Translate this blog to any language

செவ்வாய், 20 மார்ச், 2012

Can my Tamil-Culture & Morals be managed? கரை-உடையும் நம் தமிழ் கலாசாரம்: மீட்க என்ன வழி?

 
குண்டூஸ்: தாத்தா! நம்ம தமிழ் பேச்சாளர்கள் எல்லாம் கலாசாரம்...கலாச்சாரம்-ங்கறாங்களே. அப்பிடின்னா என்ன தாத்தா?

தாத்தா: கண்ணா...! அந்தந்த ஊர் மண்ணுக்குன்னு ஒரு குணம் இருக்கும் இல்லையா...தட்ப வெப்பம், சூழல் சார்ந்து சில பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் உருவாகும் இல்லையா? அதுக்குப் பேரு தான் கலாசாரம்ன்னு சொல்லுவாங்க! 

குண்டூஸ்: புரியல தாத்தா! விளக்கமாத்தான் சொல்லுங்களேன்!

தாத்தா: இப்பப் பாரேன்! காஷ்மீர் ரோஜா இங்க விளையாது..ஐரோப்பிய செர்ரி மரங்களும் இங்கே வளராது! அதே மாதிரிதான் நம்ம ஊர் பொன்னி நெல்லு மேல் நாடுகளில் விளையாது. அதே மாதிரி, ஐரோப்பிய குளிர் காலமும் அதற்க்கு அவங்க அணியும் உடைகளும் பற்றி நமக்குத் தெரியாது. அதே போல் இங்குள்ள சித்திரை வெயிலை வெள்ளையர்களால் தாக்குப் பிடிக்கவும் முடியாது. அந்த வெயிலுக்கு நாம போட்டுக்குற மெல்லிய பருத்தி-குறைந்த அளவான ஆடைகள்  பற்றியும் ....(Contd..)


வெள்ளி, 16 மார்ச், 2012

நம் அன்னைத் தமிழ் வளர முதலில் நாம் என்ன செய்ய வேண்டும்? What do we do to protect our Tamil Language?


முதியவர்: என்ன தம்பி! உங்கப்பா ஒரு நல்ல தமிழ் பேச்சாளர். நீ போயி ஃபிரெஞ்சு பாட மொழி எடுத்திருக்கே!

மாணவன்: போங்க "அங்கிள்"! உங்களுக்கு விவரம் பத்தாது! தமிழ்ல என்னதான் நல்லா எழுதினாலும் இந்தத் தமிழ் ஆசிரியர்களுக்கு மார்க்கு போடவே மனசு வராது. அது என்னமோ அவங்க அப்பன் வீட்டு சொத்து மாதிரி பாத்துப் பாத்துப் பிச்சை போடுவாங்க! அதுவே சான்ஸ்க்ரிட், பிரெஞ்சு, ஹிந்தி ஆசிரியர்கள் நல்லவர்கள், அவங்க மார்க்க அள்ளி விடுவாங்க! அதான் அங்கிள் நான் தமிழ எடுக்கல!

முதியவர்: என்ன இருந்தாலும் நம்ம தாய் மொழிய நாம மறக்கலாமா தம்பி?

மாணவன்: அங்கிள் 'டோடல் மார்க் குறைஞ்சா எனக்கு நல்ல காலேஜ்-நல்ல வேலை கெடைக்குமா அங்கிள்? அதுவும் பாக்கணும் இல்லியா? தமிழ் மட்டும் நல்லா இருந்து தமிழன் நல்லா இருக்கலன்னா அது பரவா இல்லியா உங்களுக்கு? தமிழன் இல்லாத இடத்தில் தமிழ் மட்டும் எப்படி வாழுமாம்?

முதியவர்: அது சரி! தமிழ்ல மாணவர்கள் உங்களுக்கு அப்படி என்னதான் பிரச்னை? ஏன் நல்ல மார்க் உங்களால...(Contd...)

சனி, 10 மார்ச், 2012

Tamil Poetry on Mosquitoes: வலிய முற்றுகை!

 

கலிரவு என்ற பேதமற்று

ஓயாத அவர்களின்

தொந்தரவும் சூழ்ச்சியுமே

சூழ்ந்த என்னுலகில்

ஆனவரை செய்தலுத்து

எஞ்சியதெல்லாம் வெறும்

கையறுநிலையின் மிச்சங்களே!


எல்லாவித எனதான நகர்வுகளையும்

அதிதீவிர போர்த்தந்திரங்களையும்

சகலவித போர்க்கருவிகளையும்

அவதானிக்கும் ஒரு

தேர்ந்த பகைமுனையில்

எவ்வித முன்னெச்சரிக்கையுமற்ற

போர்க்களச் சூழலில்

இழப்பின் வலியோடு

இடறித் தடுமாறியே

நகர்கிறது என் சுயம்!



உறக்கம் தொலைத்த இராத்திரிகளை

ஆங்கு அடிமைப்பட்ட கணங்களை

யாதொரு சிரமுமின்றி கச்சிதமாய்

நான் மறந்துவிடுகிறேன்...

எனக்கே உரித்தானதொரு

அசவுகர்ய காரணியால்

பிரதி நாளும் !



என் அதிதீவிர புரிதலில்

படர்ந்த நிம்மதி யாதெனின்..

அடியேன் ஒன்றும் தனியனில்லை-

என்னை யொப்பவே

இப்பூமி வெளிஎலாம்

வித்தகம் பேசும்

அறிவியல் மானுடர்

'விண்வெளி சென்று வீடுதிரும்பி

அணுவுலை மெச்சி

வாய்கிழித்த கையொடு

போர்வையில் சுருட்டிய

சவத்தைப் போன்றே

அடக்க-நித்திரை செய்கின்றார்கள்...

அந்தச் 'சின்னக் கொசுக்களின்'

முற்றுகைச் சிறையில்!



-யோஜென் பால்கி

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

Chennai! Will you ever Improve an iota? சென்னை! நீ எப்போத்தான் உருப்படப் போற?

தந்தை: என்னடா மார்க் இது? அசிங்கமா இல்ல உனக்கு? ஒவ்வொன்னுத்திலேயும் 20 மார்க் ,30 மார்க்- ன்னுட்டு ! LKG ஆரம்பிச்சி நீ இதே மாதிரி தான் இருக்கே. உனக்கு ரோஷமே இல்லியா? நல்ல பசங்களப் பாத்துக் கூட எதுவும் நீ கத்துக்க மாட்டியா?  நீ எப்போதான் ( minimum pass mark) மினிமம் பாஸ் மார்க் எடுக்கப் போற? 

மகன்: அப்பா! திட்டாதீங்கப்பா! நான் இப்போ எட்டாவது தானே படிக்கிறேன்! நான் இன்னும் பெரிசாகி காலேஜ் போகும் போது பாருங்க! எப்பிடி நூத்துக்கு நூறு எடுத்துக் காட்டப் போறேன் !

தந்தை: கிழிச்சே! விளையும் பயிர் முளையிலேன்னான் ஒருத்தன்! சின்ன சைஸா இருக்கும் போதே உருப்படாதது - கிழடாகும் போது உருப்பட்டுக் கிழிக்கப் போவுதா? சென்னையும் நீயும் எனக்கு ஒண்ணுதாண்டா!சிங்கப்பூர் ஆக்குறோம்ன்னு சொல்லாத ஆட்சி இங்கே உண்டா!  எள்ளளவும் இன்னைக்கே செய்யாதவன், என்னைக்காவது ஒருநாள் இமயத்த புரட்டுவேன்னா எப்படி? இதெல்லாம் பெத்தவங்க தலை எழுத்துப்பா!

(சென்னையைப் பற்றிய நாசூக்கான கிண்டல் இது)

-மோகன் பால்கி 

சனி, 28 ஜனவரி, 2012

Vitamin Deficiency Dis-eases: வைட்டமின்கள் குறைந்தால் ஏற்படும் நோய்கள் தெரியுமா?: Vitamin dificiency & dis-eases

 

வைட்டமின் A:  
இது, குறைந்தால் கண் பார்வை மங்கும். நோயெதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.
முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் A அதிகம்.



வைட்டமின் B:  
இது குறைந்தால் வயிற்று மந்தமும் அஜீரணமும் ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதமும் இதய பாதிப்பும் ஏற்பட சாத்தியக் கூறுகள் அதிகம். வாயில் புண் உண்டாகும்.
கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகளில் வைட்டமின் B உண்டு.

வைட்டமின் C :  
இது குறைந்தவர்கள் மனஅமைதி இழப்பர். சிடுமூஞ்சியாக இருப்பர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.
ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக்காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் C வைட்டமின் அதிகம்.

வைட்டமின் D :  
வைட்டமின் ‘D’ இல்லாவிட்டால், எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் ‘D’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில்போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.
போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் ‘D தயாரித்துவிடும். முட்டை, மீன், வெண்ணெய், ஆகியவற்றிலும் D வைட்டமின் உள்ளது.

வைட்டமின் E :  
இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். E வைட்டமின் இல்லாவிட்டால் மலட்டுத்தன்மையை உண்டாக்கும்.
கோதுமை, கீரை, பச்சைக்காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் E கிடைக்கும்.

புரோட்டீன் எளிதில் கிடைக்கும் உணவுகள்:

1. பால் : ஜீரணமானவுடன் புரோட்டீன் எளிதில் கிடைத்துவிடும்.
2. சோயா : உடல் வளர்ச்சிக்கும் தசைச் செல்கள் பெருகவும் முழுமையான அளவு புரோட்டீன் இதில்தான் உள்ளது.
3. தானியங்கள் : எளிதில் கிடைக்கக் கூடிய உயர் ரக புரோட்டீன் இவற்றில் உள்ளன.
4. காளான் : அமினோ அமிலம் அதிகம் உள்ளது. உடலுக்கு மிக நல்ல புரோட்டீனைத் தரக் கூடியது. (அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.)
5. நிலக்கடலை : நல்ல புரோட்டீன், உள்ளது. ஆனால் கொழுப்பு அதிகம் உள்ளது. அளவாகப் பயன்படுத்தல் வேண்டும்.

வைட்டமின்கள்

1.மீன், மீன்எண்ணெய்: வைட்டமின் A,D கிடைக்கும். கருவரை, குழந்தை வளர, எலும்பு வளர பல் உறுதிபட.
2. முட்டை : A,B,D வைட்டமின்கள் கிடைக்கும். எலும்பு, பற்கள் உறுதியாக, குழந்தை வளர.
3. கீரை : E வைட்டமின் அதிகம் தசைகளை பலமாக்க, மலட்டுத் தன்மையை நீக்க, அமினோ அமிலம் பெற.
4. முட்டைக் கோஸ்: A,B,E வைட்டமின் உள்ளன. கண் பார்வை கூடும். வாய்ப் புண், குடல் புண் சீராகும்.
5. ஆரஞ்சு, திராட்சை: C வைட்டமின் அதிகம். எலும்பு, பல் ஈறு பலம் பெரும்
பழங்களில் இரும்பு சத்துடன், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற "அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், பல வகையான வைட்டமின்களும் உள்ளன. பழங்களைத் தேனுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.



1. ஆப்பிள்:ஆப்பிள் பழத்துடன் தேன், ரோஜா இதழ்கள் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். ஆப்பிள் ஜுஸ் குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கை குணமாக்கும்.

2. ஆரஞ்சு: எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடலாம். ஓரஞ்சு உடலுக்கு புத்துணர்ச்சியும் வலுவும் தருகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

3. திராட்சை: சர்க்கரை சேர்க்காத திராட்சைப் பழச்சாறு நீரிழிவு நோயை குணமாக்கும் . ஒரு "அவுன்ஸ் திராட்சைச் சாறுடன் சிறிது கேரட் சாறு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர சிறு நீர் தாரைகளில் உண்டாகும் கல் கரைந்துவிடும்.

4. மாதுளை: இதயம், குடல், சிறுநீரகம் நன்கு இயங்க மாதுளம் பழச்சாறு நல்லது. மாதுளம் பழத்தில் குளுக்கோஸ் சக்தி நிறைய உள்ளது.

5. அன்னாசி: "அன்னாசிப் பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த பயன் படுகிறது. உடல் சூடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

6. சப்போட்டா: - இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளது. சப்போட்டாவுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.

7. பப்பாளி: - பப்பாளி பழத்தை துண்டுகள் ஆக்கி சீரகப் பொடி, எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டால் "ஜீரணம் குணமாகும். பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். தாய்ப்பால் சுரக்க பப்பாளி பயன்படும்

- நல்ல தகவல்: இணையத்தில் எடுத்தது 

www.yozenmind.com