Translate this blog to any language

வியாழன், 22 டிசம்பர், 2022

முதுமையைத் தள்ளிப்போட தினந்தோறும் நடை பயிற்சி செய்யுங்கள்

_முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!
      _*நடக்காத*_ _*ஒவ்வொரு நாளும்* _*உங்களை*_ _*வயதானவராக ஆக்கிக் கொண்டே*_
_*போகும்.*_

உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !! 
Keep your Legs Active and Strong !!!

 தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, ​​நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து வயதாகும்போது, ​​நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.

 * *நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை "வருமுன் தடுப்பு" (prevention) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள் அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. 
* தயவுசெய்து தினமும் நடந்து செல்லுங்கள். 

உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும். 
_*நடந்து செல்லுங்கள்*_ 

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் *செயலற்ற நிலையில் இருந்தால் கால் தசை வலிமை *மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!
 _*எனவே நடந்து செல்லுங்கள்*_ 

கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், *நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது *

. நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது. 
* *கால்கள் ஒரு வகையான தூண்கள் *, மனித உடலின் முழு எடையையும் தாங்கும். 
_*தினமும் நடைபயிற்சி.*_
 
சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன. 
_*நடந்து செல்லுங்கள்*_ 

மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.

 _*10,000 அடிகள் / நாள்*_
  வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின் 
*இரும்பு முக்கோணத்தை உருவாக்கி
  மனித உடலைச் சுமக்கிறது. *

 * ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?
 ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, ​​அவருடைய/ *தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை! * 
*கால் உடல் நடமாட்டத்தின்(locomotion) மையம் *.

 இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். _*எனவே தினமும் நடந்து செல்லுங்கள்.*_

 * கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள். 

ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, ​​மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.
_*தயவுசெய்து நடந்து செல்லுங்கள்*_

 கூடுதலாக, எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுவது விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும், இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள்.
 _*நடங்கள்.*_

வயதானவர்களில் எலும்பு முறிவுகள் தொடர்ச்சியான சிக்கல்களைத் தூண்டும், குறிப்பாக மூளை த்ரோம்போசிஸ் போன்ற ஆபத்தான நோய்கள். 

பொதுவாக வயதான நோயாளிகளில் 15%, தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள் இறந்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 
_*தவறாமல் தினமும் நடந்து செல்லுங்கள்*_ 

▪️ *கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, 60 வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல. * நம் கால்கள் படிப்படியாக வயதாகிவிட்டாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது வாழ்நாள் முழுவதும் வேலை. 

_*10,000 அடிகள் நடக்க*_
 எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். 

_*365 நாட்கள் நடைபயிற்சி*_ 
உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவுசெய்து தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடக்க வேண்டும். 

_*இந்த முக்கியமான தகவலை உங்கள் 40 வயது கடந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டும், ஏனெனில் ஒவ்வொருவரும் தினமும் வயதாகி வருகிறார்கள்*_ ‍🚶🏻‍♂️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻

-Whatsapp University 

புதன், 21 டிசம்பர், 2022

நன்றி Gratitude பற்றி ஹீலர் பாஸ்கர் சொல்கிறார்!

பிறரால் நமக்கு ஒரு உதவி அல்லது நன்மை கிடைத்தால், அதை ஞாபகம் 
வைத்து, நமக்கு உதவி செய்த அந்த நபருக்கு நம் கடமை பட்டிருக்கிறோம் என்று உணரும் தன்மைக்குப் பெயர் நன்றி உணர்வு.

நாம் மட்டும் எப்பொழுதுமே மற்றவர்களிடம் நன்றி உணர்வை எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் மற்றவர்களுக்கு நன்றி உணர்வோடு இருக்கிறோமா என்பதை கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

நன்றி 7 வகைப்படும்.

1. வாய் நன்றி
2. மன நன்றி
3. உணர்ச்சி நன்றி
4. மன வாய் நன்றி
5. மன வாய் உணர்ச்சி நன்றி
6. நடிப்பு நன்றி
7. கடமை நன்றி

1. சிலர் நன்றி என்று வாயால் கூறுவார்கள். ஆனால் மனதில் நன்றி உணர்வு இருக்கவே இருக்காது. இது வாய் நன்றி. 

2. சிலர் மனதில் நன்றி உணர்வு இருக்கும். ஆனால் வாயை திறந்து சொல்லவே மாட்டார்கள். இது மன நின்றி.

3. சிலர் நன்றி உணர்வை, உணர்ச்சி மூலமாக தெரிவிப்பார். அவர்களுக்கு வார்த்தைகளால் சொல்லத் தெரியாது / முடியாது/ வழக்கம் இருக்காது. எனவே உடல் அசைவு / கண்கள் கண்ணீர் / எமோஷனல் மூலம் அவர்கள் வெளிப்படுத்துவார்கள். இதற்கு உணர்ச்சி நன்றி என்று பெயர். உதாரணம் குழந்தைகள்.

4. சிலர் நன்றி உணர்வு மனதுக்குள் இருக்கும். அதே சமயம் வார்த்தைகளால் சொல்வார்கள். இதற்கு மன - வாய் நன்றி என்று பெயர். 

5. சிலருக்கு நன்றி உணர்வு மனதுக்குள் இருக்கும். அதேசமயம் உணர்ச்சியாகவும் வெளிப்படுத்துவார்கள். அதே சமயம் வார்த்தைகளால் வெளிப்படுத்துவார்கள். இதற்கு மன - வாய் - உணர்ச்சி நன்றி என்று பெயர். இது மிக மிக மிக சிறந்த குணம்.

இருப்பதிலேயே இந்த குணம் தான் மிக மிக சிறந்தது. தயவுசெய்து இதுபோல் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

6. சிலர் ஆதாயத்திற்காக நன்றி உள்ளது போல் நடிப்பார்கள். இவர்களுக்கு மனதில் நன்றி உணர்வு இருக்காது. ஆனால் வாய் மூலமாக நன்றி சொல்வார்கள். சிலர் உணர்ச்சியை கூட நடிப்பால் காட்டுவார்கள். இவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். இதற்கு நடிப்பு நன்றி அல்லது போலி நன்றி என்று பெயர்.

7. விமானத்தில் பயணம் செய்து இறங்கும் பொழுது பணிப்பெண் உங்களிடம் நன்றி கூறுவார்கள். இது கடமை நன்றி. 

வியாபாரத்தில் / கஸ்டமர் கேரில் / ஹோட்டல் ரிசப்ஷனில் / OFFICIAL MEETING ல் / அரசியலுக்காக / வாங்கும் சம்பளத்திற்காக. ECT.... நன்றி கூறுவது கடமை நன்றி என்று பெயர். OFFICIAL THANKS.

குறிப்பு : 

1. வாயில் மட்டும் நன்றி சொல்லும் நபர்கள். தயவு செய்து இனிமேல் மனதிலும் நன்றியை உணர்வதற்கு முயற்சி செய்யுங்கள். உணர்ச்சி மூலமாகவும் நன்றியை தெரிவிக்க முயற்சி செய்யுங்கள்.

2. மனதிற்குள் மற்றும் நன்றி சொல்லும் நபர்கள். தயவு செய்து இனிமேல் வார்த்தைகளால் மற்றவர்களுக்கு சொல்லுங்கள். அப்பொழுதுதான் மற்றவர்கள் உங்களிடம் நன்றி உணர்வு இருக்கிறது என்று புரிந்து கொள்வார்கள். 

நீங்கள் வாயைத் திறந்து நன்றி சொல்லவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நபர் உங்களுக்கு நன்றி உணர்வு இல்லை என்று தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

3. மனதிலும், உணர்விலும், உணர்ச்சியிலும், வார்த்தைகளிலும் நன்றி சொல்லும் நபர்கள் பெருமைப்படுங்கள். நீங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள்.

4. தயவுசெய்து நன்றி உணர்வை போலியாக, நடிப்பாக பயன்படுத்தாதீர்கள். இது கேவலம். 

இது போன்ற நபர்களிடம் தயவு செய்து உஷாராக இருங்கள். போலியாக நன்றி சொல்லும் நபரை நம்பாதீர்கள். எந்த நேரத்திலும் நம்மை கவுத்து விடுவார்கள்.

5. கடமைக்காக நன்றி சொல்லும் நபர்கள் இனிமேல் அதை மனதார சொல்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

6. நமக்கு யாராவது உதவி செய்தால்தான் நன்றி சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவர் தன் கடமையை செய்தால் கூட நன்றி சொல்லலாம். ஏன் நமக்கு உபத்திரவம் செய்யாத நபருக்கு கூட நன்றி சொல்லலாம். உதாரணமாக மருத்துவர் / செவிலியர் / பேருந்து ஓட்டுனர் / ஆட்டோ ஓட்டுனர் / சர்வர் / கடைக்காரர் /பிளம்பர் / எலக்ட்ரீசியன் / அரசாங்க அதிகாரிகள் / நண்பர்கள்/ குடும்ப உறுப்பினர்கள் / சோந்த காரர்கள் / சக ஊழியர்கள் / குப்பை அள்ளுபவர்கள்/ உங்கள் வீட்டு வேலைக்காரர். இவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

நம் வீட்டு வேலைக்காரருக்கு சம்பளம் கொடுக்கிறோம் பிறகு எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்க கூடாது. அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

பணம் கொடுத்து தானே பயணம் செய்கிறோம்!! பின்னர், ஓட்டுநருக்கு எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கேட்கக் கூடாது. பேருந்தில் இருந்து இறங்கும்பொழுது ஓட்டுனருக்கு அவர் செய்த கடமைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஆட்டோவில் பயணம் செய்தால் ஆட்டோ டிரைவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகு சமைத்த அம்மாவுக்கு அல்லது மனைவிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

எந்த எந்த இடத்தில் முடியுமோ எல்லா இடங்களிலும் நன்றி சொல்ல வேண்டும்.

சம்பளம் வாங்கும் போதெல்லாம் தொழிலாளி முதலாளிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

சம்பளம் கொடுக்கும் போதெல்லாம் தொழிலாளிக்கு முதலாளி நன்றி சொல்ல வேண்டும்.

நாம் இப்பொழுது உயிரோடு இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி உணர்வு என்பது ஒரு அருமையான குணம்.

இது எந்த அளவுக்கு நம்மிடம் உள்ளதோ நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். படுத்தால் தூக்கம் வரும். நிம்மதியாக வாழ்வோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நம்மிடம் ஒழுங்காக, பாசிட்டிவாக நடந்து கொள்வார்கள்.

நன்றி உணவு இல்லாத பொழுது நம் உடலுக்கு நோய்கள் வருகிறது. மனதில் துன்பம் வருகிறது. நம் உடன் இருப்பவர்கள் நம்மிடம் ஒழுங்காக நடந்து கொள்ள மாட்டார்கள். பல நேரங்களில் நஷ்டமும் வரும் கஷ்டமும் வரும்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் டைரியில் இன்று எந்த எந்த விஷயங்களுக்கு, யார் யாருக்கு கடமைப்பட்டு உள்ளீர்களோ, அவர்களுக்கு நன்றியை எழுதி விட்டு தூங்குங்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்.

நன்றி உணர்வு என்பது ஒரு சாதாரண மனித குணம். இதை கட்டுரை எழுதி / வகுப்பு எடுத்து / உதாரணங்களை கூறி புரிய வைக்க வேண்டும் என்ற நிலை சிந்திக்க வேண்டியது. 

எப்போதெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ. வார்த்தையில் / நேரடியாக / WHATSAPP / E MAIL / TELEGRAM / SMS / CALL / INSTAGRAM / LETTER பயன்படுத்தி நன்றியை பரிமாறலாம்.

நன்றி உணர்வு. நமக்கும் நல்லது. பிறருக்கும் நல்லது.

என்னையும் மதித்து, நான் எழுதும் கட்டுரையை படிக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.

செவ்வாய், 25 அக்டோபர், 2022

தீபாவளிக்கு மாற்று என்ன?

இப்போதெல்லாம் நமது தமிழினக் குடும்பங்களில்
நாம் கொண்டாடும் தீபாவளி நரகாசுரன் சம்பந்தமான மூட தீபாவளி அல்ல! 

அதே நாளில் நம்முடைய குழந்தைகள் எல்லோரும் பட்டாசு கொளுத்தி புத்தாடை அணிகிறார்கள் அவ்வளவுதான்!

மேலும், பழக்கத்தில்/புழக்கத்தில் வந்துவிட்ட அந்நிய பேண்ட் சூட் கோட்டு போன்றவற்றை உடனே சட்டென பிடுங்கிவிட முடியாது; அதற்கான மாற்று வைக்கப்பட வேண்டும்! அதுதான் நியாயம்! சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் 8 லட்சம்+ ஏழைத் தொழிலாளர்கள் வேலை பார்த்து பிழைக்கிறார்கள்! 

அந்த நாட்களில் ஒருவருக்கொருவர் நமக்குள் நாம் செய்து கொள்ளும் வியாபாரம், வேலை வாய்ப்புகள் யாவும் எண்ணற்றவை!

ஒரு மாற்றுப் பண்டிகையை நாம் ஏற்பாடு செய்துவிட்டு தீபாவளி என்ற பெயரை நாம் ஓரம் கட்டி விடலாம்!

அது தமிழினத்தை நடத்திக் கொண்டிருக்கிற பற்பல தலைவர்களுடைய கடமை!

அட! தமிழகத்தில் உள்ள எல்லா முக்கிய  தமிழ் நிலங்களும் அன்னியர்களிடம் கொள்ளை போய் விட்டன! இனி அவர்கள் சொல்லும் மொழி பேச வேண்டும் அவர்கள் போடும் சட்டதிட்டங்களுக்கு நாம் உடன்பட வேண்டும்...இப்படி வந்த 
கோட்டு சூட்டு பேண்ட் ஷர்ட்டுதான் தீபாவளி!!

தவிர்க்க முடியாதது... மாற்று ஏற்பாடு யார் எப்போது செய்வது? அப்படி செய்துவிட்டு நமது குழந்தைகளிடம் நாம் பேசலாம்!

-YozenBalki 
25th Oct 2022

🥸🥸

திங்கள், 24 அக்டோபர், 2022

தீபாவளி கொண்டாடலாமா?

"தமிழர்கள் தீபாவளியை கொண்டாடக்கூடாது", என்ற சித்தாந்த கருத்து என் போன்ற பலரிடமும் உண்டு!
அது ஆரியர்கள் தமிழினத்தின் மீது திணித்த ஒரு வஞ்சகத் திட்டம் என்ற வழக்கு தொடர்கிறது!

எவன் காலிலும் நமது குழந்தைகள் விழாத வரை
எந்த அடிமைத்தனத்திலும் நாம் உட்புகாத வரை
இது வெறும் பண்டியாகவே இருக்கும் நாள் வரை
அதை கொண்டாடிவிட்டு போவதில் என்ன பிழை?

பொங்கலோ தீபாவளியோ எல்லாம் நமக்கு ஒன்றுதான்!
சந்தையில் நம் சொந்தங்கள் விளைவித்த பொருள்களை நாம் வாங்குகிறோம்; ஒருவருக்கொருவர் பயன் அடைகிறோம்!

அதற்குள் சண்டையிட பண்டிதர்கள் போகட்டும்!
ஏழை பாழைகளுக்கு அதெல்லாம் எதுவும் தெரியாது!
பண்டிகை என்பது உற்சாகம்!
பெரியவர்களும் குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் ஊர் விட்டு ஊர் சென்று ஒருவரையொருவர் சந்திக்கும் விழா!

அதுதான் எனக்குத் தெரிகிறது; மற்று எந்த காலத்திலோ உட்பொதிந்த  கொள்கை விளக்கங்கள் தெரியவில்லை!

வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிதாக ஒரு, இதே போன்ற நற்பண்டிகைகளை விழாக்களை உருவாக்குவோம்!

எனினும், அதற்கு இணையான ஒரு பண்டிகையை தமிழின அறிஞர்கள், தமிழின அரசர்கள், தமிழினத் தலைவர்கள் ஒன்று கூடி இதுவரை அமைக்க முடியாத தோல்வியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!

எப்படியோ ஒரு பெரிய இரு பண்டிகைகள் தமிழ் இனத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன! 
அது ஒரு புறம் இருக்க, பண்டிகை சமயத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனை செய்யப்படும் விளை பொருட்கள் வழியாக மானுடம் தங்கள் உழைப்பு சக்தியை (பணத்தைப்) பரிமாறிக் கொள்கிறதே!

வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் சோர்வு அவநம்பிக்கை கலந்த மனித வாழ்வில், ஒரு சமூகம், ஒரே சமயத்தில் கொண்டாடும் பண்டிகைகள் குடும்பத்தில் ஒரு தற்காலிக மகிழ்ச்சியையேனும் தருகின்றன!

இதில் குழந்தைகளும் பெரியவர்களும் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் கலந்து மகிழ்ந்து அன்பை பரிமாறிக் கொள்கின்ற காட்சியை நாம் காண முடியும்! பண்டிகை காலத்தில் நிரம்பி வழியும் ரயில் நிலையங்கள் பஸ் நிலையங்கள் ஊரு விட்டு ஊரு செல்லும் மனிதர்கள் அதற்கு சாட்சி!

அட! இதுபோன்ற சென்டிமென்ட் இல்லாத வாழ்க்கை மிகவும் அருவருப்பானது!

எந்த பண்டிகையை கொண்டாடுவது என்பதை தனி மனிதர்கள் அல்லது சிறு குழுக்கள் தீர்மானிக்கவே இயலாது! அது தானாக பெரிய அளவில் எப்படியோ நிகழ்கிறது!

இப்போதும் கூட தீபாவளி போன்ற பண்டிகைகள் கொண்டாடுவதில் நமக்கு மறுப்பும் ஏற்பும் சமமாகவே இருக்கிறது!

சரி போகட்டும்! தமிழர்கள் அனைவரும் அதற்கு இணையான அல்லது அதற்கு மேலான ஒரு நன்னாளை கண்டுபிடித்து கொண்டாடி மகிழலாமே! யார் தடுத்தார்கள்?

கொண்டாட்டம் ஒரு சென்டிமென்ட்!

வெறும் சோறு மட்டும் தின்றுவிட்டு பண்டிகைகளே இல்லாமல் உயிர் வாழும் ஒரு சிறிய இனக்கூட்டம் கூட உலகில் எந்த பாகத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

ஏதாவது ஒரு காலத்தில் உலக மக்கள் யாவரும் ஒருமித்து கொண்டாடக் கூடிய

(அந்நாளில், 'எனது உற்பத்திப் பொருளை அல்லது சேவையை இன்னொருவர் பெற, அவரிடம் இருந்து நான் அது போல் பெற', என்று மானுட இனம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழுகின்ற) 

ஒரு பண்டிகை ஏதாவது வரவேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும்!

அதுநாள் வரை இது போன்றவை தொடரட்டும் என்றே நான் விழைகிறேன்!

YozenBalki 

😎🙏🙏😎

சனி, 17 செப்டம்பர், 2022

யாரந்த பெரியார்? ஏனிந்த புகழ்ச்சி? (கவிதை)

எந்த ஒரு சொல்?
******************
எந்த ஒரு சொல் 
ஆதிக்கவாதிகள்
கோட்டை கொத்தளம்
சுக்குநூறாக்கி 
மண் மேடாக்கிய
அந்த ஒரு சொல்?

எந்த ஒரு சொல் 
ஆரிய சனாதன
மென்னி திருகி 
மூச்சு நிறுத்தி 
திராவிட பூமியை
நிறுவிய திருச் சொல்?

எந்த ஒரு சொல்
சூத்திரர் வாழ்வை
நெம்பி நிறுத்தி 
உலகம் வென்றிட
கல்வியும் வேலையும்
அருளிய அச் சொல்?

எந்த ஒரு சொல்
பூமியில் பாதியாம்
பெண்ணின உயிரை
சமமாய் நடத்தென 
போர்க்குரல் உயர்த்தி
உழைத்திட்ட அருஞ்சொல்?

எந்த ஒரு சொல்
அமிழ்ந்தவன் உயர 
மூத்திரச் சட்டியை
சுமந்திட்ட வாறே 
இடையறாத் தொண்டு
புரிந்திட்ட பெயர்ச் சொல்?

எந்த ஒரு சொல்
மானமும் அறிவுமே
மனிதனுக்கு அழகென
தடியால் அடித்து
தமிழினத் தூக்கம் 
கலைத்திட்ட வினைச் சொல்?

அந்த ஒரு சொல்
தந்தை பெரியார் 
தந்தை பெரியார்!!

எந்தன் உள்-வெளி 
எங்கணும் நிறைந்து
உயிரெலாம் கலந்து
போர்க்குணம் நல்கிடும்
சமநெறி ஞாயிறு
தந்தை பெரியார் 
பிறப்பை போற்றுவம்!

-YozenBalki 

பெரியார் பிறந்தநாள் 
144-வது ஆண்டு
September 17-2022

புதன், 7 செப்டம்பர், 2022

யார் தீண்டத்தகாதவர்கள்?

மீன்கள் வாசமில்லா
குளங்கள் கொண்ட
கோவில்கள் உண்டா?

சந்தையில் வாங்கிய
பூக்கள் யாவும்
எந்த விரல்கள்
பறித்த பூக்கள்?

காய்ந்த
மாட்டின் சாணம்
வரட்டியில்
எங்கள் கைபடாத
விபூதி தான் உண்டா?

உங்கள்
ஆராதனை தட்டில்
விழுந்த காசுகளை
மனுதர்மப்படி
எப்படிப் பிரிப்பீர்?

எங்கள்
ஆடு மாடு கோழி
மேய்ந்து திரிந்து
போட்டக் கழிவுகளில்
முளைத்த
தர்பைப் புற்கள்
உங்கள் கைகளில்!

இப்போது
சொல்லுங்கள்
யார்
தீண்டத்தகாதவர்கள்?

-கவிஞர் கு.தென்னவன்

Courtesy:
WhatsApp University 

எனது நீண்ட கால நண்பர் "சமூக நீதிக் கவிஞர் தென்னவன்", அவர்கள் இன்று எழுதிய கவிதை!
🌸☘️❣️❣️☘️🌸


கண்டா வரச் சொல்லுங்க..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயில்களில் டீ விற்கும் தமிழனைக் கண்டதுண்டா...?

மத்தியப் பிரதேசத்தில் போக்குவரத்து சிக்னல்களில் கார் ஸ்டிக்கர் விற்கும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

ஜார்கண்ட் மாநில ரயில் நிலைய வாசல்களில் கைக்குழந்தைகளோடு பொம்மை விற்கும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

பீஹார் மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுவதில் வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

ராஜஸ்தான் செங்கல் சூளைகளில் குடும்பத்தோடு வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

சத்தீஸ்கர் மாநில அரசுப் பணிகளை ஆக்கிரமித்த தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

குஜராத் கிரானைட் கடைகளில் குடும்பத்தோடு தங்கி கூலி வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

வடமாநில டிராபிக்களில் ஹிந்தி தெரியாமல் பிச்சை எடுக்கும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்வோரே, புலம் பெயர் தொழிலாளிகளாய்
வடமாநிலங்களிலிருந்து தமிழகம் நோக்கி கூட்டம் கூட்டமாக நடந்து வந்த தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு…

கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் எவ்வளவோ கேட்டும் பிரதமர் மோடி கொடுக்காமல் அதானிக்கு விற்ற திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் கட்டணத்தை  அதிகரித்துள்ளனர்..
அதிகமாக அல்ல..!

முப்பது நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏழு ரூபாய் அதிகரித்துக் கொண்டிருக்கும்..

உதாரணமாக மூன்று மணி நேரம் விமானம் வர தாமதித்தால் 1237 ரூபாய் மட்டுமே....
 
அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு...

எந்த முகத்துடன் இவர்கள் வாக்கு கேட்கிறார்கள்..
எனத்தெரியவில்லை..!

மேலே சொன்னது அனைத்தும் உண்மை...

*மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் வென்றால் தமிழகம் வட மாநில வேட்டைக்காடாக மாற்றப்படும்.    

*டிஎன்பிஎஸ்ஸி (TNPSC)   கலைக்கப்படும்.   

*அனைத்துப் பல்கலைக் கழகங்களும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்படும்.  
 
*சமூக நீதி கொள்கையின் மணி மகுடமான 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.   

*அனைத்துத் துறைகளிலும் அரிய வகை உயர்சாதி  ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.   

*தமிழகத்தின் நீர் வளங்கள் அனைத்தும் மத்திய அரசின் நிர்வாகத்திற்கும் செல்லும்.

*தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயமாக்கப்படும்.   

*மின் கட்டணம் மூன்று மடங்கு உயரும்.

*தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படும். 

*ஆரம்பக் கல்வியிலிருந்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கு செல்வதற்கான உயர்கல்வி வரை அனைத்து இடங்களிலும் நீட் தேர்வு புகுத்தப்படும்.

*தமிழக காவல்துறையில்   முழுக்க முழுக்க வட மாநில அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

*தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளும் தனியார் மயமாக்கப்பட்டு அதானி வசம் ஒப்படைக்கப்படும்.

*மீனவர்களின் மீன்பிடி உரிமையை தனியார் வசம் செல்லும்.

*சிறு குறு தொழில்கள் அனைத்தும் நசுக்கப்பட்டு சுயதொழில் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு அனைவரையும் குலத்தொழில் நோக்கி செல்லும் வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்படும். 

*அமைதிப்  பூங்காவான தமிழகம் சாதி மத கலவரங்கள் தூண்டப்பட்டு கலவர பூமியாக மாறும்.

*சிந்தித்து செயல்படுவோம்.*😢

Courtesy:
Whatsapp University
☘️🌸☘️🌸

திங்கள், 5 செப்டம்பர், 2022

கரைக்கப் போன எடத்துலே!


பதினொண்ணாப்பு
படிக்கிற மவன்
ஏதோ கைடு வாங்கணும்ணு
500 ருவா கேட்டான்.

காசில்லய்யா அடுத்த மாசம்
வாங்கலாம்னு சொல்லிட்டேன்.
போன வருசத்த விட
இந்த வருசம்
பெருசா செய்யணும்ணு
எங்க தெருவுல பேசிக்கிட்டோம்.
ஆமா செமயா இருக்கணும்ணு
எனக்கும் ஆசை.
வீட்டுக்கு ரெண்டாயிரம் ருபா
போக...
ஆம்பளைங்க தகுதிகேத்த மாதிரி
எக்ஸ்ட்ரா.
நெனைச்ச மாதிரியே...
மெர்சல் பண்ணிட்டோம்.
அவ்ளோ பெருசு.
பாக்கிறவங்க எல்லாம்
பிரமிச்சாங்க.
ஒவ்வொரு நாளும்
செமயா செஞ்சோம்.
மைக் செட் ஸ்பீக்கர்,
பந்தல், பாயசம்னு...
வேற மாரி... 
பெரிய வண்டி பிடிச்சு
மேள தாளத்தோட
ஆட்டம் பாட்டம்னு
கொண்டு போனோம்.
யாரோ எங்க வண்டிய
நிறுத்தி கொடி கட்டி விட்டாங்க.
எங்க வண்டி மட்டுமில்ல
எல்லா வண்டிலயும்.
கடற்கரைக்குப் போனா
அம்மாங் கூட்டம்.
எவ்ளோ ஜனம்...
எத்தனை செல..
ஆனாங்காட்டி...
கரைக்க வந்த
எல்லாருமே 
கருப்பா தான் இருந்தாங்க.
வெள்ளையா செகப்பா
ஒருத்தனை ஒருத்திய
பாக்க முடியல.

பூணூல்போட்டவங்களையோ 
சமசுகிருத மந்திரங்கள் ஒதுரவங்களையோ 
ஒருத்தரக் கூட காணோம் 

பட்டை போட்டவனும் இல்லை 
நாமம் போட்டவனும் வரவில்லை 
பட்டாடை உடுத்துனவங்களோ
வெண்நூலாடை போட்டவங்களோ
யாருமே இல்ல.
பெரிய பெரிய பதவில
இருக்கிறவங்க 
யாரும் கூட்டத்தில 
இருக்கிற மாதிரி தெரியல.
ப்ச்...
ஏன் அவங்கல்லாம்
வரலேன்னு ஒரு கேள்வி.
அவங்க இதெல்லாம்
செய்ய மாட்டாங்களான்னு
கூட ஒரு கேள்வி.
அப்போ
நம்ம மட்டுந்தான்
இதெல்லாம் செய்றமா?

நமக்கு ஏன் அறிவில்லாம போச்சி?

கூட்டம் கூடுறதுக்கும் 
கும்மி அடிக்கிறதுக்கும்
 குத்தாட்டம் போடுறதுக்கும் 
கலவரம் செய்றதுக்கும் மட்டும்தான் நாமளா?  
அதுவரை கொண்டாட்டமா
இருந்த மனம்
சட்னு வடிஞ்சிருச்சி.
அங்க நிக்கவே
ஒரு மாதிரி இருந்தது.
கைடு வாங்க 
காசு கேட்ட மவன் மொகம்
கண்ணுக்குள்ள வந்து போச்சு.
திரும்பிப் பாக்காம
நடையைக் கட்டிட்டேன்.

புத்தி வந்து சேர்ந்ததாலே 

இனிமேல் இந்தக் கூட்டத்துல 
ஒருநாளும் சேர மாட்டேன் 
சங்கியா நான் சாக மாட்டேன்!

Courtesy:
Whatsapp University Professors
🌸🌸🙏🙏☘️☘️

வெள்ளி, 27 மே, 2022

"மனம் மனம் அறிய ஆவல்", புத்தகம் Practical Psychology

☘️🌸☘️🌸
நண்பர்களே!

எனது "யோஜென் மைண்ட்" உளஇயல் மையத்தின், 
*"மனம் மனம் அறிய ஆவல்"* எனும் புத்தகம் அமேசான் கிண்டிலில் வெளிவந்துள்ளது! (அதை செல்பேசியிலும் படிக்கலாம்)

மனம் மனமறிய ஆவல்: உளஇயல் உண்மைக் கதைகள் (Tamil Edition) https://www.amazon.in/dp/B0B1WRRXT1/ref=cm_sw_r_apan_BVZGBWBVKS4KYW25Q507

சிறு சிறு கதை வடிவத்தில் 25 தலைப்புகளில் உளஇயல் சிக்கல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எப்படி மிகச்சிறிய நுட்பமான ஆலோசனைகள் மூலம் முழுமையான அரிய தீர்வுகள், தரப்பட்டுள்ளன என்பதை இந்தப் புத்தகம் அழகுற விளக்குகிறது!

வாங்கிப் படியுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் இது பற்றி சமூக ஊடகங்கள் வழியாக சொல்லி 'லிங்க்' அனுப்புங்கள்!


மிக்க அன்புடன்
YozenBalki
(Mohan Balakrishna) 

www.yozenmind.com


புதன், 25 மே, 2022

எத்தனை வரி வசூல் டா ங்கப்பா!!!

ஒரே ஒரு 'வரி' கேட்டதுக்கே கட்டபொம்மனுக்கு அவ்வளவு கோபம் வந்தது...

கடவுளே!

நான் I.T. கட்டி விட்டேன்
GST கட்டிவிட்டேன்
VAT கட்டி விட்டேன்
CST கட்டி விட்டேன்
Service Tax கட்டி விட்டேன்
Excise Duty கட்டி விட்டேன்
Customs Duty கட்டி விட்டேன்
Octroi கட்டி விட்டேன்
TDS கட்டி விட்டேன்
ESI கட்டி விட்டேன்
Property Tax கட்டி விட்டேன்
Stamp duty கட்டி விட்டேன்
CGT கட்டி விட்டேன்
Water Tax கட்டி விட்டேன்
Professional Tax கட்டி விட்டேன்
Corporate Tax கட்டி விட்டேன்
Road Tax கட்டி விட்டேன்
STT கட்டி விட்டேன்
Education Cess கட்டி விட்டேன்
Wealth Tax கட்டி விட்டேன்
TOT கட்டி விட்டேன்
Capital Gain Tax கட்டி விட்டேன்
Congestion Levy etc etc etc...
கட்டி விட்டேன்
TOLL GATE FEE - யும் 
 மாமூல்-ஐயும் கூட கட்டி விட்டேன்

இதுக்கு பேசாம வெள்ளக்காரன்கிட்ட அடிமையாவே இருந்துருக்கலாம் மை லார்டு.
😭😭😭

from Whatsapp University
-யாரோ

சனி, 21 மே, 2022

பெரியார் சொத்துக்கள் பெரியாரது முக்கிய கொள்கைகள் பரவ உபயோகப்படுகிறதா?

தந்தை பெரியார் அவர்கள் பெரியார் சுயமரியாதை பிரச்சார இயக்க நிறுவனம் என்று பெயர் வைத்து விட்டுப் போனார்; கூடவே இன்றைய பண மதிப்பு சில ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களையும்!


எந்த காரணத்துக்காக துவங்கப்பட்டதோ அந்த காரணத்துக்காக 90% வருமான மிச்சத்து வட்டியை செலவிடுவது தான் தம் வாழ்நாள் முழுவதும் நமக்காக உழைத்த அன்புப் பெரியாருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன், அறத்தொண்டு ஆகும்! 

மாதந்தோறும் வரும் உபரி வருமானத்தில் 80-90% பணத்தை பெரியார் மற்றும் திராவிடர் இயக்க முற்போக்கு எழுத்தாளர்கள் எழுதிய இலவச புத்தகங்கள் உலகம் முழுவதும் அனுப்பலாம், மாவட்ட செயலாளர்களுக்கு மாதம்தோறும் ஓரிரு பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடத்த ஒரு நியாயமான தொகையைப் பிரித்து தரலாம்!

அதே போல, இந்திய மாநிலங்கள்/உலகம் முழுவதும் பெரியார் சுயமரியாதை இயக்க கருத்துக்களை (ஆர்எஸ்எஸ் வைத்துள்ள ஆயிரக்கணக்கான Paid Staffs முழு நேரத் தொண்டர்களைப் போல), சில நூறு பேரையாவது நியமித்து கொள்கைகள் பரப்பலாம்! 

இது போன்ற எந்தவொரு நீண்டகால பிரச்சார திட்டங்களும், கூர்நோக்கு பார்வையும் இல்லாமல் எப்படி தந்தை பெரியாரின் கருத்துக்கள், எதிரிகள் மற்றும் துரோகிகளின் பண-பலம் பிரச்சார-பலத்தை மீறி வளர இயலும்? 
நன்றாக யோசித்துப் பாருங்கள்!

தற்போது பெரியார் திடலில் உள்ளவர்கள், அச்சு அசலாக பிற பல உலகிலுள்ள
மதவாதிகளைப் போலவே கல்வி நிறுவனங்கள் நடத்துவது, அதில் வரும் இலாபத்தில் இன்னொரு கல்வி நிறுவனம் ஆரம்பிப்பது, திராவிட நலநிதி என்று வட்டிக்கு விடுவது, என்ற வகையில் மட்டும் 90% பணம், உழைப்பு, நேரத்தை செலவு செய்வதாகவே எனக்குத் தோன்றுகிறது! உங்களுக்கு அப்படி தோன்றவில்லையா?

நாம் மிக மிக அபாயமான பெருநோய்கள் பீடிக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம்! தந்தை பெரியார் கொள்கைகள்தான் அதற்கு அருமருந்து என மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதே! அந்த "சமத்துவம்-சமூக நீதி", என்னும் மாமருந்து மானுட சமூகம் முழுவதும் விநியோகிக்கப்பட வேண்டாமா?

ஆக, பெரியார் கொள்கைகள் மீது உண்மையான பற்று உள்ளவர்கள்
பெரியார் சம்பாதித்த சொத்துக்கள், அவரது முக்கிய கொள்கைகளைப் பரப்புவதற்கு எத்தனை சதவீதம் பயன்படுகிறது என்ற மிக மிக முக்கியமான கேள்வியைக் கேட்க வேண்டும்! 

இது யாரையும் கொச்சை படுத்துவதற்காக அல்ல; காலமெல்லாம் நமது சூத்திர மக்கள் இழிவு நீங்க மூத்திரச் சட்டியை சுமந்து கொண்டு உழைத்த, ஈடிணையற்ற அந்த அன்பின் பேரொளி, தந்தை பெரியாரின் நோக்கங்கள் சீக்கிரம் நிறைவேறத் தாம்!

-YozenBalki

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

EB ஆஃபீசரும் வாழைப்பழமும் !!

ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்...

*EB ஆபிஸர் :* வாழைபழம் என்னபா விலை..?

*வியாபாரி :* சார், பழத்தை எதுக்கு வாங்குரீங்கனு தெரிஞ்சா தான் விலை செல்ல முடியும்...?

*EB ஆபிஸர் :* என்னப்பா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..??

*வியாபாரி :* இல்ல சார், நீங்க இந்த வாழைப் பழத்த கோயிலுக்குனு வாங்குனா ஒரு பழம் 5 ரூபா.

வீட்ல குழந்தைகளுக்குனு வாங்கினா ஒரு பழம் 7 ரூபா.

தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா ஒரு பழம் 10 ரூபா.

நீங்க சாப்பிட வாங்கினா ஒரு பழம் 20 ரூபா சார்.

*EB ஆபிஸர் :* யோவ், யார ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்.??

*வியாபாரி :* This is my tariff plan.
 நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே transmission சிஸ்டம் வச்சிகிட்டு, வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி Rate னு சொல்வீங்க. கேட்டா tariff plan னு சொல்லுறீங்களே சார்!!!!."
😂😛

*Banana vendor rocked..*👍😂
*The EB officer shocked.*😳😳

⚡⚡🤩🤩💯💯⚡⚡

-Whatsapp University

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

தற்போதைய இந்திய அரசியல் அமைப்பின் முரண்பாடுகள்!

⚔️🇮🇳✒️🇮🇳⚔️மும்பை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.கே. ஸ்ரீவஸ்தவா குறிப்படுவது:

😰🇮🇳😰சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா?

நீங்களே முடிவு செய்யுங்கள்:

✒️🇮🇳🥨 1. ஒரு குடிமகன் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது.
ஆனால், தலைவர் விரும்பினால், அவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து தேர்தலில் போட்டியிடலாம்.

✒️🇮🇳🥨 2. ஒரு குடிமகன் சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது.
ஆனால் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு தலைவரோ சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம்.

✒️🇮🇳🥨 3. ஒரு சாதாரண மனிதன் ஏதாவது ஒரு சிறிய குற்றத்திற்காக சிறைக்கு சென்றால் கூட அவனுக்கு வாழ்நாள் முழுவதும் அரசு வேலைக்கு தடை விதிக்கப்படும்,
ஆனால், கொலை அல்லது பாலியல் பலாத்காரம் போன்ற பெரிய குற்றம் செய்யும் தலைவன் எத்தனை முறை சிறையில் இருந்தாலும், அவர் தேர்தலில் தாராளமாக போட்டியிடலாம், அவர் பிரதமராகவும் அல்லது ஜனாதிபதியாக கூட போட்டியிடலாம். எந்த தடையும் இல்லை.

🥨🇮🇳✒️ 4. ஒரு சாதாரண மனிதன் வங்கியிலோ, அரசாங்கத்திலோ அல்லது தனியார் கம்பெனியிலோ, ஒரு சுமாரான வேலையைப் பெற, பட்டதாரியாக இருக்க வேண்டும்.
ஆனால், அரசியல்வாதி கட்டைவிரல் ரேகை வைக்கும் படிப்பறிவே உள்ளவராக இருந்தாலும், அவர் இந்தியாவின் நிதி அமைச்சராகவோ பிரதமராகவோ இருக்க முடியும். அவர் பள்ளிக்கே சென்றதில்லை என்றாலும், நாட்டின் கல்வி அமைச்சராகலாம்.

✒️🇮🇳🥨 5. ஒரு குடிமகன், இராணுவத்தில் சேர குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும். ஒரு சிப்பாயாக வேலை பெற, நீங்கள் 10 கிலோமீட்டர் ஓடி காட்ட வேண்டும்.
ஆனால் அரசியல்வாதி படிப்பறிவில்லாதவராகவும், உடல் ஊனமுற்றவராலவும், மற்றும் 90 வயதானவராக இருந்தாலும், அவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கலாம், அந்த இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு கட்டளையிடலாம்.

🥨🇮🇳✒️அவருக்கே எதிராக எத்தனை வழக்குகள் இருந்தாலும், ஒரு தலைவர் காவல்துறை, அல்லது உள்துறை அமைச்சராகவே இருக்கலாம்.

🥨🇮🇳✒️ஒரு அரசு ஊழியர் 30 முதல் 35 ஆண்டுகள் சேவைக்குப் பிறகும் ஓய்வூதியம் பெற நிபந்தனைகளும், காலவரையும் உண்டு.

🥨🇮🇳✒️ஆனால் ஒரு எம் எல் ஏ, எம்பி சேவை செய்வதாக சொல்லி பதவிக்கு வந்து, 5 வருடம் லஞ்சம், ஊழல் மற்றும் எத்தனை அராஜகம் செய்தாலும், எந்த நிபந்தனையும், கால வரையும் இன்றி வாழ்னாள் முழுதும் ஓய்வூதியம் கிடைக்கும்,

🥨🇮🇳✒️ இதில் அனைவருக்கும் எங்கே ஒரே நீதி இருக்கிறது?
இந்த அமைப்பு மாற்றப்பட வேண்டுமா, இல்லையா?

🥨🇮🇳✒️தலைவர் மற்றும் மக்கள் இருவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டுமா, இல்லையா?.

🥨🇮🇳✒️இந்த செய்தியை அனுப்புவதன் மூலம் நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த தயவுசெய்து உங்கள் ஆதரவை வழங்கவும்.

🥨🇮🇳✒️நீங்கள் முன்வரவில்லை என்றால் எந்த தலைவரையும் குற்றம் மட்டுமே சொல்லாதீர்கள்.
ஆம், உங்கள் இழப்புக்கு நீங்களும் பொறுப்பு ஆவீர்கள்.

🥨🇮🇳✒️திரு. டி.கே. ஸ்ரீவாஸ்தவா,
தலைமை அரசு வழக்கறிஞர்,
பம்பாய் உயர் நீதிமன்றம், பம்பாய்.

🥨🇮🇳✒️இந்த பிரச்சாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம்.
அனைவருக்கும் பகிர்வோம். 💐⚔️🙏🇮🇳🕉️☪️✝️🇮🇳🙏⚔️💐

Source: From
Whatsapp University