Translate this blog to any language

புதன், 4 பிப்ரவரி, 2009

முத்துக் குமரன் - தீயை தின்றொரு தீபமானவன்!



முத்துக் குமரன்
எங்கள் - தமிழின
சொந்தங்கள் யாவர்க்கும்
சொத்துக் குமரன் !

ஈழ விடுதலைப்
போரின் எழுச்சியை
தீவிரப் படுத்திய
சித்துக் குமரன் !

உலகத் தமிழரை
ஒன்றாய் ஆக்கி
நெருப்பாய் மாற்றிய
வித்துக் குமரன்!

தமிழர் உளமெலாம்
தமிழுள நாள்வரை
தங்கி நிலைபெறும்
காவல் மதில்-அரண் ! 

-மோகன் பால்கி

செவ்வாய், 13 ஜனவரி, 2009

உதவியா பொழுது போக்கா ?

"உதவி" என்பது
நம்முடைய ஒரு பகுதி நேரத்தையோ
அல்லது பணத்தையோ மற்றவர்களுக்காக செலவிடுவதாகும்!

அது
நிறைய நேரம் இருக்கும் போது
பொழுது போக்குக்காக மற்றவர்களுக்கு அதில் செலவிடுவதோ,
அல்லது நிறைய பணம் இருக்கும் போது புகழுக்காக
அதில் ஒரு பகுதியை செலவிடுவதோ அல்ல!
மாறாக,
நமக்கு நேரமே இல்லாத போதும், உதவி கேட்பவர்களுக்காக
நமது நேரத்தை ஒதுக்கி தருவதும்,
நம்மிடம் பணமே இல்லாத போதும்
உதவி என்று நம்மை அண்டி வருபவர்களுக்கு எப்படியேனும்
தன்னால் முடிந்த பொருளுதவி செய்வதுமே ஆகும்!

சுருக்கமாக சொல்வதானால், ஒரு கோடீஸ்வரன்
தன்னைப் பிறர் மெச்சிப் புகழ வேண்டும் என்று
திட்டமிட்டு செய்யும் பணிகள் உதவியன்று!
அது "தானம்" எனப்படும்!

அதே போன்று, ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி தனக்கு நேரம் போவதற்காக ஏதோ ஒரு சில சமூகப் பணிகளில் ஈடுபட்டு தனது நேரத்தை செலவிடுவதும் சமுதாய உதவி ஆகாது!
அது "பொழுது போக்கு" என்க!

-மோகன் பால்கி

31st Jan 2004