Translate this blog to any language

வெள்ளி, 29 மே, 2009

இந்தியா உதவியால் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் தோற்கடிப்பு !



ஜெனீவா, வியாழன், 28 மே 2009( 12:38 IST )





சிறிலங்க படையினர் நடத்திய தமிழினப் படுகொலை உள்ளிட்ட மனித
உரிமை மீறல்கள் குறித்து
விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித
உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக
இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் வாக்களித்ததால்,
அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.


ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை
ஆணைக்குழுவில் கடந்த 2
நாட்களாக நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் சிறிலங்க அரசாங்கம் நடத்திய
மனித உரிமை மீறுல்கள்
குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஐரோப்பிய
நாடுகளின் ஆதரவுடன் சுவிட்சர்லாந்து முன்வைத்தது.


இந்த தீர்மானத்திற்கு எதிராக அதாவது ஈழத் தமிழர்களுக்கு
எதிராகவும் ராஜபக்ஷே-வை
ஆதரித்தும் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள்
செயல்பட்டு வந்தன.

இதனால
், இந்த தீர்மானம் குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள்
எழுந்ததால் தீர்மானத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர்
அது நேற்று மாலை (இந்திய நேரப்படி நேற்றிரவு)
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக அதாவது எஆழத் தமிழர்களின்
நியாயமான உரிமைகளை
ஆதரித்து மேற்குலக நாடுகள், குறிப்பாக சுவிட்சர்லாந்த
, ஜெர்மனி,
இங்கிலாந்த
, பிரான்ஸ, இத்தாலி, கனட, சிலி, மெக்ஸிகோ
உள்ளிட்ட
நாடுகள் வாக்களித்தன.


ஆனால் இந்த நல்லதொரு தீர்மானத்திற்கு எதிராக இந்திய,
பாகிஸ்தான
, சீன, மலேசிய, இந்தோனேசிய, கியூப,
ரஷ்யா,
ஆப்ரிக்க உள்ளிட்ட உறுப்பு நாடுகள் வாக்களித்தன
.
(இதில் தமிழர்கள் நாம் ஆழமாக கவனிக்க வேண்டிய விஷயம்
பாகிஸ்தான
, சீன, மலேசிய, இந்தோனேசிய
போன்ற நாடுகள்
இந்தியாவின் பகை நாடுகள்-மற்றும் போட்டி நாடுகள்...இந்தோனசியாவில்
சமீபத்தில் தமிழர்கள் தாக்கப் பட்டது சிறைக் கூடங்களுக்கு அனுப்பப்
பட்டதும் நினைவிருக்கலாம்)

மற்ற 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்த்தன.

வாக்கெடுப்பின் முடிவில் தீர்மானத்திற்கு ஆதரவாக 17 நாடுகளும்
எதிராக 22 நாடுகளும் வாக்களித்திருந்ததால் சிறிலங்க அரசாங்கத்திற்கு
எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல்
போனது.


அதேவேளையில் இதே கூட்டத்தொடரில் சிறிலங்க அரசாங்கமும்
தனது ஆதரவு நாடுகளின்
ஆசியுடன் அனைத்துலக நாடுகளிடம் நிதியுதவி கோரும் தீர்மானம்
ஒன்றை முன்வைத்தது.
இந்த தீர்மானம் மீதான விவாதமும் நேற்று இடம்பெற்றது.


சிறிலங்க அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கும் இந்த
தீர்மானத்திற்கும் இந்தியா
உள்ளிட்ட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் ஆதரவாக
வாக்களித்தன.


ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கு எதிராக வாக்களித்தன.


எனினும் வாக்கெடுப்பின் முடிவில் சிறிலங்காவின் நிதியுதவி கோரும்
தீர்மானத்திற்கு ஆதரவாக
27 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்திருந்தன. எட்டு நாடுகள்
வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதனால் சிறிலங்கா முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு
ராஜபக்சேவுக்கு நிதியுதவி வழங்குவது என முடிவு செய்யப்பட்ட
து.


இதனிடையே, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள 41 தற்காலிக பிளாஸ்டிக்
முகாம்களில்
3 லட்சம் மக்கள் வசிப்பதால் அங்கு கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக
ஐ.நா.வின் மனித
உரிமைகள் சபை பிரதிநிதி கவலை தெரிவித்துள்ளார்.

இதுதான் தமிழர்களின் தற்போதைய தலை விதி!

நமக்கு பதவிகள் முக்கியம்; வெறும்-தமிழ் மொழி முக்கியம்.
அதை பேசும் மனிதர்கள் எங்கு செத்தாலும் நமக்கு என்ன?


நம் தமிழ் தலைவர்களுக்கு என்ன அக்கறை அங்கே இருக்கப் போகிறது.
அவர்கள்
குடும்பம் ஹிந்தி, ஆங்கிலம் பேசி "ஹிந்திக் காரர்கள்"
காலடியில்
உட்கார்ந்துபிழைத்துக் கொள்ளும்.

ஆனால் உலகம் முழுதும் பரவி வாழும் புலம்-பெயர்ந்த தமிழர்களுக்கு
யார்
இனிகாவல் இருக்கப் போகிறார்கள்?

ஆறு கோடி தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கே - அதிலும் அவர்களுக்கு
வழிகாட்டியாக
நாம் நம்பும் இங்குள்ள தலை சிறந்த தமிழ் தலைவர்களுக்கே,
இலங்கையில்
நடக்கும் இனப் படுகொலையை பார்த்து மனம் பதறி
இதயம்
வெடித்து 'சதை ஆடாத போது" மற்ற நாடுகளிலும் தமிழர்களுக்கு
இதே
நிலை- (இதை விட மோசமான வரப் போவதில்லை) வந்தால், என்ன செய்து நாம் கிழித்துவிடப் போகிறோம்?

விதியே விதியே தமிழச் சாதியை என் செய நினைத்துலாயோ?

திங்கள், 25 மே, 2009

இட்லர்-ராஜ-பக்ஷி ஒரு போர்க் குற்றவாளி!

இலங்கைப் பிரச்சனையை ஐக்கிய நாடுகளின் சபை தனது கைகளில் எடுத்து வைத்துக்கொண்டுள்ளது.
இது உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கு சற்று ஆறுதல் தரும் நிகழ்வாகும். 17 நாடுகளின் ஆதரவுடன் நாளை அதாவது 26.5.2009 அன்று இன்றைய இட்லர் 'ராசபக்ஷி' (Raja'butcher) இன் கொடுங்கோல் செயல்களை இனப் படுகொலைகளை வன்மையாக கண்டனம் செய்து 'போர்-குற்றவாளியாக' அவனை அறிவிக்க தீர்மானம் செய்து இருக்கிறார்கள்.
ஆனால், அந்தக் கொடியவனுக்கு ஆதரவாக களமிறங்கி ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்யப் போவது யார் தெரியுமா? கம்யூனிசம் பேசும் சீனா, ரஷ்யா ...அப்புறம் என்ன "சோனியாவின்- ஹிந்தியா" இவர்களுக்கு ஜால்ரா போடும் வேறு சில சில்லறை நாடுகள்.
தமிழன் என்றால் அவ்வளவு இளக்காரம் இந்த ஹிந்தியர்களுக்கு?
வெள்ளைக்காரன் நல்லவன் ஆகிவிட்டான்.
பிரிட்டன் தனது வரலாற்றுக் கரையை துடைத்துக்கொள்ள தயார் ஆகிவிட்டது. மேற்கு உலக நாடுகள் தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து சிங்களர்களால் நசுக்கப் படுவதை அறிந்து கொண்டு விட்டன. தமிழர்களின் மனித உரிமைகளை இலங்கையின் ஆளும் வர்க்கம் எந்த நாளிலும் மதித்து நடந்தது கிடையாது. இனியும் அது தமிழர்களை மதிக்கப் போவதில்லை.
இனிமேல் அங்கு
என்ன நடக்கப் போகிறது என்பதை நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
அமெரிக்க-அய்ரோப்ப்பியா நாடுகளின் தலையீட்டில் ஐ-நா மூலம் அங்கு ஒரு
சுதந்திர தனி நாடு அல்லது சம-உரிமை படைத்த சுயநிர்ணய தனி-மாநிலம் ஒரு சில மாதங்களில் அமைத்து தரப் படும்.
உலகத்தமிழர்களை நெகிழ்ச்சி கொள்ளத் தக்க அந்த நிகழ்வு மேற்கு நாட்டு மக்களுக்கும் அங்கு வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குமான பாசப் பிணைப்பை மேலும் அதிகரிக்கும். மேலும் தமிழகத்தில் வாழும் தமிழர்கள் உட்பட உலகில் வாழும் பத்து கோடி தமிழர்களுக்கும் ஒரு பெரும் உள்ளக் கிளர்ச்சியை அது ஏற்படுத்தும்.
தமிழர்களின் நியாயமான அந்த உரிமைகளை பெற்றுத் தந்த நாடுகளின் மீது அன்பும், அதற்க்கு எதிராக செயல் பட்ட நாடுகள் மீது வெறுப்பும், குறிப்பாக "ஹிந்தியா" மீது....வெறுப்பும் கோபமும் ஏற்படப் போவது காலத்தின் கட்டாயம்!