Translate this blog to any language

வியாழன், 22 டிசம்பர், 2022

முதுமையைத் தள்ளிப்போட தினந்தோறும் நடை பயிற்சி செய்யுங்கள்

_முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!
      _*நடக்காத*_ _*ஒவ்வொரு நாளும்* _*உங்களை*_ _*வயதானவராக ஆக்கிக் கொண்டே*_
_*போகும்.*_

உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !! 
Keep your Legs Active and Strong !!!

 தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, ​​நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து வயதாகும்போது, ​​நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.

 * *நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை "வருமுன் தடுப்பு" (prevention) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள் அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. 
* தயவுசெய்து தினமும் நடந்து செல்லுங்கள். 

உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும். 
_*நடந்து செல்லுங்கள்*_ 

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் *செயலற்ற நிலையில் இருந்தால் கால் தசை வலிமை *மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!
 _*எனவே நடந்து செல்லுங்கள்*_ 

கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், *நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது *

. நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது. 
* *கால்கள் ஒரு வகையான தூண்கள் *, மனித உடலின் முழு எடையையும் தாங்கும். 
_*தினமும் நடைபயிற்சி.*_
 
சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன. 
_*நடந்து செல்லுங்கள்*_ 

மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.

 _*10,000 அடிகள் / நாள்*_
  வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின் 
*இரும்பு முக்கோணத்தை உருவாக்கி
  மனித உடலைச் சுமக்கிறது. *

 * ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?
 ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, ​​அவருடைய/ *தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை! * 
*கால் உடல் நடமாட்டத்தின்(locomotion) மையம் *.

 இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். _*எனவே தினமும் நடந்து செல்லுங்கள்.*_

 * கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள். 

ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, ​​மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.
_*தயவுசெய்து நடந்து செல்லுங்கள்*_

 கூடுதலாக, எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுவது விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும், இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள்.
 _*நடங்கள்.*_

வயதானவர்களில் எலும்பு முறிவுகள் தொடர்ச்சியான சிக்கல்களைத் தூண்டும், குறிப்பாக மூளை த்ரோம்போசிஸ் போன்ற ஆபத்தான நோய்கள். 

பொதுவாக வயதான நோயாளிகளில் 15%, தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள் இறந்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 
_*தவறாமல் தினமும் நடந்து செல்லுங்கள்*_ 

▪️ *கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, 60 வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல. * நம் கால்கள் படிப்படியாக வயதாகிவிட்டாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது வாழ்நாள் முழுவதும் வேலை. 

_*10,000 அடிகள் நடக்க*_
 எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். 

_*365 நாட்கள் நடைபயிற்சி*_ 
உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவுசெய்து தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடக்க வேண்டும். 

_*இந்த முக்கியமான தகவலை உங்கள் 40 வயது கடந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டும், ஏனெனில் ஒவ்வொருவரும் தினமும் வயதாகி வருகிறார்கள்*_ ‍🚶🏻‍♂️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻

-Whatsapp University 

புதன், 21 டிசம்பர், 2022

நன்றி Gratitude பற்றி ஹீலர் பாஸ்கர் சொல்கிறார்!

பிறரால் நமக்கு ஒரு உதவி அல்லது நன்மை கிடைத்தால், அதை ஞாபகம் 
வைத்து, நமக்கு உதவி செய்த அந்த நபருக்கு நம் கடமை பட்டிருக்கிறோம் என்று உணரும் தன்மைக்குப் பெயர் நன்றி உணர்வு.

நாம் மட்டும் எப்பொழுதுமே மற்றவர்களிடம் நன்றி உணர்வை எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் மற்றவர்களுக்கு நன்றி உணர்வோடு இருக்கிறோமா என்பதை கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

நன்றி 7 வகைப்படும்.

1. வாய் நன்றி
2. மன நன்றி
3. உணர்ச்சி நன்றி
4. மன வாய் நன்றி
5. மன வாய் உணர்ச்சி நன்றி
6. நடிப்பு நன்றி
7. கடமை நன்றி

1. சிலர் நன்றி என்று வாயால் கூறுவார்கள். ஆனால் மனதில் நன்றி உணர்வு இருக்கவே இருக்காது. இது வாய் நன்றி. 

2. சிலர் மனதில் நன்றி உணர்வு இருக்கும். ஆனால் வாயை திறந்து சொல்லவே மாட்டார்கள். இது மன நின்றி.

3. சிலர் நன்றி உணர்வை, உணர்ச்சி மூலமாக தெரிவிப்பார். அவர்களுக்கு வார்த்தைகளால் சொல்லத் தெரியாது / முடியாது/ வழக்கம் இருக்காது. எனவே உடல் அசைவு / கண்கள் கண்ணீர் / எமோஷனல் மூலம் அவர்கள் வெளிப்படுத்துவார்கள். இதற்கு உணர்ச்சி நன்றி என்று பெயர். உதாரணம் குழந்தைகள்.

4. சிலர் நன்றி உணர்வு மனதுக்குள் இருக்கும். அதே சமயம் வார்த்தைகளால் சொல்வார்கள். இதற்கு மன - வாய் நன்றி என்று பெயர். 

5. சிலருக்கு நன்றி உணர்வு மனதுக்குள் இருக்கும். அதேசமயம் உணர்ச்சியாகவும் வெளிப்படுத்துவார்கள். அதே சமயம் வார்த்தைகளால் வெளிப்படுத்துவார்கள். இதற்கு மன - வாய் - உணர்ச்சி நன்றி என்று பெயர். இது மிக மிக மிக சிறந்த குணம்.

இருப்பதிலேயே இந்த குணம் தான் மிக மிக சிறந்தது. தயவுசெய்து இதுபோல் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

6. சிலர் ஆதாயத்திற்காக நன்றி உள்ளது போல் நடிப்பார்கள். இவர்களுக்கு மனதில் நன்றி உணர்வு இருக்காது. ஆனால் வாய் மூலமாக நன்றி சொல்வார்கள். சிலர் உணர்ச்சியை கூட நடிப்பால் காட்டுவார்கள். இவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். இதற்கு நடிப்பு நன்றி அல்லது போலி நன்றி என்று பெயர்.

7. விமானத்தில் பயணம் செய்து இறங்கும் பொழுது பணிப்பெண் உங்களிடம் நன்றி கூறுவார்கள். இது கடமை நன்றி. 

வியாபாரத்தில் / கஸ்டமர் கேரில் / ஹோட்டல் ரிசப்ஷனில் / OFFICIAL MEETING ல் / அரசியலுக்காக / வாங்கும் சம்பளத்திற்காக. ECT.... நன்றி கூறுவது கடமை நன்றி என்று பெயர். OFFICIAL THANKS.

குறிப்பு : 

1. வாயில் மட்டும் நன்றி சொல்லும் நபர்கள். தயவு செய்து இனிமேல் மனதிலும் நன்றியை உணர்வதற்கு முயற்சி செய்யுங்கள். உணர்ச்சி மூலமாகவும் நன்றியை தெரிவிக்க முயற்சி செய்யுங்கள்.

2. மனதிற்குள் மற்றும் நன்றி சொல்லும் நபர்கள். தயவு செய்து இனிமேல் வார்த்தைகளால் மற்றவர்களுக்கு சொல்லுங்கள். அப்பொழுதுதான் மற்றவர்கள் உங்களிடம் நன்றி உணர்வு இருக்கிறது என்று புரிந்து கொள்வார்கள். 

நீங்கள் வாயைத் திறந்து நன்றி சொல்லவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நபர் உங்களுக்கு நன்றி உணர்வு இல்லை என்று தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

3. மனதிலும், உணர்விலும், உணர்ச்சியிலும், வார்த்தைகளிலும் நன்றி சொல்லும் நபர்கள் பெருமைப்படுங்கள். நீங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள்.

4. தயவுசெய்து நன்றி உணர்வை போலியாக, நடிப்பாக பயன்படுத்தாதீர்கள். இது கேவலம். 

இது போன்ற நபர்களிடம் தயவு செய்து உஷாராக இருங்கள். போலியாக நன்றி சொல்லும் நபரை நம்பாதீர்கள். எந்த நேரத்திலும் நம்மை கவுத்து விடுவார்கள்.

5. கடமைக்காக நன்றி சொல்லும் நபர்கள் இனிமேல் அதை மனதார சொல்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

6. நமக்கு யாராவது உதவி செய்தால்தான் நன்றி சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவர் தன் கடமையை செய்தால் கூட நன்றி சொல்லலாம். ஏன் நமக்கு உபத்திரவம் செய்யாத நபருக்கு கூட நன்றி சொல்லலாம். உதாரணமாக மருத்துவர் / செவிலியர் / பேருந்து ஓட்டுனர் / ஆட்டோ ஓட்டுனர் / சர்வர் / கடைக்காரர் /பிளம்பர் / எலக்ட்ரீசியன் / அரசாங்க அதிகாரிகள் / நண்பர்கள்/ குடும்ப உறுப்பினர்கள் / சோந்த காரர்கள் / சக ஊழியர்கள் / குப்பை அள்ளுபவர்கள்/ உங்கள் வீட்டு வேலைக்காரர். இவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

நம் வீட்டு வேலைக்காரருக்கு சம்பளம் கொடுக்கிறோம் பிறகு எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்க கூடாது. அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

பணம் கொடுத்து தானே பயணம் செய்கிறோம்!! பின்னர், ஓட்டுநருக்கு எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கேட்கக் கூடாது. பேருந்தில் இருந்து இறங்கும்பொழுது ஓட்டுனருக்கு அவர் செய்த கடமைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஆட்டோவில் பயணம் செய்தால் ஆட்டோ டிரைவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகு சமைத்த அம்மாவுக்கு அல்லது மனைவிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

எந்த எந்த இடத்தில் முடியுமோ எல்லா இடங்களிலும் நன்றி சொல்ல வேண்டும்.

சம்பளம் வாங்கும் போதெல்லாம் தொழிலாளி முதலாளிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

சம்பளம் கொடுக்கும் போதெல்லாம் தொழிலாளிக்கு முதலாளி நன்றி சொல்ல வேண்டும்.

நாம் இப்பொழுது உயிரோடு இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி உணர்வு என்பது ஒரு அருமையான குணம்.

இது எந்த அளவுக்கு நம்மிடம் உள்ளதோ நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். படுத்தால் தூக்கம் வரும். நிம்மதியாக வாழ்வோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நம்மிடம் ஒழுங்காக, பாசிட்டிவாக நடந்து கொள்வார்கள்.

நன்றி உணவு இல்லாத பொழுது நம் உடலுக்கு நோய்கள் வருகிறது. மனதில் துன்பம் வருகிறது. நம் உடன் இருப்பவர்கள் நம்மிடம் ஒழுங்காக நடந்து கொள்ள மாட்டார்கள். பல நேரங்களில் நஷ்டமும் வரும் கஷ்டமும் வரும்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் டைரியில் இன்று எந்த எந்த விஷயங்களுக்கு, யார் யாருக்கு கடமைப்பட்டு உள்ளீர்களோ, அவர்களுக்கு நன்றியை எழுதி விட்டு தூங்குங்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்.

நன்றி உணர்வு என்பது ஒரு சாதாரண மனித குணம். இதை கட்டுரை எழுதி / வகுப்பு எடுத்து / உதாரணங்களை கூறி புரிய வைக்க வேண்டும் என்ற நிலை சிந்திக்க வேண்டியது. 

எப்போதெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ. வார்த்தையில் / நேரடியாக / WHATSAPP / E MAIL / TELEGRAM / SMS / CALL / INSTAGRAM / LETTER பயன்படுத்தி நன்றியை பரிமாறலாம்.

நன்றி உணர்வு. நமக்கும் நல்லது. பிறருக்கும் நல்லது.

என்னையும் மதித்து, நான் எழுதும் கட்டுரையை படிக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.