Translate this blog to any language

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

ஆரிய பார்ப்பன பாஜக தமிழகத்துக்கு ஆபத்து!!

நமது தமிழ் இளைஞர்கள், பொதுவாகவே திமுக ஊழல் செய்கிறது, அண்ணா திமுக ஊழல் செய்கிறது என்று யாராவது மனோவசியம் செய்தால் ஏமாந்து விடுகிறார்கள்!

ஏதோ பிற உலக கட்சிகள், இந்திய கட்சிகள் ஒரு ஊழலும் செய்யாத உத்தமர்கள் போல! சொல்லப்போனால் இந்தியாவிலேயே அதிக தொகைகளுக்கு பல லட்சம் கோடி ஊழல் செய்த கட்சி ஆரிய பார்ப்பன பாஜக கட்சி தான்!

சரி, நான் திராவிட இயக்கங்களை போற்றுபவன்! அதற்கு என்ன காரணம் என்று சொல்கிறேன்!

திராவிட இயக்கம் என்னதான் ஊழல் செய்தாலும் நான் வந்து 70% திமுக 30% அதிமுக, அதன் பிறகு எனக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, டாக்டர் திருமா அவர்களின் கொள்கை பிடிப்பு ரொம்ப பிடிக்கும்!

பாஜக என்பது பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஆர்எஸ்எஸ் ஆரம்பித்த ஒரு அமைப்பு!

நமது சூத்திரப் பிள்ளைகளின் கல்வி உரிமையை ஒழித்து நம்மை பழையபடி சனாதன (அ)தர்ம சாக்கடையில் ஆழ்த்தி பார்ப்பனர்களே உயர்ந்தவர்கள்...
பிற 97% மக்கள் தாழ்ந்தவர்கள் 
என்ற ஆரிய பார்ப்பன ஜாதீய கருத்தை நிலை நிறுத்தத் துடிப்பவர்கள்!

அதனால் எனக்கு பாஜக அறவே பிடிக்காது!

இன்னொன்று
பற்பல துறைகளில்
360°
மிகச் சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான்!

உலகத்திலேயே அதிக உயர் கல்வி படித்தவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள்! அதற்கு காரணம் தொடர்ந்து வந்த இரண்டு திராவிட இயக்க ஆட்சிகள் தாம்!

அதற்கு மூல காரணம் தேடித் தேடி குழந்தைகளை ஊக்குவித்து, பள்ளிப்படிப்பு கல்லூரி படிப்பு வேலைவாய்ப்பு என்றெல்லாம் சூத்திர குழந்தைகளை உயரத்தில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் பெரியார் அண்ணா அம்பேத்கர் கொள்கைகள் தாம்!

அதனால் தான் வடமாநிலங்கள் நம்மை விட நூறு வருடம் பின்தங்கி இருக்கின்றன! இன்னும் கூட அங்க சராசரி பொதுமக்களுக்கு கக்கூஸ் கட்டவில்லை!

வடக்கிலிருந்து இளைஞர்கள் பாஜக காங்கிரஸ் ஆட்சியில் சிக்கி சீரழிந்து படிப்பும் இல்லாமல் வேலையும் இல்லாமல் தமிழ்நாட்டை நோக்கி கோடிக்கணக்கில் வந்து கூலி வேலை செய்து பிழைப்பது ஏன்?

ஏன் அவர்களுக்கு உயர்கல்வி இல்லை வேலை வாய்ப்பு இல்லை அங்கேயே வாழ்வதற்கு வசதி இல்லை? 

சுதந்திரம் பெற்று ஒரே சமயத்தில் மொழிவாரி மாநிலங்கள் பிரித்து, மாநில வளர்ச்சிக்கு அவர்களே பட்ஜெட்டில் அதிகம் கொள்ளையடித்துக் கொண்ட போதும் அந்த வட இந்திய மாநிலங்கள் ஏன் வளர்ச்சி அடையவில்லை!

அங்குதானே இவர்கள் போற்றுகின்ற வட இந்திய பெருந்தலைவர்கள் பலரும் பிறந்தார்கள்? 

ஆக, காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் இன்று வரை வாயில் வடை சுட்டு திராவிடத்தை திட்டிக்கொண்டு பிழைத்து வருகிறார்கள் என்பது மட்டுமே தெள்ளத்தெளிவான உண்மை!

சரி! ஊழல் என்பது உலக நாடுகளில் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது! தேன் எடுப்பவன் தன் கையை நக்குவான் தானே?

பணப்புழக்கம் உள்ள வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் மற்றும் எல்லா நாடுகளிலும் ஊழல் உள்ளது; அதன் விகிதம் மட்டுமே மாறும்!

என்னைப் பொறுத்தவரை தமிழன் ஊழல் செய்தால் அந்தப் பணம் தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் தான் உலவும்! அதனால் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடையும்!
ஏனென்றால் யாரும் பணத்தை தின்று விட முடியாது! 

அந்த வகையில் தமிழர்கள் செய்கிற ஊழல் மகா குற்றம் கிடையாது!

ஊழல் செய்த பணத்தைக் கொண்டு அவர்கள் அணுகுண்டு தயாரிக்கவில்லை! கல்வி நிறுவனங்கள் கட்டி, பாதி பணம் 'கோட்டா' வழியாக சம்பாதிக்கிறார்கள், மீதி ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அறிவு வேலை வாய்ப்பு பெற்று தருகிறார்கள்!

அதனால்தான் தமிழகம் உலகத்திலேயே அதிக உயர்கல்வி படித்தவர்களைக் கொண்டிருக்கிறது!

எனவே, நான் என்றென்றும் திராவிட கொள்கைகளை, சமத்துவம் சமநீதி பேசும் தமிழக கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பவன்!

நான் *பெரியார் கண்ணாடி* வழியாக இந்தத் தமிழ்ச் சமூக முன்னேற்றத்தைப் பார்க்கிறேன்!

ஆரிய பார்ப்பன 
ஆர்எஸ்எஸ் பாஜக என்பது, தமிழ் மொழி தமிழ்ப் பண்பாடு, தமிழின உரிமை, தமிழர்களின் உணவுத் தேர்வு, தமிழினக் குழந்தைகளின் உயர்கல்வி வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், ஜாதி வேறுபாடு இல்லாத சமூகம், கருவறையில் தமிழ் பூசை போன்ற எல்லாவற்றிற்கும் எதிரானவை!

சுருக்கமாக சொன்னால் ஆர்எஸ்எஸ் பாஜக என்பது தமிழகத்துக்கு ஒரு பெரும் ஆபத்து!

Yozenbalki
💫💫🎊🎊