Translate this blog to any language

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

தமிழர் பாரம்பரிய அரிசி வகைகள் 1000 தெரியுமா?

நாம் உண்ணும் அரிசி வகை என்றாலே அது வெள்ளையாக தான் இருக்கும் என்று நம்மில் பலர் அப்பாவியாக நம்பிக்கொண்டு இருக்கிறோம்! 

மிகவும் முக்கியமான இரகங்களான, கறுப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா, அருங்குருவை, காட்டுயாணம் அரிசி இவை யாவும் தனித்துவமானவை, நிறங்களில் ஒன்றோடு ஒன்று வேறுபட்டவை தெரியுமா?

மேலும், நம் சாப்பாடு தட்டுக்கு வருவதற்கு முன்னாள் அரிசியானது பலவகையில் பட்டை தீட்டப்பட்டு வெறும் சக்கையாத்தான் நாம் உணவென தின்று கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் பயிரிடப்படும் அத்தியாவசிய வகைகளில் ஒன்றுதான் நெல். பாரம்பரிய நெல் சாகுபடி சில வழிமுறைகளை உள்ளடக்கியது மற்றும் மண் வளத்தை அடிப்படையாகக் கொண்டு வளரும். நமது பாரம்பரிய உணவு அரிசி அதிக ஆற்றலை அளிக்கிறது, உடல் பருமன், புற்றுநோய், அல்சைமர் நோய், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. 

செரிமான குணங்கள்:
நன்கு சமைத்த அரிசியில் 68% நீர், 28% கார்போஹைட்ரேட், 3% புரதம் மற்றும் மிகக் குறைவான கொழுப்பு உள்ளது.

அத்துணை சிறப்புகள் பெற்ற அரிசியில் இன்று நாம் முழுக்க முழுக்க பாலிஷ் செய்துவிட்டு சாப்பிடும் இந்த சக்கையினால் சக்கரை நோய் வந்ததுதான் மிச்சம். 

அந்தக் காலத்திலும் நம் மக்கள் அரிசியைத்தான் சாப்பிட்டார்கள். அவர்களுக்கு இன்று வரும் நோயெல்லாம் அப்போது வரவில்லை. காரணம் அவர்கள் அரிசியின் மேலே இயற்கை ஒட்டி வைத்திருக்கும் சத்தையெல்லாம் உதிர்த்து விடாமல், பட்டை தீட்டாமல் சாப்பிட்டார்கள்.

‘ இயற்கை வேளாண் விஞ்ஞானி ‘ 
திரு. நம்மாழ்வார் அய்யா கூறியபடி அந்தக் காலத்தில் 2000க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் நம்மிடம் இருந்தது. அவையெல்லாம் நம் ஆரோக்கியத்துக்கு அரணாக இருந்தன. 

நம் முன்னோர்கள் அந்த அரிசி வகைகளை பட்டைதீட்டமால் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அந்தப் பாரம்பர்ய நெல்வகைகள் எல்லாம் நம் கையை விட்டுப் போனதற்கு, தமிழன் தன் பாரம்பர்ய விவசாயத்தின் மீது காட்டிய அலட்சியம்தான் காரணம்.

தமிழகத்தில் இப்போதும் பலர் உங்களுக்காக அவர்களால் முடிந்த பாரம்பரிய அரிசி வகைகளை இயற்கை முறையில் விளைவித்து அரிசியாக அளித்து வருகின்றனர்.

Thooyamalli Rice – Traditional Rice - Gramiyum  https://gramiyum.in

The nine traditional rice varieties of Tamilnadu - UlaMart https://www.ulamart.com

Traditional Rice: B&B Organics https://bnborganics.com

Buy Organic Traditional Rice Online https://www.thanjaiorganics.com

Buy Organic Rice online https://www.ulamart.com

தற்போது அமேசானில் கூட கிட்டத்தட்ட இவை எல்லாமே கிடைக்கிறது!
www.amazon.in 
www.amazon.com

சரி போகட்டும்!

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாரம்பரிய அரிசி வகைகள் இவை:

மாப்பிள்ளை சம்பா
கருப்பு கவுனி
குடவாழை
துளசிவாச சீரகச்சம்பா
கண்டசாலி
கைவரச்சம்பா
வாடன் சம்பா
தேங்காய்பூச் சம்பா
வாலான்
சிங்கினிகார்
பூங்கார்
ராஜமன்னார்
 பவானி
சம்பா மோசனம்
செம்பாளை
கொட்டாரச் சம்பா
ராஜயோகம்

அரசர்களின் அரிசி:

"கறுப்பு கவுனி" அரிசியை அரசர்கள் மட்டுமே பயன்படுத்தினார்கள். அதனால் இதை, ‘அரசர்களின் அரிசி’ என்பார்கள்

மிளகுச் சம்பா
நவரா
கருங்குறுவை
சொர்ண மசூரி
அறுபதாம் குறுவை
மைசூர் மல்லி
காலா நமக்
சின்னார்
கிச்சிலிச் சம்பா
காட்டுயானம்
பொம்மி
ஒட்டடம்
பால் குடவாழை
சொர்ணவாரி
தூயமல்லி
ஆத்தூர் கிச்சிலிச்சம்பா
தங்கச்சம்பா
ராஜமுடி
குழியடிச்சான்
நீலஞ் சம்பா
குண்டுக்கார்
கொத்தமல்லிச் சம்பா
கவுனி

கல்லுண்டை
முற்றின சம்பா
சேலம் சம்பா
மரத்தொண்டி
சிவப்புக்கவுனி
இலுப்பைப் பூச்சம்பா
திருப்பதி சாரம்
சிவப்புக் குருவிக்கார்
சண்டிக்கார்
குள்ளக்கார்
அனந்தனூர் சன்னம்
கைவரச்சம்பா
ஒட்டடையான்
பனங்காட்டுக் குடைவாழை
கொச்சின் சம்பா
பொன்னி
கருடன் சம்பா

“கருங்குறுவை என்ற ரகம் தோல் வியாதி, விஷக்கடி போன்றவற்றுக்கு ஏற்றது. கிச்சிலி சம்பா உடல் ஆற்றலுக்கும், சீரக சம்பா செரிமானத்துக்கும் உகந்தது என்பது போன்ற குறிப்புகளும் ஆயுர்வேதம் மற்றும் சித்தா நூல்களில் உள்ளன”

கள்ளிமடையான்
 காட்டுச்சம்பா
 மாப்பிள்ளைச் சம்பா
 சிறுகமணி சம்பா
 சண்டிகார்
 நீலம் சம்பா
 மடுமுழுங்கி
 சேலம் சன்னா
 பாசுமுகி
 காலா ஜீரா
 கைவரச் சம்பா
 சிங்கார்
 சித்த சன்னா

மாப்பிள்ளை சம்பா

 வைகுண்டா
 தீகார்
 சன்ன சம்பா
 முற்றின சம்பா
 ராஜமன்னார்
 மிளகுச் சம்பா
 ரத்தசாலி
 பிசினி
 கொத்தமல்லிச் சம்பா
 வாழைப்பூ சம்பா
 பொலிநெல்
 பால் குடைவாழை
 காட்டுப்பொன்னி
 ராஜயோகம்
 யானைக் கொம்பன்
 வெள்ளைக் குடைவாழை
 கம்பன் சம்பா
 ஆற்காடு கிச்சிலிச் சம்பா
 ராம ஜடாலே
வாலன் சம்பா
 இரவைப்பாண்டி
 ரசகடம்
 மரநெல்
 துளசி வாசனை சம்பா
 சீரகச் சம்பா
 காட்டுயானம்
 தூயமல்லி
 கல்லுண்டைச் சம்பா
 கண்டசாலி
 கந்தசாலா
 சிவன்சம்பா
 கலர்பாலை
 சீரகச் சன்னா
 ஒட்டடம்
 அனந்தனூர் சன்னம்
 பச்சை பெருமாள்
 கருத்தகார்
 கட்டச்சம்பா

செம்புளிச் சம்பா
 காலா நமக்
 சூரக்குறுவை
 கருப்பு சீரகச்சம்பா
 ராமஹல்லி
 குருவா
 கேரள சுந்தரி
 வெள்ளசீரா
 பாராபாங்க்
 காலாபத்தி பிளாக்
 மாலாபத்தி
 வடக்கன் சீரா
 தோடா பெருநெல்லு
 ஜீமாய்நாடு
 ஜீரக சாலா
 அரிமோடன்
 ஆனமோடன்
 பாளியாறல்
 குரியாகயாமா
 காலாச்சி பிட்

மரத்தொண்டி
 செந்நெல்
 கரிகஜனவள்ளி
 வெள்ளைக்கார்
  ரக்தாசுடி
 ராணிசால்
 நாசர்பாத்
 புல்பாப்ரி
 தங்கச் சம்பா
 மஞ்சள் பொன்னி
 அறுபதாம் குறுவை
 கொடகுவிளையான்
 துளுநாடான்
 சன்ன நெல்
 விஷ்ணுபோகம்
 ஆத்தூர் கிச்சிலிச் சம்பா
 சௌபாக்கி
 ஆம்பிமோகர்
 ஹரித்திகத்தி
 எளாய்ச்சி
 பாசுபதி
 தில்கஸ்தூரி

நமது தமிழக அரிசி வகைகள் யாவும் அதிக ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ மதிப்புகளைக் கொண்டுள்ளன. நம்மிடம் 5000 அரிசி வகைகள் அந்த காலத்தில் இருந்தன, ஆனால் இப்போது கிட்டத்தட்ட 200 ரகங்களை மட்டுமே தமிழ்நாட்டில் சேமிக்க முடிந்தது. இந்த 200 வகைகளும் அழிந்துவிடக் கூடாது. 

குறைந்த பட்சம் நம் தமிழ்நாட்டின் மதிப்புமிக்க இத்தகு அரிசி இனங்களைப் பற்றி இப்போது தெரிந்து கொண்டு அதை காப்பாற்றும் பொறுப்பு தமிழர்களான நமக்கு உண்டு.

மேற்படி அரிசி வகைகளை இணையம் மூலம் தேடி கண்டுபிடித்து ஒவ்வொரு வீட்டிலும் அரை கிலோ ஒரு கிலோவாவது ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் நாம் மேற்கொண்டால் அதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அத்தகு அரிசி வகைகளை, கைவிடாமல் விளைவித்துக் கொண்டு வருவார்கள்! 

இல்லை என்றால் அந்த மிச்ச சொச்சம் இருக்கிற அரிசி வகைகளும், நம்மிடமிருந்து அழிந்து போய்விடும்! அதனால் நாம் எல்லோரும் சேர்ந்து அதை காப்பாற்ற முன்வர வேண்டுகிறேன்!

இது பற்றி நமது பற்பல அரசியல் தலைவர்களும் தமிழக அரசாங்கமும் கூடிக் கலந்து பேசி "தமிழர் பாரம்பரிய நெல் ரகங்கள் காப்பாற்றும்" ஒரு அமைப்பை ஏற்படுத்தவும் மிக்க  அன்புரிமையுடன் கோருகிறேன்!

-YozenBalki 

(இவை இணையத்தில் திரட்டப்பட்ட தகவல்கள்! இது போன்ற நம் மரபு சார்ந்த செய்திகள், கடல் கடந்த நாடுகளில் வாழும் நம் தமிழின குடும்பங்களிலும் இது பரவ வேண்டும் என்று பதிவு செய்திருக்கிறேன்!)

புதன், 27 செப்டம்பர், 2023

நீதிபதி சந்துருவைப் போல வாழுங்கள்!

1996ல் எனக்கு திருமணம். 
அது சாதி மறுப்புக் காதல் மணம்.

அவர்கள் பெயர் பாரதி. 
பச்சையப்பன் கல்லூரியில் 
அவர் வரலாற்றுத்துறை பேராசிரியர். 

பாரதியின் வருகைக்குப் 
பிறகுதான் மறுபடியும் 
எனக்குக் குடும்பம் வந்தது. 
பொறுப்புகளும் வந்தன. தான் தோன்றித்தனமான வாழ்க்கை கட்டுப்பாட்டுக்கு வந்தது. 

எங்களுக்கு 
கீர்த்தி என்று ஒரு மகள். 

பொருளாதார ரீதியாக 
ஓரளவு நல்ல நிலை 
என்றாலும் 
பணத்துக்காக எந்த வழக்கையும் 
நான் எடுத்து நடத்தியதில்லை. 

ஏழைகளுக்காகவே அதிகம்
வாதாடி இருக்கிறேன்.

இந்நிலையில் 
அப்போது நீதிபதியாக இருந்த 
வி.ஆர்.கிருஷ்ணய்யர், 
என்னையும் நீதிபதி ஆகச் சொன்னார். 

அதை ஏற்று இருமுறை நீதிபதிக்காக 
விண்ணப்பித்தேன். 
'இவர் தீவிரவாதிகளுக்கான 
வக்கீல்’ என்று சொல்லி 
அப்போது தமிழக 
முதல்வராக இருந்த ஜெயலலிதா 
எனக்கு போஸ்டிங் போட மறுத்தார்.

பிறகு 2006 ஆம் ஆண்டில்
 ‘வழக்கறிஞர் என்பது தொழில். 

யாருக்காகவும் 
யாரும் வாதாடலாம். 
இதைக் காரணம் காட்டி 

நீதிபதி பொறுப்பைக் 
கொடுக்காமல் இருக்க முடியாது’ 
என உச்ச நீதி மன்றம் 
சொல்லிய பிறகு 
என்னை நீதிபதியாக நியமித்தார்கள். 

நீதிபதியாக நான் பணியில் 
இருந்த காலத்தில் 

*96 ஆயிரம்*
 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியிருக்கிறேன்.

இந்தியாவிலேயே 
இவ்வளவு வழக்குகளுக்கு 
யாரும் தீர்ப்புச் சொன்னதில்லை. 

ஆந்திராவைச் சேர்ந்த 
நீதிபதி ஒருவர், ‘

இந்திய நீதிமன்றங்களின் 

*சச்சின் சந்துருதான்*… 

அவரது ஸ்கோரை முறியடிக்க யாருமில்லை…’ 
என எழுதியிருக்கிறார்.

நான் அமர்ந்தால் 
எந்த வாய்தாவும் கிடையாது. 
தீர்ப்புதான். 

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட 
டிக்டேஷன் செய்வேன். 

*‘சந்துருவுக்கு மட்டும்*
*வாரத்துக்கு 8 நாள்’ என* 
வி.ஆர்.கிருஷ்ணய்யர்*
கிண்டல் அடிப்பார். 

நீதிபதிகளுக்குப் பாதுகாப்புக் 
காவலர் கொடுப்பது வழக்கம். 

எனக்கு அப்படி யாரும் வேண்டாம் 
என எழுதிக் கொடுத்தேன். 

மக்கள் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை. 

கார் கூட பயன்படுத்த மாட்டேன். 

பெரும்பாலும் 
பஸ், ரயில்தான்.

பதவிக்கு வந்ததுமே 
என் சொத்து விவரங்களைச் சமர்ப்பித்தேன். 

பல சீனியர்கள் இதனால் 
என் மீது கோபம் அடைந்தார்கள். 

கடைசியில் அனைவரும் 
சொத்துப் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் 
என வேண்டுகோள் வந்தது. 

எனது மகள் கீர்த்தி 
*பல் மருத்துவராக இருக்கிறார்*. ‘

ஒருவேளை நான் வழக்கறிஞராகி 
சுமாராக இருந்தால்… ‘

என்ன, 

சந்துரு மகளா இருந்துட்டு 
இப்படி சுமாரா இருக்க’ 
என்ற பேச்சு வரும். 
அதனால் வழக்கறிஞராக மாட்டேன்’ 
என கீர்த்தி சொல்லி விட்டார். 

என் நிழலில் வாழாமல் 
அவர் தன் துறையில் முன்னேறுவது 
மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு, 
என் மனைவிக்கு, 
மகளுக்கு 
எல்லாம் இந்த வாழ்க்கையைக் கொடுத்தது 
*கல்விதான்.*

 எங்களுக்கு மட்டுமில்லை… 
என் சகோதரர் களுக்கும் 
சகோதரிக்கும் 
கூட நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருப்பது 
*இந்த கல்வி மட்டும் தான்.*

நாம் மேற்கொள்ளும் பணியை 
எந்த அளவுக்கு சின்சியராக 
மக்கள் நலன் சார்ந்து 
செய்கிறோமோ 
அந்தளவுக்குச் சமூகத்தில் 
நமக்கு பெயர் கிடைக்கும். 
என் வாழ்க்கை 
எனக்கு உணர்த்தும் பாடம் இதுதான்.

ஓய்வுக்குப் பிறகு 
இன்றும் தினமும் படிக்கிறேன். 
படித்த நூல்களை லாரியில் 
ஏற்றி மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைப்பேன். 

இப்போது நடைபெறும் 
வழக்குகள் சார்ந்து 
என் கருத்துகளை வெளியிட்டு வருகிறேன். 

அந்த வகையிலேயே 
சமீபத்தில் 
மிசாவில் 
திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை 
என அவதூறு கிளம்பியபோது 

அதை மறுத்து ஆதாரங்களை வெளியிட்டேன். 

*மனித உரிமைகளுக்காகவும்* 
*ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்*
 என்றும் குரல் கொடுப்பேன்!

-நீதிபதி சந்துரு

கூடுதலாக அவர் 
இந்தியமாணவர்சங்கத்தில் 
SFI யில் செயல்பட்டவர் 
இடதுசாரி எண்ணம் கொண்டவர்.
 
நன்றி: 
சக்கரம்.காம்

Courtesy: Whatsapp University !!

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

சனாதன (அ) தர்மம் பெண்களுக்கு இதுதான் செய்தது!

பெண்கள் தங்களின் மார்பகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18  சாதிகள் பட்டியல் தெரியுமா?

இன்னைக்கு என்னமோ இந்து சனாதன தர்மம் பற்றி ரொம்ப பெருமையா பீத்திக்கிறானுங்க!!

(இதையெல்லாம் ஒழித்தது முற்போக்கான சில வெள்ளையர்கள், அதற்குப் பிறகு வந்த நமது நீதிக் கட்சி, அதற்கு பின் வந்த நம் பெரியார் இயக்க சிந்தனைகள் தாம்! 
தந்தை பெரியார் அவர்கள் இதே திருவாங்கூர் சமஸ்தானத்தில் குறிப்பிட்ட தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கவே கூடாது, நடந்தால் தீட்டு, என்ற கொடுமையை எதிர்த்து வைக்கம் போராட்டம் நிகழ்த்தி வெற்றி கண்டவர், என்பதும் நினைவு கூறத்தக்கது!)

அன்றைய திருவாங்கூர் சமாஸ்தானத்தின் மன்னர் ஆட்சியில் தோள் சேலை (மாராப்பு) அணிய தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள்: 

ஆக, இவர்கள் எல்லாம் மார்பகத்தை மூடாமலே எப்பொழுதும் இருக்க வேண்டும், பொது இடங்களில் வேலை பார்க்க வேண்டும் என்ற அநீதியான சட்டம் இருந்தது! ஒருவேளை அதில் ஒரு அழகிய பெண் இருந்தால் அந்த பெண்ணை மணமுடிக்கும் அல்லது வைத்துக் கொள்ளும் செல்வந்தர்கள் அந்த பெண்ணுக்கு மட்டும் சிறப்புரிமை வாங்க வேண்டும் என்றால் ம*** வரி கட்ட வேண்டும்! Breast Tax!!

அப்படி மு*** வரி கட்டாதவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு!
ஆதாரம்:
https://en.m.wikipedia.org/wiki/Breast_tax

இது ஏதோ மன்னர் காலத்தில் மட்டும் போடப்பட்ட சட்டமல்ல; ஈராயிரம் வருடங்களாக இந்த நாட்டில் இருந்த கொடுஞ்சட்டமே ஆகும்!


அந்த 18 சாதி பெண்கள் யார் யார் அறிவோமா?

1) குயவர் (மண்பாண்டம் தொழில் சாதியினர்)

2) நாடார் (மரம் ஏறும் தொழில் சாதியினர்)

3) கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் சாதியினர் (தேவர்)

4) துலுக்கப்பட்டர் (மாப்பிள்ளை) சாதியினர்.

5) இடையர் (கோனார்).

6) நாவிதர் (முடி திருத்தம்) சாதியினர்.

7) வண்ணார் ( சலவை தொழில்) சாதியினர்.

😎 சக்கிலியர் (துப்புரவு தொழில்) சாதியினர்.

9) பறையர் (பறையடிக்கும் தொழில்) சாதியினர்.

10) நசுரானியர் (சிரியன் கிறிஸ்தவர்) சாதியினர்.

11) குறவர் (கூடை முடைதல்) சாதியினர்.

12) வாணியர் (வாணிய செட்டியார்) சாதியினர்.

13) ஈழவர், தீயர் (இல்லத்து பிள்ளைமார்) மற்றும் அந்த சாதியோடு தொடர்புடைய மற்றும் போர் தொழில் செய்த தீயர் சாதியினர்.

14) பாணர் (ஆடல், பாடலுடன் கூடிய கலைத் தொழில்) சாதியினர். 

15) புலையர் (பறையருள் ஓர் உட்சாதி- வேட்டைத் தொழில்) சாதியினர்.

16) கம்மாளர் (ஆசாரி - இன்றைய காலத்தில் 'விஷ்வகர்மா' என்ற பெயரால் ஏமாற்றப்படும்) கைவினை தொழில் சாதியினர்.

17) கைக்கோளர் (முதலியார்) சாதியினர்.

18) பரவர் (முத்தரையர்) சாதியினர்.

மேலே குறிப்பிட்டுள்ள சாதியினர்கள் சனாதனம் தலைவிரித்தாடும் போது,
எந்த சனாதனிகள் இவர்களுக்குக் குலத் தொழிலைச் செய்ய நிர்பந்தித்தார்களோ, அதே சனாதனிகள்தான், அன்றைக்கு நிர்ப்பந்தித்த தொழிலை, இன்றைக்கு சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு மூலம் இப்போது 'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் ஸனாதனத் திட்டத்தை அறிவித்து, 'அவர்களுக்கான குலத் தொழிலை ஊக்குவிப்போம்' என வஞ்சகமாக அறிவித்திருக்கிறது.

மீண்டும் அனைவருக்குமான கல்வியை மறுத்து, முன்னேற விடாமல் தடுப்பதற்கு இந்த மாதிரியான சனாதன திட்டத்தை அறிவித்திருக்கிறது சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு. 

அதனால்தான், "சனாதனத்தை ஒழிப்போம்!" என்று ஓங்காரமான குரல் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது; ஒலிக்கட்டும்!

-From Twitter Friends 

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

பிள்ளையாரை முன்ன போல பெரியாரிஸ்டுகள் உடைக்க முடியுமா?

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா? 

இது இப்பொழுது சங்கீகள் சனாதனவாதிகள் அடிக்கடி கேட்கும் கேள்வி!!

பெரியார் காலத்தில் அவரது செயல்பாட்டுக்கு எதிர்வினையாற்றி தோற்றுப் போன RSS & சங்கிகள், தந்தை பெரியார் இயக்கத்தைப் பார்த்து இப்போது சவால் விடுகிறார்கள்.

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா? ராமனை செருப்பால் அடிச்ச மாதிரி இப்போ அடிக்க முடியுமா? என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்கு நமது எதிர் வினாக்கள் இவை:

1) முன்பு எங்கள் மக்களைப்பார்த்து "சூத்திரப்பயலே தள்ளிப் போடா" என்று சொன்னீர்களே! இப்போது அது மாதிரி சொல்ல முடியுமா?

2) எங்கள் மக்களை தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

3) முன்பு நாங்கள் தொட்ட பொருளைத் தண்ணீர் தெளித்து எடுத்துச் செல்வீர்களே! இப்போது அது மாதிரி செய்ய முடியுமா?

4) முன்பு சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

5) முன்பு தவம் இருந்த சம்பூகனின் சிரம் கொய்தீர்களே! இப்போது அதுபோலச் செய்ய முடியுமா?

6) முன்பு ஏகலைவன் கட்டைவிரல் வாங்கியதுபோல இப்போது கட்டைவிரலை வாங்க முடியுமா?

7) முன்பு எங்களைக் காலில் செருப்பணியாதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

😎 முன்பு தமிழன் கட்டிவைத்த சத்திரத்துச் சாப்பாடு பார்ப்பானுக்கு மட்டும்தான் என்று தின்று கொழுத்தீர்களே! இப்போது அப்படித் தின்று தீர்க்க முடியுமா?

9) முன்பு எங்கள் தோளில் துண்டு போடாதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?

10) முன்பு எங்களைத் தெருவில் நடக்காதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?

11) முன்பு எங்களை முழங்காலுக்குக் கீழ் வேட்டி அணியாதே என்றீர்களே! 

இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

12) முன்பு எங்களைக் குடைபிடிக்காதே என்று சொன்னீர்களே! இன்று அப்படிச் சொல்ல முடியுமா?

13) முன்பு தீண்டத்தகாதவதர் எச்சில் துப்ப கழுத்திலே கலயத்தைக் கட்டிக்கொண்டு நடக்க வைத்தீர்களே! அதுபோல இப்போது செய்ய முடியுமா?

14) எங்கள் முன்னோர் தலைமுடி வளர்த்தால் முண்டாசு கட்டினால் அதற்கெல்லாம் வரி போடடீர்களே! அதுபோல இப்போது வரி போட முடியுமா?

15) திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஒவ்வாரு ஜாதிக்காரனும் நம்பூதிரிக்கு இவ்வளவு அடி தூரத்தில்தான் நின்று பேச முடியும் என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

16) முன்பு எங்கள் பெண்கள் ஜாக்கெட் அணியக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

17) முன்பு RSS தோன்றிய மராட்டியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கால் பட்டால் தீட்டு, அவர்கள் நடந்த தடத்தை அழிக்க விளக்குமாற்றைக் கட்டி நடக்க வைத்தீர்களே, இப்போது அவ்வாறு செய்ய முடியுமா?

18) முன்பு எங்கள் தாய்மார்கள் ஜாக்கெட் அணிந்தால் முலைவரி போட்டீர்களே, இன்று அதுபோல் வரி போட முடியுமா?

19) முன்பு எங்கள் பிள்ளைகளுக்கு மங்கலகரமான உயர்வான பெயர் வைக்கக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

20) முன்பு சீரங்கம் போன்ற கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று போர்டு வைத்தீர்களே இப்போது அப்படி வைக்க முடியுமா?

21) முன்பெல்லாம் படிப்பு எங்களுக்கு மட்டும்தான் வரும். உனக்கெல்லாம் வராது என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

22) எங்களுக்கு மட்டும்தான் தகுதி திறமை இருக்கு. உங்களுக்கு இல்லேன்னு சொன்னீங்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

23) முன்பு குலக்கல்வித்திட்டம் கொண்டு வந்து வண்ணான் பிள்ளை துணி வெளுக்கனும். நாவிதன் பிள்ளை முடிவெட்டனும். என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

24) அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குன்னு முன்பு சொன்னீங்களே! அதுபோல இப்போது சொல்ல முடியுமா?

25)இவன் குயவன் மண்பாண்டம் செய்கிறான். இவன் வண்ணான் துணி வெளுக்கிறான். இவர் அய்யர் மிகவும் நல்லவர். பாடம் படிக்கிறார் என்று பாடம் வைத்தீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

26)அன்று விதவைப் பெண்களை வெள்ளைப் புடவை உடுத்தி மூலையில் உட்கார வைத்தீர்களே அதுபோல இன்று செய்ய முடியுமா?

27) ராஜாஜி சொன்னதுபோல உங்கள் பிள்ளைகளை உயர் படிப்பு படிக்க வைக்காதீங்க... குலத்தொழிலைக் கற்றுக் கொடுங்கள் என்று சொல்ல முடியுமா?

28) முன்பு கணவனை இழந்த பெண்ணை சதி என்ற பெயரால் உயிரோடு கொளுத்தினீர்களே! அதுபோல இப்போது கொளுத்த முடியுமா?

29) முன்பு எட்டு வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்று குழந்தைத் திருமணத்தைச் செய்து வைத்தீர்களே! இன்று அதுபோலச் செய்ய முடியுமா?

30) முன்பு கன்னிகாதானம் என்ற பெயரால் பெண்ணையே தானமாகப் பெற்றீர்களே! அதுபோல் இன்று செய்ய முடியுமா?

31) தேவதாசி முறையை ஆதரித்த நீங்கள் அதனை மீண்டும் கொண்டுவருவோம் என்று உங்களால் துணிச்சலாகச் சொல்ல முடியுமா?

32) பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் பங்கு இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

33) முன்பு மன்னர்களை ஏமாற்றி ஊர்களையே தானமாகப் பெற்றீர்களே! இன்று அதுபோல் ஏமாற்ற முடியுமா?

34) 5 வயசு பார்ப்பன பொடியன் 60 வயசு முதியவரை டேய் குப்பா , டேய் முனியான்னு கூப்பிட்டீங்களே ! இப்ப அப்படி கூப்பிட முடியுமா ?

35. இவை எதுவும்கூட வேண்டாம் உங்கள் திட்டமான மனுதர்மத்தை இந்திய அரசியல் சட்டத்துக்குப் பதிலாக மீண்டும் கொண்டு வருவோம் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

இப்படி அடுக்கடுக்கான வினாக்களை எங்களாலும் தொடுக்க முடியும். இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துத் தந்தை பெரியார் போராடியபோது அதற்கு எதிராக பிள்ளையாரையும் ராமனையும் நீங்கள் கொண்டு வந்ததால்தான் பிள்ளையாரை உடைத்தார். ராமன் படத்தை எரித்தார்.

பெரியாரின் உழைப்பால் பலன் பெற்ற மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

இன்று அதனையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதால் பக்தியைக் காட்டி சனாதன தர்மம் என்று சொல்லி மக்களை ஏய்க்கப் பார்க்கிறீர்கள்! அதற்கெல்லாம் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஏமாறப் போவது கடைசியில் நீங்கள்தான்!

By
தோழர் 
கிருஷ் from Twitter
5th September 2023

ரொம்ப நல்லா இருந்தது! அதான்
அவரது அனுமதி பெற்று இங்கு பதிவிட்டு இருக்கிறேன்!

https://twitter.com/krish_itz?t=ZZVHv3KS8P1cxQ1ICcW52w&s=09

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

வரி மேல் வரி போட்டு சாகடிக்கிறீங்க?

பொதுமக்கள் நாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதம் income tax தருகிறோம் (அரசுக்கு). மீதி சம்பளத்தில் (28 சதவீதம் GST என வாங்கும் பொருளுக்கு கட்டுகிறோம். பெட்ரோல் மற்றும் பல பொருட்கள் GST யில் சேர்க்காமல் 60 சதவீதத்திற்கும் மேல் TAX கட்டுகிறோம். 

மொத்தத்தில் சராசரி 50 சதவீதம் வாங்கும் பொருளுக்கும் உங்களிடமே (அரசுக்கு) வரி வருவாய் தருகிறோம்.

ஆக 30+50= 80 சதவீத வருமானத்தை உங்கள்(அரசு) கஜானாவில் சேர்த்துள்ள எங்களைப் பார்த்து

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ? என கேட்பவர்கள் கவனிக்க!

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்
செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….!
(நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! )

சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில்
பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான
மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின்
ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும்.
இன்னும் அதிகம் பேர்" தமது மான்யத்தை தியாகம் செய்ய ”
முன் வரவேண்டும்” என்றார்.

சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். 

“நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்”
என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம் அமைந்திருக்கிறது…. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி
வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்களேன்
என்று கேட்டிருக்கிறார்…

அந்த கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில்
அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும்
உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்….

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு –

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக் கொடுக்க
முன்வர வேண்டுமென்று,
வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,
என் செலவிலேயே – வேண்டி, விரும்பி
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!

– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே, அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை
உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும்- ஒருமித்த குரலில் ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி
நிறைவேற்றி கொள்கிறீர்கள் …?

– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை - எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் என்று 
காண்பது …?

– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி
ஏஞ்சலா மெர்கெல் -தன் அலுவலகத்திற்கு பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –

– கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்த இந்தியத் திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு பயணிப்பது எப்படி …?

– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பது உங்கள்
நினைவிற்கு வருவதே இல்லையா …?

– நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும்
தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும் பயணப்படுவதற்காக – உருப்படியான வேலை எதுவும் இல்லாமல், சும்மாவே ஊர்சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக 
எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரியாகக் கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் நினைத்துப்
பார்த்திருக்கிறீர்களா ?

– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமென்று குடிமக்களாகிய நாங்கள்
எதிர்பார்க்கலாமா …?
– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவ மனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. உங்கள் சக இந்தியர்கள் எத்தனை பேர் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல்
தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா …?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்தக்காசில் செய்துக்
கொள்ளும் நாள் என்றாவது வருமா…. ?

– அப்படி என்ன தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு Z என்றும் Z+ என்றும் சொல்லிக் கொண்டு உங்கள் மந்திரிகள்? திரிகிறார்கள்!
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரியிலிருந்து வருவது தானே ?

– இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்று மாறும் …?

– சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கே பற்றாமல் 
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின் நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –

– உங்களுக்கு ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள் …?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே….
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லையே
என்றா இந்த மலிவு விலை ….?

– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன் தான்
காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை என்றுமே உறுத்தவில்லையா ?

– நாங்கள் செலுத்தும் வரிகள் தான் எத்தனையெத்தனை …

Income tax,
Service Tax,
Professional Tax,
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Automobile Registration Tax 
Entertainment tax
Property Tax – etc etc.

சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக் கொள்ளும்
இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வசூல்
செய்யப்படுகிறது…?

உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம்
கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக் கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் வருமா …?

இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – என்றைக்கு,
உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள
இந்த சலுகைகள் அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறீர்களோ –

அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை 
நீங்கள் கோராமலேயே நாங்கள் அனைவரும் அவசியம் விட்டுக் கொடுப்போம்…!!! 
                   
🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
WhatsApp இல் வந்தது இது!

இச்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம், 
நன்றி !!    

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

நாங்குநேரி பள்ளிக்கூட ஜாதீய அரிவாள் வெட்டு;

சமீபத்தில் தமிழகத்தில் "நாங்குநேரியில்" ஒரு தலித் பள்ளிக்கூட மாணவனை வேறு சமூகத்தை சார்ந்த மூன்று மாணவர்கள், வீடு புகுந்து சரமாரியாக கத்தியால் வெட்டி இருக்கிறார்கள்! 

 வயது முதிர்ந்தவர்களிடம் தமிழகத்தில் ஓரளவுக்கு இருந்து வந்த ஜாதிப் பிரிவினை வெறுப்பு இன்று பள்ளிக் குழந்தைகள் வரை இறங்கி வந்திருக்கிறது!

அதற்குக் காரணம் என்ன? 

கிராமங்களில் நிலை பெற்று வாழும் இடங்களில் ஊரும் சேரியும் தனித்தனியாக இருக்கின்றன! ஊர் மாறும் பொழுது ஜாதிப் பெருமை பேசுவது ஒழிந்து போய் விடுகிறது!

அது, சமீப காலமாக குறிப்பாக தந்தை பெரியாரின் மறைவுக்குப் பின்னால் அரசியல் பொதுக்கூட்டங்களில் ஜாதிக் கட்சி தலைவர்கள் பலரும் ஆளாளுக்கு தங்களுக்கான ஓட்டு வங்கியை தக்க வைத்துக்கொள்ள பேசி வரும் "ஷத்திரிய வீரம்" பற்றிய பேச்சுகளே ஆகும்! 

அது ஒரு விதமான தவறான வீண் பெருமையை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மனதில் விதைத்து அவர்களை ஒரு ஜாதீய வெறி பிடித்த தீவிரவாதிகளாக மாற்றுகிறது! அவர்கள் இனி கல்வியில் கவனம் செலுத்த மாட்டார்கள்; ஒரு தலைவனுக்கு அடிமையாக ஜாதிப் பெருமை மட்டும் பேசிக் கொண்டு திரிந்து கல்வி வேலைவாய்ப்பு மீது கவனம் செலுத்தாமல் சீரழிந்து போவார்கள்!

நீங்கள் ஒன்றை கூர்மையாக கவனித்து பார்த்திருக்கிறீர்களா? காதல் திருமணங்களையும், சாதி மறுப்பு திருமணங்களையும் இந்தியாவிலேயே ஒரு கொள்கை ரீதியாக ஒரு தொடர்ந்த வேலைத் திட்டமாக தந்தை பெரியார் துவங்கி வைத்த திராவிடர் இயக்கங்கள் மட்டுமே தொடர்ந்து செய்து வந்தன/ வருகின்றன/ வரும்! 

ஏனென்றால், வெறும் கல்வி அறிவு வழியாக மட்டுமே ஒரு அடிப்படை சமூகப் புரட்சியைச் செய்துவிட முடியாது!

அதற்கு ஒரு தொடர்ந்த உயர்நோக்கம் உள்ள சமூகத் தொண்டு, இடையறாமல் நடைபெற வேண்டும்! அதனால் தான் அம்பேத்கர் இயக்கங்கள், வெறும் ஓட்டு அரசியல் மட்டும் பேசிக் கொண்டு வடக்கில் படுதோல்வி அடைந்து விட்டன!

ஈராயிரம் வருடத்திற்கு மேலான இறுக்கமான சாதி அமைப்பு, கொஞ்சமாவது தளர்ந்து இன்று நமது தமிழகத்தில் இயங்கும் பற்பல திருமண பதிவு மையங்களில் "எந்த சாதியானாலும் பரவாயில்லை!" என்று பேசும் நிலை தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது! 

அதற்கு மூல காரணம் பெரியார் இயக்கங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும், சொல்ல போனால் அத்தகு சாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு தரும் சாதி மறுப்பு திருமணங்கள் தாம்!

ஆனால் நமக்கு கொஞ்சம் கெட்ட காலமாக, வன்னியர் கட்சி (பா.ம.க) ராமதாஸ், புதிய தமிழகம் கிருஷ்ணமூர்த்தி போன்ற ஜாதிக்கட்சி ஆட்களால் தமிழகத்தில் சாதியின் இறுக்கம் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது! 

அது ஆரிய பார்ப்பன பாஜகவுக்கு குதூகலம் ஏற்படுத்தியுள்ளது! ஆரிய பாஜகவுக்கும் ஜாதி கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைந்த நன்மைகள் இருக்கின்றனவே!

மேலும் பார்ப்பனீய சனாதன சாதிக் கட்சிகளை பாஜகவினர் உள்ளே கொண்டு வந்து வடநாடு போல தமிழ்நாட்டை துர்நாற்றம் வீசும் வர்ணாஸ்ரம சாக்கடையாக மாற்றத் துடிக்கிறார்கள்!

ஆனாலும் நாம் அந்த சாதி அமைப்பை, உயர் கல்வி மற்றும் பெரியாரிய தொடர் பரப்புரைகள் வழியாக உடைத்தெறிந்து ஒரு சமத்துவ சமூகத்தை தமிழ்நாட்டில் உருவாக்க முடியும்! அது ஒன்றே வழி!

சரி! அதை, பெரியார் இயக்கங்கள் துணை இன்றி வெறும் அம்பேத்கர் இயக்கங்கள் வழியாக செய்ய முடியுமா என்றால் நிச்சயம் முடியாது! காரணம் அம்பேத்கர் இயக்கம் என்று வரும் பொழுது அது தலித்துகள் பெரும்பான்மை பங்கு வகிப்பது தானே என்று உயர் தட்டு வர்க்கம் சட்டென வெறுப்பு கொள்கிறது! 

அதில் கலந்து பெரும்பான்மைச் சமூகம் எவரும் பங்களிப்புச் செய்ய முன் வருவதில்லை! (Don't say about Exceptions. Exceptions cannot be a Rule)

ஏழைகள் பேசும் கம்யூனிசத்தை பணக்காரர்கள் எப்படி ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ, அப்படியே சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் பேசும் சமத்துவ நெறியை உயர் வகுப்பினர் என்று தம்மைக் கருதுபவர்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள்!

அங்குதான் அனைத்து சமூக மக்களும் கலந்து பங்களிக்கும் தந்தை பெரியாரின் இயக்கங்கள் நமக்கு ஒரு நம்பிக்கை ஊட்டுகின்றன! ஒரு சமரசம் இன்றி செயல்பட்டவாறு தொடர்ந்த சமூக மாற்றத்தை அவை ஏற்படுத்தி வருகின்றன! 

சொல்லப் போனால், இந்தியாவின் பிற மாநிலங்களிலேயே தமிழகத்தில் மட்டும் தான் சாதி மறுப்பு திருமணங்களுக்கு 95% அளவுக்கேனும் சட்டப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளது! சங்க காலம் போல காதல் மனம் தான் ஜாதியை ஒழிக்கும் சிறந்த துணையாகும்! 

அதைப் புரிந்து கொண்ட ஜாதி வெறியர்கள் காதல் மணத்துக்கும் இப்போது தடையாக இருந்து அவர்களைக் கொலை செய்யும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்! அங்கு சாதி ஓட்டு வாங்கி பிழைக்கும் அரசியல் கட்சிகள் மவுனம் சாதிக்கும் நிலை ஏற்படுகிறது!

ஆனாலும், இங்கு ஓட்டு கேட்கும் அரசியல் கட்சியாக இல்லாமல் வெறும் சமுதாய இயக்கமாக செயல்படுகின்ற தலைவர்களைக் கொண்ட பெரியார் இயக்கங்கள் உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அதிகம் காணப்படுகின்றன! 

அதுவே தந்தை பெரியார் மீது நாம் வைக்கும் பெருமதிப்பிற்கு இன்னும் ஆழமான காரணமாக அமைந்து விடுகிறது!

தந்தை பெரியார் ஆரம்பித்த திராவிடர் கழகத்தை இன்று வரை வழி நடத்தும் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், தோழர் கோவை கு. ராமகிருஷ்ணன், தோழர் கொளத்தூர் மணி அவர்கள், மே 17 இயக்க தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் போன்றோர் எந்தவித சிறு சுயநலமும் இல்லாமல் தொடர் பரப்புரை செய்கிறார்கள்! அவர்கள் பேசுகின்ற நடத்துகின்ற, தமிழ் மக்களை பண்படுத்தி வரும் சமூகப் புரட்சிதான் என்ன என்பதை சற்று நிதானமாக நாம் படித்தால் அதன் வீரியத்தை அதனால் நாம் பெற்றுவரும் நற்பலனை நன்கு உணரலாம்!

அது புரிய வேண்டும் என்றால் பிற மாநிலத்து சாதி மறுப்பு இணையர்கள் தமிழ்நாட்டில் வந்து அடைக்கலம் புகுந்து திருமணம் செய்து கொள்வது ஏன் என்றும் நமக்கு எளிதாகப் புரியும்!

ஆக, இங்கு கடைசியாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், இந்தியாவில் ஒரு சமத்துவ சமூகம், சாதியற்ற சமூகம் உருவாக வேண்டும் என்றால் தந்தை பெரியாரின் கொள்கைகள் பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்!

சனாதன அதர்மத்தை, அது ஏற்படுத்திய ஜாதியை ஒழிக்க பெரியாரின்  கொள்கைகள் என்னும் படைக்கலன்கள் தான் முக்கிய பங்கு வகிக்க முடியும்! அவை மட்டுமே ஒழிக்கும் கருவிகளாக செயல்படும்! அதற்கு மாறாக கல்வி கற்பது மட்டுமே போதும், ஜாதியை ஒழித்து விடலாம் என்ற அம்பேத்கர் வழியில் சென்றால் அது வெறும் கேடயத்தை தூக்கிக்கொண்டு போருக்கு செல்வது போன்றதாகும்!

கேடயங்கள் வெறும் தற்காப்பு வேலைகளுக்கு பயன்படுகின்றன; அது முன்னேறிச் சென்று தீமைகளை அழிக்க பயன்படாது!

கேடயத்தினால் பெரும் பயனேதும் கிட்டி விடாது! அதையே நாம் நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

ஆனால், படைக்கலன்கள் என்பன சமூகத் தீமைகளை, சாதீய கட்டுமானங்களை, நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை எல்லாம் ஒழிக்கும் கருவிகளாக செயல்படும் சக்தி மிக்கவை!

ஆகவே தந்தைப் பெரியாரைப் புறம் தள்ளிவிட்டு இந்தியாவில் ஒரு பெரிய சமூக புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று சில பல தலைவர்கள் நினைப்பதும் பேசுவதும் வெறும் பகல் கனவே ஆகும்! 

நான் சொல்வதை நீங்கள் யோசித்துப் பாருங்கள்!

-YozenBalki 

💫💫💫💫

சனி, 24 ஜூன், 2023

Gandhi ji 6 Years; Nehru ji 9 years in Prison


How many years Gandhi ji was in prison?


Mahatma Gandhi, the renowned leader of the Indian independence movement, spent a total of around 6 years in prison throughout his life. His time in prison was divided into several periods spanning different years. Here is a breakdown of the major imprisonments Gandhi faced:


South Africa Imprisonment: Gandhi's first imprisonment occurred in South Africa between 1908 and 1909. He was imprisoned for organizing civil disobedience campaigns against discriminatory laws targeting the Indian community.


Champaran Satyagraha: In 1917, Gandhi led the Champaran Satyagraha movement in Bihar, India, supporting the rights of indigo farmers. He was arrested and spent a few weeks in prison.


Kheda Satyagraha: In 1918, Gandhi initiated the Kheda Satyagraha in Gujarat, India, protesting against unfair taxation during a severe famine. He was arrested and imprisoned for a short period.


Non-Cooperation Movement: During the non-cooperation movement launched in 1920, Gandhi was arrested in March 1922 for his involvement in the movement. He was sentenced to six years of imprisonment but was released in February 1924 due to health concerns.


Salt March: The Salt March, also known as the Dandi March, took place in 1930. Gandhi and a group of followers marched to the Arabian Sea to produce salt in defiance of the British salt monopoly. Following the march, Gandhi was arrested in May 1930 and was sentenced to one year of imprisonment.


Quit India Movement: In 1942, Gandhi launched the Quit India Movement, demanding an end to British rule in India. He and other leaders were arrested on 9th August 1942, and he remained imprisoned until 6th May 1944, making it nearly two years of imprisonment.


These are the significant periods during which Gandhi was imprisoned. In total, the years of imprisonment amount to approximately 6 years.


🌸☘️🌸☘️🌸☘️


How many total years Nehru ji was in prison?


Jawaharlal Nehru, the first Prime Minister of India, spent a total of approximately 9 years in prison. His imprisonments occurred during different periods of the Indian independence movement. Here is a breakdown of the major imprisonments Nehru faced:


Civil Disobedience Movement: Nehru was arrested multiple times during the Civil Disobedience Movement, which began in 1930. Although his individual imprisonments were relatively short, they accumulated over time. In total, Nehru spent a few years in prison during this movement.


Quit India Movement: Nehru actively participated in the Quit India Movement, launched in 1942, which aimed for complete independence from British rule. He was arrested on 9th August 1942, along with other prominent leaders, and was released on 15th June 1945, after nearly three years of imprisonment.


Overall, Nehru's total years in prison amount to approximately 9 years. It's important to note that these periods of imprisonment were not continuous but rather scattered across different years, reflecting his active involvement in the struggle for India's independence.


Courtesy: chatGPT 


-YozenBalki 

Compilation

🌸☘️🌸☘️🌸☘️

செவ்வாய், 20 ஜூன், 2023

Why Do I like the Mandukya Upanishad?

எனக்கு மாண்டூக்ய உபநிஷத் ரொம்ப ரொம்ப பிடிக்கும்! அது எதனால் என்றால், உலகத்தில் எந்த புத்தகத்திலும் சொல்லப்படாத ஒரு செய்தி அதில் காணப்படுகிறது!

உண்மையை அறிய முழு தரவுகள் தேவைப்படுகின்றன! அரைகுறை தரவுகள், அரைகுறை உண்மைகளையே உணர்த்துவனவாகும்! அது முழு உண்மையாகாது!

உண்மை என்பது மூன்று நிலைகளிலும் அறியப்பட வேண்டும்!
அவை
1. நனவு (ஜாக்ரதா)
2. கனவு (சொப்பனா)
3. உறக்கம் (சுசூப்தி)

இந்த மூன்று நிலைகளிலும் ஊடாக செல்வது துரியம் என்ற முழு விழிப்பு நிலையாகும்! (The absolute awareness)

இதைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே இந்த மாண்டூக்ய உபநிஷத்தின் உரையாசிரியர் கவுட பாதர் குறிப்பிடுவதாக இந்த புத்தகத்துக்கு முன்னுரை வழங்கிய சிஎஸ்ஐ அவர்கள் குறிப்பிடுகிறார்!

உலகத்தில் வேறு எந்த புத்தகமும் இந்த மூன்று நிலைகளிலுமான விழிப்புணர்வு பற்றி எங்குமே குறிப்பிடவே இல்லை எனலாம்! எனக்கு அது ஒரு இன்பமயமான மாபெரும் அதிர்ச்சி!

அதுமட்டுமின்றி இந்த புத்தகம் உடல் மனம் ஆன்மா என்ற மூன்று கூறுகளை பற்றியும் அய்யம் திரிபற விளக்குகிறது!

அத்தகு மாண்டூக்ய உபநிஷத்தின் பெருமைகள் பற்றி 1998 ஆம் ஆண்டு சென்னை வானொலி பண்பலை வரிசையில் நான் விரிவாக பேசி உள்ளேன்!

ஆர்வமும் வாய்ப்பும் உள்ளவர்கள் இந்த புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்!

மிக்க அன்புடன்,
Yozen Balki
____________________________________

"The Mandukya Upanishad"
Book

With Gaudapada's Karika and Sankara's Commentary

Translated by Swami Nikhilananda


Published by:
Advaita Ashrama
(Publication House of Ramakrishna Math)
5 Dehi Entally Road
Kolkata 700 014
Rs.150.00

Foreword:

The unique feature of Mändükya lies in this that while all the other Upanisads deal with the several phases of Vedanta, such as Religion, Theology, Scholasticism, Mysticism, Science, Metaphysica and Philosophy, Mandükya deals exclusively with Philosophy, as defined by the most modern authorities. 

The three fundamental problems of philosophy, according to this special treatise are,. (1) the nature of the external (material) and the internal (mental) worlds; (2) the nature of consciousness; and (3) the meaning of causality. 

Each of these subjects is dealt with in a chapter. whole at the very commencement. The first chapter sums up the There is nothing more for philosophy to do. While it shows how the most advanced modern sciences and modern philosophies are approaching its conclusions.

It gives to the world of our own times its central doctrine that partial data give partial truth, whereas the totality of data alone gives perfect truth. 

The Totality' of data we have only when the three states of waking, dream and deep-sleep are co-ordinated for investigation. 

Endless will be the systems of philosophy, if based on the waking state only. 

Above all inasmuch as this philosophy holds that mere 'satis- faction' is no criterion of truth, the best preparation for a study of Vedanta Philosophy is a training in scientific method, but with a deter mination to get at the very end: To stop not till the goal (of Truth) is reached.'

VSI (V. Subramania Iyer)


ஞாயிறு, 18 ஜூன், 2023

தந்தையர் தினத்தில் ஒரு மகளின் கடிதம்!

என் தாயுமானவருக்கு!

இல்லையில்லை…என் யாதுமானவருக்கு (மாதா, பிதா,குரு,தெய்வமென அத்தனையுமான என் அப்பாவுக்கு) இனிய தந்தையர் தின வாழ்த்துகள்
அப்பா!! ❤❤❤

மகள்களுக்கு அப்பா என்பவர் எப்போதும் ஆதர்சமே! 😍
என் அப்பாவுக்கு நானே இளவரசி!! 😍
  
ஆண்கள் அற்புதமானவர்களே! அதிலும் அப்பாக்கள் அதி அற்புதமானவர்கள்!! 
😍😍😍😍
      
மகளுக்காக அப்பாக்கள் என்னவேணாலும் செய்யத் தயாரா இருப்பாங்க! என்னோட அப்பாவுக்கு நான் கடைக்குட்டி பொண்ணு, அதனால ரொம்ப ரொம்ப செல்லம்! அம்மாவே பொறாமையா பாக்குற அளவுக்கு அப்பாவுக்கு பாசம் என்மேல!! 😍😍😍

அம்மா பாசம் தான் உலகத்துல ரொம்ப பெருசு, ஆனா என்னோட அப்பாவோ, அம்மாவுக்கும் கொஞ்சம் மேலதான்!! ❤

எங்க அப்பா விவசாயி! அதனால இயற்கை மேல அம்புட்டு நேசம்! அப்பாவுக்கு, விவசாயத்துக்கு நிகரா அப்பா நேசிக்குற விசயம்னா அது நிச்சயமா நான் தான்!! 😍😍😍

இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி அப்பா சின்ன வயசுல ஆசைப்பட்டு வாங்கவே முடியாம போன புல்லட் அவங்க திருமணநாள் பரிசா வாங்கிக்குடுத்தேன்! 

அதப்பாத்து சின்னப் புள்ளை போல "அந்த கம்பீரமான கணபதி" கண்கள்ல சந்தோச கண்ணீர பார்த்த தருணம் அவ்வளவு நெகிழ்வு!! ❤
    
இன்னைக்கு நான் என்னவா இருக்கேனோ அது அத்தனையும் சாத்தியமானது கணபதிக்கு மகளா பிறந்த ஒற்றைக்காரணமே! 😍😍😍
 
சமீபத்துல ஒருபதிவு பாத்தேன்! சாகுற தருணத்துல யாரோட இருக்கனும்னு நினைப்பீங்கன்னு ஒரு கேள்வி! சத்தியமா எனக்கு அப்பாதான் வேணும், என்னோட இறுதி தருணங்களில்!! 🙏🙏

தமிழ் மேல காதல், கண்ணன் மேல பித்து,இயற்கை மீதான நேசம்னு அத்தனை நற்குணங்களும் அப்பாவிடமிருந்து வந்தவையே எனக்கு!

படிப்பு வேலைன்னு நான் வாழ்க்கையில எத்தனை உயரத்த தொட்டாலும் அப்பாவோட செல்ல பொண்ணுன்னு சொல்றதுல தான் கர்வமே எனக்கு!! 😍😍😍
   
நான் பார்த்த முதல் ஆண் அப்பாதான்! அதனாலயே ஆண்கள் மீதான என்னோட பார்வையும் எப்பவும் மரியாதையானதே!! 😍

உலகத்துல சிறந்த அப்பான்னா அது என்னோட அப்பாதான்! இந்தப் பிறவி மட்டுமில்லாம இன்னும் எத்தனை பிறவியெடுத்தாலும் உங்களுக்கே மகளா பிறக்கணும் அப்பா!! 🙏🙏

இனிய தந்தையர் தின வாழ்த்துகள், தந்தையர் அனைவருக்கும்!! 🌹🌹🌹🌹

Courtesy: 
By
நான் காணாமலே 
மகளாகி நின்ற...
மதுமிதா கணபதி from Twitter Circle

சனி, 10 ஜூன், 2023

திமுகவில் நுழைய முயலும் சில பார்ப்பனர்கள்!!

தமிழக அரசியலில், குறிப்பாக திமுகவில் பார்ப்பனர்கள் நுழைய இருக்கிறார்கள்!

அது ஏன், எப்படி?

ஆர்எஸ்எஸ் வழிவந்த பாஜகவில் இப்போது உள்ள மோடி-அமித்ஷா கூட்டணி பார்ப்பனர்களை நீண்ட காலமாக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்! 

அதனால்தான் அவர்கள் சுப்பிரமணியசாமியை கிட்டவே சேர்க்கவில்லை! "அவரும் தலையால தண்ணி குடிச்சி பார்த்துட்டர்...!!"

தமிழகத்திலும் பார்ப்பனர் அல்லாத பாஜக தலைமைகளை அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்!

மேலும் காஞ்சி சங்கர மடம் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டை விட்டு வட இந்திய பனியா ஆகிய அதானி கையில் செல்ல இருக்கிறது என்று நக்கீரன் செய்தி போட்டு இருக்கிறது!

எனவே தமிழக பார்ப்பனர்கள் ஒன்று கூடி பாஜகவை கை கழுவ வேண்டும்; பிறகு ஒரு வளமான கட்சியில் சேர்ந்து கொண்டு தங்கள் வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்!

அதனால் தான் ஸ்டாலினை புகழ்வதை விட உதயநிதியை புகழ்ந்தால் அதில் இரண்டு வித இலாபம் கிடைக்கும் என்று எஸ்வி சேகரை விட்டு புகழ்ந்து அப்படி ஒரு ஐஸ் வைக்கிறார்கள்!

கூடிய விரைவில் பாஜகவில் இருந்து பார்ப்பனர்கள் வெளியேறி ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து அதன் வழியாக "திமுகவை நாங்கள் ஆதரிக்கிறோம்!" என்று வருவார்கள்!

அது ஒரு குயுக்தி, சதித் திட்டமாகக் கூட இருக்கலாம்! அதாவது நாக்பூர் பார்ப்பனர்கள் கொடுத்த தற்காலிக அசைன்மென்ட் ஆக இருக்கலாம்!

அதாவது ஆரிய பார்ப்பனர்கள் இருக்கிற கட்சியை தமிழர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பது ஆர்எஸ்எஸ் க்கு தெரிந்து விட்டது! 

எனவே தற்காலிகமாக பார்ப்பனர்களை பாஜகவில் இருந்து பிரித்து வெளியே எடுத்து, தமிழக பாஜக ஏதோ ஒரு பார்ப்பனர் அல்லாத கட்சி போல ஒரு மாயையை உருவாக்க நினைக்கிறார்கள்!

அதில் பாஜகவுக்கும் பார்ப்பனர்களுக்கும் தற்காலிக இலாபமும் உண்டு!

1. அதாவது பாஜகவுக்கு அது பார்ப்பனக் கட்சி என்ற பிம்பத்தை உடைத்து ஒரு ரெண்டு சதவீத ஓட்டு அதிகம் கிடைக்கும் வாய்ப்பு!

2. அதுபோல பார்ப்பனர்களுக்கோ தற்காலிகமாக திமுகவில் சேர்ந்து அங்கு பல சலுகைகளை பெற்றுக் கொள்ள முடிகிற வாய்ப்பு!

3. திமுகவை ஆதரிக்கும் முற்போக்கு சக்திகள் பார்ப்பன சங்கத்தையோ அல்லது பாஜகவையோ எதை ஆதரித்தாலும், திமுகவை விட்டு விலகி நிற்பார்கள்! அது திமுகவின் ஓட்டு வங்கியை பாதிக்கும்; பாதிக்க வேண்டும் என்பது மறைமுக திட்டம்!

4. அனேகமாக பாஜகவுடன் சேரப்போகும் கட்சிகள் அதிமுக, பாமக, சாதிக்கட்சிகள் சில, (நாம் தமிழர் எதிலும் சேராமல் திராவிட கருத்தியலை திமுகவை மட்டும் எதிர்க்கும்)

5. அமித்ஷா வந்து விட்டு போன கையோடு மறைமுகமாக பல விஷயங்கள் நடந்து முடிந்திருக்கும்! அது முக்கியமாக "திராவிட சிந்தனை எதிர்ப்பு"! அதை நோக்கியே எல்லா காய்களும் ஆரியத்தால் இனி நகர்த்தப்படும்!

மற்றபடி எலக்சன் முடிந்தவுடன் ஆரிய பார்ப்பனர்கள் எப்பொழுதும் போல ஆர்எஸ்எஸ் புத்தியோடு ஸனாதன அதர்மங்களை, பற்பல கட்சிகளில் புகுந்து கொண்டு பின்பற்றுவார்கள்! 
திராவிடர் இயக்கங்களை ஒழிக்க வேண்டிய எல்லா சதி திட்டங்களையும் தொடர்ந்து செய்வார்கள்!

அதாவது, நேரடியாக தமிழர்களை வீழ்த்துவது அல்லது பின்புற கதவு வழியாக வந்து உள்ளே நுழைந்து அணைத்து, அரவணைத்து ஒழிப்பது என்ற இரண்டு வழிகளிலும் ஆரிய சாம்ராஜ்யம் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது!

ஆரியத்தை அரவணைத்த அம்பேத்கர் இயக்க மாயாவதியின் சாம்ராஜ்யம் மாயமானது ஏன் என்று நினைவு கூர வேண்டுகிறேன்! 

பெரியார் என்ற பெருந் தத்துவம், அவர் தந்து விட்டுப் போன திராவிடர் இயக்க கொள்கைகள் இல்லாத இடத்தில் சனாதன அதர்மம் என்ற வர்ணாசிரம ஜாதீய நச்சுக் காற்று பரவி பல உயிர்களை பலி வாங்கிவிடும்!

எனவே திராவிடர் இயக்கங்கள், முற்போக்கு தலைமைகள், மக்கள் நல சிந்தனையாளர்கள் இந்த முறைதான் 
முழு விழிப்பாக இருக்க வேண்டும்; முக்கியமாக இப்பொழுது ஆளுங்கட்சியாக விளங்கும் திமுக!


கவனம்! 
கவனம்!! 
கவனம்!!!

-YozenBalki