Translate this blog to any language

புதன், 4 நவம்பர், 2020

அளவுக்கு மீறிய நுகர்ச்சி ஆபத்து!

இது வாட்ஸ் அப்பில் வந்தது; மிக அருமையாக இருந்தது யார் எழுதி அனுப்பினார் என்ற குறிப்பு இல்லை அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! இது போன்ற சிறப்பான சிறிய அளவிலான கட்டுரைகள் வரும்பொழுது அதை விட்டு விடுவதற்கு மனது வருவதில்லை!

நுகர்ச்சி:

உலகின் தற்போதைய தலையாய பிரச்சினை  என்னவென்று நினைக்கிறீர்கள்? 

மக்கள் தொகைப் பெருக்கம்? 

இல்லை.

over-population அன்று, 

இன்று over-consumption தான் என்கிறார்கள். 

அதாவது ஒரு தேசத்தில் வெறும் 100 பேர் இருக்கலாம், இன்னொரு தேசத்தில் 10,000 பேர் இருக்கலாம். 

ஆனால் 100 பேர் இருக்கும் தேசம் பேராசையுடன் பத்தாயிரம் பேர்களுக்கான resource களை படுவேகமாக நுகர்ந்து கொண்டிருக்கலாம். 

இப்போது இந்த இரு நாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மக்கள்தொகை கொண்டவை என்று சொல்லிவிட முடியும்.

 population is not exactly the issue. consumption is! 

அமெரிக்கர் ஒருவர் இந்தியர் ஒருவரை விட சராசரியாக 32 மடங்கு அதிகம் consume செய்வதாகச் சொல்கிறார்கள்.

 அதாவது, 32 பேருக்கான சாப்பாட்டை ஒருவரே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த over consumption நம்மிடமும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது. 

சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குச் சென்று பார்த்தால் என்னென்னவோ தயாரிப்புகள் கலர் கலராக, வகை வகையாக, வெவ்வேறு சைஸுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். 

இதை எல்லாம் கூட வாங்குவார்களா என்று யோசிப்போம். 
வாங்குவதால் தானே வைக்கிறார்கள்?

 பிரியாணி மசாலா ஓகே, தக்காளி சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதத்துக்குக் கூட மசாலா வந்திருக்கிறது. 
ஒன்றுக்கொன்று என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.

 'பூஜா kit' விலை 180 ரூபாய்! 

உள்ளே ஒரு காட்டன் துணி, இரண்டு விளக்குத் திரி பாக்கெட், ஊதுபத்தி, கொஞ்சம் கற்பூரம், குட்டியூண்டு பாட்டிலில் பன்னீர், அவ்வளவு தான்
180 ரூபாய்!

தேவையற்ற பொருட்களை, தயாரிப்புகளை வாங்கிக் குவிக்கும் கலாச்சாரம்! 

ஆணிகளை முதலில் விற்று விட்டுப் பிறகு சுத்தியலுக்கான தேவையை உருவாக்கும் யுக்தி!

 தேவையே இல்லாவிட்டாலும் ஒருவித 'fake demand' ஐ உருவாக்குவதிலும் கார்ப்பரேட்கள் வல்லவர்கள். 

சமீபத்திய உதாரணம் vegetable wash! 

250-300 ரூபாய்க்கு விற்கிறார்கள். 
இதை இதற்கு முன் நாம் கேள்விப்பட்டு இருப்போமோ! 

பெரும்பாலும் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கிவந்து அப்படியே தான் பிரிட்ஜில் வைத்துக்கொண்டு இருந்தோம். 

எல்லா product களிலும் சகட்டு மேனிக்கு kills 99.9% germs என்று போட்டு விடுகிறார்கள்.

 'கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கிறது' என்று போடுகிறார்கள். 

எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வருகிறார்கள் போன்ற விவரங்கள் இல்லை. 

'கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க வேண்டி கடவுளை வழிபடுவதற்கு எங்கள் ஊதுபத்தி சிறந்தது ' என்று கூடிய சீக்கிரம் விளம்பரங்கள் வந்து விடும்!

இந்த consumption எப்போதும் exponential ஆக இருக்கிறது.

அதாவது நாம் நம் தாத்தாவை விட 8 மடங்கு அதிகம் நுகர்ந்தோம் என்றால் நம் பேரன் நம்மை விட 64 மடங்கு அதிகம் நுகர்வான். 

நம் தாத்தாவுக்கு இருந்தது ஒரே ஒரு option lifebuoy சோப் என்றால் நம் பேரன் முன்பு 64 சோப்புகள் கடை விரிக்கப்படும். 

எல்லா சோப்புகளும் more or less ஒன்றுதான் என்ற அறிவு நம்மிடம் இருப்பதில்லை. 

64 வகை சோப்புகள், சூப்பர் மார்க்கெட்டில் கால்வாசி இடத்தை அடைத்துக் கொண்டு! 

'selection time rule' என்ன சொல்கிறது தெரியுமா? 

இரண்டு பொருட்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க நமக்கு 10 நிமிடங்கள் ஆகிறது என்றால் மூன்று பொருட்களில் இருந்து தேர்ந்தெடுக்க நமக்கு 100 நிமிடங்கள் ஆகுமாம். 

நான்கு பொருட்கள் என்றால் ஆயிரம் நிமிடங்கள்!

நம்முடைய நேரத்தையும் சத்தமில்லாமல் திருடி விடுகின்றன இந்த ஹைப்பர் மார்க்கெட்டுகள்.

இது நல்லது தானே? நிறைய தயாரிப்புகள் என்றால் நிறைய வேலைவாய்ப்பு என்று நினைத்தால் தப்பு. 

அந்தக் குறிப்பிட்ட தயாரிப்பு எப்படி சந்தைக்கு வருகிறது என்ற விவரம் நம்மிடம் இல்லை. 
முழுக்க முழுக்க automated process சில் வந்திருக்கலாம். 
எந்த ஒரு தயாரிப்பும் அப்படியே வானத்தில் இருந்து குதித்து விடுவதில்லை. 

அது பஞ்சபூதங்களையும் கணிசமான அளவு பதம் பார்க்கிறது. 
அதற்கான தயாரிப்பில் எத்தனை தண்ணீர் உறிஞ்சப்பட்டது, எத்தனை ஏக்கர் மண் மலடானது, எத்தனை டன் காற்று மாசுபட்டது, 
அந்தத் தயாரிப்பு எத்தனை carbon footprint ஐ பூமியின் வளிமண்டலத்தில் வெளிவிட்டது என்றெல்லாம் நமக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. 

மேலும் அந்தத் தயாரிப்பின் பின்புலத்தில் நசுக்கப்பட்டவர்கள் யார், மிரட்டப்பட்டவர்கள் யார், அதன் பின்புலத்தில் இயங்கும் socio, economic, political forcesகள் எதுவும் நமக்கு விளங்குவதில்லை.

'கடை விரித்தேன் கொள்வார் இல்லை' என்ற வாசகம் இப்போது எடுபடாது.

 எங்கே கடைவிரித்தாலும் எங்கிருந்தோ 'கொள்வார்' கள் வந்து விடுகிறார்கள். 

home-made என்று போட்டுவிடு, organic என்று எழுது, 100% hygienic என்று எழுது, good for liver என்று போடு, 
ஏதோ ஒரு வைட்டமின் இருக்கிறது என்று அளந்து விடு, கவரில் பற்கள் தெரியச் சிரிக்கும் ஒரு happy family யின் படத்தைப் போட்டுவிட்டு, அவ்வளவு தான், shit sells!!

ஓகே. இவை எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் தானே என்றால் பொருட்களை மட்டும் அல்ல, சேவைகளையும் நாம் over consume செய்கிறோம் என்று தோன்றுகிறது. 

தினமும் 3 GB டேட்டா இலவசம். 
வேறு என்ன செய்ய? 
வீடியோக்கள் scroll செய்யச் செய்ய மேலெழும்பி வந்து கொண்டே இருக்கின்றன. 
இரவு முழுவதும் பார்க்கலாம். காலையில் நம் cognitive data base அப்படியே தான் இருக்கும். 
எதையும் புதிதாகக் கற்றுக்கொண்டு இருக்க மாட்டோம். எதுவும் நம்மை மாற்றி இருக்காது. 

'Stop making stupid people famous' என்று சொல்வார்கள். 

அரைவேக்காடுகளை, கத்துக்குட்டிகளை நாம் தான் பிரபலம் ஆக்குகிறோம். 

மில்லியன் subscribers, லட்சக்கணக்கில் followers! 

வாங்குவோர் இல்லையென்றால் விற்பனை செய்வோர் இல்லை. பார்ப்போர் இல்லை என்றால் பிரபலங்கள் இல்லை. 

data என்றில்லை, மின்சாரம், தண்ணீர், எரிபொருள் எல்லாமே over consumption தான்.

 Buffet- வில் இலவசமாகக் கிடைக்கிறது என்று எல்லா அயிட்டங்களிலும் ஒன்றை எடுத்து உள்ளே தள்ளுகிறோம். 

விளைவு: வயிற்று வலி, இரண்டு நாள் வயிற்று உப்புசம், உபாதை! 

இலவச மருத்துவம் என்பதற்காக நோயை வலிய வரவழைத்துக் கொள்ளவும் செய்வோம் நாம்!

மூன்றாவதாக நாம் வாழ்க்கையையும் over consume செய்கிறோம்.

 'நாளை என்பது நிச்சயம் இல்லை, இன்றே அனுபவித்து விடு' என்பதெல்லாம் சரி தான்.

 ஆனால் வாழ்க்கையில் நம் அனுபவங்களை, சுகங்களை, சந்தோஷங்களை சரி சமமாக distribute செய்கிறோமா?

 40 வயதுக்குள்ளாகவே எல்லாவற்றையும் முடித்து விட்டு போதும்டா சாமி என்று exhaust ஆகி விடுகிறோம்.

 8 வயது சிறுவன் 28 வயது இளைஞன் போலப் பேசுகிறான். 

'மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச' என்று ஆறு வயது குழந்தை ஒன்று பாடுகிறது.

 'expression பத்தலை' என்று ஜட்ஜுகள் (?!) தீர்ப்பு சொல்கிறார்கள்.

 'ஆன்மிகம்' என்பது ஒருவருக்கு வயது முதிர்ந்தபின் தான் அர்த்தமுள்ளதாகும். 

50+...அந்தந்த வயதில் அது அது இனிக்கும். 

ஆன்மிகத்திற்கென்று ஓர் ஓய்வு, ஒரு விரக்தி, ஒரு களைப்பு, ஒரு சோர்வு, ஓர் அர்த்தமின்மை எல்லாம் தேவைப்படுகிறது. 

20 வயதில் எல்லாமே அர்த்தமுள்ளதாகத் தான் தெரியும். 

ஆனால் ஒரு curiosity க்காக, அனுபவத்துக்காக 20 வயதில் ஆன்மிகத்தின் பக்கம் ஒதுங்கினால் அதில் ஆழம் இருக்காது. 

அது வெறும் over consumption ஆகவே இருக்கும்.

சின்னக் குழந்தைகள் ஆன்மிக கதா காலட்சேபம் செய்தால் நான் காதைப் பொத்திக் கொள்வேன்.

பத்து வயதில் காதலித்து, 20 இல் ஆன்மிகம் பேசி விட்டு, முப்பதில் முடித்து விட்டால் என்ன தான் செய்வது?

 40-இல், 50-இல், 60-இல் வாழ்க்கை என்னும் காலிபாட்டிலை வைத்துக்கொண்டு எதை அனுபவிப்பது?

நாளைக்கென்று கொஞ்சம் மிச்சம் வைப்போம். 

நீரை, மின்சாரத்தை, கனிம வளங்களை, பெட்ரோலை நம் பேரப்பிள்ளைகளுக்கும் விட்டு வைப்போம் என்ற எண்ணம் நமக்கு வருவதே இல்லை. 

அளவுக்கு மிஞ்சினால்.????

எழுதிய அன்பருக்கு நன்றிகள் பல தோழரே!

வியாழன், 29 அக்டோபர், 2020

தந்தை பெரியாரை அப்படி ஏன் மதிக்கிறார்கள்?

பெரியார் யாரு?


அவர் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா 

என நக்கலாய் பேசும் நண்பர்களின்

பார்வைக்காக:


1. தான் வகித்த 29 பதவிகளை துறந்து பதவிகள் ஏதுமின்றி 60 ஆண்டுகளுக்கு மேலாய் மக்கள் பணியில் ஈடுபட்டவர்.


2. செல்வக் குடும்பத்தில் பிறந்தும் (1900 ஆம்

ஆண்டுகளிலேயே சுமார் 25 கோடிகளுக்கு

பெரியார் அதிபதி) சமூகத்தின் அடித்தட்டு

மக்களின் துயரங்களை சிந்தித்து அதற்காய் தன்ஆயுளை செலவிட்டு இறுதியில் தன்

சொத்துக்களை மக்களுக்கே விட்டுச் சென்றவர்.


3. மக்கள் செல்வாக்கு இருந்தும் தன் இயக்கத்தை அரசியல் கட்சியாய் மாற்றாதவர், அரசியலில் இல்லாமலேயே மக்கள் பணி செய்தவர்,


4. விதவை மறுமணத்தை ஆதரித்தவர்


5. மனிதன் அனைவரும் சமம் அவனுக்குள் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பிரிவினை இருக்கக்

கூடாது என ஜாதியத்தை கடுமையாய்

எதிர்த்தவர்.


6. ஜாதிகள் மதத்தினால் தான் தோன்றுகின்றன

எனவே மதத்தை தூக்கி எறிந்தவர்.


7. இல்லாத கடவுளையும் சாஸ்திரங்களையும்

சம்பிரதாயங்களையும் சொல்லி, மதங்கள்

மனிதர்களை மூடனாக்குகிறது என்பதை

உரக்கச் சொன்னவர்.


8. சாதாரண லுங்கியையும் சட்டையையும்

விரும்பிய எளிமையான பகுத்தறிவுவாதி


9. மக்களுக்கு பிடித்தமான மதத்தை எதிர்த்து

மக்களின் விரோதத்தை சம்பாதித்தவர்,

மக்களோடு ஒத்து ஊதி அரசியல் பண்ணத்

தெரியாதவர். மக்களுக்கு பிடித்ததை

செய்வதை விட தேவையானதை செய்ய

முனைந்தவர்.


10. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என

கர்ஜித்தவர்.


11. பக்தி வந்தால் புத்தி போய் விடும், புத்தி

வந்தால் பக்தி போய் விடும் என தத்துவம்

பேசியவர்.


12. தம் இயக்கத் தோழர்களை சாதி மறுப்பு - மத

மறுப்பு - விதவை மறுமணம் செய்து கொள்ளத்

தூண்டியவர்.


13. பெண்ணுரிமைப் போராளி, கணவனுக்கு

இல்லாமல் மனைவிக்கு மட்டும் ஏன் தாலி எனக்

கேட்டு ஆண் சமூகத்தை அதிரச் செய்தவர்.


14. பெரியாரிடம் பலர் உங்கள் எல்லாக்

கொள்கையும் பிடித்திருக்கிறது கடவுள்

மறுப்பைத் தவிர என சொல்லிய போது, கை

நல்லா இருக்கு கால் நல்லா இருக்கு மூக்கு

முழி எல்லாமே நல்லா இருக்கு உயிர் மட்டும்

தான் பிடிக்க வில்லை எனச் சொல்வது போல்

இருக்கிறது நீங்கள் சொல்வது என பதிலளித்து

அவர்களின் வாயை அடைத்தவர்.


15. நீ உணரும் பசியை நானும் உணர்கிறேன்,

அதனால் பசி இருக்கிறது என ஏற்றுக்

கொள்கிறேன், ஆனால் நீ உணரும் கடவுளை

என்னால் உணர முடியவில்லை அதனால்

கடவுளை மறுக்கிறேன் என கடவுள்

மறுப்புக்கு விளக்கம் சொன்னவர்.


🌈🌈

ஒரு தோழரின் கூகுள் பதிவு: 🙏🙏


அவர் பெயர்:

karuannam


to mintamil, vallamai

முகமுகநூல் பதிவு.


திங்கள், 19 அக்டோபர், 2020

தந்தை பெரியார் எனும் பெருவியப்பு!

தந்தை பெரியாரைப் பற்றி தெரியாத தமிழ் மக்களுக்கு சில செய்திகள்:

தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி.

அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 
95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...

* இராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

* பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான்.

* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

* தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்து வைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!

* தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

* உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

* இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!

* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

* தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரது சேகரிப்பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

* முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

* நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

* தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

* புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

* நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்! அந்த பெரிய மனிதருக்கு இருந்த நேர்மை பணிவு கூட இங்கே விசத்தை கக்க வரும் நபர்களுக்கு ஒரு சதவீதம் கூட கிடையாது

* 95 வது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!
_______

பெரியார் என்ன செய்து கிழித்துவிட்டார் என்று கேட்கும் நன்றி மறந்த ஜாதீய தமிழ் அடிமையே..

நன்றாகக் கேள்  கல்வி மறுக்கப்பட்ட நாங்கள் இன்று கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உயர்ந்த நிலையை அடைந்திருப்பதற்கு காரணம் இடஒதுக்கீடு! அதை பெற்றுத்தந்தது பெரியாரின் இடைவிடாத போராட்டம். 

அவரவர் சாதித் தொழிலையே பள்ளிகளில் கற்க வேண்டுமென குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டுவந்த போது, மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் செய்தவர் பெரியார் அதனாலேயே குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது. அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் அவரவர் சாதித் தொழிலையே அனைவரும் செய்ய வேண்டியதிருந்திருக்கும். மருத்துவராகவோ பொறியாளராகவோ உயரயதிகாரியாகவோ வாய்ப்பு இருந்திருக்காது. பெரியாரின் உழைப்பை மறந்த நன்றிகெட்ட பார்ப்பனீய அடிமைத் தமிழர்களே இனியாவது உணர்ந்துகொள்...

அனைவரும் கோவிலுக்குள் செல்வதற்காகவும் அர்சகராக ஆவதற்கும் போராடியவர் பெரியார். எங்கள் சுயமரியாதைக்காகவும், இழிவு நீங்கவும், தீண்டாமை நீங்கவும், சாதி மதம் ஒழியவும் தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் பெரியார். அந்த பெரும் பணியை மறந்த சிறியார்கள் இல்லை நாங்கள்!

ஏ நன்றி கெட்ட பார்ப்பனீய அடிமை தமிழனே அவரால் உயர்வடைந்துவிட்டு  இன்று கேட்பாய் பெரியார் என்ன செய்து கிழித்தார் என்று!

நால்வர்ணத்தைக் கடைபிடித்த, சனாதன தர்மத்தை நிலைநாட்டிய மனுநீதியின்படி ஆட்சி செய்த பார்பன அடிமைத் தமிழ் அரசர்கள், திருக்குறளை - வள்ளுவரைப் போற்றவில்லை, திருக்குறள் மாநாடு நடத்தி தமிழ்நாடெங்கும் திருக்குறளைக் கொண்டாட வைத்தவர் பெரியார்!

அந்த பெரியாரை மறந்த பார்ப்பனீய அடிமைத் தமிழர்களே! இன்று தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்று வஞ்சமாக கூக்குரலிடும் அயோக்கியர்களே, உன் கையிலிருக்கும் வேதம் காட்டுமிராண்டித் தனமானது 
அதை தவிர தமிழில் வேறு என்ன இலக்கியம் உள்ளது? #தமிழை_காட்டுமிராண்டி_மொழியாக்கியதே உன் வேதங்கள் தானே இதை என்று உணர போகிறாய்?

பதில் கிடைக்குமா... ஜாதீய அடிமைகளே...?
___

"மருத்துவமனையில், 'கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய்' என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். 'காலை வெட்டினால் ஒழிய பிழைக்கமாட்டாய்' என்றால், காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். 

மலஜலம் கழிக்க வேறு ஓட்டை போடவேண்டமென்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம். எடுத்துவிட வேண்டுமென்றால், கருப்பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கிய பண்டங்களை இழந்தாவது உயிர் வாழச் சம்மதிக்கிறோம்.

அப்படியிருக்க, ஒரு அயோக்கியக் கூட்டம் நம்மை ஜெயித்து அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கிற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம்மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும் புகுத்தி, இழிவபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்றால்..

இதற்கு... இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம்? என்றால், இந்த இழிவு (சூத்திரத்தன்மை) எப்பொழுதுதான் எந்த வகையில்தான் மறைவது - என்று கேட்கிறேன். என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால், அவர்களை வெறும் வெறியர்கள் என்றுதானே அறிவாளிகள் சொல்லுவார்கள்?" - பெரியார்!!
____

பெரியார் என்னும் சகாப்தம்

90-வது வயதில்  _  180 கூட்டம்.
91-வது வயதில்  _  150 கூட்டம்.
93-வது வயதில்  _  249 கூட்டம்.
94-வது வயதில்  _  229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்)  42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன். 

ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்.....

சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்.....

இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்?

எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார் ? 

அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா? 

மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ? 
____

நான் சொல்வதை கேட்டால் தான் 
உனக்கு சொர்கம்;
என்னை வணங்காவிட்டால் நரகம் 
என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்...

நான் தலைவன் நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்...

யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக்கொண்டு, அனுபவத்தைக்கொண்டு, படிப்பினையைக்கொண்டு ஆராய்ந்து - உன் அறிவு ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள் இல்லையென்றால் விட்டுவிடு னு சொன்ன ஒரே தலைவர் பெரியார் மட்டுமே!

பெரியாருக்கு நிகராக  எவானவது  உண்டா?
____

பெரியார் என்ன செய்து கிழித்தார் என்று கேட்கும் தற்குறிகளுக்கு...!!

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலை...

1. ஆதிதிராவிடர்கள், பார்ப்பனத் தெருக்கள், கோயில்களை சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்து கூடச் செல்லக் கூடாது.

2. ஆதி திராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டக் கூடாது.

3. தங்க நகைகள் அணியக் கூடாது.

4. மண் குடத்தை தான் தண்ணீர் பிடிக்க பயன்படுத்த வேண்டும்.

5. ஆதிதிராவிடர் விட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.

6. சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.

7. திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.

8. பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.

9. குதிரை மீது ஊர்வலம் செல்லக் கூடாது.

10. பொதுக் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.

11. மேல் அங்கியோ, மேல்த் துண்டோ அணிந்து கொண்டு செல்லக் கூடாது.

12. உயர்ந்தோர் குடியிருப்பின் வழியாக தாழ்ந்தோர் சுடுகாட்டிற்கு செல்லக் கூடாது.

13. பெண்கள் ரவிக்கைகள் அணியக் கூடாது என்பதோடு மேல் சாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணிகளையும் எடுத்து அக்குலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

14. நீதி மன்றங்களில் சாட்சி சொல்ல நேரிட்டால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.

இதை எல்லாம் மாற்றியது யார்? 
நீ அடிமையாக இருக்கும் உயர்ஜாதி பார்பனீயத் தலைமையா?

பதில் சொல்லுங்கள்!

#பகிர்வு 👈👉 #பகிருங்கள்

From WhatsApp University!! 😇😇

வியாழன், 15 அக்டோபர், 2020

ஆத்திச்சூடி ஆங்கிலத்தில்!

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!

Lets Spread Aathisoodi to the World!

1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் /
2. Control anger.
3. இயல்வது கரவேல் /
3. Dont forget Charity.
4. ஈவது விலக்கேல் /
4. Dont prevent philanthropy.
5. உடையது விளம்பேல் /
5. Dont betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் /
6. Dont forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் /
7. Dont despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி /
8. Dont freeload.
9. ஐயம் இட்டு உண் /
9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு /
10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் /
11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் /
12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் /
13. Dont shortchange.
14. கண்டொன்று
சொல்லேல்/
14. Dont flip-flop.
15. ஙப் போல் வளை /
15. Bend to befriend.
16. சனி நீராடு /
16. Shower regularly.
17. ஞயம்பட உரை /
17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் /
18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு /
19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் /
20. Protect your parents.
21. நன்றி மறவேல் /
21. Dont forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் /
22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் /
23. Dont land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் /
24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் /
25. Dont play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் /
26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் /
27. Dont sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் /
28. Detest the disorderly.
29. இளமையில் கல் /
29. Learn when young.
30. அரனை மறவேல் /
30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் /
31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற /
32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் /
33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் /
34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று /
35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் /
36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் /
37. Dont forsake friends.
38. கெடுப்பது ஒழி /
38. Abandon animosity.
39. கேள்வி முயல் /
39. Learn from the learned.
40. கைவினை கரவேல் /
40. Dont hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் /
41. Dont swindle.
42. கோதாட்டு ஒழி /
42. Ban all illegal games.
43. கெளவை அகற்று /
43. Dont vilify.
44. சக்கர நெறி நில் /
44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு /
45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் /
46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் /
47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் /
48. Dont hurt others feelings.
49. சூது விரும்பேல் /
49. Dont gamble.
50. செய்வன திருந்தச் செய் /
50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் /
51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் /
52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் /
53. Dont show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் /
54. Dont be a lazybones.
55. தக்கோன் எனத் திரி /
55. Be trustworthy.
56. தானமது விரும்பு /
56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் /
57. Serve the protector.
58. தீவினை அகற்று /
58. Dont sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் /
59. Dont attract suffering.
60. தூக்கி வினை செய் /
60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் /
61. Dont defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் /
62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் /
63. Dont listen to the designing.
64. தொன்மை மறவேல் /
64. Dont forget your past glory.
65. தோற்பன தொடரேல் /
65. Dont compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி /
66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் /
67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் /
68. Dont depart from good standing.
69. நீர் விளையாடேல் /
69. Dont jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் /
70. Dont over snack.
71. நூல் பல கல் /
71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் /
72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு /
73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் /
74. Dont involve in destruction.
75. நொய்ய உரையேல் /
75. Dont dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் /
76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் /
77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் /
78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் /
79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் /
80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /
81. Protectyour benefactor.
82. பூமி திருத்தி உண் /
82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் /
83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று /
84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் /
85. Dont comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் /
86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் /
87. Dont encourage war.
88. மனம் தடுமாறேல் /
88. Dont vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் /
89. Dont accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் /
90. Dont over dramatize.
91. மீதூண் விரும்பேல் /
91. Dont be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் /
92. Dont join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் /
93. Dont agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் /
94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் /
95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் /
96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி /
97. Speak with clarity.
98. மோகத்தை முனி /
98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் /
99. Dont self praise.
100. வாது முற்கூறேல் /
100. Dont gossip or spread rumor.
101. வித்தை விரும்பு /
101. Long to learn.
102. வீடு பெற நில் /
102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு /
103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் /
104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் /
105. Dont be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல்/
106. Dont premeditate harm.
107. வைகறைத் துயில் எழு /
107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் /
108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் /
109. Be impartial in judgement.

- ஔவையார் / Avvaiyaar...

From WhatsApp University!!
🌈🌈💐💐