Translate this blog to any language

சனி, 22 டிசம்பர், 2018

Don't ever fill your children with inflated ego!

Some parents, instead of giving appropriate confidence, they are unknowingly boosting their children's Ego!

One of the parents recently was praising about her son to me that he could grasp the pages easily at once in a single reading. He would not study hard but used to acquire above 90% in all subjects. She also mourned that in the recent days he could not score the same anymore!

When I deeply enquired her son and probed into him, I found out a bitter truth of "over- confidence" turned its phase as "insecure feeling", when compared to other good slow snail co-students who had finished all subjects in the stipulated time.

Now, his "one-glance reading" will not help him to compete with his friends. So, he just wants to quit this schooling and wants to seek other courses and short-cut education systems anywhere in the world to save his self-respect!

Yes! Dear parents!

Don't be impractical to boost the ego of your children as if they are made up of special traits than other billion children. Treat them normal and teach them the value of middle-path!

A plant grows in its own space and time, that cannot be urged to offer fruit in a single day, not even by God!

So, inflate-not their ego ever, that may spoil their reality to cope up with other people and society!

I made him realise their familial fault and ushered him to start like an ego-less child again. He will live happily ever!

Yes! Over confidence is dangerous!

Yozen Balki
Senior Psychologist, Chennai

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

Kerala Flood பேரழிவு வெள்ளத்தை கணிக்க முடியாத மனித அறிவு!!

😂😅😂😃😄😃
💚💜💜💚💛💜
சென்னை வெள்ளம் 2015, கேரளா 2018 போன்ற பேரழிவு வெள்ளத்தை எவனாலயும் Predict பண்ணமுடியல!

ஆனால், சிலர் வெள்ளம் வரும், அதிக மழை வரும்னு சொல்றதுக்கு Vedic Prediction/ Scientific prediction எல்லாம் எதுக்கு? அதுதான் ஆயிரக்கணக்கில் உலகத்தில் நிகழ்கிறதே! அது ஆயா சொல்ற approximate size-ல வடை சுடற கதை! 

இவங்க அதையே English Vocabulary-ல வார்த்தை ஜாலம் பண்ணி தம்மை ஒரு intellectual ஆக கற்பனை பண்ணிக்கிறாங்க! 

1. மழை காலம், தமிழ் நாட்டுக்கு Sep, Oct, Nov, Dec எல்லாருக்கும் அது கொஞ்சம் தெரியும்! அதுலயும் Nov 15 to Dec 15 நமக்கு worst time & so on by previous years' average world climatic records.

2. ஆனால், சுனாமி,  பெருவெள்ளம், பூகம்பம், காட்டுத்தீ, Tornado போன்றவற்றை ஒரு மனித மனம் (புத்தர், ஐன்ஸ்டீன் உட்பட) "precise நாள்/நேரம்/precise இடம்" ஒரு வருடத்துக்கு முன்பே உரைத்து Predict பண்ணுவது என்பது "மயிரிழை அளவும்" சாத்தியம் இல்லை! 

We are totally powerless in this limitless universe!! அப்படி prediction சொல்பவர்கள் வெறும் தற்புகழ்ச்சியாளர்கள் என்பதையும், தாமே அறியாதவர்கள்!! 

"மனித எறும்புகளுக்கு இமயமலையை அளந்து Predict பண்ணும் திறமை உண்டென நம்பும்", அறிவை என்ன சொல்லி எப்படியழ? 

இயற்கை அல்லது இறைவன் மாபெரிய அளவிலான்! He is an ever expanding immeasurable & unpredictable vast consciousness!! 

ஆக, Forecast by science, Prediction by Intuition இவையெல்லாம் சிறுபிள்ளைகளின் சில்லறைத் தனமான "சொப்பு" விளையாட்டு!! சிறு அளவில் அது பயன்படும்; பெரிய அளவுக்கு என்றைக்குமே உதவாது!!

Yozenbalki 
Senior Psychologist 
www.yozenmind.com

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கலைஞரைக் காலம் அழைத்துக் கொண்டது!

இன்று மாலை 6.10 அளவில் கலைஞர் (94) காலமான சேதி காற்றில் பரவியது! மூப்பில் நிகழும் முடிவுதானெனினும், இதயம் ஏற்குமா என்ன? அழுத கண்களும் தொழுத கைகளுமாய் சென்னை காவேரி மருத்துவமனையில் மக்கள் கூட்டம்! இனப் பகைவர்களுக்கோ கொண்டாட்டம்!


ஒன்றைப் புரிந்து கொள்வது பகைக்குலத்துக்கு இயலாது!

'கருணாநிதி ஒழிந்தால் திராவிட இனவெழுச்சி ஒழிந்துவிடும்' எனும் மந்தபுத்தி நகைப்புக்குரியது! கலைஞர் ஒரு தனி மானுடரல்லர்; அவரொரு சமூக நீதிக் கோட்பாடு, சிந்தனைப்புரட்சியின் நீட்சி!

அவரது கொள்கைகளை மேலதிக தீரமூடன் மேற்செலுத்த பல்லாயிரம் களவீரர்கள் உள்ளனர்!

அதன்றியும், அவர் புகழை அணையாது கொண்டு செல்ல எம்ஜியார், ஜேஜே போன்று "பின்தொடர்ச்சி நில்லாத" பெருங்குடும்ப உறுப்பினர்கள், பெயரன் பெயர்த்திகளுமுண்டு!


ஆக, முன்பை விட வீரமாய், எழுச்சியுடன் பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்துத் தந்த வழியில் ஒரு பெருங்கூட்டம், திராவிடத்தமிழின மீட்சிக்கான பாதையில் அயராது தொடரும்! அதில் ஒரு அய்யமும் எவருக்கும் இருக்கவியலாது!


வாழ்க கலைஞர்! வாழ்க தமிழ்!

அவரது புகழுடல், தமிழுடன் சேர்ந்தே வாழும்!

யோஜென்பால்கி 
www.yozenmind.com 

வியாழன், 19 ஜூலை, 2018

Why one shouldn't Judge a Psychologist ever?

💚💛💜💚💛💜💚💛
People used to judge others by preconceived conclusions only. It is almost impossible to know the contents as it is without one's coloring.


Most of the time, our perception is stronger than the reality itself.

One day it happened to me. I had visited to one of my friends Ezhilan's apartment, in a sunny morning, that was found locked by an externally hanging lock. I was quiet sure about it and was cursing and scolding him and had returned home back. 

In those times, the mobiles were not invented or might be not in use in our demography. After some time another common friend Tamil arrived my home and we were started talking on several topics. In the middle of the conversation I expressed my anger towards our friend Ezhilan's absence despite my note of arrival to him. 

Then, Tamil was shocked and told me that he was just coming straight from Ezhilan's apartment only. I got suspicious and after talking to Ezhilan and thoroughly examined the facts, I could realise my wrong perception of the 'locked-apartment'. I was just unable to digest my mistaken vision and was deeply inquisitive for its reason.


Finally, I could find out the cause for my wrong precognition. Yes! Most of the time, Ezhilan would not be there and I could only see his locked room, that had deeply embedded in my subconscious mind !!

So, before seeing the concrete reality, my mind could tend to project its wrong perception of the preconceived illusions. That only made me to believe so. Here, this is not only happened to me, many of you too. 

So, never do mistakes through your perceptions. Don't ever color the contents from your delusion either. Be neutral and try to face the truth as it is. 

Especially, when you need to visit an eminent psychologist to cure your fragmented mind, never carry your 'judging-apparatus that might be already dilapidated/deluded one. 

You can do that with Physical-ism and Physicians who deal with tangible physiques and its ailments and not so with your psychologists ever.


After all, when one cannot judge His/ Her own mind which is already in delusion, how come He evaluate the  mind of a psychologist who repairs the minds of the intellectuals and intelligents? 

So, never judge your psychologist ever!

Yozenbalki 
Senior Psychologist 
www.yozenmind.com 

புதன், 13 ஜூன், 2018

குழந்தைகள் தலைமுடியில் "உண்ணி" Tick இருந்தால் ஆபத்து!

ஒரு குழந்தைக்கு திடீரென கோமா (Coma Stage) ஸ்டேஜ்!


காரணம் யாருக்குமே புரியவில்லை! பிறகு ஒரு புகழ் பெற்ற டாக்டர் குழந்தையின் தலைமுடியை பரிசோதித்து அங்கே புதைந்தபடி இரத்தம் உறிஞ்சும் ஒரு உண்ணியை (The Ticks from animals) பிடுங்கி எடுக்க, அடுத்த சில நிமிடங்களில் குழந்தை நார்மலாகி நடக்க ஆரம்பித்தது! 

ஆக, தலைமுடியை கவனியுங்கள்!

தமிழர்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி மொட்டை போடுவதும் அதனால்தான்!!

மேலதிக தகவலுக்கு:
https://www.ndtv.com/world-news/a-5-year-old-girls-sudden-paralysis-was-a-mystery-then-her-mother-checked-her-scalp-1865919

-yozenbalki 
Senior Psychologist & Therapist http:// www.yozenmind.com

சனி, 2 ஜூன், 2018

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டதா?

*ஒரு "கோயபல்ஸ்" பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால், அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள்! அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒரு பொய் பல வருடங்களாக பரப்பப்பட்டு வருகிறது!


அது என்னவென்றால் *"50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது"* என்பதுதான்!

நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அதை ஆமோதித்துக் கொண்டு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டுள்ளோம் !!

கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !!

*உயர்க்_கல்வி*

பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு - 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.

*கல்வி_நிலையங்களின்_தரம்*

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,

*முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்,,,*

பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான். இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்றுகூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.


முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு - 22 ; குஜராத் - 5 ; மபி - 3 ; உபி - 6 ; பீகார் - 1 ; ராஜஸ்தான் - 3.

முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்

தமிழ் நாடு - 24 ; குஜராத் - 2 ; மபி - 0 ; உபி - 7 ;

பிகார் - 0 ; ராஜஸ்தான் - 4

*பொருளாதார_மொத்த_உற்பத்தி*(GDP)

இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது #தமிழ்நாடு.

தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.

*தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்*

ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும் அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்?


தமிழ் நாடு - 18.80 lakh crore (2nd Place); பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 10.94 lakh crore (5th Place ; மபி - 7.35 lakh crore (10 th Place) ; உபி - 12.37 lakh crore (4 th Place) ; ராஜஸ்தான் - 7.67 lakh crore (7 th Place) ; சத்தீஸ்கர் - 2.77 lakh crore (17 th Place)

*சாப்ட்வேர்_ஏற்றுமதி* (ஆயிரம் கோடியில்)

தமிழ் நாடு - 75,000 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1917 ; மபி - 343 ; உபி - 13,740 ; ராஜஸ்தான் - 712; சத்தீஸ்கர் - 18

*சிசு_மரண_விகிதம்* 1000 பிறப்புக்கு

தமிழ் நாடு - 21 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 36 ; மபி - 54 ; உபி - 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் - 46 ; இந்திய சராசரி: 40

*ஒரு_லட்சம்_பிரசவத்தில்_தாய்_இறக்கும்_விகிதம்*

தமிழ் நாடு - 79 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 112 ; மபி - 221 ; உபி - 285; ராஜஸ்தான் - 244 ; சத்தீஸ்கர் - 221 ; இந்திய சராசரி : 167

*தடுப்பூசி_அளிக்கப்படும்_குழந்தைகள்_சதவீதம்*

தமிழ் நாடு - 86.7%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 55.2%; மபி - 48.9%; உபி - 29.9%; ராஜஸ்தான் - 31.9%; சத்தீஸ்கர் - 54%; இந்திய சராசரி : 51.2%

*கல்வி_விகிதாசாரம்*

தமிழ் நாடு - 80.33%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 79%; மபி - 70%; உபி - 69%; ராஜஸ்தான் - 67%; சத்தீஸ்கர் - 71%; இந்திய சராசரி : 74%

ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-

தமிழ் நாடு - 943 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி - 918 ; உபி - 902 ; ராஜஸ்தான் - 888 ; இந்திய சராசரி : 919

*தனி_நபர்_வருமானம்* (Per Capita Income) - ரூபாயில்

தமிழ் நாடு - 1,28,366 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1,06,831; மபி - 59,770 ; உபி - 40,373 ; ராஜஸ்தான் - 65,974 ; சத்தீஸ்கர் - 64,442; இந்திய சராசரி : 93,293

*தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது*

தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.

*வீடுகளுக்கு_மின்சாரம்* (households having electricity)

தமிழ் நாடு - 98.3%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 96%; மபி - 89.9%; உபி - 70.9%; ராஜஸ்தான் - 91%; சத்தீஸ்கர் - 95.6%

*மனித_வள_குறியீடு* (Human Development Index)

தமிழ் நாடு - 0.6663 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ; மபி - 0.5567 ; உபி - 0.5415 ; ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358 ; இந்திய சராசரி : 0.6087

*ஏழ்மை_சதவீதம்* Poverty (% of people below poverty line)

தமிழ் நாடு - 11.28%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 16.63%; மபி - 31.65%; உபி - 29.43%; ராஜஸ்தான் - 14.71%; சத்தீஸ்கர் - 39.93%; இந்திய சராசரி : 21.92%

*ஊட்டசத்து_குறைபாடு_குழந்தைகள்* (Malnutrition)

தமிழ் நாடு - 18%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 33.5%; மபி - 40%; உபி - 45%; ராஜஸ்தான் - 32%; சத்தீஸ்கர் - 35%; இந்திய சராசரி : 28%

*மருத்துவர்களின்_எண்ணிக்கை*(ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)

தமிழ் நாடு - 149; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 87; மபி - 41 ; உபி - 31; ராஜஸ்தான்-48 ; சத்தீஸ்கர்-23 ; இந்திய சராசரி:36

இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம்,,,,

உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும்,நோபல் பரிசு வென்ற *அமெர்த்தியா சென்* அவர்கள் , தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி இவ்வாறாக கூறுகிறார்,,,,


*தமிழ்நாட்டை_வடமாநிலங்களோடு_ஒப்பிடுவதே_தவறு #முன்னேறிய_நாடுகளோடு_தான்_ஒப்பிட_வேண்டும்*

இனி யாராவது, "தமிழ்நாடு, திராவிடக் கட்சிகளால் நாசமாய் போச்சு", என்று நச்சுப் பேச்சு பேசினால், வட மாநிலத்திற்கு போகும் அடுத்த ரயிலில் ஏற்றி அனுப்புங்கள் அங்கு போய் பார்க்கட்டும், அப்பொழுதுதான் தமிழ்நாட்டின் அருமை தெரியும்!!

-WhatsApp உபயம்:

வெள்ளி, 18 மே, 2018

நந்திக் கடலருகில் முள்ளிவாய்க்கால் முன்றலில் !!


அன்றொருநாள் நந்திக் கடலருகில்
முள்ளிவாய்க்கால் முன்றலில் 

கொன்றொழித்த அந்நியர்கள் 
நின்று விடவில்லை தினந் தோறும் 

திரை மறைவில் தின்ற படி 
குறை யின்றி சிரித்த படி 

கூடிக் குலாவி 'குடுமி' வழிப்போந்து 
குல மழிக்க குடை சேர்ந்தார் 

இது சமயம் எனக் கொண்டார் !
தக்க தொரு ஆட்சி வந்ததென்றே 

கள்ளரவர் கரும்புத்தி குறையாது 
உள்ளிருந்து எவ்விடமும் பதறாது 

மெல்லவே தமிழ்மாய்க்க நகருகிறார்! 
மோதி நேர்வழியில் சாய்க் காது 

மோதி சூத்திரர்கள் வாய்ப் பாலே
இன்றுவரை சாத்தியங்கள் தேடுகிறார் 

உலகம் வாய்பிளந்த அதிசயத்தை 
எம்மிளைஞர் ஏற்றிவைத்த தீபத்தை 

திரள்மக்கள் பண்பாட்டு குழுமத்தை 
அறவலிமை கொண்டார்த்த ஈகியரை 

வேறுவழுபூசி பொட்டழித்த பேடியரை
யார் நுழைத்தார் ஈங்கென்று அறியோமா ?

தமிழர்கடல் அரங்கேறும் 'கள்ளிவாய்'க்கால் 
மூலவர்கள் அறிவோம் நாம்!  

மூலம்வரை வேரறுப்போம் 
தெளிந்து பகைமுடிப்போம்  !

-யோஜென் பால்கி 

சனி, 12 மே, 2018

திராவிடத்தால் வாழ்ந்தோமடா!!

திராவிடர் அரசுகள் சமூகநீதிக்கு ஆற்றிய பங்கு மலையளவு!! 


'ஒருவேளை சாப்பாட்டுக்கே பிரச்சினையா இருக்குங்க... இதுல எங்க சாமி எம்புள்ளைய படிக்க அனுப்ப?'

"உன் புள்ளைய படிக்க அனுப்பு. அந்த பிள்ளைக்கான சாப்பாட்டை நான் தரேன்" - 
இது தமிழக அரசின் அரை நூற்றாண்டுக்கு முந்தைய குரல்!

'என் புள்ள பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போக நல்ல துணி இல்லைங்க'

"புள்ளைய படிக்க அனுப்பு. சீருடையை நான் தரேன்"
-தமிழக அரசு


'என் புள்ள கால்ல செருப்பு இல்லாம வெயில்லயும், மழையிலயும் நடக்குது'

"புள்ளைய படிக்க அனுப்பு. செருப்பு நான் தரேன்"

'பள்ளிக்கூடத்துல வெறும் சோறும் குழம்பும்தானாம். அத திண்ணுட்டு எப்படிங்க என் புள்ள தெம்பா படிக்கும்?'

"இனி சத்துணவுல முட்டை போட சொல்றேன். சந்தோஷமா?"
-திராவிடர் அரசு

'புத்தகத்தை காசு கொடுத்து வெளியில வாங்க சொல்றாங்க சார். என்னால அதெல்லாம் முடியுமா?'

"உன் பிள்ளைக்கு புத்தகம், ஜியாமெண்டரி பாக்ஸ் எல்லாமும் இலவசமா தரேன். படிக்க மட்டும் அனுப்பு"

'எம்புள்ள அஞ்சாப்பு வரை எங்கூர்லயே படிச்சிடுச்சிங்க. அடுத்து ஆறாப்பு படிக்க பக்கத்து ஊருக்கு போனும். அது இங்கேர்ந்து 4-5 மைல் தூரம் இருக்கும். தினமும் பஸ்ல போக காசுக்கு நான் எங்க போவேன்'

"உன் பிள்ளைக்கு இலவச பஸ் பாஸ் நான் தரேன். படிக்க அனுப்பு"

'பக்கத்து ஊர்ல என் புள்ள படிக்குது. அந்த ஊருக்கு அடிக்கடி பஸ் இல்லை. எப்படி அனுப்புறது?'

"கவலைப்படாதீங்க. உங்க பிள்ளைக்கு இலவசமா சைக்கிள் தரோம். படிக்க அனுப்புங்க"

'நாங்க மலைக்கிராமங்க. எங்க ஊர்லேர்ந்து தினமும் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கிறது சாத்தியமில்லைங்க'

"உங்களை மாதிரி மக்களுக்குதான் அரசாங்கம் சார்பில் உண்டு-உறைவிட பள்ளிகளை கட்டியிருக்கோம். பிள்ளையை படிக்க அனுப்புங்க. தங்குற இடம்,  சாப்பாடு, படிப்பு அனைத்துக்கும் நாங்க பொறுப்பு"
-திராவிடத் தமிழரசுகள்


'வயசுக்கு வந்த பொம்பள புள்ளைய எப்படி அந்த மூனு நாளுக்கு பள்ளிக்கூடம் அனுப்புறது? அதான் அந்த நாட்கள்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறதில்லை'

"தைரியமா அனுப்புங்க. அந்த நாட்களுக்கு தேவைப்படும் நாப்கின்களை கொடுக்க தானியங்கி நாப்கின் மிஷின்களை பள்ளிக்கூடத்தில் அமைச்சிருக்கோம். அதுக்காகல்லாம் புள்ளைய லீவ் போட சொல்லாதீங்க"

'பத்தாவதுவரை அரசாங்க பள்ளிக்கூடத்தில் படிக்க வச்சிட்டேன். ஏதோ கம்பியூட்டர் படிப்பு வந்துருக்காம்ல அதுல சேர்த்து விடலாம்னு பார்க்குறேன். எங்க போயி சேர்க்குறதுன்னு தெரியலையே?!'

"எங்கிக்கிட்ட அனுப்புங்க. Computer Science படிப்பை நாங்களே சொல்லித்தரோம். படிக்கிற புள்ளைக்கு உதவியா இருக்க இலவசமா லேப்டாப்பும் தரோம்"
-திராவிடத் தமிழரசுகள்

'என் புள்ளைதாங்க என் வம்சத்துலயே பள்ளிக்கூடம்வரை போய் படிச்சவன். அவனை காலேஜ் படிப்புக்கு அனுப்ப பணத்துக்கு நான் எங்க போவேன்? 

"குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு கல்லூரி படிப்பும் இலவசம். தயங்காம படிக்க அனுப்பி வைங்க.நாங்க பார்த்துக்குறோம்"


'எம் புள்ள நல்லா படிச்சி டாக்டர்படிப்புக்கோ, என்ஜினியர் படிப்புக்கோ போகனும்னா எங்க போயி படிக்கனும்?'

"நம்ம பிள்ளைகள் எங்கேயும் போக வேணாம். அவுங்க டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆகனும்னா நம்ம மாநிலத்துலயே படிக்கலாம். அதுக்கு தேவையான மருத்துவ கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகளையும் நம்ம அரசு கட்டித்தரும். அதுக்கு 12வதுல நல்ல மார்க் எடுத்தா போதும்" 
-பெருமைமிகு திராவிட அரசுகள்

'பொம்பளப்புள்ள 8-வதுவரை படிச்சிருக்கு. அது போதும்னு பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திட்டோம். சட்டுபுட்டுனு அடுத்த தை மாசத்துல கல்யாணத்தை முடிச்சிடுவோம்'

"பெண் பிள்ளைகளை முழுமையா படிக்க விடுங்க. 12ம் வகுப்புவரை படித்தால் திருமணத்துக்கு 50,000 ரூபாய் பணமும் தாலிக்கு 8 கிராம் தங்க காசும் அரசாங்கம் சார்பா தரோம். படிக்க அனுப்புங்க"

'நீங்க நல்லாயிருக்கனும் சாமி. என் வம்சத்துலயே என் புள்ளதான் முதல் பட்டதாரி. இனி குடும்பம் தழைச்சிடும்'

இப்படி இருந்த தமிழ்நாட்டுக்கு
திடீரென ஒரு வில்லன் வரான்!


 "இனி நீங்கல்லாம் எனக்கு கட்டுப்படனும். நான் சொல்றபடிதான் நீங்கல்லாம் படிக்கனும். 
நீ என்ன தேர்வு எழுதனும்னு நான்தான் சொல்லுவேன். அதே மாதிரி இந்த கல்லூரிகள் எல்லாம் உனக்கு சொந்தமா இருக்கலாம் ஆனா அதில் யார் யாரை படிக்க வைக்கனும்னு நான்தான் முடிவெடுப்பேன்.

ஒரே நாடு,  ஒரே கொள்கை. இனி இப்படித்தான். இதை ஏற்று நீங்க நடக்கலைனா நீங்கல்லாம் தேச துரோகி.

அடுத்து என்ன பாடம் சொல்லிக்கொடுக்கனும்னு நான்தான் சொல்லப்போறேன்" 
-இது ஆரியப் பார்ப்பனர்கள் தற்போது, தமிழர்களை ஒடுக்கச் செய்யும் சூழ்ச்சி. 

ஆக, இதுதான் அரை நூற்றாண்டுகளாக தமிழக அரசுகளின் இடையறாத உழைப்பால் கிடைத்த "கல்வி எனும் சமூகநீதி", பார்ப்பன காவி பாவிகளின் கையில் சிக்கிய வரலாறு ஆகும்!

(From WhatsApp, a good Write-up)

புதன், 9 மே, 2018

NEET அரக்கனும் அப்பாவி அப்பாக்களும்!

*இந்த அரசுகள் ஒருநாள் கருகும்* !


நீங்கள் *அந்த அப்பாக்களை* கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலும், சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்களிலும் பார்த்திருக்கலாம். ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தவுடன், *ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வுக்கு வேட்டி சட்டையில், கையில் ஒரு நாளைக்கான துணிமணியுடன்  தன் மகனையோ, மகளையோ  கையில் பிடித்துக் கொண்டு, இஞ்சினியரிங் கவுன்சிலிங்க் க்கு அண்ணா யூனிவர்சிட்டிக்கும், மெடிக்கல் கவுன்சிலிங் க்கு கீழ்பாக்கத்திற்கோ, எந்த பஸ் போகுமென்று விசாரித்துக் கொண்டிருக்கும் கடைக்கோடி கிராமத்தில் இருந்து வந்திருக்கும் அப்பாக்களை பார்த்து இருப்பீர்கள்*.


அந்த அப்பாக்களைத் தான் உம் மவனோ மகளோ" நீட்" எழுதி டாக்டராக வேண்டுமென்றால் ராஜஸ்தானுக்கு கூட்டிட்டு போ என்றிருக்கிறது உச்சநீதி மன்றம்.சித்திரை மாதத்தில்  தமிழ்நாட்டிலேயே  நடமாட முடியாது. இந்த கத்திரி வெயில் சீசனில் உன் புள்ளைங்களை ராஜஸ்தானுக்கு கூட்டிட்டு போய் பரீட்சை எழுத வை என்கிறது  உச்சநீதி மன்றம்.இதற்கு ஒத்து ஊதுகிறது மத்திய அரசு.!

*இதுவரை சென்னையையே பார்த்திராத அப்பாக்கள் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். கட்சி மாநாட்டிற்கு வரும்போது மட்டுமே கடற்கரையையும், எம்ஜிஆர் சமாதியையும் பார்த்த அப்பாக்கள் இருக்கிறார்கள்.கலெக்டர் ஆபிஸில் கொடுப்பதற்கு ஒரு மனு கூட எழுதத் தெரியாத அப்பாக்கள் இருக்கிறார்கள்.


எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் போனால் பத்து ரூபாய் அதிகமாகும் என்று சாதா வண்டிக்கு காத்திருக்கும் காசு இல்லாத அப்பாக்கள் இருக்கிறார்கள். ரொம்ப தூரம் வெளியூர் பயணத்திற்குப் போகும்போது ஓட்டலில் சாப்பிட காசு இல்லையென்று வீட்டில் இருந்து புளியோதரை கட்டிக்கொண்டு போகும் அப்பாக்கள் இருக்கிறார்கள்.இன்னும் எழுத படிக்க தெரியாத அப்பாக்கள் இருக்கிறார்கள்*

அந்த அப்பாக்களைதான் உம் புள்ளைங்களை கூட்டிட்டு ராஜஸ்தானுக்கோ, கேரளாவிற்கோ "நீட்" எழுதுவதற்கு ஓடு! என்றிருக்கிறது இன்றைய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு.


எவ்வளவு வறட்சியையும் தாங்கிக் கொண்டு வளருமே காட்டுச்செடி, அதுபோல் பொருளாதாரத்தில் எவ்வளவு பின்தங்கி இருந்தாலும், கல்வி பாடங்களின்  பட்டியலை ஏழை மாணவர்களுக்கு எட்டாத வகையில் திருத்தி வைத்திருந்தாலும், அதையெல்லாம் சமாளித்து எல்லாவற்றிக்கும் சவால்கொடுத்து உயர் படிப்புக்கு வந்து நிற்கும் போது, முதலில் நீட் எழுதி தேர்வாகி வாருங்கள் என்றார்கள். நீட் என்றால் என்ன? அப்படியென்றால் என்ன? அதையும் அலைந்து திரிந்து கேட்டு தெரிந்து,அதற்கும் நாங்கள் தயார் என்று வந்து நிற்கும்போது, உங்களுக்கெல்லாம் தேர்வு மையமே உள்ளூரில் கிடையாது என்னும் போது எத்தனை பெத்த வயிறு பற்றி எரியும்..! 

*அப்படி எரிகின்ற தீயில் இந்த அரசுகளும் அதன் உத்தரவுகளும் ஒருநாள் நிச்சயம் கருகும். அந்தநாள் வெகுதொலைவில் இல்லை*.

பா.வெங்கடேசன்.
(Via WhatsApp)