Translate this blog to any language

திங்கள், 4 ஜனவரி, 2021

என்னைத் தாயாக்கி எனக்கருளி நின்றவளே! (கவிதை)



சின்னதோர் தேவதையே 
சிறுமுகிலே ஓவியமே!

எனக்கென்றே இறைவனவன்
எடுத்துவைத்த பேரழகே!

வண்ணப் பைங்கிளியே
வாசமிகு ரோசாவே!

உன்னை நினைத்திருக்க
உசிரெல்லாம் இனிக்குதடி!

என்னப் பெருந்தவமோ
எப்படிநீ கிடைத்தாயோ!

எண்ணியெண்ணி மருகுகிறேன் 
உள்ளமெலாம் உருகுகிறேன்!

என்னைத் தாயாக்கி 
எனக்கருளி நின்றவளே!

உன்னைப் பெற்றதனால் 
எல்லாமும் பெற்றேன்யான்!

எப்படி உனை சீராட்ட
ஒருமடிதான் உள்ளதடி! 

பெருமையடி உன்னாலே
கண்படுமோ அதனாலே! 

உன்னை எனக்களித்த 
இறைமை நினைந்திருப்பேன்!  

காலமுள நாள்வரையும்
உன்விழிகள் பார்த்திருப்பேன்! 

-YozenBalki
(ட்விட்டரில் ஒரு போட்டி! அதற்கு நேற்று எழுதி அனுப்பினேன் தோழரே! 🌸🌸🙏🙏)



வீட்டுக்கு ஒரு சிறு நூலகம் தேவை!

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது. "ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி!

பெண்களிடம் இருந்து கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகத்தைக் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்!

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு.

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் "இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம்", பெட்ரண்ட் ரஸல்

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா!

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்!!

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்!

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்!

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்!

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்!

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்
🌸🌸
(-வாட்ஸ் அப் பல்கலைக் கழகத்தில் இருந்து கிடைத்தது!! MBK 🙏🙏)