்கள்! 

3. மற்றவர்களுக்கு உதவி செய்வது விளையாடுவது, மனம் விட்டு சிரிப்பது இவைதான் உங்கள் உள்ளத்தை உடலை,  ஆரோக்கியமாகவும் எதிர்ப்பு சக்தியுடன் வைத்திருக்கும்! 

4. எதிர்மறை செய்திகளை தொடர்ந்து கேட்டு உங்கள் மன உறுதியைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்! 
அது உங்கள் நனவிலி மனத்தில் (Subconscious Mind) தேவையற்ற, நீண்டகால அடிப்படையிலான தீய தாக்கத்தை ஏற்படுத்தும்!

5. நகைச்சுவை காட்சிகளை அதிகம் பாருங்கள், வாய்விட்டு சிரியுங்கள்!

6. தன்னம்பிக்கை தரும், மகிழ்ச்சி தரும் புத்தகங்களை படியுங்கள், உங்கள் குடும்பத்தினருக்கும் படித்துக் காட்டுங்கள்!

7. எப்பொழுதும் உங்கள் கவனத்தை மூக்கு மற்றும் தொண்டையின் மீது வைத்துக் கொண்டு, இல்லாத நோயை இருப்பது போல கற்பனை செய்து கொண்டு கலங்காதீர்கள்!

8. "பயம் என்ற ஓட்டை வழியாகத்தான் நோய் என்ற ஒன்று வந்து நுழைகிறது"!

9. உங்களுக்கு நம்பிக்கை தருகின்ற அறிவியலோ அல்லது ஆன்மிகமோ, எதையோ ஒன்றை அல்லது இரண்டையுமே கூட கைக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருங்கள்!

10. இயற்கை அல்லது இறைவன் உங்கள் குடும்பத்துக்கு நல்லதே செய்வார் என்று நம்புங்கள்! "நம்பிக்கையை" விட மிகப்பெரிய சக்தி இந்த உலகில் வேறு எதுவும் இல்லை!

🍀🌸😇😇
அன்புடன் 
யோஜென் பால்கி
(உள இயல்)

சனி, 14 மார்ச், 2020

"திரு" என்று தமிழில் துவங்கும் அழகிய ஊர்ப் பெயர்கள்!


திரு அம்பர்மாநகர்
திரு அரத்துறை
திரு ஆப்பாடி
திரு ஆலங்காடு
திரு ஆலவாய் நல்லூர்
திரு ஆவணம்
திரு ஆவிநன்குடி
திரு ஆனைக்கா
திரு எவ்வுள்
திரு எடகம்
திரு ஏரகம்
திரு ஐயாறு
திருக்கச்சூர்
திருக்கடவூர்
திருக்கடையூர்
திருக்கண்டியூர்
திருக்கண்டீஸ்வரம்
திருக்கண்டீச்சுரம்
திருக்கண்ணபுரம்
திருக்கண்ணன்குடி

திருக்கண்ணமங்கை
திருக்கயிலாயம்
திருக்கருகாவூர்
திருக்கழிப்பாலை
திருக்கழுக்குன்றம்
திருக்களர்
திருக்காரிகுடி
திருக்காரிக்கரை
திருக்காவலூர்
திருக்காளத்தி மலை
திருக்குவளை
திருக்குறுங்குடி
திருக்கோடிகா
திருக்கோணமலை
திருக்கோலக்கா
திருக்கோவலூர்
திருக்கோழீச்சுரம்
திருக்கோளிலி
திருச்சம்பள்ளி
திருச்சாத்தமங்கை
திருச்சாத்துறை
திருச்சானூர்

திருச்சாய்க்காடு
திருச்சிரபுரம்
திருச்சிராப்பள்ளி
திருச்சிற்றம்பல நல்லூர்
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றேமம்
திருச்சீர் அலைவாய்
திருச்சுகனூர்
திருச்சுரம்
திருச்செங்காட்டங்குடி
திருச்செங்குன்றம்
திருச்செங்கோடு
திருச்செந்தில்
திருச்செந்துறை
திருச்செந்தூர்
திருச்செம்பொன்பள்ளி
திருச்சேலூர்
திருத்தண்கா
திருத்தணிகை
திருத்தவத்துறை
திருத்தளூர்

வியாழன், 30 ஜனவரி, 2020

On Wealth : Albert Einstein


Mein Weltbild, Amsterdam: Querido Verlag, 1934.

"I am absolutely convinced that no wealth in the world can help humanity forward, even in the hands of the most devoted worker in this cause. 

The example of great and pure individuals is the only thing that can lead us to noble thoughts and deeds.

Money only appeals to selfishness and irresistibly invites abuse.

Can anyone imagine Moses, Jesus, or Gandhi armed with them money-bags of Carnegie?"

-Albert Einstein


சனி, 18 ஜனவரி, 2020

இப்படியே போய்விடாதே காலமே!


இன்னும் செய்ய
ஆயிரம்
இருக்கையில்
முகநூலில் மூழ்கியும்
குறுந்தகவல்களில் குலைந்தும்
தூரத்து மின்மினிகளில்
இலயித்தும்
ஒரு சுனாமியின் பாய்ச்சலாய்
கடந்துபோய் கழிந்துவிடாதே!
என் புத்திக்குள் சக்தியேற்று!
வேண்டிய பலவற்றை
விடாது செய்யவும்
வேண்டாத சிலவற்றை
யான் விலக்கி வைக்கவும்
வீரிய விருப்பம்
என்னுள் திணித்துவை!

வெறும் "முப்பத்தாறாயிரத்து
ஐநூற்று சொச்சத்தை"
அடிக்கடி நினைவூட்டு;
சீர்வாழ்வின் வீணை மீட்டு!
இருந்தவர் மறைந்த
ஏழாயிரம் கதையளி!
இருப்பதில் சிறப்பது
எதுவெனத் தெளிவி!
உள்ளம் உடையாதிருக்க
காலத்தில் அருள்செய்!
'இருமை' கடந்தேக
இதமாய்க் கற்பி!
என்னுள் கிடக்கும்
ஏகாந்தம் உணர்த்து!

எளிய உயிர்களையும்
ஏற்று 'மதிக்கும்' இங்கிதம் தா!
ஆனபணிகளை ஆற்றும் போது
அடங்கிநிற்கும் உள்ளம் உதவு!
சிறிது பெரிதென பேதமொழித்த
சீரிய சமநிலை தவறாது அளி!
குழந்தைகள் போற்று !

கூடி வாழ்ந்திடும் கூடுகள் கொடு!
நிலாச்சோறுண்ட அற்றைநாட்களை
அப்படியே மீண்டும் கையளித்துப்போ!
வீதியில் முளைத்த மூங்கில் கட்டிலில்
முதியவர்கள் 'கதைக்க'
இளைஞர்கள் 'கலக்கும்'
கலகலப்பு காட்டு!
எங்கள் வானத்தில்
மகிழ்ச்சியின் பூரிதத்தை
தாய் மழையாக்கு !

அன்பின் தலைமையில்
அறிவின் "சிறுபண்டங்கள்"
தொல்லை தராமல்
இருந்து கொள்ளட்டும்!

-YozenBalki

(Will continue... sometime if destiny permits...)
**********
www.yozenmind.com

ஞாயிறு, 17 நவம்பர், 2019

திருக்குறளை பழித்தாரா பெரியார்? இல்லவே இல்லை!

குறளை பழித்தார் பெரியார் என்று யாராவது சொன்னால் இதைப் படிக்கச் சொல்லுங்கள்!
_________________________________________

"குறளும் - நானும்" : தந்தை பெரியார் பேசிய உரை இது!

பேரன்பு படைத்த தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே, வணக்கம்!


வள்ளுவர் குறளையும், அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன்.
எல்லாவற்றையும் குறை சொல்லும்போது, பலர் என்னிடம், 'எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான், 'இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது, அதை எடுத்து விடு என்று 
கூறினால் - அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?' என்று பதில் கூறுவேன்.

ஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில் மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக்கூடாது என்று கருதி அந்தப்படியே பிரச்சாரம் புரிந்து வந்தேன். பிறகு நாளாக ஆக நல்ல அறிவாளிகளோடு - அறிவாளி என்றால்
பண்டிதர்களோடு அல்ல, பொது அறிவுள்ள மக்களோடு, திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு - நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகியபோது குறளின் மேன்மை பற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள். 

நான், 'இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே, இந்த இடத்தில் இப்படியிருக்கிறதே என்று கேட்டேன். அது பரிமேலழகரின் உரை: அது குறளாசிரியர் கருத்தல்ல' என்று எடுத்துக்கூறி உண்மை  உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாத்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து, குறளின் உண்மைக் கருத்தை எடுத்துக் காட்டினார்கள்.

அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றிப் பேசுகிறேன். அதுவும் அதையே ஆதாரமாக (Authority) எடுத்துக்
கொண்டல்ல! 'நான் சொல்லுகிற கருத்து - அதிலும் இருக்கிறது பார்!" என்று கூறிவந்தேன்.

அதில் சிறிது குறை இருந்தால் இப்போதைக்கு அது இருக்கட்டும் என்று கருதினேன்.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

கேரள வெள்ளம் உணர்த்தும் வாழ்க்கைப் பாடம் !

“இந்தப் பகுதி இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும். 
முக்கியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்”



இதைக் கேட்டபோது அவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு இருந்தனர்! 

இப்போது அவர்கள் பிரச்சினை
எதையெல்லாம் எடுத்துக்கொள்வது என்பதல்ல
எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான்.

முதலில் கைகளில் எதையெல்லாம் தூக்கிக் கொள்ள முடியாதோ அதையெல்லாம் கைவிட்டார்கள். 

பிறகும் கைவிடுவதற்கு ஏராளமாக இருந்தன!


பரிசுப்பொருள்கள்
தெய்வப்படங்கள்
புகைப்பட ஆல்பங்கள்
ஆடைகள்
உள்ளாடைகள்
புத்தகங்கள்
இசைக்கருவிகள்
இசைப்பேழைகள்
ஸ்பூன்கள்
கண்ணாடிக் கோப்பைகள்
பொம்மைகள்
கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள்
உடல் வாசனையுள்ள போர்வைகள்

அழகு சாதனப்பொருள்கள்