Translate this blog to any language

வெள்ளி, 4 நவம்பர், 2011

"Rain-Chennai" a Menace! மழை காலச் சென்னை 'நரகம்' !



சென்னையில் (Chennai-dwellers) வாழ்பவர்களுக்கு எப்போதுமே மழைக்காலம் ஒரு அபாய காலம்! சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டக் காரர்கள் மழையை உளமார வரவேற்பார்கள்! ஆனால் சென்னைவாசிகள்  'ஐயோ இந்த மழை வந்து தொலைத்து விட்டதே' என்று சபிப்பார்கள்! 

காரணம் மழை அல்லவே அல்ல!
மழையின் பின் தொடர்ச்சியாக இங்கு வாழும் மனிதர்களுக்கு நிகழும் துன்பங்களே அவை!

அத்துன்பங்களில் 90% - த்தை  தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்த /வருகிற மாநில அரசுகள் குறைத்து இருக்கலாம்! அனால் அது ஒரு 'சிந்துபாத்' தொடர் கதையாகவே இங்கு இருந்து வருகிறது! என்னைக் கேட்டால் குறைந்தது நாற்பது வருடங்களாக சென்னையில் தண்ணீர் தேங்கும் நூற்றுக்கணக்கான சாலைகள் தெருக்களை என்னால் எளிதில் சொல்ல முடியும்! இங்கு நெடுங்காலமாய் வாழும் சென்னை மக்கள் பலருக்கும் அது தெரிந்த இரகசியமே ஆகும்!


சென்னையில் மழையின் பின் விளைவுகளைப் பார்ப்போம்!

1  தெருக்களிலும் சாலைகளிலும் தேங்கும் மழை நீர்! (stagnant water)

2  மழை நீரோடு சேர்ந்த சாக்கடை நீர், சேறு, சகதி மற்றும் குப்பைகள்!
(rain water plus sewage wastes)

3  தெரு அல்லது சாலைகளில் தேங்கும் மழை நீருக்குள் மறைந்து கிடக்கும் 
திறந்த பாதாள சாக்கடை மூடிகள் /பள்ளங்கள்!
(hidden danger of opened man-hole covers)

4 உடைந்த/ சிதைந்த சாலைகள் மற்றும் ஒழுங்கற்ற நடைபாதை மேடைகள்!
(dilapidated and hazardous streets/roads/platforms) 

5 தண்ணீருக்குள் கிடக்கும் மின்சார வயர்கள்! (hidden live electric wires)

6 வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து செல்லும் போது நம்மீது தெறிக்கும் சாக்கடை தண்ணீர்! 

7 நடக்கக் கூட இடம் இன்றி தெருவில்/சாலையில் சூழும் 
மழைநீர்/சாக்கடை நீர்!

8 சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களால் மெதுவாய் நகரும் வாகனங்கள். அதனால் ஏற்படும் கால விரயம், எரிபொருள் விரயம், சக்திவிரயம், பண விரயம், கெட்ட பெயர், பரபரப்பு, கோபம், ஒருவருக்கு ஒருவர் போடும் சண்டைகள், அதன் பின்விளைவுகள்! (undue traffic due to ditches /dilapidated roads) 

9 மழைகால இரவுகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகையில் தெருவில் சூழும் இருள். அதனால் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் சற்று தூரம் நடப்பதற்கு கூட அஞ்சுவது! அட! வாகனங்களில் கூட ஆண்கள் போக தயங்கும் அளவுக்கு தெரு/சாலைப் பள்ளங்கள்! ( Frequent Power cut due to heavy rain/darkness in streets)

10 மழையினால் இத்தனை துன்பங்கள் இருக்கையில் பேருந்து மற்றும் ஆட்டோக்களை ஓட்டும் ஓட்டுனர்களும் வண்டி ஓட்ட அதிகம் சிரமம் கொள்கிறார்கள்! அதனால் பேருந்துகள்-ஆட்டோக்கள் போக்குவரத்தும் மழை நாட்களில் குறைந்து விடுகின்றன. விளைவு: அதிகக் கட்டணம்! அல்லது பிதுங்கி வழியும் பேருந்துகள். ( Risky driving/ Excessive charges)

இவை தவிர நான் சொல்ல மறந்த இன்னும் பல சிரமங்களும்  இருக்கலாம்!











இதையெல்லாம் ஒரு மாநில அரசு சரி செய்ய முடியவே முடியாதா?
"ஒரு சிறு மழையைக் கூட தாங்க முடியாத சென்னை" என்னும் அவப் பெயரை நம்மால் நீக்கவே இயலாதா?
உலகில் இதை விட அதிகம் மழை பெய்யும் நாடுகள் அதில் உள்ள அழகிய சாலைகள்/தெருக்களை நாம்தான் தொலைக் காட்சிகளில் தினமும் பார்க்கின்றோமே! அவ்வளவு ஏன். பக்கத்தில் உள்ள பெங்களூருவிலும்  (Bangalore)அய்தராபாதிலும் (Hyderabad) இதைவிட சிறப்பான சாலைகள்/ தெருக்கள் இருப்பதை நம்மில் பல பேர் பார்த்திருக்கிறோமே! மேலும், குஜராத் (Gujarat) அதை விட அழகாக இருப்பதாக பார்த்தவர்கள் சொல்கிறார்களே!



இனி தமிழ் நாடு மாநில அரசு செய்யவேண்டியது:

1 வருடா வருடம் தண்ணீர் தேங்கும் சாலைகள்/தெருக்களை பிரித்து இனம் காணுதல். சிறப்பு கவனம் தருதல் !
(Finding out the low-lying water lagging streets/roads)
2 மத்திய அரசு போடும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையான தரத்தை உறுதிப் படுத்துதல்! ( Ensuring an high standard like in National high ways roads)

3 நல்ல தகுதியுள்ள பெரிய பெரிய கட்டுமான நிறுவனங்களிடம் வேலைகளை ஒப்படைத்தல்! (நாலு ஆணி ஒரு கோணி வைத்திருக்கும் சிறிய 'லெட்டர்-பேட்'  ஆசாமிகளுக்கு காண்ட்ராக்ட் தந்து மாநில அரசின் பெயரைக் கெடுத்துக் கொள்வது ஏனாம்! மக்கள் பேசிக் கொள்வது போல "வேறு-வேறு" காரணங்களா?) ( Awarding the jobs to giant constructions companies)

4 ஒரு தெருவோ-சாலையோ போட்டால் குறைந்தது ஐந்து வருடங்கள் அவை பொத்தல் விழாமல் இருக்கவேண்டும் ! அடிக்கடி தெருக்களை தோண்டுவது-மூடுவது என்ற மடத்தனம் கூடாது. அதற்கேற்ற படி திட்டமிட வேண்டும்!
(Ensuring the good roads/street for another 5 years. Save hills and natural resources)
(மாத மாதம் 'தார்' போடுவது, மலைக்கற்களை உடைத்து ரோடு போடுவது இவற்றால் நம் இயற்கை வளங்களும் சாலைகளுக்குள் மறைந்து வீணாகின்றன!மலைகளை மீண்டும் மீண்டும் நம்மால் உண்டாக்க முடியுமா?)

5  மக்கள் பணத்தை வீணடிக்கும்/திருடும் கூட்டத்துக்கு கடும் "தண்டனைகள்" தந்து அவர்களின் சொத்துக்களை அரசு கையகப் படுத்தவேண்டும்!
(Do give corporal punishments to economic criminals & recover their assets)

6  நேர்மையான அதிகாரிகள் நிறுவனங்களுக்கு மக்கள் மதிப்பிட "பரிசுகள்" வழங்கி கவுரவிக்க வேண்டும்! ( Award prizes for genuine officers and companies)
(தண்டனை அல்லது பரிசு என்னும் முறை இல்லாமல் எந்த ஒரு அரசும்/ இயக்கமும்/ நிறுவனமும் உருப்படவே உருப்படாது! without the "Prize or Punishment method" no Govt/movement/sector can do any wonder ever)


எது எப்படியோ!
இந்த மழைக் காலம் வரும் திசம்பர் 20 வரை நமக்கு நீளும்!
அது வரை ஒரு பத்தடி தூரத்துக்கு முழுதாய் ஒரு பள்ளமோ பழுதோ இல்லாத எந்தவொரு தெருவையோ/சாலையையோ நாம் சென்னையில் பார்க்க முடியாது! அது நம் சென்னை வாசிகளின் தலை எழுத்து! 
பார்த்துப் பார்த்து நாம் நடக்க வேண்டும்; நம் உடம்பும் வாகனமும் பழுது படாமல் காக்கவும் வேண்டும்!
மேலும், இப்பொழுதே சென்னையை சுற்றிலும் உள்ள ஆறு குளங்கள் அணைகள் நிரம்பி வருவதால் வெள்ளம் வரும் அபாயமும் கண்ணில் தெரிகிறது! அப்போது, சென்னை இன்னும் "புண்-பட்ட" நரகமாகும்!!

அதுவரை "சென்னை-நரகம்" சகித்து கவனமாய் நடக்கவும்  பயணம் செய்யவும் 
என் சக சென்னை நண்பர்களை திடீர் விருந்தினர்களை வேண்டுகிறேன்!

-யோஜென் பால்கி
yozenbalki
_________________________________
பிற்சேற்கை: ஒரு சோகமான செய்தி! இந்த வலைப்பூவை நான் எழுதிக் கொண்டிருந்த அல்லது வெளியிட்ட அதே வெள்ளிக் கிழமை இரவில் சென்னை தியாகராய நகரில் வடக்கு உஸ்மான் சாலையருகில் 24 வயது ஆசிரியை சரளா என்னும் இளம் பெண், மழை நீர் தேங்கி மறைத்திருந்த சாக்கடைப் பள்ளத்தில் விழுந்து உயிர் இழந்தாள்! மறுநாள் சனிக் கிழமை அச்செய்தி எல்லா நாளிதழ்களிலும் வந்திருந்தது! அரசின் அலட்சியத்துக்கு ஒரு அளவே இல்லையா? (ச்சே!இந்தியாவில் தான் இதுபோல் நடக்கிறது) அதன் பின் என்ன நடக்கும்...எப்போதும் போல செத்துப் போனவர்கள் குடும்பத்துக்கு மக்கள் வரிப்பணத்தையே எடுத்து கொடுத்து நல்ல பெயர் வாங்கும் சடங்கு தொடரும்! இது போன்ற அப்பாவிகள் இறப்பதற்கு  காரணமான அதிகாரிகளுக்குத் தண்டனை தருகின்ற செய்திகள் எப்போதாவது வந்ததுண்டா? பின் எப்படி நாடு உருப்படும்? என்ன கருமமோ!

Woman falls into stormwater drain in Chennai, dies
A 24-year-old woman died on Friday night after she fell inside a stormwater drain on North Usman Road, T. Nagar which was left open by authorities.
Pondy Bazaar police identified the deceased as M. Sarala of Anna Veethi, 1st Street in MGR Nagar. The victim was heading home after attending a Spoken English class at a school on Krishna Street in the area. Her body was recovered this morning and sent to Government Royapettah Hospital for post-mortem, police sources said.
http://www.thehindu.com/news/cities/...cle2600777.ece

1 கருத்து:

  1. அடுத்த வருடமும் மழை வரும்; தண்ணிக் கெட்டி கிடக்கும்; செய்தி வரும்; இழப்புகள் வரும்; ஆனால் புத்தி மட்டும் வராது.

    பதிலளிநீக்கு

You can give here your comments: