இது உளஇயல் கலைஞன் யோஜென் பால்கியின் வலைப் பூந்தோட்டம்: A Chennai Psychologist
Translate this blog to any language
புதன், 24 மார்ச், 2010
இவர்கள் தான் நம் அரசியல் வாதிகள்! (This is our present Politicians)
திங்கள், 15 மார்ச், 2010
நம்ம நடிகர் அடடே மனோகர் - பாடல்களைக் கேளுங்கள்!
அடடே மனோகர்! என்று ஒரு சிரிப்பு நடிகர் நினைவு இருக்கிறதா உங்களுக்கு?
அவரது பிளாக் பற்றி எனது நண்பர் திரு அந்தோணி முத்து எனக்கொரு நாள் லிங்க் அனுப்பியிருந்தார்.
மனோஹரின் மிக்கத் தெளிவு, இறைமை பற்றிய தனது மேலான கருத்துக்கள், தானே எழுதி, இசை அமைத்த தனது இறை/தத்துவ/நிலையாமை /வாழ்வியல்உண்மைகள் பற்றிய கருத்துக்களை மற்றும் பாடல்களைக் கேட்டேன்! அதை அனைவரும் கேட்கட்டும் என்ற நல்லெண்ணத்தில், தனது வலைத் தளத்தில் இருந்து பிறர், பதிவிறக்கம் செய்யுமாறு அமைத்துள்ள உள்ளப் பாங்கு கண்டு வியப்பும் பெரு மகிழ்வும் கொண்டேன். பாடல்கள் பாடி இசை அமைத்துப் பதிவு செய்வது என்பது சின்ன விஷயம் அல்ல! அந்தப் பணியை எப்படியோ செய்து மெனக் கெட்டு பின்னர் அதை "சும்மா" தருவதற்கும் அவர் பெரிய தொழில் அதிபரோ சூப்பர் ஸ்டாரோ அல்ல! ஏதோ ஒரு இறைமையின் உந்துதல் அவரிடம் இருக்கிறது-இல்லாவிடில் இதை செய்ய முடியாது என்பது எனது கருத்து! சுமார் நாப்பத்தி ஒரு பாடல்களுக்கு மேல், அதில் வரவு எதுவும் இருக்காது என்று தெரிந்தே எழுதி, இசை அமைத்து, ஒலிப் பதிவு செய்வது-அதிலும் தரமாக- என்பது சாதாரண வேலை அல்ல!
இவர் ஒரு வித்தியாசமான நடிகர்-அதை விட மேலாக நம் சம காலத்தில் வாழும் ஒரு நல்ல உயிர்!
அவர் மேலும் நல்ல உடல்/மன/ஆன்ம நலம் பெற்று நீடு வாழ்க என்று வாழ்த்துவோம்!
நீங்களும், அவரது வலைத் தளத்துக்குத் தவறாமல் இப்போதே செல்லுங்களேன்!
http://adademanohar.blogspot.com/
அதை புக் மார்க் செய்து வையுங்கள்; சமயம் வாய்க்கும் போது அவரது அர்த்தமுள்ள இனிய பாடல்களை கேட்டு மகிழலாமே!
அவரது முகவரி/தொலைபேசி எண்கள்:
தெ.ரா. முரளி மனோகர்
('அடடே மனோகர்')
199 வெள்ளாளத் தெரு
புரசைவாக்கம்
சென்னை 600 084
(தொலை பேசி: 25325412)
(அலை பேசி: 9840061878)
-மோகன் பால்கி
வியாழன், 11 மார்ச், 2010
உங்களுக்கு அந்தப் 'பளிச்' பளிச்சிடுகிறதா?
அந்த நண்பரைப் பார்த்த உடன் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும்.
அது 1980-85 களுக்கு இடைப்பட்ட காலம்.
அவர் பெயர் செழியன். (சில காரணத்துக்காக இங்கு பெயரை மாற்றி உள்ளேன்). ஒவ்வொருவரிடமும் பேசுவதற்கு என்று அவர் ஒவ்வொரு விஷயம் வைத்திருப்பார். அவரைப் பார்த்த உடன் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சி பிறக்கும். இத்தனைக்கும் அவரது உடைகள் சற்று கிழிந்தும், நல்ல காலணிகள் இன்றியும், கலைந்த தலைமுடி , மழிக்கப் படாத முகம் என்று சாதாரண தோற்றத்தோடு தான் இருப்பார்.
எனக்கு மனோ தத்துவத்தில் ஆர்வம் இருந்ததால், மனித உறவுகள், கோபம், பிரிவு அதற்கான காரணங்கள் என்று எதையும் ஆய்வுக் கண்ணோடு பார்க்கும் பழக்கம் சிறு வயது முதலே இருந்தது. அதனால், அவரை உற்றுப் பார்க்க ஆரம்பித்தேன். அதாவது, எதனால் அவரிடம் மற்றவர்கள் நெருங்கிப் பழகுகிறார்கள். ஆசை ஆசையாகப் பேசுகிறார்கள் என்று. சிரிக்கவே தெரியாத சில ஜடங்கள் கூட அவரைக் கண்டால் சிரித்துப் பேசி சகஜமாக பழகுவார்கள். என்ன மாயம் இது! அவர்களிடம் மைய இழையாக ஓடும் பொதுவான பேச்சு எதைப் பற்றியதாக இருக்கிறது? அதை ஆராயத் தீர்மானித்தேன்.
அவருக்கும் எனக்குமான உறவு அவரும் நானும் அந்நாட்களில் திராவிடர் கழக இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் என்பதே. எனவே, எங்கு கூட்டம் நடந்தாலும் நிச்சயம் அவரைக் காண இயலும். அவரைப் பின்தொடர்ந்த படியே சில பல நாட்கள் ஆய்வு செய்ததில் எனக்கு ஒரு சுவாரசியமான விஷயம் புலப் பட்டது.
அவரது பேச்சு எப்போதுமே மற்றவர்களுக்கு உதவும் பேச்சாக, நலம் விசாரிக்கும் பேச்சாக, தகவல் அளிக்கும் பேச்சாக, பாராட்டும் பேச்சாக, நன்றி கூறும் பேச்சாக, உற்சாகம் தரும் பேச்சாக, கள்ளம் கபடம் அற்ற பேச்சாக மட்டுமே இருப்பதைக் கண்டு வியந்தேன்!
அவரது பேச்சு கிட்ட தட்ட இப்படி இருக்கும்:
"நான் காலையிலே உங்க வீட்டுக்கு வர்றேன். அந்த லெட்டர்-ஐ கொடுங்க. நான் அங்க தான் போகப் போறேன் - தந்துடறேன்"
" அய்யா! அந்த பள்ளியில் சேருவதற்கு விண்ணப்பம் தர ஆரம்பிச்சாச்சி- உங்க பையனுக்காக ஒரு நாள் சரவணன் கிட்டே கேட்டிருந்தீங்களே!"
" ஆமா! அன்னக்கி அந்த மழைல, பாவம் எப்படி போனீங்க - எத்தனை மணிக்கு வீட்டுக்குப் போய் சேர்ந்தீங்க"?
" தம்பி! நேத்து மீட்டிங்குல கலக்கிட்டீங்க. ரொம்ப நல்லா இருந்தது உங்க பேச்சு. வாழ்த்துக்கள்!"
இப்படிதான் இருக்கும் அவரது உரையாடல்!
பிறரிடம் அவர் உதவி கேட்பதாய் இருந்தாலும், " எனக்கு ஒரு சின்ன உதவி..முடிஞ்சா பாருங்க...ஒன்னும் நிர்பந்தம் இல்ல.."ன்னு சொல்லி விட்டு இயல்பாக கேட்பார். நிறைய நண்பர்கள் இருந்ததால் அவருடைய வேலைகள் வெகு எளிதாகவும் விரைவாகவும் முடிந்துவிடும்.
இப்போது எனக்குப் புரிந்துவிட்டது! சிலரை நமக்கு அதிகம் பிடிப்பதும் - சிலரை ஏதோ காரணத்தினால் நம் மனம் தவிர்ப்பதும்!
மேற்கண்ட பேச்சையே இப்போது வேறு விதமாக மாற்றிப் பார்ப்போமா?
"நீங்க காலையிலே போற வழியிலே என் வீட்டுக்கு வந்துட்டு போக முடியுமா-ஒரு லெட்டர் இருக்கு-அவர் கிட்ட தந்துடுங்க "
உங்க வீட்டுப் பக்கத்துல அந்த பள்ளியிலே விண்ணப்பம் தர்றாங்க...வாங்கி வைக்க முடியுமா?
அன்னக்கி மழையிலே நிக்கறப்போ ஒரு பிளாட் பத்தி சொன்னீங்களே- விசாரிச்சுட்டீங்களா?
நேத்து மீட்டிங்குக்கு என்னால வர முடியலே....எனக்கு ஆபீஸ்-ல ஒரே டென்ஷன். இப்பக்கூட எப்பிடியோ அடிச்சி பிடிச்சி வந்தேன்"
மேற்கண்ட இரண்டு விதமான பேச்சும் பேச்சுதான்!
ஆனால், நம் உள் மனதில், முதல் விதப் பேச்சு ஒரு வித உற்சாகத்தையும்
இரண்டாம் விதப் பேச்சு ஒரு வித மனச் சோர்வையும் தருகிறது!
காரணம் வெளிப்படையானது தான் !
முதல் பேச்சில் பொது நலம், உள்நோக்கம் இன்மை, அன்பு, பிறர் மீது கரிசனம் வெளிப்படத் தெரிகிறது!
இரண்டாம் பேச்சில் தன்னை மட்டும் முன்னிறுத்திய தன்மை மறைந்து கிடக்கிறது!
அதாவது, சுயநலம், மற்றவர்கள் மீது வெறுப்பு உமிழ்தல், பரபரப்பு, இறுக்கமான மன நிலை, உழைப்பின் மீது நம்பிக்கை இன்மை, அடுத்தவர்களை குறை கூறுதல், நேரம் தவறுதல்-அதற்கு சாக்கு போக்கு கூறுதல், தனது மதம்/கட்சி அது சார்ந்த கொள்கைகளே உயர்ந்தது என்று விதண்டா வாதம் பண்ணி நேரக் கொலை செய்வது, துடுக்காகப் பேசி அடுத்தவர் மனதைப் புண்படுத்துவது, எப்போதும் தன்னைச் சுற்றியே இந்த உலகம் இயங்க வேண்டும் என்று, ஒரு வித
"தன் முனைப்போடு" (Egoful activities) செயல் படுவது, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தவறான நினைப்பு, மூடிய மன நிலை, ஆராயாமல் உடனடியாக
முடிவுக்கு வரும் குணம் (Jumping in to conclusions) இவை யாவும் கொண்ட ஒரு மனிதரை அல்லது இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் நமக்கு அவரைப் பிடிக்காமல் போய்விடுகிறது. திடீரென்று இது நடக்கும்!
மேல் மனதுக்கு ஏன் எதற்கு இப்படி பிடிக்காமல் போகிறது என்று காரணங்கள் புரியா விட்டாலும், ஒருவரைப் பிடிப்பதற்கும் தவிர்ப்பதற்குமான காரணம் என்னவென்று ஆழ் மனதுக்கு மட்டும் எப்படியோ 'பளிச்' என்று தெரிந்து விடுகிறது!
உங்களுக்கு அந்தப் 'பளிச்' பளிச்சிடுகிறதா?
-மோகன் பால்கி
( நட்பு எப்படி இருக்க வேண்டும்? இங்கே சொடுக்குக! )
இது நம் நீரிழிவு (Diabetes) நோயின் அளவு!
| KanneKaniyamuthe Movie contd | Movies | |||
01:30 | Song Sequence | Music based | |||
04:30 | News (இது மட்டும் தான் சினிமா இல்லை) | News based | |||
05:00 | Song Sequence | Music based | |||
07:00 | Movie - Avathara Purushan | Movies | |||
09:30 | Kodambakkam | Movies | |||
10:00 | Movie - Vesham | Movies | |||
13:00 | Movie - Doctor Amma | Movies | |||
16:00 | Vanna Thirai | Movies | |||
16:30 | Movie - Kizhakkum Merkkum | Movies | |||
19:00 | Sirikalam Vaanga | Film based | |||
19:30 | Thirai Minnalgal | பிலிம் | |||
20:00 | Movie - Nilakkaalam | Movies | |||
23:00 | Movie - Kanne Kaniyamuthe | Movies |
http://www.sunnetwork.org/tvschedules/schedule.asp?tv=ktv
மேற்கண்ட இந்த அட்டவணை. K-டிவி யின் ஒரு நாள் பொழுது (K TV Schedule for 11-Mar-2010) எப்படிக் கழிகிறது என்பதாகும். ஜீரோ ஜீரோ முதல் இருபத்து நான்கு மணி வரை ஒரே ஒரு அரை மணி நேரம் தவிர மீதம் யாவும் திரைப் படங்கள், மற்றும் திரைப் பாடல்கள். இந்த டிவி-என்று அல்ல-கிட்ட தட்ட எல்லா டிவி-களிலும் இது போல் திரைப் படங்கள்-சின்னத் திரைத் தொடர்கள்! மக்கள் பாவம் என்னதான் செய்வார்கள்!
வேறு சில காரணங்கள் இருப்பினும் இது போன்று திரைப் படம் உட்கார்ந்து பார்த்துப் பார்த்து உழைப்பு கொஞ்சம் கூட இல்லாமல் சாப்பிட்டு சாப்பிட்டு, நீரிழிவு நோய் பெண்கள் பலருக்கும் இப்போது வர ஆரம்பித்து விட்டது. முன்பெல்லாம் ஆண்களுக்குதான், அதுவும் ஒய்வு பெற்றவர்களுக்கு வரும். இப்போது, இளைஞர்களும், தான் விளையாடுவதை விட்டு விட்டு பிறர் ஆடும் கிரிக்கெட்டை மணிக் கணக்கில் பார்த்துப் பார்த்து உழைப்பற்ற சோம்பேறிகள் ஆகி நீரிழிவுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஓடி ஆட வேண்டிய சிறுவர் சிறுமிகளும் இதில் அடக்கம். இப்போதெல்லாம் தெருவில், வீட்டு வாசல்களில், கோவில்களில், மக்கட் கூட்டத்தைக் காண முடிவதேயில்லை. மயானம் போல் இருக்கிறது. எல்லோரும் டிவி, வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் என்று அந்த முட்டாள் பெட்டிகளிடமே (Idiot-Boxes) தஞ்சம் அடைந்து ஒரு "நடமாடாப் பிணங்களாக" மாறி வருகிறர்கள். கை-காலை ஆட்டுவது கூட இல்லை! இதற்கு இடையில், வேளை தவறாமல் சாப்பிட்ட உணவு மட்டும், சக்தி செலவில்லாமல் மீதம் உள்ள உடலின் சக்தி (Excess Glucose) அதிக க்ளுகோஸ்-ஆக சேர்த்து வைக்கப் பட்டு நீரிழிவு நோய் ஆரம்பம் ஆகிறது!
வரும் காலத்தில், அதாவது இன்னும் பத்து வருடங்களில் தமிழகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் நீரிழிவு நோயாளிகளாக இருப்பார்கள் என்பது என் யூகம்!
-மோகன் பால்கி
(What is diabetes? What causes diabetes?மேலும் தகவலறிய இங்கே சொடுக்குக!)
ஞாயிறு, 7 மார்ச், 2010
தமிழருவி மணியன் உரை செய் - திருமந்திரம் !
மன்னர் ஆட்சியே எனக்குப் போதும்!
மன்னர் ஆட்சி முறை ஒழிந்து மக்கள் ஆட்சி ஏற்பட்டுவிட்டது என்று நம்ப முடியவில்லை!
இன்னும் சொல்லப் போனால் மன்னர் ஆட்சியே மேல் என்று தோன்றுகிறது.
காரணம், அன்றைய முகலாய மன்னர்கள் அல்லது அதற்கும் முன்னர் தென்னிந்தியாவில் சேர சோழ பாண்டிய மன்னர்களின் ராஜ போக வாழ்க்கையை விட அதிகமான சொகுசு வாழ்க்கை நமது மாநில மத்திய அமைச்சர்கள்/ அவர்களது குடும்பங்கள் வாழ்வது கண்கூடு. அன்றைக்காவது ஒரு நாட்டுக்கு ஒரு மன்னனும் அவனது ஒரே ஒரு குடும்பம்/சில பல மனைவியர்கள், ஒரு சில தேர்கள், கொஞ்சம் யானைகள், கொஞ்சம் குதிரைகள், கொஞ்சம் வைரம்-தங்க நகைகள், ஓரிரு அரண்மனைகள் என்று இருந்து விட்டு செத்துப் போனார்கள். இன்றைக்குப் பார்த்தால், சுதந்திரம்!!! பெற்ற இந்தியாவில் ஒரு 300 - 400 பாராளுமன்ற அமைச்சர்கள், 20 -25 மாநிலங்களில், ஒரு மாநிலத்துக்கு 100 - 300 எம்-எல்-ஏ க்கள், அதோடல்லாமல் மாநில அமைச்சர்கள், மாநில கவர்னர்கள், அரசுச் செயலாளர்கள், கலக்டர்கள் என்று ஒரு பெரிய மெகா-சைஸ் கும்பலே இருந்து கொண்டு ராஜ வாழ்கை அனுபவிக்கிறது.
பத்திரிக்கைகள் சொல்கிற புள்ளி விவரம், பொது மக்கள் பேசுவது, இதை எல்லாம் வைத்துப் பார்த்தால் ஒரு சாதாரண வட்டச் செயலாளர் ( ஆளும்/அல்லது ஆளாத கட்சியாக இருக்கலாம் ) முதற் கொண்டு கோடிக் கணக்கில் கொள்ளையடித்து வருவது தெரிகிறது. அதோடு, ஒரு அரசியல்/அரசு பிரமுகர் காரில் போனால் பின்னால் நூறு கார்கள், ஆயிரம் தொண்டர்கள் ஜே! ஜே! போடுவது, காலில் விழுவது, ஆங்காங்கு மேடை போட்டு அரசாங்கப் பணத்தில் இலவசங்களை மக்களுக்கு அள்ளித் தருவது! வழியெங்கும் தோரணங்கள்! வாழ்த்து Baner -கள், கொடிகள், அன்ன தானம், வஸ்த்ர தானம், கோவில் பூஜைகள், பண முடிப்புகள் வழங்குவது, இதையெல்லாம் பார்க்கும் போது, இந்த மக்கள் ஆட்சி முறை, ஆயிரக்கணக்கான குறுநில மன்னர்களின் தான்தோன்றித் தனமான ஆட்சி போலவும், அதிக செலவு பிடிப்பதாகவும், அதிக ஓட்டைகள் உள்ள பானையாகவும் தோன்றுகிறது.
மக்களின் அரசு என்பது நூறு ரூபாய் வருமானம் வந்தால் அதில் தொண்ணூறு ரூபாயை மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவு செய்ய வேண்டும். ஆனால், இப்போதுள்ள "மக்கள் - அரசாங்கப் பசு", நூறு ருபாய்க்கு புல்லும், புண்ணாக்கும் வாங்கிப் போட்டால் பத்து ரூபாய்க்கு மட்டும் பால் கறக்கிறது!! கொடுமை! தொண்ணூறு ரூபாயை இந்த மாதிரி, வழியில் போகிறவன் வருகிறவன் எல்லாம் கொள்ளையடித்து விடுகிறான். உழைக்கும் மக்களுக்கு, நல்ல தண்ணீர், நல்லக் காற்று, நல்ல சாலைகள், பயமுறுத்தாத விலையில் அரிசி, பருப்பு எதுவும் கிடைப்பதில்லை. ஆனாலும், உலகப் பணக்காரர்கள் வரிசையில் நம் நாட்டு தொழில் மன்னர்களும், அரசியல் மந்திரிகளும் தவறாமல் இடம் பெறுகிறார்கள். நூறு கோடி மக்களிடம் இருக்க வேண்டிய பணம், ஒரு சில "தற்கால குறு-நில மன்னர்களிடம்" மட்டுமே குவிந்து கிடக்கிறது! என்ன எழவோ! இதற்குப் பெயர் மக்கள் ஆட்சி! ஜன நாயகம்! வெங்காயம்!
எனக்கு என்னமோ அந்த பழைய காலத்தில் தலைக்கு மேல் கிரீடம் வைத்து மன்னர் வருகிறார்!பராக்கு! பராக்கு! என்று சொல்லும் ஒற்றை மன்னர் முடியாட்சியே சிறந்தது என்று தோன்றுகிறது!
உங்களுக்கு எப்படி?
-மோகன் பால்கி
சனி, 6 மார்ச், 2010
"தூசு - தொங்கப்பா" என்று ஒருவன் !!
ஒரு ஊரில் தூசு தொங்கப்பா என்று ஒருவன் இருந்தான்.
வேலை வெட்டி இல்லாதவன். அதனால், பகலில் தெரு மண்ணை எடுத்து ஜல்லடையில் போட்டு சன்னமாக சலித்து மூட்டை மூட்டையாக வைத்துக் கொள்வான். அதை நடு இராத்திரியில் காற்று வீசும் திசையில் வைத்து தூவுவான்.
அது போய் அந்தத் தெருவில் எல்லோர் வீட்டிலும் அடை அடையாகப் படியும். பிறகு, காலையில் போய் அதைத் துடைக்கிறேன் பேர்வழி என்று ஒரு சில பணக்கார வீடுகளுக்குப் போய் கொஞ்சம் துடைத்து விட்டு, கையை காலை ஆட்டி விட்டு கைச்செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு வந்து விடுவான்.
அந்த 'தூசு தொங்கப்பா' கதையாக இருக்கிறது நம்ம corporation மற்றும் High ways கதை! வருஷம் முழுவதும் தெருக்களை, சாலைகளைத் ஏதோ ஒரு காரணத்துக்காக தோண்டுவது.
மூடுவது-மீண்டும் தோண்டுவது!
தூசு தும்புகளைப் போட்டு மூடுவது!
அது அங்கு செல்லும் ஆயிரக்கணக்கான வண்டிச்சக்கரங்களில் பட்டு ஆகாயத்தில் மேல் எழும்பி, ஜாலியாக பறந்து வந்து நம் நுரை ஈரலுக்குள் போய் வசிக்க ஆரம்பித்து விடும்.
இது ஒரு நாள் ரெண்டு நாள் கதை அல்ல. பற்பல வருஷங்களாக இதே கதைதான். இத்தனைக்கும் நம்ம ஊரில் "தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்" என்ற ஒன்று...வெட்டியாய் இருக்கிறது..நம்பினால் நம்புங்கள், இல்லாவிட்டால் போங்களேன்!
அவர்கள் மொத்தம் எத்தனை பேர், எவ்வளவு அரசாங்க சம்பளம் போகிறது, அப்படி என்னதான் தினமும் செய்கிறார்கள் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? எனக்கும் தான் தெரியாது- அதுக்கு நான் என்ன பண்ண?அது போகட்டும், அதைப் பார்க்க, பார்க்காமல் இருக்கத்தான் அரசு-அரசு என்ற ஒன்று எப்பவும் வந்து போகிறதே ! நமக்கு என்ன வீண் கவலை! அது தவிர பொதுவாகவே...
நமக்குதான் "Pollution" பற்றிய பிரக்ஞையே கிடையாதே!
நாம தான் எது பற்றியும் முணுமுணுக்கக் கூட மாட்டோமே!
யாராவது தப்பித் தவறி முணுமுணுத்தால், அதை 'உனக்கு அரசியல்-பகை'
என்று உடனே இன்னொருவர் சொல்லிவிடுவோமே!
சரி, மேற்படி அந்தப் பள்ளத்தில் ஒரு வருஷ காலத்துக்கு அப்பப்ப ஏதாவது ஒரு பெரிய லாரியோ, பஸ்சோ மாட்டிக்கொண்டு அவதிப் படும்!
இல்லையென்றால், அந்த பள்ளத்தின் மீது ஒரு சமாதி-மேடு மாதிரி என்னமோ ஒன்றைக் கட்டுவார்கள்! கண்ணில்லாதவன் கறி சமைச்ச கதையாய்!
அதன் மீது ஆயிரக் கணக்கான வண்டிகள், ஆண்டுக் கணக்கில், இமயமலை ஏறுவது போல், ஏறி இறங்கி செல்லும்! உள்ளே பயணம் செய்பவர் எப்படியோ உயிர் வாழ்ந்து தொலைக்க வேண்டும்! ( பாவம்! இந்த முழு நேர டிரைவர்கள்! குடலெல்லாம் இறங்கிப் போய் இருக்கும்!) சென்னையில், பல சாலைகளில், பல ஆண்டுக் கணக்கில் இருக்கும் மேடு-பள்ளங்கள், சமாதி மாதிரி ஒட்டு போட்ட தார் ரோட்டு வேலைகள் (patch works) இன்னும் என் மனக் கண்ணில் அப்படியே இருக்கிறது.
அழகழகான வீடுகள் கட்டி இங்கே என்ன பிரயோஜனம்?
இப்படி அசிங்கமான சாலைகளை வைத்துக் கொண்டு?
(உங்கள் மனக் கண்ணில் இந்த "மக்கள் அரசுகளின்" தெரு-சாலைகளை மறைத்து விட்டு, வெளிநாட்டுச் சாலைகள் போல கற்பனை செய்து பார்த்தால்...நாம் எல்லோருமே ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருப்பது போலத் தான் இருக்கும்! அந்த அளவு தனி மனிதர்களின் கட்டிட அமைப்புகள் சிறப்பாக இருக்கின்றன! அதைக் கெடுக்கும் பின்புலத்தை அரசு சாலைகள், தெருக்கள், குப்பைகள் ஏற்படுத்துவது கண்கூடு!)
வீட்டுக்கு உள்ளே இருக்கிற வரைக்கும் நாம் எல்லோரும் ராஜா-ரோட்டுக்கு வந்தா நசுங்கிப் போன கூஜா!
இன்னும் மழைக் காலத்தில் எந்தெந்த சாலைகளில், தெருக்களில், வெள்ளம் வடியாமல் நிற்கும் என்பது நிறைய பேருக்கு அத்துப்படி. ஆனால் இதெல்லாம் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் தெரியவே தெரியாதாம்! ( உலகத்தில் பல நாடுகளில், எவ்வளவு அழகான சாலைகள் உள்ளன! தொலைக் காட்சிகளில் தான் நாம் தினமும் பார்க்கிறோமே! நம் மந்திரிகள், அதிகாரிகள் எல்லாம் அந்த நாடுகளுக்குப் போய், எப்படி அவர்கள் அந்த மாதிரி உருப்படியான சாலைகள், மேம்பாலங்கள் கட்டுகிறார்கள் என்று பார்த்துவிட்டு வரவேண்டும்.) ஆனால் இது போல பலப் பல மழை காலங்கள் எப்பவும் போல வரும்-போகும்! இந்தத் தொல்லைகள் மட்டும் தலைமுறை கடந்தும் தொடரும்!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,தூசு பறக்கும் சாலைகள்!
எப்படியோ....
வாழ்க! தூசு-தும்புகள்!
வாழ்க! மேடு பள்ளங்கள்!
வாழ்க! சமாதிகள்!
வாழ்க! வெள்ளம் தேங்கும் சாலைகள்!
-மோகன் பால்கி
வெள்ளி, 5 மார்ச், 2010
காந்தியின் உண்மைச் சீடர் - 'கோட்சே'-வை கொண்டாடலாமா?
அவரும் ஏதோ ஒரு பெண்ணும் சேர்ந்து.....
(உங்கள் கண்களுக்கு மேலே உள்ள படத்தில் எலிகள் போன்று தெரிந்தால் நான் அதற்கு பொறுப்பில்லை. அதற்காக அவர்களின் அந்தரங்கங்களை ஆயிரம் தரம் போட்டு இந்த டிவி-காரர்களும் பத்திரிக்கை காரர்களும் நம் வீட்டை அசிங்கம் பண்ணியது போன்று நம்மால் இங்கே பண்ண முடியாது! )
.....ரகசியமாக எப்படி இருந்தாலும் உங்களுக்கு என்ன வந்தது என்று அந்த சிலர் கேட்கிறார்கள். ஆனால், எனது அடிப்படையான வாதம் என்னவென்றால்,
வள்ளலாரின் பக்தர் ஒருவர் பிரியாணி கடை வைக்கலாமா?
பெரியாரின் அத்யந்த சீடர் ஒருவர் அலகு குத்தி காவடி எடுக்கலாமா?
காந்தியின் உண்மைத் தொண்டர் ஒருவர் கோட்சே-வை கொண்டாடலாமா?
இந்த மாதிரி அடிப்படைக்கே விரோதமான காரியங்களை ஒருவர் செய்தால் யாருக்கும் கோபம் வருமா வராதா?
ஒரு வேளை
இந்தப் படம் திடீரென்று அவரது சீடர்களால் நிறுத்தப் பெற்றால் கீழ்க் கண்ட இந்த லிங்கில் பாருங்கள்: (sorry its not uploading. takes time too longer. If you unable to see from you-tube as i said, you just send me a mail. I will send you the other link)
அதுதான் அவரை நம்பி பின்னால் சென்ற பல பிரமசாரிகளின் கோபமும் ஆத்திரமும். அது மட்டும் இன்றி, பெண் வாடையே படாத சாமியார் என்ற பிராண்டுக்கு இந்தியாவில் மதிப்பு அதிகம். அந்த பிராண்ட் போலி என்று தெரியும்போது மக்களின் ஆத்திரம் பன்மடங்கு ஆகிறது.
மற்ற படி உடற் கூறு விஷயங்கள் என்பது, அது ஒரு இயற்கை உபாதை மாதிரி என்று நமக்குத் தெரியாதா? கோபம் என்னவென்றால், இயற்கையான ஒரு விஷயத்தைத் தான் அடக்கி விட்டதாகப் பீற்றிக் கொண்டு, மக்களை மடையர்களாக்கும்- மற்றும் சாதாரண மக்களின் சம்சார வாழ்க்கையை கேலி வேறு செய்யும் ஒரு மிக கேவலமான இழி செயலைத்தான் நான் இங்கு கண்டிக்க விரும்புகிறேன்!
(ஆதி காலம் தொட்டு இந்த சோம்பேறிச் சாமியார்களுக்கு சோறு போடுவதே இந்த உழைத்துப் பிழைக்கும் சாதாரண சம்சாரிகள் தான்...ஆனால் என்ன ஒரு தெனாவெட்டாக எந்த ஒரு சாமியாரும் பேசுகிறார்கள் என்று பாருங்களேன்)
இந்த சாமியார்கள் என்னமோ வேற்று கிரக வாசிகள் போலவும், எல்லாவற்றையும் அதாவது... பசி, தாகம், மூச்சு விடுவது, மல ஜலம் கழிப்பது உட்பட எல்லாவற்றையும் விட்டு விட்ட மாதிரியும் நடிப்பதை பார்த்தால் பற்றிக் கொண்டு எரிகிறது! என்னமோ இவர்கள் ஆயிரம் வருடம் வாழ்ந்தவர்களைப் போலவும், நரை, திரை, மூப்பு கடந்தவர்கள் போலவும் வெட்டி பந்தா பண்ணுகிறார்கள்!
போங்கடா, நீங்களும் உங்கள் இயற்கையை மதிக்காத வெங்காய ஆன்மீகமும் என்று எட்டி மிதிக்கத் தோன்றுகிறது!
என்ன செய்வது? நாம் ஏமாறும் வரை ஏமாற்றுக் காரர்களும் இந்த பூமியில் நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கத்தானே செய்வார்கள்?
-மோகன் பால்கி
புதன், 3 மார்ச், 2010
Nityanandan Preaches Celebacy and Celebrating Sex with Actress !!
Though both the channel and the magazine have not revealed the location, the pictures show Swami Nithyananda in compromising positions with the actress.
Minor incidents of protests from various parts of Tamil Nadu and Karnataka have been reported after the channel played the story on Tuesday, following which the police has beefed up security at all his ashrams in the state including Tiruvannamalai, which Swami Nithyananda visits often.
Swami Nithyananda is a spiritual leader and runs the Nithyananda Mission which is part of a world-wide movement for meditation and peace.
Source: http://ibnlive.in.com/news/one-more-godman-caught-in-bed-with-tamil-actress/110982-3.html?from=tn
2. By Agencies
Chennai: Swami Nithyananda Scandal! According to the reports by Sun TV, Swami Nithyanand has been caught with a Tamil actress in compromising position.
Though, the Sun TV has not reveled the location, but it’s being said that the sting operation took place in a hotel or his ashrama.
In the mean time, security beefed up to cover Swami Nithyananda’s ashrama situated here at Adi Annamalai area, some 10km away from Tiruvannamalai town.
Locals said that the Swami visited the ashram two months back when he celebrated his birthday there. Police are looking into the matter.
Source: http://www.duniyalive.com/?p=105242
3.
A controversy has erupted over an alleged sex scandal involving Swami Nithyananda who has an Ashram outside
People attacked the ashram - even as his followers say the video was a mix of conspiracy, graphics and rumour.
Sachidanandaswamy said, "At this moment we feel that a mix of conspiracy, graphics and rumour are at play in these recent events that have unfolded. We are working on a legal course of action...In these trying times, we wish to reassure the lakhs of devotees and well-wishers whose sentiments have been deeply hurt by this conspiracy. We thank all the devotees and disciples for standing with us during these trying times."
Source: http://www.ndtv.com/news/cities/bangalore-swami-in-sex-scandal-17142.php
4. Nityananda and Actress Ranjitha Sex Scandal Videos: Source from You tube / Sun TVhttp://www.youtube.com/watch?v=HLKQrBMA8lw
http://www.youtube.com/watch?v=jel3R5q7rP0
http://www.youtube.com/watch?v=cPcwnVwMdI0
http://www.youtube.com/watch?v=SK0hSIKtmLg
WATCH VIDEO HERE !!!!! Just click here and go to you tube (Might be withdrawn from you tube sooner too)
பிற் சேர்க்கை : நித்யாநந்தா-ரஞ்சிதா படுக்கையறை காட்சிகளை காமிராவில் ஒளிப்பதிவு செய்து காட்டிக் கொடுத்த சீடர் ஸ்ரீநித்ய தர்மானந்தா வின் போலீஸ் வாக்கு மூலம்: இங்கே கிளிக் செய்க: http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=6920&id1=12
செவ்வாய், 2 மார்ச், 2010
சாமியார்களுக்கு இது கெட்ட காலம்!
இன்றோ (2.3.2010), சன் நியூஸ் டிவி-யில் நித்தியானந்த சுவாமிகள் என்னும் திருவண்ணா மலை இளம் வயது சாமியாரின் படுக்கை அறை கட்சிகளைப் போட்டு நாற அடித்து விட்டனர்.
எனது முந்தைய Blog-ல்
உண்மைக்கும் என்னமோ கொஞ்சம் நல்ல காலம் இருப்பது போல் உள்ளது.
எனினும் மக்கள் இன்னும் தெளிய வேண்டி உள்ளது.
சாமியார்கள் தான் என்று இல்லை; இன்னும் அரசியல் தலைவர்கள் பற்றிய நமது மக்களின் பார்வையும் மாற வேண்டும். அவர்களையும் ஒரு குறு நில மன்னர்கள் போன்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது, காலில் விழுவது, கடவுள் போல எண்ணுவது இவை எல்லம்கூட மாற வேண்டும்.
பார்க்கலாம்!
நடக்கும் இவையெல்லாம் என்றைக்காவது ஒரு நாள், என்று நம்புவோம்!
நம்பிக்கைதானே வாழ்க்கை!
-மோகன் பால்கி