Translate this blog to any language

வியாழன், 16 ஜூலை, 2026

உங்க ஊர் கோயில் சொத்துக்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

சில நாட்களுக்கு முன்பு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு ஒரு பக்தர் 1888 ஆம் ஆண்டு எழுதிக் கொடுத்த (கோயிலுக்கு அருகில் உள்ள) சுமார் 1.40 ஏக்கர் பரப்பளவு உள்ள கோயிலுக்கு சொந்தமாக்கி விட்ட நிலத்தை சில பேர் போலி பத்திரம் தயாரித்து விற்பது, வாங்குவது போல ஒரு போலி ரெஜிஸ்ட்ரேஷன் நடந்து விட்டது. 


அதுவும் வெறும் 2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது போல அதற்குரிய பத்திரங்கள் வாங்கி அந்த பழனி ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிசுக்கு ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக ரெஜிஸ்டரார் வந்து கையெழுத்து போடுகிறான். அவன் பெயர் ஜஸ்டிஸ் மணிகண்டன் என்கிறார்கள். ஏற்கனவே அங்க ரிஜிஸ்டரார் ஆக பணியில் இருக்கிறவர் மிரட்டப்பட்டோ அல்லது தந்திரமாகவோ லீவு எடுத்துகிட்டு போயிடுறாரு. 

இந்த ரிஜிஸ்டார்களுக்கெல்லாம் ஒரு தலைமையாக சசிகலா என்ற ஒரு பெண்மணி இதுக்கு கையெழுத்து போடுகிறார். 

எனக்கு என்ன கேள்வி என்றால் பக்தர்கள் நம்பிக்கையோடு தமிழ்நாடு முழுவதும் உள்ள பற்பல கோயில்களுக்கு எழுதிக் கொடுக்கிற நிலங்களை, நகைகளை, பணத்தை பாதுகாக்க வேண்டிய கோயில் நிர்வாகங்கள், பதிவுத்துறை, மற்றும் நீதிமன்றங்கள் எப்படி இதுபோல ஆளாளுக்கு பொறுப்பில்லாமல் இருக்கின்றன? 

அதுவுமில்லாமல் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை கீழே மட்டும் கிட்டத்தட்ட 44,000 கோயில்கள் இருக்கின்றன. அந்த கோயில்களுக்கு பக்தர்கள் எந்தெந்த ஊர்களில் என்னென்ன நிலங்களை எழுதிக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை! 

சென்னையைச் சேர்ந்த ஒருவர் கும்பகோணம் கோயிலில் ஏதோ ஒன்று வேண்டிக் கொண்டு அது நடந்து விட்டால் சென்னையில் இருக்கிற ஒரு வீட்டை அந்த கோயில் மீது எழுதி விடுவார். இப்போது கும்பகோணம் ஊரு பேரு தெரியாத ஒரு சிறிய கோயிலுக்கு சென்னையில் ஒரு சொத்து இருக்கிறது. இதுபோல நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

ஒருவர் வேலூரில் ஒரு சிறிய கோயிலில் வேண்டிக்கொள்கிறார். ஏதோ நல்ல விஷயம் நடக்கிறது. அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர். அந்த கோயிலுக்கு அவர் கள்ளக்குறிச்சியில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை எழுதி வைக்கிறார். 
இப்போது, வேலூர் கோவிலுக்கு கள்ளக்குறிச்சியில் இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது. 

இப்படி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்போ இந்த 44 ஆயிரம் கோயில்களுக்கு வெவ்வேறு ஊர்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருக்கும்! இது இல்லாமல் அறநிலையத்துறை கீழே வராத இன்னும் பல்லாயிரம் சின்ன சின்ன கோயில்கள் உள்ளன.
அந்த சொத்துக்கள் கதி எல்லாம் யாருக்கு தெரியும்?

ஆக, சாதாரண மக்கள் பக்தி சிரத்தையோடு கொடுத்த சிறிய கோவில் சொத்துகள் நில மாஃபியாக்களின் கைகளுக்குப் போய்விடக் கூடாது என்பதில் பொதுமக்கள் நாம் தான் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். ஒரு விழிப்புணர்வுள்ள குடிமகனாக, உங்கள் பகுதியில் உள்ள சிறிய கோவில் சொத்துகளைப் பாதுகாக்கப் பொதுமக்கள் தரப்பில் எடுக்க வேண்டிய மிக முக்கியமான 5 வித சட்டப்பூர்வ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதோ:

 1. கோவில் நிலத்தின் 22-A தடைப் பட்டியலைச் சரிபார்த்தல் (Online Check)
தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (tnreginet.gov.in) பிரிவு 22-A (Prohibited Properties) என்ற தடை செய்யப்பட்ட சொத்துகளின் பட்டியல் உள்ளது.

* பொதுமக்கள் அனைவரும் இணைந்து, உங்கள் பகுதி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தின் சர்வே எண்கள் (Survey Numbers) இந்தத் தடைப் பட்டியலில் ஏற்றப்பட்டுள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்க்க வேண்டும்.

* இதில் ஏறிவிட்டால், எந்தவொரு சார்-பதிவாளரும் அந்த நிலத்தைத் தனியாருக்குப் பதிவு செய்ய முடியாது. ஒருவேளை விடுபட்டிருந்தால், உடனடியாகக் கோவில் நிர்வாகம் மூலம் மனு அளிக்க வேண்டும்.

2. 'தர்ம சாசன' ஆவணங்களைப் புதுப்பித்து டிஜிட்டல் மயமாக்கல்
அந்தக் காலத்தில் தாத்தாக்கள் எழுதி வைத்த தர்ம சாசனம், பட்டா அல்லது உயில் நகல்கள் கிராமத்துப் பெரியவர்களிடம் அல்லது பூசாரிகளிடம் சாதாரண காகித வடிவில் இருக்கும்.

* அவற்றை உடனடியாகத் தகுந்த சட்ட வல்லுநர்கள் மூலம் சரிபார்த்து, நகல் எடுத்து, டிஜிட்டல் மயமாக்கி (Scan செய்து Computer-ல் சேமித்தல்) பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

* ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய உள்ளூர் வட்டாட்சியர் (Tahsildar) அலுவலகத்தில் அதன் தற்போதைய நிலவரப்படி 'சிட்டா மற்றும் அடங்கல்' நகல்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3. 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' (RTI) மூலம் சொத்து விவரங்களைக் கேளுங்கள்!

கோவில் நிலம் யார் ஆக்கிரமிப்பில் இருக்கிறது அல்லது அதன் தற்போதைய சட்டப்பூர்வ நிலை என்ன என்பது உள்ளூர் மக்களுக்குத் தெரியாமல் இருந்தால்...

* பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் RTI (Right to Information Act) மூலம் இந்து சமய அறநிலையத்துறை அல்லது உள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்து, "இந்தக் குறிப்பிட்ட கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் எத்தனை ஏக்கர்? அதன் சர்வே எண்கள் என்ன? அது தற்போது யார் வசம் உள்ளது?" என்ற அதிகாரப்பூர்வமான சான்றளிக்கப்பட்ட விவரங்களைக் கேட்டுப் பெறலாம். இதுவே நில மாஃபியாக்களுக்கு ஒரு பெரிய பயத்தை ஏற்படுத்தும்.

4. நிலத்தைச் சுற்றி எல்லைக் கற்கள் மற்றும் 'கோவில் சொத்து' போர்டு நடுதல்
சட்டம் ஒருபுறம் இருந்தாலும், நிலத்தின் மீது எதார்த்தமான உரிமை (Physical Possession) நம்மிடம் இருக்க வேண்டும்.

கிராம மக்கள் அல்லது கோவில் வழிபாட்டுக் குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து, கோவில் நிலத்தைச் சுற்றி முறைப்படி எல்லைக் கற்கள் (Boundary Stones) நட வேண்டும்.

"இந்த நிலம் இன்னாருக்குச் சொந்தமான திருக்கோவிலுக்குப் பாத்தியப்பட்டது. இதில் அத்துமீறி நுழைபவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பெரிய அறிவிப்புப் பலகையை (Board) நிலத்தின் மையப்பகுதியில் நட்டு வைக்க வேண்டும்.

5. உள்ளூர் 'ஆக்கிரமிப்பு தடுப்புக் குழு' (Vigilance Committee) அமைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு ஊரிலும் உள்ள இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை இணைத்து ஒரு சிறிய வாட்ஸ்அப் குழு அல்லது "கோவில் சொத்து பாதுகாப்புக் குழு" அமைக்கலாமே!

இந்த நிலத்தின் மீது ஏதேனும் மர்ம நபர்கள் வந்து சர்வே செய்கிறார்களா, அல்லது வேலி அமைக்க முயல்கிறார்களா என்பதை வாரம் ஒருமுறை கண்காணித்து வரவேண்டும்.

ஏதேனும் அத்துமீறல் தெரிந்தால், உடனடியாக உள்ளூர் காவல் நிலையம் மற்றும் அறநிலையத்துறைக்குக் கூட்டுப் புகார் (Joint Petition) அனுப்ப வேண்டும்.

பொதுமக்களாகிய நாம் கொடுக்கும் இந்த தொடர் அழுத்தமும், விழிப்புணர்வும் தான் நம் முன்னோர்கள் இறைவனுக்காகக் கொடுத்த சொத்துகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் உண்மையான அரணாக இருக்கும்.

Yozen Balki 🌿

16 July 2026
------------------------------
நேற்று நடந்த பழனி கோவில் நில மோசடி விவகாரத்திற்கு வருவோம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நாளை (ஜூலை 17, 2026) காலையுடன் முடிகிறது.

நாளை காலை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள், சிபிசிஐடி-யின் ஆதாரங்கள் மற்றும் புதிய கைது நடவடிக்கைகள் குறித்து நானும் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
........


சனி, 11 ஜூலை, 2026

கணவன் Logical... மனைவி Emotional : உளவியல் கதை

திருமணம் ஆகி பதினைந்து வருடங்கள்.

கார்த்திக் ஒரு Logic மனிதன்.
மீனா ஒரு Emotion மனிதி.
இருவரும் ஒருவரை ஒருவர் ரொம்ப நேசிப்பார்கள்.
ஆனால்...
அந்த அன்பை வெளிப்படுத்தும் முறை மட்டும் பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம்! 


ஒருநாள்...
மீனா புதுசா Hair Cut பண்ணிட்டு வந்தாள்.
"என்னங்க... ஏதாவது வித்தியாசமா தெரியுதா?"
கார்த்திக் ஒரு நிமிஷம் பார்த்தான்.
"ஆமாம்... இரண்டு Inch குறைஞ்சிருக்கு."

மீனா...
"அய்யோ... நான் என்ன கேட்டேன்... நீங்க என்ன பதில் சொல்றீங்க!"
மறுநாள்...
மீனா...
"நான் குண்டா ஆயிட்டேனா?"
கார்த்திக்...
"Last Year 62 Kilo... இப்ப 65.4."
மீனா...
"எனக்கு Weight கேட்கல... அழகா இருக்கேனான்னு கேட்டேன்!"
ஒரு நாள்...
மீனா அழுதுகொண்டிருந்தாள்.
கார்த்திக் பதறி...
"என்ன ஆச்சு?"
"ஒன்னும் இல்லை..."
"அப்புறம் ஏன் அழறே?"
"அதுதான் தெரியல..."
கார்த்திக்...
"காரணம் இல்லாமல் எப்படி அழ முடியும்?"
மீனா...
"அதான் உங்களுக்கு புரியாது!"


ஒரு நாள்...
மீனா...
"நீங்க என்னை Love பண்றீங்களா?"
கார்த்திக்...
"1998-ல Love சொன்னேன்.
2002-ல கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
இன்னும் வீட்டை விட்டு போகல.
EMI கட்டுறேன்.
Current Bill கட்டுறேன்.
இதுக்கு மேல Evidence வேணுமா?"


மீனா...
"ஒரு 'Love You' சொல்லிட்டா என்ன குறைஞ்சிடும்?"
ஒரு ஞாயிற்றுக்கிழமை...
மீனா...
"இன்று வெளியே போகலாமா?"
கார்த்திக்...
"எங்கே?"
"எங்கேயாவது..."
"Google Map-ல 'எங்கேயாவது'ன்னு Location வரலையே!"


Shopping போனார்கள்.
மீனா...
"இந்த Saree எப்படி இருக்கு?"
கார்த்திக்...
"வீட்ல ஏற்கனவே இதே Color-ல மூணு இருக்கு."
மீனா...
"அது Maroon.
இது Wine Red."
கார்த்திக்...
"எனக்கு ரெண்டுமே சிவப்பு."

ஒரு நாள்...
மீனா கோபமாக...
"நான் பேசுறதை நீங்க Feel பண்ணவே மாட்டீங்க!"
கார்த்திக் அமைதியாக...
"நான் Solution தேடுறேன்."
மீனா...
"எனக்கு Solution வேண்டாம்."
"அப்புறம்?"
"என்னோட பக்கம் உட்கார்ந்து... 'ஆமாம்... கஷ்டமாத்தான் இருக்கு'ன்னு சொல்லுங்க."
கார்த்திக்...
"அதனால் Problem Solve ஆகுமா?"
மீனா...
"ஆகட்டும்... ஆகாம இருக்கட்டும்... எனக்கு Husband வேணும்... Help Desk வேண்டாம்!"


ஒருநாள்...
இருவரும் ஒரு உளவியல் நிபுணரைச் சந்தித்தார்கள்.
அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்...
"உங்க மனைவி ஒரு பிரச்சனையைச் சொல்லும்போது..."
"அவங்க தீர்வு கேட்கல."
"அவங்க உணர்வை நீங்க புரிஞ்சுக்கணும்னு எதிர்பார்க்குறாங்க."
"நீங்க..."
"அவங்க பேச ஆரம்பிச்ச உடனே Repair செய்ய ஆரம்பிச்சுடுறீங்க!"
அதற்கு கார்த்திக்...
"அப்படின்னா நான் என்ன பண்ணணும்?"
உளவியல் நிபுணர் சிரித்தார்.

"முதல்ல ஐந்து நிமிஷம் கேளுங்க."
"ஆறாவது நிமிஷத்துல தான் Advice கொடுங்க."
அந்த நாளிலிருந்து...
மீனா பேசுவாள்.
கார்த்திக் அமைதியாக கேட்பார்.
ஐந்து நிமிடம் கழித்து...
"இப்ப Solution சொல்லட்டுமா?"
மீனா சிரிப்பாள்.
"இப்ப சொல்லுங்க... இப்பதான் Ready!"

சிறிய உளவியல் உண்மை
பல தம்பதிகளின் சண்டைக்குக் காரணம் அன்பு இல்லாதது அல்ல.
ஒருவர் பிரச்சனையைத் தீர்க்க பேசுகிறார்.
மற்றொருவர் தன் உணர்வைப் பகிர பேசுகிறார்.
இந்த இரண்டு மொழிகளும் வேறு என்பதைப் புரிந்துகொண்டால்...
வீட்டில் சண்டை குறையும்... சிரிப்பு அதிகரிக்கும்! 

(குறிப்பு: எல்லா கணவர்களும் இப்படித்தான், எல்லா மனைவிகளும் இப்படித்தான் என்று அர்த்தமில்லை. சில வீடுகளில் இதெல்லாம் தலைகீழாகவும் இருக்கும்! )

-Yozen Balki 
Senior Psychologist 

www.yozenmind.com
💢🌿💢

Note: 

Left Brain Traits: Analytical, logical, linear, mathematical, and verbal.

Right Brain Traits: Intuitive, emotional, creative, artistic, and visual.