Translate this blog to any language

புதன், 21 மார்ச், 2012

Chennai: Bullock-Cart Roads & Exploding Multitudes: சென்னை: கோச் வண்டி சாலைகள்-விரியும் நெரிசல்!



குண்டூஸ்: என்ன மாமா! வரவர சீக்கிரமா வீட்டிலே இருந்து கிளம்புறீங்க, ரொம்ப லேட்டா வீட்டுக்கு வர்றீங்க..போற போக்கே சரியில்லையே! அக்கா கிட்ட போட்டு கொடுக்கவா? 

மாமா: டேய் குரங்கு குண்டூஸ்! ஏற்கனவே நிலைமை சரியில்ல! நீ வேற எண்ணெய் ஊத்தாதே!
உனக்கு வேண்டியதெல்லாம் அப்பப்ப வாங்கி தர்றேன் இல்ல...என்னைய சொல்லணும்!

குண்டூஸ்: கோச்சிக்காதீங்க மாமா! உங்கள பாத்தா பாவமா இருக்கு! போறப்போ நல்லாத்தான் போறீங்க, ஆனா வரும்போது மழையில நனைஞ்ச கோழிக்குஞ்சு மாதிரி வீட்டுக்கு வறீங்களேன்னு வாஞ்சையா கேட்டா உங்களுக்கு அது தப்பாப் படுது!

மாமா: நீ சொல்றது சரிதாண்டா! வர வர இந்த சென்னை போற போக்கே சரியில்லை. முன்னெல்லாம் கால்மணி நேரத்துல போன ஊருக்கு இப்பல்லாம் ஒரு மணி நேரம் தேவைப் படுது. அவ்வளவு மோசமான டிராபிக் நெரிசல்! போலிஸ் காரங்க பாடு அதை விட திண்டாட்டம்! ஊர்ல இருக்கிற புகை-தூசு எல்லாமே அவங்க தான் எட்டுமணி நேரம் சுவாசிக்கிறாங்க! தெருக்களும் இப்ப வர வர மோசமாத்தான் ஆகிகிட்டு வருதே தவிர ஒரு புண்ணாக்கு முன்னேற்றமும் இல்ல. அதான் வீடு வர்றதுக்குள்ள ரொம்ப ரொம்ப சோர்வா ஆயிடுதுடா!

குண்டூஸ்: மாமா!  நீங்க டிராபிக் இல்லாத தெருவுக்குள்ள புகுந்து புகுந்து போக வேண்டியது தானே! எதுக்கு மெயின் ரோடாவே போகணும்? உங்களுக்கு ஷார்ட்-கட் தெரியல?



மாமா: போடா மாங்கா மடையா! அது எனக்குத் தெரியாதா? நாலு தலை முறை சென்னைவாசி நான்...எனக்கே நீ ஐடியா சொல்லித் தர்றியா? நான் போடற 'ஷார்ட்-கட்'..."குறுக்கு-வழிக் கணக்கை" வேற எவனும்....(Contd..)


செவ்வாய், 20 மார்ச், 2012

Can my Tamil-Culture & Morals be managed? கரை-உடையும் நம் தமிழ் கலாசாரம்: மீட்க என்ன வழி?

 
குண்டூஸ்: தாத்தா! நம்ம தமிழ் பேச்சாளர்கள் எல்லாம் கலாசாரம்...கலாச்சாரம்-ங்கறாங்களே. அப்பிடின்னா என்ன தாத்தா?

தாத்தா: கண்ணா...! அந்தந்த ஊர் மண்ணுக்குன்னு ஒரு குணம் இருக்கும் இல்லையா...தட்ப வெப்பம், சூழல் சார்ந்து சில பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் உருவாகும் இல்லையா? அதுக்குப் பேரு தான் கலாசாரம்ன்னு சொல்லுவாங்க! 

குண்டூஸ்: புரியல தாத்தா! விளக்கமாத்தான் சொல்லுங்களேன்!

தாத்தா: இப்பப் பாரேன்! காஷ்மீர் ரோஜா இங்க விளையாது..ஐரோப்பிய செர்ரி மரங்களும் இங்கே வளராது! அதே மாதிரிதான் நம்ம ஊர் பொன்னி நெல்லு மேல் நாடுகளில் விளையாது. அதே மாதிரி, ஐரோப்பிய குளிர் காலமும் அதற்க்கு அவங்க அணியும் உடைகளும் பற்றி நமக்குத் தெரியாது. அதே போல் இங்குள்ள சித்திரை வெயிலை வெள்ளையர்களால் தாக்குப் பிடிக்கவும் முடியாது. அந்த வெயிலுக்கு நாம போட்டுக்குற மெல்லிய பருத்தி-குறைந்த அளவான ஆடைகள்  பற்றியும் ....(Contd..)