Translate this blog to any language

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

உங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா? ஒழிக்கும் வழிகள் இதோ! Kill the rats at your home!!


 (எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரியும்! தேள் கொட்டியவனுக்குத் தானே வலி தெரியும் - அதை வேடிக்கைப் பார்ப்பவனுக்கு எங்கே அது புரியப் போகிறது?)
 __________________________________________
எலித் தொல்லை தாளவே முடியவில்லை!
எலிகளைக் கண்டவுடன் தயவு தாட்சண்யம் பாராமல் ஒழித்துக் காட்டுங்கள்!
இரண்டாவது மாடியில் கூட எலிகள் வந்து நாசம் பண்ணும் என்று நம்ப முடிவில்லை 
ஒருவர் முணு முணுக்கிறார்...அதுகள் நூறாவது மாடிக்குக் கூட வரும்...மலை எலிகள் இல்லையா என்ன என்று..

* எனது பல நல்ல புத்தகங்களை நாசம் பண்ணிவிட்டன...
* குழந்தைகளின் துணிகள் பலவும் இவ்வாறே ...
* போன வாரம் வாஷிங் மஷினுக்குள் புகுந்து ஒயர்களைக் கடித்துத் துப்பி Rs.1750/- காலி.
* போன மாதம் ஒரு நாள் அதி காலை (இரவு?) இரண்டு மணி சமயம் எனது மகளின் விரலை, ஒரு எலி லேசாகக் கடிக்க கொஞ்சம் ரத்தம் வந்து..நாங்கள் எல்லாம் பயந்து போய் பெரம்பூர் பாரதி சாலை 24 hours மருத்துவ மனை சென்று அதற்கு  ஊசி, மருந்து போட்டுகொண்டு வந்தோம்.

* அந்த அறையில் படுக்க பயந்த குழந்தைகள் வேறு அறைகளில் உறங்குகின்றனர். அந்த அறைக் கதவை இரவில் பூட்டி வைக்க, நேற்று இரவு, கதவின் கீழ்ப் பகுதியை துவாரம் செய்ய ஆரம்பித்துவிட்டது அந்த அசகாய எலி!
* எலி பிடிக்கும் அந்த மரத்தால் செய்யப் பட்ட கூண்டை வைத்துவிட்டு மாதக் கணக்காகிறது...எதுவும் அதில் விழவில்லை.
* ஒரு முறை விழுந்ததை, கொண்டு போய் வாட்ச்மேன் இடம் சொல்லி ரோட்டில் விட்டு விட்டு வரச்சொன்னோம்...சாகடிக்க மனம் இன்றி! அது திரும்பவும் அடுத்த வீட்டுக்கு போயிருக்கும்!
* அது பண்ணும் தீமைகளைப் பார்த்ததால் அப்படி விடுவது தவறு என்று தோன்றுகிறது.
* ஒரு எலி வருஷத்துக்கு முப்பது குட்டிகள் போடுமாம்!
* ஒரு முறை எலி வந்த வீடு...அதோ கதிதான் என்று இணைய தளங்களில் கண்டேன்! 'எலித் தலைமுறை' அந்த வீட்டில் ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்!
* சுண்டெலி-பெருச்சாளி இதெல்லாம் அதில் அடக்கம்!
* எலிகள் இனி சென்னை போன்ற நகரங்களில் பெருகி விடும் என்றே தோன்றுகிறது. காரணம் அடுக்குமாடி கலாசாரம். எலிகள் எப்போதுமே உயரங்களில் வாழ விரும்பும் ஜந்து. மேலும் நம்மால் பூனைகளை அடுக்குமாடிகளில் வளர்க்கும் சாத்தியம் குறைவு!
பூனை ஓரிரு குட்டிகள் போட-எலிகள் சில சேர்ந்து நூற்றுக் கணக்கில் பெருக..ஒரு பூனை தான் என்ன செய்ய முடியும்?
* அதற்கு உதாரணம், அமெரிக்க நகரங்கள். அங்கு எலிப் பிரச்சினைகள் அதிகம்-எலி ஒழிக்கும் கம்பனிகளும் உள்ளன. 
 _______________________________________
எலித்தொல்லை தடுக்கும் வழிகள்:
* வருமுன் காத்தல்.
* எலி வரும் வழிகளைக் கண்டு..எலி கடிக்காத பொருட்களால் அடித்தல்-வேலி போடுதல்.
* உணவுப் பொருட்கள் எலிகளுக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளுதல். இரவில் அவற்றைத் தின்னவே எலிகள் வருகின்றன. 
தின்றுவிட்டு பிறகு தம் பற்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல்...கண்டதையும் கடித்து நாசம் பண்ணி...தான் குட்டி போட்டு வம்ச விருத்தி பண்ண ஒரு இடம் பார்த்துக் கொண்டு அந்த வீட்டிலேயே செட்டில் ஆகிவிடுகிறது.
* எலிகள் இருக்கும் வீட்டில், எலிகளால் அங்குள்ள மனிதர்களுக்கும் சில நோய்கள் ஏற்படும் என்று வேறு  சொல்கிறார்கள். 
 
 
 
இதெல்லாமே எலியால் கடிக்கப் பட்ட குழந்தைகளின் விரல்கள்:
உங்கள் வீட்டிலும் ஒரு நாள் இது நடக்கலாம்.
வீடேறி வந்து உங்கள் குழந்தைகளை வதைக்கும் பகைவனுக்கு 
"அன்பே சிவம்" சொல்லிக் கொடுக்க இயலாது - தயவு பாராமல் கொல்லுங்கள்! அதுவே சரியான வழி!
(courtesy: Google)
___________________________________________
எலிகள் பற்றிய மேலதிக செய்திகளுக்கு பார்க்கவும்:
________________________________________
சென்னையில் எலி ஒழிக்கும் நிறுவனங்கள் அல்லது விஷயங்கள் பற்றி இணையத்தில் தேடப் போய் ஒரு நல்ல நிறுவனத்தின் இணைய தளம் கண்டேன்..அது அமெரிக்காவை சேர்ந்தது.
மிகப் பிரமாதமான இணையதளம். 
சென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒன்று அது போல் மிகச் சிறு அளவில் நிறுவனம்/ இணையம் உள்ளது..
காண்க: http://www.sriprasannaagencies.com/
(just copy this link and paste it in browser. The direct link does not go to the page and shows error400)
மேலை நாடுகளில் இது போன்ற மக்கள் தொண்டு எதையும் மிகச் சிறப்பாக செய்வார்கள். நம் நாட்டில் தற்போதைய 2G spectrum scam- போன்ற விஷயங்களைத் தான் பிரமாதமாகச் செய்கிறார்கள்!
(இது போன்ற 'அரசியல் எலிகளை' ஒழிக்கவும் ஏதாவது கருவிகள் கண்டு பிடித்தால் நம் இந்திய நாடு நலமடையும்!!)
________________________________________
வருங்காலத்தில் அடுக்குமாடிகளில் எலிப் பிரச்சினைகள் பெரிதும் பெருகி விடும் என்றே தோன்றுகிறது.
* எலிகளை 'கண்ட-உடன்-சுட' என்று சொல்லும் படியாக ஒழிக்க வேண்டிய நிர்பந்தம் நகர வாசிகளுக்கு உள்ளது.
* உங்களுக்கு எதுவும் எலிகளால் பாதிப்பு வராத வரையில் இந்த விஷயங்கள் கொஞ்சம் சிரிப்பாகவே இருக்கும்!
* பாதிப்பு வரும்போது நான் சொன்னது நினைவுக்கு வரும்-அப்போது மீண்டும் இங்கு வரவும். சில நற்செய்திகள் காத்து இருக்கும்.
______________________________________
 எலி பிடிக்கும் சில நல்ல முறைகள்:
"பாவம் பார்ப்பவனின் நாடும் வீடும் பகைவனால் சூழப் பட்டு விரைவில் அழிந்து விடும்"- பகவத் கீதை 
______________________________________
எலி ஒழிக்க அவனவன் என்னென்ன படு படுகிறான் என்று  இங்கே சொடுக்கிப் பார்த்தாலே புரியும்:

____________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: