Translate this blog to any language

செவ்வாய், 13 ஜனவரி, 2009

உதவியா பொழுது போக்கா ?

"உதவி" என்பது
நம்முடைய ஒரு பகுதி நேரத்தையோ
அல்லது பணத்தையோ மற்றவர்களுக்காக செலவிடுவதாகும்!

அது
நிறைய நேரம் இருக்கும் போது
பொழுது போக்குக்காக மற்றவர்களுக்கு அதில் செலவிடுவதோ,
அல்லது நிறைய பணம் இருக்கும் போது புகழுக்காக
அதில் ஒரு பகுதியை செலவிடுவதோ அல்ல!
மாறாக,
நமக்கு நேரமே இல்லாத போதும், உதவி கேட்பவர்களுக்காக
நமது நேரத்தை ஒதுக்கி தருவதும்,
நம்மிடம் பணமே இல்லாத போதும்
உதவி என்று நம்மை அண்டி வருபவர்களுக்கு எப்படியேனும்
தன்னால் முடிந்த பொருளுதவி செய்வதுமே ஆகும்!

சுருக்கமாக சொல்வதானால், ஒரு கோடீஸ்வரன்
தன்னைப் பிறர் மெச்சிப் புகழ வேண்டும் என்று
திட்டமிட்டு செய்யும் பணிகள் உதவியன்று!
அது "தானம்" எனப்படும்!

அதே போன்று, ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி தனக்கு நேரம் போவதற்காக ஏதோ ஒரு சில சமூகப் பணிகளில் ஈடுபட்டு தனது நேரத்தை செலவிடுவதும் சமுதாய உதவி ஆகாது!
அது "பொழுது போக்கு" என்க!

-மோகன் பால்கி

31st Jan 2004


ஞாயிறு, 11 ஜனவரி, 2009

கலியுகத்தின் குற்றம்!


வசந்த காலத்தில் பூத்துக் குலுங்குகிற மரங்கள் யாவும்
இலையுதிர் காலத்தில் பட்டுப் போகின்றன!
அதற்காக தோட்டக்காரனை யாரும் குற்றம் சொல்லஇயலாது.
வேண்டுமானால் அது காலத்தின் குற்றம் என்றுசொல்லலாம் !

அதே போன்று,
தர்ம யுகத்தில் தேவைக்கு மேல்
செழிப்பும், செல்வமும் இருந்தது!
அதனால், பேராசைக்கும், பொறாமைக்கும்
அங்கு வேலையே இல்லாதிருந்தது!

இன்றோ கலியுகம்!
எல்லாமே வற்றிப் போய் இயற்கையாகவே
எங்கும் வறுமை படர்ந்து வருகிறது!
இங்கு மனிதர்களும் அதிகம்
செயற்கையான நவீன தேவைகளும் மிக மிக அதிகம்-
ஆனால் கையிருப்போ அதி சொற்பம்!
அதனால் தீமைகள் இங்கே தலை விரித்து ஆடுகின்றன!

இது மனிதர்களின் குற்றம் என்று எப்படி சொல்லமுடியும்?
இது கலியுகத்தின் குற்றம் என்றே சொல்ல வேண்டும்!

-மோகன் பால்கி
22nd Jan 2004