Translate this blog to any language

ஞாயிறு, 18 ஜூன், 2023

தந்தையர் தினத்தில் ஒரு மகளின் கடிதம்!

என் தாயுமானவருக்கு!

இல்லையில்லை…என் யாதுமானவருக்கு (மாதா, பிதா,குரு,தெய்வமென அத்தனையுமான என் அப்பாவுக்கு) இனிய தந்தையர் தின வாழ்த்துகள்
அப்பா!! ❤❤❤

மகள்களுக்கு அப்பா என்பவர் எப்போதும் ஆதர்சமே! 😍
என் அப்பாவுக்கு நானே இளவரசி!! 😍
  
ஆண்கள் அற்புதமானவர்களே! அதிலும் அப்பாக்கள் அதி அற்புதமானவர்கள்!! 
😍😍😍😍
      
மகளுக்காக அப்பாக்கள் என்னவேணாலும் செய்யத் தயாரா இருப்பாங்க! என்னோட அப்பாவுக்கு நான் கடைக்குட்டி பொண்ணு, அதனால ரொம்ப ரொம்ப செல்லம்! அம்மாவே பொறாமையா பாக்குற அளவுக்கு அப்பாவுக்கு பாசம் என்மேல!! 😍😍😍

அம்மா பாசம் தான் உலகத்துல ரொம்ப பெருசு, ஆனா என்னோட அப்பாவோ, அம்மாவுக்கும் கொஞ்சம் மேலதான்!! ❤

எங்க அப்பா விவசாயி! அதனால இயற்கை மேல அம்புட்டு நேசம்! அப்பாவுக்கு, விவசாயத்துக்கு நிகரா அப்பா நேசிக்குற விசயம்னா அது நிச்சயமா நான் தான்!! 😍😍😍

இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி அப்பா சின்ன வயசுல ஆசைப்பட்டு வாங்கவே முடியாம போன புல்லட் அவங்க திருமணநாள் பரிசா வாங்கிக்குடுத்தேன்! 

அதப்பாத்து சின்னப் புள்ளை போல "அந்த கம்பீரமான கணபதி" கண்கள்ல சந்தோச கண்ணீர பார்த்த தருணம் அவ்வளவு நெகிழ்வு!! ❤
    
இன்னைக்கு நான் என்னவா இருக்கேனோ அது அத்தனையும் சாத்தியமானது கணபதிக்கு மகளா பிறந்த ஒற்றைக்காரணமே! 😍😍😍
 
சமீபத்துல ஒருபதிவு பாத்தேன்! சாகுற தருணத்துல யாரோட இருக்கனும்னு நினைப்பீங்கன்னு ஒரு கேள்வி! சத்தியமா எனக்கு அப்பாதான் வேணும், என்னோட இறுதி தருணங்களில்!! 🙏🙏

தமிழ் மேல காதல், கண்ணன் மேல பித்து,இயற்கை மீதான நேசம்னு அத்தனை நற்குணங்களும் அப்பாவிடமிருந்து வந்தவையே எனக்கு!

படிப்பு வேலைன்னு நான் வாழ்க்கையில எத்தனை உயரத்த தொட்டாலும் அப்பாவோட செல்ல பொண்ணுன்னு சொல்றதுல தான் கர்வமே எனக்கு!! 😍😍😍
   
நான் பார்த்த முதல் ஆண் அப்பாதான்! அதனாலயே ஆண்கள் மீதான என்னோட பார்வையும் எப்பவும் மரியாதையானதே!! 😍

உலகத்துல சிறந்த அப்பான்னா அது என்னோட அப்பாதான்! இந்தப் பிறவி மட்டுமில்லாம இன்னும் எத்தனை பிறவியெடுத்தாலும் உங்களுக்கே மகளா பிறக்கணும் அப்பா!! 🙏🙏

இனிய தந்தையர் தின வாழ்த்துகள், தந்தையர் அனைவருக்கும்!! 🌹🌹🌹🌹

Courtesy: 
By
நான் காணாமலே 
மகளாகி நின்ற...
மதுமிதா கணபதி from Twitter Circle

சனி, 10 ஜூன், 2023

திமுகவில் நுழைய முயலும் சில பார்ப்பனர்கள்!!

தமிழக அரசியலில், குறிப்பாக திமுகவில் பார்ப்பனர்கள் நுழைய இருக்கிறார்கள்!

அது ஏன், எப்படி?

ஆர்எஸ்எஸ் வழிவந்த பாஜகவில் இப்போது உள்ள மோடி-அமித்ஷா கூட்டணி பார்ப்பனர்களை நீண்ட காலமாக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்! 

அதனால்தான் அவர்கள் சுப்பிரமணியசாமியை கிட்டவே சேர்க்கவில்லை! "அவரும் தலையால தண்ணி குடிச்சி பார்த்துட்டர்...!!"

தமிழகத்திலும் பார்ப்பனர் அல்லாத பாஜக தலைமைகளை அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்!

மேலும் காஞ்சி சங்கர மடம் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டை விட்டு வட இந்திய பனியா ஆகிய அதானி கையில் செல்ல இருக்கிறது என்று நக்கீரன் செய்தி போட்டு இருக்கிறது!

எனவே தமிழக பார்ப்பனர்கள் ஒன்று கூடி பாஜகவை கை கழுவ வேண்டும்; பிறகு ஒரு வளமான கட்சியில் சேர்ந்து கொண்டு தங்கள் வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்!

அதனால் தான் ஸ்டாலினை புகழ்வதை விட உதயநிதியை புகழ்ந்தால் அதில் இரண்டு வித இலாபம் கிடைக்கும் என்று எஸ்வி சேகரை விட்டு புகழ்ந்து அப்படி ஒரு ஐஸ் வைக்கிறார்கள்!

கூடிய விரைவில் பாஜகவில் இருந்து பார்ப்பனர்கள் வெளியேறி ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து அதன் வழியாக "திமுகவை நாங்கள் ஆதரிக்கிறோம்!" என்று வருவார்கள்!

அது ஒரு குயுக்தி, சதித் திட்டமாகக் கூட இருக்கலாம்! அதாவது நாக்பூர் பார்ப்பனர்கள் கொடுத்த தற்காலிக அசைன்மென்ட் ஆக இருக்கலாம்!

அதாவது ஆரிய பார்ப்பனர்கள் இருக்கிற கட்சியை தமிழர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பது ஆர்எஸ்எஸ் க்கு தெரிந்து விட்டது! 

எனவே தற்காலிகமாக பார்ப்பனர்களை பாஜகவில் இருந்து பிரித்து வெளியே எடுத்து, தமிழக பாஜக ஏதோ ஒரு பார்ப்பனர் அல்லாத கட்சி போல ஒரு மாயையை உருவாக்க நினைக்கிறார்கள்!

அதில் பாஜகவுக்கும் பார்ப்பனர்களுக்கும் தற்காலிக இலாபமும் உண்டு!

1. அதாவது பாஜகவுக்கு அது பார்ப்பனக் கட்சி என்ற பிம்பத்தை உடைத்து ஒரு ரெண்டு சதவீத ஓட்டு அதிகம் கிடைக்கும் வாய்ப்பு!

2. அதுபோல பார்ப்பனர்களுக்கோ தற்காலிகமாக திமுகவில் சேர்ந்து அங்கு பல சலுகைகளை பெற்றுக் கொள்ள முடிகிற வாய்ப்பு!

3. திமுகவை ஆதரிக்கும் முற்போக்கு சக்திகள் பார்ப்பன சங்கத்தையோ அல்லது பாஜகவையோ எதை ஆதரித்தாலும், திமுகவை விட்டு விலகி நிற்பார்கள்! அது திமுகவின் ஓட்டு வங்கியை பாதிக்கும்; பாதிக்க வேண்டும் என்பது மறைமுக திட்டம்!

4. அனேகமாக பாஜகவுடன் சேரப்போகும் கட்சிகள் அதிமுக, பாமக, சாதிக்கட்சிகள் சில, (நாம் தமிழர் எதிலும் சேராமல் திராவிட கருத்தியலை திமுகவை மட்டும் எதிர்க்கும்)

5. அமித்ஷா வந்து விட்டு போன கையோடு மறைமுகமாக பல விஷயங்கள் நடந்து முடிந்திருக்கும்! அது முக்கியமாக "திராவிட சிந்தனை எதிர்ப்பு"! அதை நோக்கியே எல்லா காய்களும் ஆரியத்தால் இனி நகர்த்தப்படும்!

மற்றபடி எலக்சன் முடிந்தவுடன் ஆரிய பார்ப்பனர்கள் எப்பொழுதும் போல ஆர்எஸ்எஸ் புத்தியோடு ஸனாதன அதர்மங்களை, பற்பல கட்சிகளில் புகுந்து கொண்டு பின்பற்றுவார்கள்! 
திராவிடர் இயக்கங்களை ஒழிக்க வேண்டிய எல்லா சதி திட்டங்களையும் தொடர்ந்து செய்வார்கள்!

அதாவது, நேரடியாக தமிழர்களை வீழ்த்துவது அல்லது பின்புற கதவு வழியாக வந்து உள்ளே நுழைந்து அணைத்து, அரவணைத்து ஒழிப்பது என்ற இரண்டு வழிகளிலும் ஆரிய சாம்ராஜ்யம் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது!

ஆரியத்தை அரவணைத்த அம்பேத்கர் இயக்க மாயாவதியின் சாம்ராஜ்யம் மாயமானது ஏன் என்று நினைவு கூர வேண்டுகிறேன்! 

பெரியார் என்ற பெருந் தத்துவம், அவர் தந்து விட்டுப் போன திராவிடர் இயக்க கொள்கைகள் இல்லாத இடத்தில் சனாதன அதர்மம் என்ற வர்ணாசிரம ஜாதீய நச்சுக் காற்று பரவி பல உயிர்களை பலி வாங்கிவிடும்!

எனவே திராவிடர் இயக்கங்கள், முற்போக்கு தலைமைகள், மக்கள் நல சிந்தனையாளர்கள் இந்த முறைதான் 
முழு விழிப்பாக இருக்க வேண்டும்; முக்கியமாக இப்பொழுது ஆளுங்கட்சியாக விளங்கும் திமுக!


கவனம்! 
கவனம்!! 
கவனம்!!!

-YozenBalki