அவரது அன்பு ததும்பும் பேச்சைக் கேட்கும்போது எனது கண்களில் கண்ணீர் நிரம்புகிறது!
நாடாளுமன்றத்தில் சிங்கம் போல கர்ஜிக்கின்ற அவரது இனிய உள்ளத்தில் தன் மனைவி மீதான இத்தனை காதல் மறைந்து இருந்திருக்கிறது!
அவர் மீது எனக்கு எப்போதும் மதிப்பு அதிகம் என்றாலும் இன்னும் மதிப்பு கூடுகிறது!
அந்த கடிதத்தின் வாயிலாக அவர் பிறருக்கு அதாவது ஆண்களுக்கு/ கணவர்களுக்கு சொல்ல வருவது இதுதான், நீங்கள் உங்கள் மனைவியோடு வாழ்கின்ற காலத்தில் அவளோடு மனம் விட்டு பேசுங்கள்! நேரமே இல்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்!
அடுத்த மாதம் நமக்கு நேரம் கிடைக்கும் அடுத்த வருடம் நமக்கு நேரம் கிடைக்கும் என்று இருக்கிற காலத்தை வீணடித்து விட்டு ஒருவேளை அவள் போய் சேர்ந்து விட்டால் பிறகு வருந்தாதீர்கள்!
உங்கள் அன்பை வார்த்தைகளாகவும் பரிசு பொருள்களாகவும் அவ்வப்போது தெரிவித்து உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்!
தோழர்கள் இந்த இடுகையை
உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள்!
-YozenBalki
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: