Translate this blog to any language

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

வரி மேல் வரி போட்டு சாகடிக்கிறீங்க?

பொதுமக்கள் நாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதம் income tax தருகிறோம் (அரசுக்கு). மீதி சம்பளத்தில் (28 சதவீதம் GST என வாங்கும் பொருளுக்கு கட்டுகிறோம். பெட்ரோல் மற்றும் பல பொருட்கள் GST யில் சேர்க்காமல் 60 சதவீதத்திற்கும் மேல் TAX கட்டுகிறோம். 

மொத்தத்தில் சராசரி 50 சதவீதம் வாங்கும் பொருளுக்கும் உங்களிடமே (அரசுக்கு) வரி வருவாய் தருகிறோம்.

ஆக 30+50= 80 சதவீத வருமானத்தை உங்கள்(அரசு) கஜானாவில் சேர்த்துள்ள எங்களைப் பார்த்து

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ? என கேட்பவர்கள் கவனிக்க!

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்
செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….!
(நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! )

சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில்
பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான
மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின்
ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும்.
இன்னும் அதிகம் பேர்" தமது மான்யத்தை தியாகம் செய்ய ”
முன் வரவேண்டும்” என்றார்.

சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். 

“நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்”
என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம் அமைந்திருக்கிறது…. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி
வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்களேன்
என்று கேட்டிருக்கிறார்…

அந்த கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில்
அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும்
உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்….

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு –

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக் கொடுக்க
முன்வர வேண்டுமென்று,
வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,
என் செலவிலேயே – வேண்டி, விரும்பி
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!

– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே, அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை
உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும்- ஒருமித்த குரலில் ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி
நிறைவேற்றி கொள்கிறீர்கள் …?

– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை - எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் என்று 
காண்பது …?

– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி
ஏஞ்சலா மெர்கெல் -தன் அலுவலகத்திற்கு பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –

– கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்த இந்தியத் திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு பயணிப்பது எப்படி …?

– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பது உங்கள்
நினைவிற்கு வருவதே இல்லையா …?

– நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும்
தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும் பயணப்படுவதற்காக – உருப்படியான வேலை எதுவும் இல்லாமல், சும்மாவே ஊர்சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக 
எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரியாகக் கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் நினைத்துப்
பார்த்திருக்கிறீர்களா ?

– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமென்று குடிமக்களாகிய நாங்கள்
எதிர்பார்க்கலாமா …?
– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவ மனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. உங்கள் சக இந்தியர்கள் எத்தனை பேர் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல்
தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா …?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்தக்காசில் செய்துக்
கொள்ளும் நாள் என்றாவது வருமா…. ?

– அப்படி என்ன தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு Z என்றும் Z+ என்றும் சொல்லிக் கொண்டு உங்கள் மந்திரிகள்? திரிகிறார்கள்!
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரியிலிருந்து வருவது தானே ?

– இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்று மாறும் …?

– சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கே பற்றாமல் 
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின் நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –

– உங்களுக்கு ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள் …?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே….
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லையே
என்றா இந்த மலிவு விலை ….?

– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன் தான்
காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை என்றுமே உறுத்தவில்லையா ?

– நாங்கள் செலுத்தும் வரிகள் தான் எத்தனையெத்தனை …

Income tax,
Service Tax,
Professional Tax,
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Automobile Registration Tax 
Entertainment tax
Property Tax – etc etc.

சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக் கொள்ளும்
இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வசூல்
செய்யப்படுகிறது…?

உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம்
கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக் கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் வருமா …?

இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – என்றைக்கு,
உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள
இந்த சலுகைகள் அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறீர்களோ –

அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை 
நீங்கள் கோராமலேயே நாங்கள் அனைவரும் அவசியம் விட்டுக் கொடுப்போம்…!!! 
                   
🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
WhatsApp இல் வந்தது இது!

இச்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம், 
நன்றி !!    

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

நாங்குநேரி பள்ளிக்கூட ஜாதீய அரிவாள் வெட்டு;

சமீபத்தில் தமிழகத்தில் "நாங்குநேரியில்" ஒரு தலித் பள்ளிக்கூட மாணவனை வேறு சமூகத்தை சார்ந்த மூன்று மாணவர்கள், வீடு புகுந்து சரமாரியாக கத்தியால் வெட்டி இருக்கிறார்கள்! 

 வயது முதிர்ந்தவர்களிடம் தமிழகத்தில் ஓரளவுக்கு இருந்து வந்த ஜாதிப் பிரிவினை வெறுப்பு இன்று பள்ளிக் குழந்தைகள் வரை இறங்கி வந்திருக்கிறது!

அதற்குக் காரணம் என்ன? 

கிராமங்களில் நிலை பெற்று வாழும் இடங்களில் ஊரும் சேரியும் தனித்தனியாக இருக்கின்றன! ஊர் மாறும் பொழுது ஜாதிப் பெருமை பேசுவது ஒழிந்து போய் விடுகிறது!

அது, சமீப காலமாக குறிப்பாக தந்தை பெரியாரின் மறைவுக்குப் பின்னால் அரசியல் பொதுக்கூட்டங்களில் ஜாதிக் கட்சி தலைவர்கள் பலரும் ஆளாளுக்கு தங்களுக்கான ஓட்டு வங்கியை தக்க வைத்துக்கொள்ள பேசி வரும் "ஷத்திரிய வீரம்" பற்றிய பேச்சுகளே ஆகும்! 

அது ஒரு விதமான தவறான வீண் பெருமையை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மனதில் விதைத்து அவர்களை ஒரு ஜாதீய வெறி பிடித்த தீவிரவாதிகளாக மாற்றுகிறது! அவர்கள் இனி கல்வியில் கவனம் செலுத்த மாட்டார்கள்; ஒரு தலைவனுக்கு அடிமையாக ஜாதிப் பெருமை மட்டும் பேசிக் கொண்டு திரிந்து கல்வி வேலைவாய்ப்பு மீது கவனம் செலுத்தாமல் சீரழிந்து போவார்கள்!

நீங்கள் ஒன்றை கூர்மையாக கவனித்து பார்த்திருக்கிறீர்களா? காதல் திருமணங்களையும், சாதி மறுப்பு திருமணங்களையும் இந்தியாவிலேயே ஒரு கொள்கை ரீதியாக ஒரு தொடர்ந்த வேலைத் திட்டமாக தந்தை பெரியார் துவங்கி வைத்த திராவிடர் இயக்கங்கள் மட்டுமே தொடர்ந்து செய்து வந்தன/ வருகின்றன/ வரும்! 

ஏனென்றால், வெறும் கல்வி அறிவு வழியாக மட்டுமே ஒரு அடிப்படை சமூகப் புரட்சியைச் செய்துவிட முடியாது!

அதற்கு ஒரு தொடர்ந்த உயர்நோக்கம் உள்ள சமூகத் தொண்டு, இடையறாமல் நடைபெற வேண்டும்! அதனால் தான் அம்பேத்கர் இயக்கங்கள், வெறும் ஓட்டு அரசியல் மட்டும் பேசிக் கொண்டு வடக்கில் படுதோல்வி அடைந்து விட்டன!

ஈராயிரம் வருடத்திற்கு மேலான இறுக்கமான சாதி அமைப்பு, கொஞ்சமாவது தளர்ந்து இன்று நமது தமிழகத்தில் இயங்கும் பற்பல திருமண பதிவு மையங்களில் "எந்த சாதியானாலும் பரவாயில்லை!" என்று பேசும் நிலை தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது! 

அதற்கு மூல காரணம் பெரியார் இயக்கங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும், சொல்ல போனால் அத்தகு சாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு தரும் சாதி மறுப்பு திருமணங்கள் தாம்!

ஆனால் நமக்கு கொஞ்சம் கெட்ட காலமாக, வன்னியர் கட்சி (பா.ம.க) ராமதாஸ், புதிய தமிழகம் கிருஷ்ணமூர்த்தி போன்ற ஜாதிக்கட்சி ஆட்களால் தமிழகத்தில் சாதியின் இறுக்கம் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது! 

அது ஆரிய பார்ப்பன பாஜகவுக்கு குதூகலம் ஏற்படுத்தியுள்ளது! ஆரிய பாஜகவுக்கும் ஜாதி கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைந்த நன்மைகள் இருக்கின்றனவே!

மேலும் பார்ப்பனீய சனாதன சாதிக் கட்சிகளை பாஜகவினர் உள்ளே கொண்டு வந்து வடநாடு போல தமிழ்நாட்டை துர்நாற்றம் வீசும் வர்ணாஸ்ரம சாக்கடையாக மாற்றத் துடிக்கிறார்கள்!

ஆனாலும் நாம் அந்த சாதி அமைப்பை, உயர் கல்வி மற்றும் பெரியாரிய தொடர் பரப்புரைகள் வழியாக உடைத்தெறிந்து ஒரு சமத்துவ சமூகத்தை தமிழ்நாட்டில் உருவாக்க முடியும்! அது ஒன்றே வழி!

சரி! அதை, பெரியார் இயக்கங்கள் துணை இன்றி வெறும் அம்பேத்கர் இயக்கங்கள் வழியாக செய்ய முடியுமா என்றால் நிச்சயம் முடியாது! காரணம் அம்பேத்கர் இயக்கம் என்று வரும் பொழுது அது தலித்துகள் பெரும்பான்மை பங்கு வகிப்பது தானே என்று உயர் தட்டு வர்க்கம் சட்டென வெறுப்பு கொள்கிறது! 

அதில் கலந்து பெரும்பான்மைச் சமூகம் எவரும் பங்களிப்புச் செய்ய முன் வருவதில்லை! (Don't say about Exceptions. Exceptions cannot be a Rule)

ஏழைகள் பேசும் கம்யூனிசத்தை பணக்காரர்கள் எப்படி ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ, அப்படியே சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் பேசும் சமத்துவ நெறியை உயர் வகுப்பினர் என்று தம்மைக் கருதுபவர்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள்!

அங்குதான் அனைத்து சமூக மக்களும் கலந்து பங்களிக்கும் தந்தை பெரியாரின் இயக்கங்கள் நமக்கு ஒரு நம்பிக்கை ஊட்டுகின்றன! ஒரு சமரசம் இன்றி செயல்பட்டவாறு தொடர்ந்த சமூக மாற்றத்தை அவை ஏற்படுத்தி வருகின்றன! 

சொல்லப் போனால், இந்தியாவின் பிற மாநிலங்களிலேயே தமிழகத்தில் மட்டும் தான் சாதி மறுப்பு திருமணங்களுக்கு 95% அளவுக்கேனும் சட்டப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளது! சங்க காலம் போல காதல் மனம் தான் ஜாதியை ஒழிக்கும் சிறந்த துணையாகும்! 

அதைப் புரிந்து கொண்ட ஜாதி வெறியர்கள் காதல் மணத்துக்கும் இப்போது தடையாக இருந்து அவர்களைக் கொலை செய்யும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்! அங்கு சாதி ஓட்டு வாங்கி பிழைக்கும் அரசியல் கட்சிகள் மவுனம் சாதிக்கும் நிலை ஏற்படுகிறது!

ஆனாலும், இங்கு ஓட்டு கேட்கும் அரசியல் கட்சியாக இல்லாமல் வெறும் சமுதாய இயக்கமாக செயல்படுகின்ற தலைவர்களைக் கொண்ட பெரியார் இயக்கங்கள் உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அதிகம் காணப்படுகின்றன! 

அதுவே தந்தை பெரியார் மீது நாம் வைக்கும் பெருமதிப்பிற்கு இன்னும் ஆழமான காரணமாக அமைந்து விடுகிறது!

தந்தை பெரியார் ஆரம்பித்த திராவிடர் கழகத்தை இன்று வரை வழி நடத்தும் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், தோழர் கோவை கு. ராமகிருஷ்ணன், தோழர் கொளத்தூர் மணி அவர்கள், மே 17 இயக்க தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் போன்றோர் எந்தவித சிறு சுயநலமும் இல்லாமல் தொடர் பரப்புரை செய்கிறார்கள்! அவர்கள் பேசுகின்ற நடத்துகின்ற, தமிழ் மக்களை பண்படுத்தி வரும் சமூகப் புரட்சிதான் என்ன என்பதை சற்று நிதானமாக நாம் படித்தால் அதன் வீரியத்தை அதனால் நாம் பெற்றுவரும் நற்பலனை நன்கு உணரலாம்!

அது புரிய வேண்டும் என்றால் பிற மாநிலத்து சாதி மறுப்பு இணையர்கள் தமிழ்நாட்டில் வந்து அடைக்கலம் புகுந்து திருமணம் செய்து கொள்வது ஏன் என்றும் நமக்கு எளிதாகப் புரியும்!

ஆக, இங்கு கடைசியாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், இந்தியாவில் ஒரு சமத்துவ சமூகம், சாதியற்ற சமூகம் உருவாக வேண்டும் என்றால் தந்தை பெரியாரின் கொள்கைகள் பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்!

சனாதன அதர்மத்தை, அது ஏற்படுத்திய ஜாதியை ஒழிக்க பெரியாரின்  கொள்கைகள் என்னும் படைக்கலன்கள் தான் முக்கிய பங்கு வகிக்க முடியும்! அவை மட்டுமே ஒழிக்கும் கருவிகளாக செயல்படும்! அதற்கு மாறாக கல்வி கற்பது மட்டுமே போதும், ஜாதியை ஒழித்து விடலாம் என்ற அம்பேத்கர் வழியில் சென்றால் அது வெறும் கேடயத்தை தூக்கிக்கொண்டு போருக்கு செல்வது போன்றதாகும்!

கேடயங்கள் வெறும் தற்காப்பு வேலைகளுக்கு பயன்படுகின்றன; அது முன்னேறிச் சென்று தீமைகளை அழிக்க பயன்படாது!

கேடயத்தினால் பெரும் பயனேதும் கிட்டி விடாது! அதையே நாம் நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

ஆனால், படைக்கலன்கள் என்பன சமூகத் தீமைகளை, சாதீய கட்டுமானங்களை, நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை எல்லாம் ஒழிக்கும் கருவிகளாக செயல்படும் சக்தி மிக்கவை!

ஆகவே தந்தைப் பெரியாரைப் புறம் தள்ளிவிட்டு இந்தியாவில் ஒரு பெரிய சமூக புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று சில பல தலைவர்கள் நினைப்பதும் பேசுவதும் வெறும் பகல் கனவே ஆகும்! 

நான் சொல்வதை நீங்கள் யோசித்துப் பாருங்கள்!

-YozenBalki 

💫💫💫💫