Translate this blog to any language

செவ்வாய், 14 மே, 2024

அவ்வையார் கூறிய 60 கெடுதிகள் எவை தெரியுமா?



நமது தமிழ் மூதாட்டி அவ்வையார் (ஔவையார்) அவர்கள் அற்புதமான நூல்கள் எழுதியவர்! 

ஆத்திச்சூடி 
கொன்றை வேந்தன்
நல்வழி 
மூதுரை 

போன்ற அறநூல்கள் அவற்றில் அடக்கம்! 
அதில் ஒன்று இது!

எதெல்லாம் கெடும்? என்று 60 கெடுதிகளை மூன்று சொற்களால் ஒரு வரியில் விளக்குகிறார் அவர்!

ஆனால் இதை குழந்தைகளுக்குப் படித்துக் காட்டுங்கள்! 

(01) பாராத பயிரும் கெடும்.
(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
(03) கேளாத கடனும் கெடும்.
(04) கேட்கும்போது உறவு கெடும்.
(05) தேடாத செல்வம் கெடும்.
(06) தெகிட்டினால் விருந்து கெடும்.
(07) ஓதாத கல்வி கெடும்.
(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
(09) சேராத உறவும் கெடும்.
(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
(11) நாடாத நட்பும் கெடும்.
(12) நயமில்லா சொல்லும் கெடும்.
(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
(15) பிரிவால் இன்பம் கெடும்.
(16) பணத்தால் அமைதி கெடும்.
(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
(18) சிந்திக்காத செயலும் கெடும்.
(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
(20) சுயமில்லா வேலை கெடும்.
(21) மோகித்தால் முறைமை கெடும்.
(22) முறையற்ற உறவும் கெடும்.
(23) அச்சத்தால் வீரம் கெடும்.
(24) அறியாமையால் முடிவு கெடும்.
(25) உழுவாத நிலமும் கெடும்.
(26)உழைக்காத உடலும் கெடும்.
(27) இறைக்காத கிணறும் கெடும்.
(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
(31) தோகையினால் துறவு கெடும்.
(32) துணையில்லா வாழ்வு கெடும்.
(33) ஓய்வில்லா முதுமை கெடும்.
(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
(35) அளவில்லா ஆசை கெடும்.
(36) அச்சப்படும் கோழை கெடும்.
(37) இலக்கில்லா பயணம் கெடும்.
(38) இச்சையினால் உள்ளம் கெடும்.
(39) உண்மையில்லா காதல் கெடும்.
(40) உணர்வில்லாத இனமும் கெடும்.
(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
(43) தூண்டாத திரியும் கெடும்.
(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
(45) காய்க்காத மரமும் கெடும்.
(46) காடழிந்தால் மழையும் கெடும்.
(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
(49) வசிக்காத வீடும் கெடும்.
(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.
(51) குளிக்காத மேனி கெடும்.
(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
(53) பொய்யான அழகும் கெடும்.
(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
(55) துடிப்பில்லா இளமை கெடும்.
(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
(57) தூங்காத இரவு கெடும்.
(58) தூங்கினால் பகலும் கெடும்.
(59) கவனமில்லா செயலும் கெடும்.
(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

அவர் எழுதிய மற்ற அருமையான செய்யுகளில் சிலவற்றை நாம் மீண்டும் நினைவில் கொள்வோமா?

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றிஎன்று தருங்கோல் என வேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்தலையாலே தான்தருத லால்.


நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.


கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் தமிழ் இலக்கியங்களில் உள்ள அறநெறி நூல்களை வாங்கி படித்துக் காட்டுங்கள், தமிழிலேயே அவர்களை படிக்கச் சொல்லுங்கள்! 
-YozenBalki 
🎉🎉🙏🏻🙏🏻🎊🎊

திங்கள், 6 மே, 2024

ரூ.150 க்கு 12 சுற்றுலாத் தலங்கள் காட்டுகிறார்கள்!



கொடைக்கானலில் வெறும் 150 ரூபாய் கொடுத்தால் அரசு பேருந்தில் 12 சுற்றுலாத் தலங்களை சுற்றி பார்க்கும் அசத்தல் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை. 

அப்புறம் என்ன ஜம்முன்னு கிளம்புங்க...!!

ஆனா இதை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா? சொல்லிட்டா போச்சு.

ஆயிரக்கணக்குல செலவு செய்து வேனோ ஜீப்போ வைக்கத் தேவையில்லை. திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி, வத்தலகுண்டுவிலிருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்தில்தான் இந்த ஆஃபர் இருக்கிறது.

இந்த பேருந்துகள் முன் பதிவின் பேரில் இயக்கப்படுகின்றன.

1. Upper lake View
2. Moyar Point
3. Pine Forest
4. குணா குகை
5. தூண் பாறை
6. பசுமைப் பள்ளத்தாக்கு
7. கால்ஃப் மைதானம்
8. பாம்பார் ஆறு View
9. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம்
10. கோக்கர்ஸ் வாக்
11. Briyant Park
12. லேக் (டிராப்)- Lake (Drop,)

ஆகிய இந்த 12 சுற்றுலா தலங்களுக்கு மேற்கண்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இந்த இடங்களை காண நபர் ஒருவருக்கு 150 ரூபாய் பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு ரூ 75 வசூலிக்கப்படும்.

அந்த பேருந்துகளில் இயற்கை எழில் காட்சி Natural Scene என குறிப்பிடப்பட்டடு இருக்கும். 

இந்த 12 இடங்களுக்கும் அந்த பேருந்துகளின் நடத்துநரே அழைத்துக் கொண்டு காட்டுகிறார்கள்.

சுற்றுலா பயணிகளுக்காக நீண்ட நேரம் ஒதுக்குவதால் பயணிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்.

இந்த ஆஃபர் இந்த மே மாதம் முழுவதும் இருக்கும்.

இந்த பேருந்துகள் போதுமானதாக இல்லைன்னு மக்கள் குறைபடுவதும் தெரிகிறது. கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. 

அப்புறம் என்ன கிளம்புங்க ஜாலியா வெறும் 150 ரூபாய்ல கொடைக்கானலை சுத்திட்டு வரலாம்.

-Courtesy
WhatsApp University 

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்!



🌝 தவளை கத்தினால் மழை 

🌝 அந்தி ஈசல் பூத்தால் 
அடை மழைக்கு அச்சாராம் 

🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை

🌝 எறும்பு ஏறில் பெரும் புயல் 

🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 

🌝 தை மழை நெய் மழை

🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும் 

🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு

🌝 புற்று கண்டு கிணறு வெட்டு

🌝 வெள்ளமே ஆனாலும் 
பள்ளத்தே பயிர் செய் 

🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு

🌝 களர் கெட பிரண்டையைப் புதை 

🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

🌝 நன்னிலம் கொழுஞ்சி 
நடுநிலம் கரந்தை 
கடை நிலம் எருக்கு

🌝 நீரும் நிலமும் இருந்தாலும் 
பருவம் பார்த்து பயிர் செய் 

🌝 ஆடிப்பட்டம் பயிர் செய் 

🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை 

🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

🌝 உழவில்லாத நிலமும் 
மிளகில்லாத கறியும் வழ வழ 

🌝 அகல உழவதை விட 
ஆழ உழுவது மேல் 

🌝 புஞ்சைக்கு நாலு உழவு 
நஞ்சைக்கு ஏழு உழவு 

🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

🌝 ஆடு பயிர் காட்டும் 
ஆவாரை கதிர் கட்டும் 

🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் 

🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை 

🌝 நிலத்தில் எடுத்த பூண்டு 
நிலத்தில் மடிய வேண்டும்

🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

🌝 தேங்கி கெட்டது நிலம் 
தேங்காமல் கெட்டது குளம்

🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை 

🌝 சொத்தைப் போல் 
விதையை பேண வேண்டும்

🌝 விதை பாதி வேலை பாதி

🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை 

🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

🌝 கோப்பு தப்பினால் 
குப்பையும் பயிராகாது

🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம் 

🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்!

நன்றி 🙏 
இனிய காலை வணக்கம்.

Courtesy:
 
-எனது Twitter நண்பர் இன்பா
Mr. Vitalist 

வெள்ளி, 3 மே, 2024

சூரியன் சுடாத வெண்ணிற ஆடை அணிவோமா?


கோடை காலத்தில் வெண்மை நிற ஆடைகள் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது இந்த காணொளி! 

மற்ற வண்ணங்களில் உள்ள பலூன்கள் வெப்பம் குவிக்கப்படும் பொழுது உடனே உடைந்து விடுகின்றன! 

ஆனால், வெண்மை நிறத்தில் உள்ள பலூன் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கிறது! 

அத்தோடு வெண்ணிற பலூனுக்குள் உள்ளே வைக்கப்பட்டுள்ள நீல நிற பலூன் மீது வெப்பம் குவிக்கும் பொழுது உடைபடுகிறது; ஆனால் அதன் வெளியே உள்ள வெண்ணிற பலூன் அப்படியே வெப்பம் தாங்குகிறது!

அதான் நம்ம ஆளுங்க வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை வெள்ளை துண்டு போட்டுக்கிட்டு இருந்தாங்க போல!

அரேபியர்கள், வெப்பம் மிகுந்த கொடிய பாலைவனங்களில் பெரும்பாலும் வெண்ணிற ஆடைகளையே பல நூற்றாண்டுகளாக பயன்படுத்துவதன் முக்கிய நோக்கமும் இதுவாகத்தான் இருக்கும்! 

நாமும் கோடைகாலங்களில் முடிந்த அளவுக்கு வெண்ணிற ஆடைகளை உடுத்துவோம்!

(Video Courtesy: WhatsApp Friends)

Yozenbalki