Translate this blog to any language

வியாழன், 15 அக்டோபர், 2020

ஆத்திச்சூடி ஆங்கிலத்தில்!

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!

Lets Spread Aathisoodi to the World!

1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் /
2. Control anger.
3. இயல்வது கரவேல் /
3. Dont forget Charity.
4. ஈவது விலக்கேல் /
4. Dont prevent philanthropy.
5. உடையது விளம்பேல் /
5. Dont betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் /
6. Dont forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் /
7. Dont despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி /
8. Dont freeload.
9. ஐயம் இட்டு உண் /
9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு /
10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் /
11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் /
12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் /
13. Dont shortchange.
14. கண்டொன்று
சொல்லேல்/
14. Dont flip-flop.
15. ஙப் போல் வளை /
15. Bend to befriend.
16. சனி நீராடு /
16. Shower regularly.
17. ஞயம்பட உரை /
17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் /
18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு /
19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் /
20. Protect your parents.
21. நன்றி மறவேல் /
21. Dont forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் /
22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் /
23. Dont land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் /
24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் /
25. Dont play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் /
26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் /
27. Dont sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் /
28. Detest the disorderly.
29. இளமையில் கல் /
29. Learn when young.
30. அரனை மறவேல் /
30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் /
31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற /
32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் /
33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் /
34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று /
35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் /
36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் /
37. Dont forsake friends.
38. கெடுப்பது ஒழி /
38. Abandon animosity.
39. கேள்வி முயல் /
39. Learn from the learned.
40. கைவினை கரவேல் /
40. Dont hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் /
41. Dont swindle.
42. கோதாட்டு ஒழி /
42. Ban all illegal games.
43. கெளவை அகற்று /
43. Dont vilify.
44. சக்கர நெறி நில் /
44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு /
45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் /
46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் /
47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் /
48. Dont hurt others feelings.
49. சூது விரும்பேல் /
49. Dont gamble.
50. செய்வன திருந்தச் செய் /
50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் /
51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் /
52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் /
53. Dont show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் /
54. Dont be a lazybones.
55. தக்கோன் எனத் திரி /
55. Be trustworthy.
56. தானமது விரும்பு /
56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் /
57. Serve the protector.
58. தீவினை அகற்று /
58. Dont sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் /
59. Dont attract suffering.
60. தூக்கி வினை செய் /
60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் /
61. Dont defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் /
62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் /
63. Dont listen to the designing.
64. தொன்மை மறவேல் /
64. Dont forget your past glory.
65. தோற்பன தொடரேல் /
65. Dont compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி /
66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் /
67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் /
68. Dont depart from good standing.
69. நீர் விளையாடேல் /
69. Dont jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் /
70. Dont over snack.
71. நூல் பல கல் /
71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் /
72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு /
73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் /
74. Dont involve in destruction.
75. நொய்ய உரையேல் /
75. Dont dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் /
76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் /
77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் /
78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் /
79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் /
80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /
81. Protectyour benefactor.
82. பூமி திருத்தி உண் /
82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் /
83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று /
84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் /
85. Dont comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் /
86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் /
87. Dont encourage war.
88. மனம் தடுமாறேல் /
88. Dont vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் /
89. Dont accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் /
90. Dont over dramatize.
91. மீதூண் விரும்பேல் /
91. Dont be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் /
92. Dont join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் /
93. Dont agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் /
94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் /
95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் /
96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி /
97. Speak with clarity.
98. மோகத்தை முனி /
98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் /
99. Dont self praise.
100. வாது முற்கூறேல் /
100. Dont gossip or spread rumor.
101. வித்தை விரும்பு /
101. Long to learn.
102. வீடு பெற நில் /
102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு /
103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் /
104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் /
105. Dont be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல்/
106. Dont premeditate harm.
107. வைகறைத் துயில் எழு /
107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் /
108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் /
109. Be impartial in judgement.

- ஔவையார் / Avvaiyaar...

From WhatsApp University!!
🌈🌈💐💐

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

டயாபடீஸ் சை ஒழிக்க உமிழ்நீர் சுரக்கணும்பா!!

சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது

சக்கரை நோயை வைத்து
இந்தியாவில் மட்டுமே 
700 மருந்து நிறுவனங்கள் (கம்பெனிகள்) ஆண்டுக்குப் பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளிச் செல்கின்றனர்.

இனிமேலாவது இதற்குச் செலவு செய்யும் பணத்தை உணவுக்காகச் செலவு செய்தால் உறுதியாக வேளாண்மை செழிக்கும்  ;

வேளாண்மை செழித்தால் எல்லாத் தொழில்களும் வீறுநடை போடும்.

இதற்கான 
அரு மருந்து நம்மிடமே உள்ளது.

சக்கரை நோய்க்குக் காரணம் இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்!

ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது?

 அது உமிழ்நீர் தான்!

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக் கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதைப் பார்ப்ப்போம்.

உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான்,
 கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து.

 
உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர். 
 
வாழ்வதற்காக  உண்டனர்.

அதனால்தான் பொறுமையுடனும்
 அமைதியுடனும்
 பொறுப்புடனும் உணவருந்தினர்.

அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.

 கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக *ஊறுகாயைச்* சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.

அதேபோல் உணவு உண்பதற்கு
30 நிமிடம் முன்னதாகவும்

 உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும்

 நாம் கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு,  பனங்கருப்பட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம் உமிழ்நீர் நன்கு சுரக்கும்.

நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.

தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது. 
 
நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.

 உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.
 வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி,

 சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
 
உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல்,

 அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம். 

நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.

உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.

நாளடைவில் அது *சக்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக* மாறிவிடுகிறது.
 
சக்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்.

 எனவே,
நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.
 
நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அணுப்ப வேண்டும்.

 நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை *உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து* கொண்டு அழித்து ஒழிப்போம்.
******
ஆக்சிஜன் நம் உடம்பில் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது பற்றி அறிவோம்:

*உடலில்* *ஆக்சிஜன்* *அளவு* *98* - *100* *க்குள்* *இருக்க* *வேண்டும்* என்று சொல்லுகிறார்கள்; 43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை;
ORAC-Oxygen Radical Absorption Capacity என்று ஒரு கணக்கீடு உள்ளது; இதன்படி இந்த அளவுகோலில் *ஆக்சிஜன்* *அதிகம்* *உள்ள* *பொருட்களை* *அவ்வப்போது* *நாம்* *சாப்பிட* *வேண்டும்* .

1.கிராம்பு.      314446 ORAC
2. பட்டை. ....   267537 ORA
3. மஞ்சள்.......102700 ORA
4. சீரகம்........... 76800 ORA
5. துளசி..........67553 ORAC
6. இஞ்சி..........28811 ORAC

சரி, இவைகளைத் தினமும் எடுத்துக்கொள்ள ஏதாவது சுருக்கு வழி உள்ளதா?... அதற்கு ஒரு ரெசிபி உள்ளது! அதனை குறித்து வைத்துக்கொண்டு பின்பற்ற முயற்சி செய்யுங்கள்;

1. *ஓமம்* ........100 கிராம்
2. *சோம்பு* .......50 கி.
3. *கிராம்பு* ........5 கி.
4. *பட்டை* .........   5 கி
5. *சுக்கு* ............10 கி
6. *ஏலக்காய்* .....10 கி.

இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்துக் கொண்டு காலை மாலை டீ போடும்போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து சாப்பிட்டால்  டீ  மசாலா டீ ஆக மாறும் ; நமக்கும் ஆக்ஸிஜன் அபரிமிதமாக கிடைக்கும். வாழ்க வளமுடன்! அனைவருக்கும் ஷேர் செய்யவும்....எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க  வேண்டுகிறேன்!

🙏🙏🌈🌈🙏🙏

WhatsApp University:
படித்ததில் பிடித்தது..

புதன், 30 செப்டம்பர், 2020

இந்தித் திணிப்பு Vs இந்தி விருப்பம்


இந்தித் திணிப்புக்கும் இந்தி விருப்பத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாமர மங்கிகளுக்கு!

டாடா ஸ்கையில் இருந்து ஒரு அம்மணி அழைத்திருந்தார். எடுத்தவுடன் நமஸ்த்தே என்று ஆரம்பித்தார். 

எனக்கு இந்தி மராத்தி தெரியும் என்றாலும் நான் வணக்கம் என்று தமிழில் பதில் சொன்னேன். 

``மே பாலா ஸே பாத் கர்ராகும்..?” என்றார்..

``ஆமா” என்றேன் மீண்டும் தமிழில். சற்றுத் தடுமாறியவர்,

``டாடா ஸ்கைகீ சர்வீஸ்கீ பாரேமே கஸ்டமர்கீ ஜான்காரி ஜானா சாத்தாகும்..” 

சொல்லுங்க.. என்றேன்..

’’முஜே ஆப்கீ பாஷா சமஜ்மே நஹி ஆத்தாஹே.. ஆப் இந்தி நஹி ஜான் தே ஹோ..”என்றார். (அம்மணிக்கு நான் பேசும் மொழி புரியலையாம்.. உங்களுக்கு இந்தி தெரியாதா என்று கேட்கிறார் )

``எனக்கு இந்தி மராத்தி இங்கிலீஸ்.. ஏன் பிரெஞ்ச் கூடத் தெரியும்.. அல்லது தெரியாம இருக்கலாம்.. ஆனா நான் எதுக்கு உங்கக் கிட்ட ஹிந்தியில் பேசணும்.. தமிழ் நாட்டில் உங்க ஓனர் வியாபாரம் பண்றார்.. அப்போ கஸ்டமர் சேவை குறைபாடுகள் குறித்து பேசுவதற்குத் தமிழைத் தான் பயன்படுத்த வேண்டும்.

தமிழர்களின் துட்டு மட்டும் வேணும்.. ஆனா நாங்க உங்களுக்காக இந்தி பேசணுமா.. தேவைனா நீங்க தமிழ் படிச்சுட்டு வந்து எங்களுக்குச் சேவை செய்யுங்க.. இந்த கஸ்டமர் ரொம்ப கேவலமா திட்டுறான்னு  இதை அப்படியே ரெக்கார்ட் பண்ணி உங்க முதலாளிக்கு அனுப்புங்க.. என்று 'மராத்தி'யில் சொல்லி விட்டு வைத்தேன்.

அநேகமாக போனை வைத்தப் பிறகு.. ``இந்த தமிழனுங்க எவ்வளவு மொழி வெறி பிடிச்சவனுங்களா இருக்கானுங்க பாருங்க.. ”என்று பக்கத்து சீட் தோழியிடம் திட்டியிருக்கக் கூடும்..

இது முதல்முறை அல்ல..  சமீபமாக கவனிக்கிறேன்.. ஏர்டெல்லில் ஆரம்பித்து இந்த வட ஹிந்திய கும்பல் தமிழகத்தை குறிவைத்து களமிறக்கப்பட்டிருக்கின்றன.  அதுவும் தற்போதைய  கும்பலின் வரவுக்குப் பிறகு இந்தித் திணிப்புகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகிறது. 

தினத்தந்தியில் அரசு விளம்பரத்தை இந்தியில் வெளியிடும் அளவுக்கு இவர்களின் அட்டகாசம் இருக்கிறது.. உங்களுக்கும் யாராவது இப்படி இந்தியில் பேசினால் தயங்காமல் தமிழிலே பதில் கொடுங்கள். இந்தி தெரியவில்லை என்பதால் ஆங்கிலத்தில் அவர்களுக்கு பதிலளிக்காதீர்கள். 

நிறைய பாமர மங்கிகளுக்கு திணிப்புக்கும் விருப்பத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் வந்து வாந்தி எடுத்துக் கொண்டிருக்கின்றன..

உலகத்தின் அத்தனை மொழியையும் கற்றுக் கொள்ளலாம். அது நம் தேவையைப் பொறுத்தது. 

தமிழ்நாட்டுக்கு வேலைக்காக படையெடுத்து வருகிறார்களே வட இந்தியர்கள்.. அவர்கள் என்ன எங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்காமல் வளர்ச்சியை தடுத்து விட்டார்கள் என்றா புலம்புகிறார்கள்.. வாழ்தலுக்கு அவசியம் என்றால் ஒருவன் எந்த மொழியையும் கற்றுக் கொள்வான்.. 

திருநெல்வேலிக்காரன் பேசுவது போல் சுத்தமாக தமிழ் பேசும் சேட்ஜிக்களை எனக்குத் தெரியும்.. அவர்கள் தமிழ் சினிமாவில் காட்டுவது போல் நிம்பில்க்கு என்றெல்லாம் இப்போது பேசுவதில்லை..

அதேப்போல் இங்கிருந்து வேலைக்கு வட இந்தியா போகக் கூடியவர்கள் அந்த மொழியைக் கற்றுக் கொள்வார்கள்.. 

ஆனால் இந்தியாவின் சிறப்பான பன்முகத் தன்மையை அழிக்கும் வகையில் ஒற்றை மொழியாக இந்தியை திணிப்பதையோ இந்தியை தேசிய மொழியாக்குவதையோ அனுமதிக்க முடியாது..

இந்தி மொழி உயர்ந்தது..  நீங்கள் கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று திணித்தால்  தமிழர்கள் மீண்டும் மீண்டும் மிதித்து அனுப்புவோம்!

ஏனெனில்  அடுத்தவர்கள் மீது உங்கள் மொழியை திணிப்பது தான் மொழிவெறி.. அதை எதிர்ப்பது அல்ல!

பகிர்வு

MTR
......
From a WhatsApp unknown friend!

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

"நாங்கள் இந்தியர்களில்லை"- மனுஷ்யபுத்திரன் கவிதை


எங்களுக்கு இந்தி தெரியாது
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

நாங்கள் வடக்கத்தி தெய்வங்களை
வணங்குவதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்களது குழந்தைகள்
காய்ந்த சப்பாத்தியை
உப்பைத்தொட்டுக்கொண்டு
பள்ளியில் சத்துணவு சாப்பிடுவதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் கிராமங்களுக்கு
எப்போதோ மின்சாரம் வந்துவிட்டது
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

மாட்டு மாமிசம் உண்பவர்களை
இங்கே யாரும் அடித்துக்கொல்ல முடியாது
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

நாங்கள் காந்தியை 
கொலை செய்யவில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

நாங்கள் மதக்கலவரங்களில்
கர்ப்பிணிகளின் வயிற்றிலிருந்த சிசுவை
கீறி எடுத்ததில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் பெண்கள் அனைவரும் படிக்கிறார்கள்
எங்கள் ஆண்கள் அனைவரும் படிக்கிறார்கள்
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்களிடம் தொழிற்சாலைகள் இருக்கின்றன
எங்கள் நிலங்கள் தரிசாகக் கிடப்பதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் ஊர்கள் அனைத்தும் 
சாலைகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன
பேருந்துகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

இறந்த உடலை சுமந்துகொண்டு
இங்கே யாரும் முப்பது மைல்
நடக்க வேண்டியதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் பெயர்களுக்குப்பின்னே
சாதிப்பெயர்கள் இல்லை
சாதிப்பெயரைச் சொல்லி 
யாரும்அழைத்தால் 
நாங்கள் செருப்பால் அடிப்போம்
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

வேலையே இல்லாவிட்டாலும்
நாங்கள் பட்டினியாக இருக்கவேண்டியதில்லை
ரேஷன் அரிசியை சமைத்துத்தின்றுவிட்டு
தன்மானத்துடன் அரசியல் பேசிக்கொண்டிருப்போம்
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

நாங்கள் மருத்துவம் படிக்கிறோம்
கணிப்பொறி படிக்கிறோம்
ஆங்கிலம் படிக்கிறோம்
பல்லாயிரம் மைல் கடந்து
உலகெங்கும் திரவியம் தேடிச் செல்கிறோம்
எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு
வடக்கு நோக்கி கூலித்தொழிலாளிகளாய்
எங்கள் இளைஞர்கள் செல்வதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் குழந்தைகள் 
ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இறப்பதில்லை
எங்கள் பெண்கள் பிரசவத்தில் இறப்பதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் தெய்வ நம்பிக்கைகள் தனி
எங்கள் சித்தாந்தங்கள் தனி
இரண்டையும் நாங்கள் ஒருபோதும் கலப்பதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

வடக்கே ஒரு இந்தியா இருக்கிறது
அது இருண்ட இந்தியா
அதில் நாங்கள் ஒருபோதும்
குடிமக்களாக இருந்ததில்லை

தெற்கே ஒரு இந்தியா இருக்கிறது
அது இரவிலும் சூரியன் உதிக்கும் இந்தியா
அதை அவர்களால்
ஒரு போதும் புரிந்துகொள்ளவியலாது

11.8.2020
காலை 9.54
மனுஷ்ய புத்திரன்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக் கொள்கை NEP ஒரு குலக்கல்வித் திட்டமே!

*📌 5+3+3+4*


*📌 இது ஏதோ கூட்டல் கணக்கு அல்ல நம் எதிர்கால ஏழை சந்ததிகளின் கல்வியை பறிக்கும் குலக்கல்வி கணக்கு.*


*📍 புதிய கல்விக் கொள்கை 2020.*📍


*Pre kg*
*LKG*
*UKG*
*1st*
*2nd*


*📌 மொத்தம் 5 வருட தொடக்கக் கல்வி.*


*3rd*
*4th*
*5th*


*📌 பிறகு நாடு முழுவதும் 5 -ம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு.*


*6th*
*7th*
*8th*


*📌 பிறகு நாடு முழுவதும் 8 -ம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு.*


*9th*
*10th*
*11th*
*12th*


*📌 இவற்றில் 10, 11,12 ஆண்டுதோறும் ஒரு பொதுத்தேர்வு.*


*📌 இத்தனை பொதுத்தேர்வுகளையும் தாண்டினால்தான் கல்லூரிக்குள் நுழைய முடியும்.*


*📌 கல்லூரிக்குள் நுழையவே ஒரு நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும்..*


*📌 18 வயதுவரை உள்ள அனைவரும் குழந்தைகள்தான்.*


*📌 12-ம் வகுப்பு மாணவன் 17 வயதுக்குள் இத்தனை தேர்வுகளை எழுதிதான் கல்லூரிக்குள் நுழைய முடியுமா?..வேண்டுமா???...*


*📌 நம் நாடு ஏழைகளை மட்டுமே கொண்ட ஒரு நாடு.*


*📌 இங்கே மூன்று வேளையில் ஒரு வேளை உணவு சாப்பிடாமல் தூங்கும் குடும்பங்கள்தான் அதிகம்.*


*📌 அவர்களின் குழந்தைகளை படிக்க பள்ளிக்கு அனுப்புவதே தங்கள் குழந்தைக்கு மதிய உணவு கிடைக்கும் என்றுதான்.*


*📌 அப்படிப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து ஊக்கப்படுத்த இலவச சீருடை, இலவச நோட்டு புத்தகம், இலவச லேப்டாப், இலவச சைக்கிள், இலவச செருப்பு,இலவச பஸ்பாஸ் என்று ஏறாலமாக கொடுத்ததுதான் நம் திராவிடம் கடந்த 50 வருடங்களாக கல்விக் கொள்கையில் சாதனைகள் செய்து வருகின்றன.*


*📌 அதைத்தான் தற்போது மாற்ற முயற்சிக்கின்றார்கள்.*


*📌 தங்கள் குழந்தைகள் தங்களை போன்றுஅல்லாமல்...*


*📌 படித்து பெரிய டாக்டராகவோ, கலெக்டராகவோ, வக்கீலாகவோ ஆக வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் கனவு.*


*📌 நிற்க!!.*


*📌 8-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடையும் ஒரு ஏழை மாணவன் தன் சக நண்பர்களால் கேலி செய்யப்பட்டால் அவன் மீண்டும் பள்ளிக்கு வராமல் போகலாம்.*


*📌 இருமுறைக்கு மேல் தோல்வியடைந்தால் பெற்றோரே பள்ளிக்கு அனுப்பாமல் தாங்கள் என்ன தொழில் செய்கின்றனரோ அதே வேளையை பார்க்க அழைத்துச் செல்வார்கள்.*


*📌 உதாரணமாக முடி வெட்டுபவரின் மகன் சலூன் கடைக்கு சென்று முடிவெட்ட கற்றுக் கொள்வான். பிறகு அந்த வயதில் கொஞ்சம் காசு பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.*


*📍 அதன் பிறகு அந்த குழந்தை படிப்பதை நிறுத்திவிடும். இதற்கு பெயர்தான் குலக்கல்வி என்று பெயர்.*📍


*📌 நம் நாட்டில் பெரும்பான்மையான ஏழைகள் சூத்திர பஞ்சமர்களே!!*


*📌 அவர்களின் குழந்தையின் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டால்...*


*📌 பிறகு கல்லூரிக்குச் செல்ல ஆள் இருக்க மாட்டார்கள்...*


*📌 அல்லது போட்டியாளர்கள் குறைக்கப்படுவார்கள்.*


*📌 இதன் மூலம் பணக்கார வர்க்கத்தின் உயர்சாதியினர் மட்டுமே படிக்க வாய்ப்புக் கிடைக்கும்.*




*📌 ஏற்கனவே கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் ஏழைகள் இனி கல்வி கற்கவே முடியாத நிலை ஏற்படும்.*


*📌 தரத்தை கூட்டுகின்றேன் என்று போட்டியாளர்களை குறைப்பதே அவர்களின் நோக்கம்..*


*📌 கற்கை நன்றே!..*
*கற்கை நன்றே!!..*
*பிச்சை புகினும் கற்கை நன்றே!!..*
*என்ற வார்த்தைகள் இனிவரும் காலங்களில் காணாமல் போகலாம்.*


*📌 ஏனெனில் இனிமேல் பிச்சையெடுத்தெல்லாம் கல்வி கட்டணம் நம் நாட்டில் செலுத்த முடியாது..*


*📍 ஏழையா பொறந்த உனக்கெதுக்குடா படிப்பு என்று அரசே கேள்வி கேட்பதுபோல் உள்ளது.!!*📍


*📌 எனக்கு ஐந்தாம் வகுப்புவரை ABCDEF யை தவிர ஆங்கிலத்தில் எதுவும் படிக்க தெரியாது.*


*📌 ஆனால்..*


*📌 பத்தாம் வகுப்பிலும் பன்னிரெண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றேன்.*


*📌 இன்று போல் ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதியிருந்தால்??....*


*📌 அன்றே என் பள்ளிப்படிப்பு முடிந்திருந்தாலும் முடிந்திருக்கலாம்.*


*📌 இதை ஏன் கூறுகின்றேன் என்றால் ஒரு குழந்தை 5 ம் வகுப்பில் படிக்காதது 8 ம் வகுப்பிலிருந்து நன்றாக படிக்கும் 8 ம் வகுப்பில் படிக்காத குழந்தை பத்தாம் வகுப்பில் நன்றாக படிக்கும்....*


*📌 எனவே...*


*📌 அவர்களை பிஞ்சிலேயே கல்வி கொள்கை( கொள்ளை ) என்ற பெயரில் கசக்கி பிழிவது சரியல்ல!!..*


*📌 அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே உள்ளது போல் 10,12 ம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தினால் போதும்.*

எவரோ ஒரு நண்பர் வாட்ஸ் அப்பில் அருமையாக எழுதி இருந்தார்! அது இதுதான்!

YozenBalki

செவ்வாய், 23 ஜூன், 2020

ஆற்றோடு கோபித்துக்கொண்டு கால் கழுவாமல் போனால்...!!


சென்னை என்றாலே இப்பொழுது பிற மாவட்டத்தை/மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பயப்படுகிறார்கள்; சென்னையை தூற்றி வேறு பேசுகிறார்கள்!

காரணம்... சென்னையில்தான் அதிக தொற்று என்று புள்ளிவிவரங்கள் காட்டப்படுகின்றன!

சென்னையை விட பலவகையிலும் நகர கட்டமைப்பு, மருத்துவ கட்டமைப்பு, கல்வி வேலைவாய்ப்பு வசதிகள், மற்றும் நாகரீகம் குறைந்த வடநாட்டு நகரங்களை விட சென்னையில் அதிக நோய்த்தொற்று இருக்கிறது என்கிறார்கள், இதை நம்ப முடிகிறதா? 

சரி அது அப்படியே இருப்பதாக நம்புவோம்! 
இங்கு இருப்பவர்கள் நூற்றுக்கு 80%-90% தமிழகத்தின் பிற  மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்! அப்புறம் எப்படி சென்னை மக்கள் மீது பழி போடுகிறீர்கள்?
சென்னை மக்கள் வானத்தில் இருந்தா குதித்தார்கள்?

சரி! அப்படிப்பட்ட சென்னையில் இன்று வசிப்பவர்களில் சென்னையைப் பூர்வீகமாக கொண்டவர்கள் எத்தனை சதவீதம்! 
இங்கு பத்தில் எட்டு பேர் முதல் ஒன்பது பேர் வரை பிற மாவட்டங்களிலிருந்து பிற மாநிலங்களிலிருந்து வந்து சேர்ந்தவர்கள்; சென்னையை பிறப்பிடமாகக் கொள்ளாதவர்கள்!
எல்லோரையும் வரவழைத்து வாழ்வு தந்தது, நாளைக்கும் வாழ்வு தர இருப்பது சென்னை எனும் அன்னை தான்! 

நீங்கள் மிகப்பெரிய அரசியல் தலைவராக இருக்கலாம்! நீங்கள் மிகப் பெரிய சினிமா நடிகராக இருக்கலாம்! வந்து சேர்ந்த உங்களில் 99% பேருக்கு சோறு போட்டது சென்னை!

அதை மறந்து விடாமல் சென்னை மீது ஒரு நன்றி உணர்ச்சியோடு பேசுங்கள்! 

வள்ளுவர் எழுதிய செய்நன்றி அறிதல் எனும் அதிகாரத்தை ஒருமுறையாவது படிக்கவும்!

நீங்கள் சென்னைக்கு வராவிட்டால்...
Ha! Ha! Ha!
"ஆற்றோடு கோபித்துக்கொண்டு கால் கழுவாமல் போனால்..."
யாருக்கு நட்டம் ஆகி விடும்?

உண்மையில், நீங்கள் நகர்ந்து நின்றால் கொஞ்சம் காற்று வரும்!

டாட்!!

YozenBalki
Senior Psychologist
😍😍🙏🙏

ஞாயிறு, 21 ஜூன், 2020

ஒரே காற்றில் மனித மீன்கள்!

சிரிப்பாய் இருக்கிறது
ரொம்பவே சிரிப்பாய்
இருக்கிறது!

தெருவில் வீட்டில் 
வசிக்கும் பூனைகள் 
நாய்கள் பறவைகள் 
நான்கு, மூன்று 
ஈரறி(வு) உயிர்கள் 
முகமூடி அணியாமல் 
நம்முன் வாழ்கையில் 
அவைமுன் னுயர்ந்த
மானுடம் கூனி
முடங்கிக் கிடைக்கையில்
சிரிப்பாய் இருக்குது!

















"ஒரே காற்றில் 
ஒரே கடலில் 
வாழும் மீன்களில் 
மனித மீன்கள்" 
மட்டுமே பாவம் 
இத்தனை மெலிவாய்
பூமியில் கிடந்து 
அல்லல் உறுவதை 
காண்கையில் எனக்கு 
வகை வகையாக 
சிரிப்பே வருகுது!

இராக்கெட் என்ன?
ஏவுகணை எ(ன்)ன?
கப்பல் விமானம் 
அறிவியல் என்ன?
எல்லாம் இருந்தும் 
இல்லா திருக்கும் 
நிம்மதி என்ன?
ஆறறிவு என்ன?

நாமே வளர்க்கும் 
நாய்களும் பழிக்கும் 
மூடிய கவசம்
முடியா முடக்கம் 
நீண்டிடும் பூமியில்
காதுகள் வழியாய்
நுழையா தொற்றை!!
நம்பிடும் பதர்களாய்
அரசர் அறிஞர்கள்
சாமிகள் சாமியார்
அனைவரை மிரட்டும்
ஓரணு உயிரியை
சிந்துபாத் கதையை
பார்க்கையில் எனக்கு
கழுதை சிரிப்பாய் 
சிரிப்பு வருகுது!

-பால்கி