Translate this blog to any language

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

பாதி தமிழ்நிலம் போனது கொள்ளை; மீதி இருப்பதும் சொல்வதற்கில்லை!!

இது எனதொரு பழங்கவிதை! அது என் எழுத்து வடிவத்திலேயே இருக்கட்டுமே என்று இந்த வலைப்பூவில் தற்சமயம் போட்டிருக்கிறேன்!

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு எழுதியது! இப்பொழுதோ, தமிழினத்தின் நிலை இன்னும் மோசமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது!

நம் கல்வி, வேலைவாய்ப்பு, நமது வாழ்விடங்களை காப்பாற்றுதல்.. முக்கியமாக எல்லா வியாபாரங்களையும் தமிழினத்துக்கு கீழே கொண்டு வருதல், போன்றவை இங்கு நடவாமல் நமக்கு பொருளாதார முன்னேற்றம் இருக்காது!

எந்த ஒரு இனம் விவசாயம் மற்றும் கைத்தொழில்களைச் செய்யாமல் அதில் கிடைக்கும் உற்பத்திப் பொருட்களை வெறுமனே "இந்த கைக்கு அந்த கை" மாற்றி வியாபாரம் செய்து வருகிறதோ அந்த இனம்தான் மிக விரைவாக வளர்ச்சி பெறும்! அதில் வரும் (Exponential Income) அபரிமிதமான வருவாய் வழியாகத்தான் எல்லா நிலங்களையும் வட ஹிந்தியர்கள் தமிழகத்தில் வாங்கி போட்டுக் கொண்டே வருகிறார்கள்!

இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய விளை நிலங்கள் மற்றும் வாழ்விடங்கள் எல்லாமே வட ஹிந்திய குஜராத்தி மார்வாடிகளுக்கு கை மாறிவிடும் ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது! பிறகு ஈழத் தமிழர்கள் நாடிலியாக அகதிகளாக உலகம் முழுவதும் சென்று அல்லாடும் கதைதான் நமக்கும்!

இதன் விளைவுகளை உணராமல் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இருந்து வருவது மிகப்பெரும் வருத்தமாக இருக்கிறது!

-YozenBalki





-YozenBalki