Translate this blog to any language

வியாழன், 20 ஜனவரி, 2011

MNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்!

மொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 70 கோடி பேர் மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சர்வீஸைத் தேர்ந்தெடுத்து விட்டால் அதிலேயேதான் தொடர வேண்டியுள்ளது-அது பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும். 
தற்போது இதற்கு முடிவு கட்டியுள்ளது இந்திய தொலைத் தொடர்புத்துறை TRAI. எந்த மொபைல் போன் சர்வீஸ் பிடிக்காவிட்டாலும், நமது எண்ணை அப்படியே வைத்துக் கொண்டு சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் போர்ட்டபிலிட்டி MNP வசதி இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் இதை இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் லட்சக்கணக்கான ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் பலனடைய உள்ளனர்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்று. வாடிக்கையாளர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். மேலும் செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களது சர்வீஸை மேம்படுத்த உதவும். போட்டிகள் அதிகரிக்கும். இது தரமான சேவையை வாடிக்கையாளர்கள் அடைய உதவியாக இருக்கும் என்றார்.

முதலில் இந்தத் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹரியானாவில் தொடங்கப்பட்டது. தற்போது இன்று முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஏர்டெல், வோடோபோன், ஐடியா, ஏர்செல், எம்டிஎஸ், வீடியோகான், யூனினார் ஆகிய செல்போன் சேவை நிறுவனங்கள் இந்த வசதியை அளிக்கவுள்ளன.

அதேபோல சென்னை (பெருநகரம்) மாநகரிலும் எம்டிஎஸ் தவிர மேற்கண்ட மற்ற நிறுவனங்கள் இந்த சேவையில் இணைந்துள்ளன. எனவே இவற்றில் எந்த நிறுவனத்தின் சேவை உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் மற்றவற்றின் சேவைக்கு உங்கள் பழைய எண்ணை மாற்றாமலேயே மாறிக் கொள்ளலாம்.

கர்நாடகத்தி்ல மேற்கண்ட நிறுவனங்களுடன் ஸ்பைஸ் நிறுவனத்தின் சேவையும் இடம் பெறும்.

உங்கள் சேவையை மாற்றுவது எப்படி?

கீழ்க்கண்டவற்றை பின்பற்றி உங்கள்  சேவையை மாற்றிக் கொள்ளலாம்.

அதற்கு  முதலில் உங்களது செல்போன் மூலம் 1900 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும். அதாவது:

MNP - Process Step by Step, to-do:

First Step:  Take your mobile and type 'PORT' leave one space and type your mobile number 
(for e.g. PORT 9840042904) and send by sms to1900.
Probably the 1900 goes to Trai's portal- not to your existing service provider. So, 
you need not worry.


Second Step: within some time, may be in half-an hour, they will send you an 'unique porting ID number' probably with 8 digit one, via sms to your mobile. You have to keep the number in your mobile plus write it somewhere for your added help if you miss the number by chance.

Third Step: Take your 'Unique porting code number UPC' along with your passport photo one copy and your present address/identity proof, and go to your nearest mobile recharging agent within a week time. The SMS will tell you the time limit.  (In these days, your existing mobile service provider's customer care people will call you ask you and request you to be with them, never care and be firm in your decision)

Fourth Step: Tell your recharging agent that you want to port away/migrate from existing  "X" service to "Y". (For e.g. in my case,  I want to port away from Airtel for their repeated wrong billings and join in Vodafone) Now he will ask you for your New passport type photo-one copy and your present address proof. He will attach both with an application form "Y" (Say,Vodafone form) and you have to fill up/sign up and hand it over.

Fifth Step: Your agent will give you now a new Sim card of "Y" ( in my case Vodafone) and will collect Rs.19/-only. That's it and your work got finished, you can go home happily.

Sixth step: Within few days, 99% in the night hours after 10 pm, one day your existing mobile service provider will cut his service off and you will find it out in the morning only. Feel Happy!

Seventh step: Remove your old Sim card out and put your new Sim card in, and wait for half-an hour.
That's all! Now you are connected to New service provider/operator with Rs.5/- talk value in it. You can recharge as you like after some time! Make a sentiment call first to someone you love and Enjoy MNP privileges!
( Note: Do not forget to retrieve 200 mobile numbers hidden in your old Sim card my dear friend!!)

- உங்களுக்கு பழைய சேவையாளர் ஒரு கோட் எண்ணைத் தருவார்.

- பின்னர் உரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதில் எந்த சர்வீஸை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்களோ அந்த நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு, உங்களுக்குத் தரப்பட்ட கோட் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.

 
- அடுத்த 7 நாட்களில் உங்களது சர்வீஸ் நீங்கள் விரும்பும் மொபைல் கம்பெனிக்கு புதிய சிம் கார்டு உடன் மாற்றப்பட்டு விடும்.

- இந்த சேவையைப் பெறுதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம், வெறும் ரூ. 19 மட்டுமே!


-மோகன் பால்கி 
For more details log on to:  
http://www.mobilegyaan.com/mobile-number-portability-procedure-charges __________________________________________

திங்கள், 17 ஜனவரி, 2011

Realise the use of....the self-realised people!!!


Dear friend...( xxxx ) !

It is really a serious and longing question to me as to how far these people who are hiding out in caves and solitudes for self realising are superior than the ordinary farmers and workers of this land. They Atleast do their karma yoga to benefit the society in day to day basis.

But see in kumba mela. There are lot of Sadhus in millions claimed to be super naturals came out from caves or living in to/for self realisation were unable to stop any natural or unnatural calamities...Atleast do no favour for human society.


Even The self realised Buddha's principles lead sinhales only to kill millions of Tamil people.

Self realised Jesus principles did not prevent the invasion and destruction of Iraq for no reason found yet. They themselves split in to several categoies like protestants Catholics pentecostal etc to fight with each other.

Self realised prophet Muhammad principles were ignored and the result is the split of shiya and sunny and their constant wars among them.

So all the great people who have claimed to be self realised were utterly failed in their principles...but growing only in numbers.

The recent...Self realised Nityananda's principle lead only to get signature for free sex on contractual basis!!

My opinion is Nature/God is enough and sufficient unto itself for this world and never these godmen ever....for they only created partitions among people by their mere principles and rituals.. in turn hatred and wars...more than their so called self realisation.

This is my realisation ever.

yozenbalki

சனி, 15 ஜனவரி, 2011

"முள்ளிவாய்க்கால்" மறக்க முடியுமா? We Tamils diaspora will ever forget Mullivaikkal ??




ஏனிந்த மவுனம் ஏமாளித் தமிழா

எதற்காம் நமக்கு அரசியல் பேச்சு !


வாழ்நிலம் கொள்ளை போவதும் அறியாய்

வாழ்ந்த சரித்திரப் பெருமையும் தெரியாய்


அடிமைகள் ஆர்ப்பதும் ஆட்ட பாட்டமும்

குடிமை வழக்கம் உலகினில் இல்லையாம்!


கொத்துக் கொத்தாய் என்குலமது சாகையில்

செத்தவன் போலொரு சித்தம் மறந்தே


சிரித்துக் கிடந்து கவலை மறந்து

மரித்த பிணத்தை கொறிக்கும் கழுகாய்


தேறும் சில்லறை கடைக்கண் வைக்கும்

'தேராத்' தலைவர்கள் மரத்த உலகினர்!


கழுவாக் குறையாய் காலை நக்கி

பிழைப்பார் அறியார் உழைப்பார் நோவு!


ஆண்ட இனத்தவர் பூமிப் பந்தில்

அகதிகளாய் இன்றலையும் இழி நிலை!


வெளுத்தது நம்பி அன்னியப் பதர்களை

உள்ளே விட்டு உறங்கிய தீமை!


சிங்களக் காடையர் 'ஹிந்திய' வஞ்சகர்

சேர்ந்து வகுத்த தமிழினத் துடைப்பு!


துரோகிகள் காட்டில் பெய்த பெருமழை;

பெருகி ஓடிய 'முப்பது வெள்ளிகள்'!


'முள்ளி வாய்க்கால்' மறக்க முடியுமா?

உள்ளில் பழியாய் உறங்காச் சின-நதி!


எமது மழலைகள் அன்னை தந்தையர்

மகளிர் இளைஞர்கள் ஆநிரை மரங்கள்!


அடியோடு எரித்த அதிகார நிலைகள்

அந்நியன் செய்த பாலியல் வினைகள்!


நெஞ்சில் நெருப்பாய் என்றும் கிடக்கும்!

வினைக்கு எதிர்வினை அறிவியல் பாடம்!


பகைவனுக்கருளவும் தொழுத தமிழர் யாம்

சிங்கள பவுத்தமோ 'கருப்பை' கிழித்தது!


ஒன்றே குலமென உலகைப் பார்த்தவர்

எங்கள் தமிழர் உயர்ந்த பண்பினர்!


கீழைத் திசைகளில் புலிக்கொடி பறவா

தேயமில்லையாம் இமயமும் வென்றோம்!


இற்றை நாளில் வஞ்சக நெஞ்சினர்

விரித்த வலைகளில் சிக்கிக் கிடக்கிறோம்!


ஒருநாள் தங்க சிங்களன் வந்தான்

'சென்னையில் இன்று வடவர்கள்' போன்றே!


நம்பிக் கிடந்தோம் நமது நாடென

ஒட்டக மூக்கின்று ஆமையின் வீடு!


வந்தவன் வளர இருந்தவன் தேய

பிச்சைக்கு வந்தவன் பெருமான் ஆனான்!


உலக சரித்திரம் அப்படித் தானே!

நம்பிக் கிடந்தார் தாய்நாடு இழந்தார்!


பிழைக்க வருபவர் திண்ணையில் படுத்து

திரும்பித் தன்னூர் விரைதல் இயற்கை !


நாடு பிடிக்கும் சிங்கள வஞ்சமோ

தம்மினம் சேர்த்து தமிழரைச் சாய்த்தது!


திரைகடல் ஓடி திரவியம் செய்தவன்

திரும்பி வருகையில் சிங்கள பூமி!


தமிழினி இல்லை எங்கும் சிங்களம்

முக்கியத் துறைகள் சிங்களர் கென்றார்!


வருத்தம் - கோபம் - கூட்டம் - 'செல்வா' ;

அமைதிப் பேச்சுகள் தோல்வியில் முடிந்தன!


சிங்களக் காடையர் பவுத்த வெறியர்கள்

எங்கணும் ஆடிய கோரத் தாண்டவம்;


எந்த மொழியிலும் சொல்வதற் கில்லை!

சொந்த மண்ணிலே அகதிகள் ஆயினர்!


இழவு விழாத வீடுகள் இல்லை

இழிவு படாத பெண்டிரும் சொற்பமே!


இனியும் பொறுத்திட இயலா நிலையில்

பிறப்பவை தாமே விடுதலை போர்கள்?


கோழைகள் மட்டுமே 'கொண்டவள்' தந்து

கொடிய பகைவனை சமரசம் செய்வார்!


குலுக்கும் நட்பை வெட்டும் கைகளை

'யுத்த பூமியில்' முத்தம் தருவமோ ?


எமது தளிர்களை கருக்கிய தருக்கரை

நொடியும் மறவோம் திருப்பித் தருவோம்!


உலகெலாம் பரந்த எந்தமிழ் மாந்தர்

உள்ளம் பதிக்க ஒன்று சொல்வேன்!


தீமைகள் தொடர்ந்த சரித்திரம் இல்லை!

எல்லா இரவும் ஒருநாள் விடியும்!


-மோகன் பால்கி








_____________________________________

எல்லா இரவும் ஒருநாள் விடியும்!



யோஜென் பால்கி

yozenbalki

வெள்ளி, 7 ஜனவரி, 2011

The 'Wheel' Will Rotate On!! குறிப்பறியாதோர் 'சக்கரம்' சுழலும்!






















சிறியதை பெரிதும் பெரியதை சிறிதும்
செய்பவன் ஒருவன் அவன்பேர் இறைவன்!

"மாற்றமுடிந்தவை முடியாதன"  என
மாநிலம் உள்ளதை மறந்தவர் பலபேர்!

பெரியதும் அவனால் சிறியதும் ஆகும்-
சிறியதும் அதுபோல் மலையென மாறும்!

தினந்தினம் வேகம் வேறு திசைகளில் 
மனமது அடங்காதோடி விரைகையில்

சிறிதினில் மறைபொருள் ஒளிந்த தறிவரோ?
அறிவினில் புதைந்த அறிவதும் அழுக்காம்!

'நாணான்' என்னும்  நாணமற்றதை
வண்ணான் ஆவியில் வெளுப்பது போலும்

வாழ்வின் இறைமை வெளுத்தே துவைக்கும்
ஆன்ம விளக்கம் 'அடங்கையில்' உணர்த்தும்!

இதுவும் அதுவும் உயர்ந்தவை யாவும்
பொதுவினில் வைத்தால் வெறுமையே மிஞ்சும்!

நிமிர்ந்த மலைகளை சாய்த்தோ சமநிலை?
தாழ்வறு பூமி தரணியில் உண்டோ?

உயர்ந்தவை அறுத்துப் பரப்பிய சிறுமை
சின்ன மனிதர்கள் செயற்கை அன்றோ?

உலகம் அதுவாய் அழகாய் இருக்கையில்
உள்ளம் நம்முள் எரிந்தே கிடக்கும்!

சிறிது பெரிதென-பெரிது சிறிதென
செப்புதல் மனமே- மனமே நோயாம்!

இன்றைய இரவு நாளை விடிந்து
விடியல் இரவாய் மாறுதல் இயற்கை!

போனது திரும்பி - வந்தது போகும்
நாடுகள் அழிந்து பாலையும் ஆகும்!

பாலையும் ஒருநாள் நாடுகள் ஆயின;
"இருமை" இறைவன் லீலையே அன்றோ?

பொறுத்தவர் புண்ணியர் வழிதோறும் வாழ்வர்
தேதி குறிப்பவர் சேதிகள் அறியார்!

இருப்பது கொண்டு நலமுடன் வாழும்
திருப்பதம் பற்றிய அடியவன் துறவி!

கடமை செய்திடும் கண்ணியர் உயர்வர்
சோம்பிக் கிடக்கும் கயவர் அழிவர்!

இருப்பினும் இறைவனை குத்திக் குடைதல்
பிறந்த ஒர்சிசு 'இணையக்' கேட்பதாம்!

அறிவறியாத குழவிகள் போன்றே
அழிவது யாவும் தனக்கென வேண்டும்;

அழுது புலம்பியே வாணாள் தேய்க்கும்;
குரங்குப் புண்ணாம் அறிவினை என்செய?

பிறவிக் குற்றமோ பெருமான் விதியோ? 
உறுத்து வந்த ஊழ்வினைப் பயனோ?

"அவனருளால்தான்" அவன் தாள் வேண்டி
அவனியில் அமைதி பெற்றிடலாகுமாம்!

ஆன்ம ஞானிகள் அன்றே அருளினார்!
அகத்துள் அண்டம் மறையும்-திரியும்!

அடங்கா மனதை அடக்கும் ஞானியின்
அன்பில் அடங்குதல் அதுவுமே அறியார்!

எல்லாம் 'இங்கே' 'இக்கணம்' இருக்க
ஏங்கித் திரியுமாம் சின்னப் பறவை!

கோடி வார்த்தைகள் கூறியும் என்ன?
குறிப்பறியாதோர் 'சக்கரம்' சுழலும்!

yozenbalki