Translate this blog to any language

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

இட ஒதுக்கீடு என்பது நீதியா அநீதியா? பொருளாதார அளவுகோல் சரியா?

💛💚❤💚💛💜❤💚💙

உலகில் வேறெங்கும் காணப்படாத ஒரு மாபெரும் அநீதி இந்தியாவில் இன்றும் உண்டு! அது என்னவென்றால் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தில் பிறப்பதனால் குத்தப்படும் "பிறப்பின் அடிப்படையிலான சாதி முத்திரையே ஆகும்!"



இந்த நாட்டில் மட்டுமே ஒருவனின் கல்விப் பெருமையினாலோ அல்லது அவனது நன்னடைத்தை பற்றியோ அன்றி, இன்ன சாதித் தந்தைக்கு பிறப்பதினாலேயே ஒரு குழந்தை பிறப்பிலேயே உயர்ந்த சாதிக் குழந்தையாக மதிக்கப்படுவது, அல்லது பிறப்பின் அடிப்படையிலேயே "தீண்டத்தகாத சாதி குழந்தையாக ஒதுக்கப்படுவது", எனும் அவலம் ஆயிரம் ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றது! 

அப்படி குழந்தை பருவத்திலேயே முக்கியமாக பள்ளிப் பருவத்தில், பிற மாணவர்களால் ஆசிரியர்களால், சாதி அடிப்படையில் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கப்பட்டவரே டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் ஆவர்!


ஆதி தமிழர்களுக்கு பிறவியின் அடிப்படையிலான சாதிமுறை இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் இல்லை! தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பழைய இலக்கிய நூல்கள் வழியாகவும் திராவிட சிந்து சமவெளி நாகரிகம், தமிழக கீழடி நாகரிகம் போன்ற புதைபொருள் ஆராய்ச்சியின் வழியாகவும் ஆய்வு செய்தபோது தமிழர்களின் சாதியற்ற சமுதாயம் தெரியவந்தது!