Translate this blog to any language

tamil-flood லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil-flood லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 நவம்பர், 2011

War of the World - 'Water'! நீர்வழி காப்போம் -வெள்ளம் தவிர்ப்போம்!

உலகில் மழையின் அளவு குறைந்து வருகின்ற இந்த நாளில்
வெள்ளம் ஏற்பட்டு ஊர்கள் நாசமாகும் காரணம்தான்  என்ன?


ஒரு காலத்தில் மாதம் மும்மாரி பெய்தது என்று சொல்வார்கள். அதாவது மாதத்திற்கு மூன்று மழை வீதம் 36 நாட்கள் விடாத மழை என்று அர்த்தம்! இன்றைக்கோ இரண்டு நாள் 'ஒரு-சாதா சோதா' மழை பெய்தால் நாடு நகரங்கள் எல்லாம் அழிந்து போய்விடும் போல் இருக்கிறதே!

அட! ஒரு இயல்பான மழை பெய்வது கூட தவறா?

மழையைக் கண்டு நாம் பயப்படும் நிலை இங்கு ஏன் வந்தது?
தேங்கும் மழை நீர்! சட்டெனச் சூழும் வெள்ளம்!


சரி! திடீர் வெள்ளத்துக்கு என்ன காரணம்?

தனி மனிதனின் பேராசை என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். 

இருப்பினும், பேராசை காரணமாக கொலை, கொள்ளையில் ஈடுபடும்  ஒருவனை அரசாங்கம் சும்மாவா விட்டு விடுகிறது? கடுமையாக தண்டிப்பதில்லையா?

இந்தத் தண்ணீர் விஷயத்தில் மட்டும் அது போன்ற கடுமையான தண்டனைகள் எவனுக்கும் தரப்படுவதில்லை! அதனால் தான் இந்தத் வெள்ளம்-வெள்ள சேதங்கள் இத்யாதி!


திடீர் வெள்ளம் ஏற்படும் காரணங்கள்:

1.   நீரின் இயல்பு மேட்டில் இருந்து பள்ளத்துக்கு செல்வது.
2.   உயரமான மலைகளில் இருந்து கடைசி கடைசியாக தண்ணீர் 
      கடலைச் சென்று அடைகிறது.
3.   அதன் நீர்வழியானது  மலைகள்-நீர்வீழ்ச்சி-அணைகள்-அருவிகள்-ஆறுகள்-
      உபரியான மழைநீர் கடலுக்குள் சென்று சேர்ந்து விட வேண்டும்!

4.   இந்த ஓடைகளின் பங்கு மிக மிக முக்கியமானது! அவையே 
      தொடர்ந்த இணைப்பு வழியை ஏற்படுத்தி தங்கு தடையற்ற நீர்வழிப் 
      பாதையை கொண்டு உபரி நீரைக் (surplus water) கடலுக்குள் சென்று 
      சேர்க்கிறது?

இன்றைக்கு அந்த உபரி நீர் (surplus water) செல்லும் "ஓடைகள்" 'கால்வாய்கள்' எங்கே போயின?


'ஓடைப் புறம்போக்கு' 'கால்வாய்ப் புறம்போக்கு' என்று நிலப் பதிவேடுகளில் குறிக்கப்பட்டுள்ள அந்தக் கால்வாய் நிலங்கள் ஏறத்தாழ எல்லாவற்றையும் தமிழகத்தின் எல்லா சிறு/பெரு நகரங்களிலும் சமூக விரோதிகள் சிறுக சிறுக மூடி அதன் மீது வீடுகள்-கடைகளைக் கட்டி வைத்து விட்டனர். இன்று நீர்வழிகள் அதனால் அடைந்து போய்விட்டன!

அந்தக் கட்டிடங்களுக்கு கையூட்டுப் பெற்றுக் கொண்டு /அல்லது அறிவே இல்லாமல் கண்ணை மூடிக் கொண்டு மின்சார இணைப்பு, குடிநீர்-கழிநீர் இணைப்பு தந்து, நகர வரி வசூலிக்கும் அரசு அதிகாரிகளைக் கடுமையாக தண்டிக்கவேண்டும். அதுவும் கிரிமினல் சட்டங்களின் கீழ்! முடிந்தால் அவ்வதிகாரிகளின் சொத்துக்களையும் முடக்க வேண்டும்! 

அரசு நில-ஆக்கிரமிப்புகள்/அபகரிப்புகள் ஏன் நிகழ்கின்றன?

விவசாயத்தை அரசு ஊக்கப் படுத்தாமல் கிராமங்கள் இன்று மெல்ல அழிந்து வருகின்றன! அதனால் நீர்ப் பாசன பராமரிப்புகளும் அங்கு அடியோடு இல்லாமல் போய்விட்டன! இளைஞர்கள் தற்போது நவீன தொழில் துறைக்கு இடம்பெயர முதியவர்கள் அங்கு ஏதும் செய்ய இயலாமல் இருக்கிறார்கள்! கிராமங்களில் இருந்து வேலை வாய்ப்பு தேடி சிறு-பெரு நகரங்களுக்குக் குடி பெயரும் மக்கள் அங்கு நிலவும்  வாடகையைக் கேட்டு மயக்கம் போடாத குறை! உடனே கண்ணில் தெரிகிற காய்ந்து போன ஏரிகள், குளக்கரை, கால்வாய்களின் மீது ஒரு சிறு குடிசைப் போட்டு வாழ ஆரம்பித்து விடுகின்றனர்! ஏதோ ஒரு 'எம்-ஜி-ஆர்' நகர் ராஜீவ் நகர் என்று பெயர் வைத்துக் கொள்வார்கள்...பக்கத்தில் அப்போது  ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியின் கொடி பறந்து கொண்டு இருக்கும்! அவர்கள் ஏரிகளை அவ்வப்போது உடைத்து விடுவார்கள்...குளம் குட்டைகளைச் சிறுக சிறுக மூடுவார்கள்..குடிசைகள் கட்டுவார்கள் அவை ஓடு வீடுகள் ஆகி பிறகு கட்டிடங்களாக உருமாறும்!

அதனால் தான் இன்றைக்கு நகர்ப் புறங்களில் குழந்தைகள் விளையாட-நடமாட ஒரு இடம் கூட இல்லாமல் போய் விட்டது! அரசுக்குச் சொந்தமான ஒரு சின்ன வளைவு-நெளிவு இடங்களைக் கூட விட்டு விடாமல் ஆக்கிரமித்து வீடு-கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு சென்னை-கோவை-திருச்சி போன்ற நகரங்களை இன்று 'நரகங்கள்' ஆக்கிவிட்டனர்-சமூக விரோதிகள்!


போகட்டும்! இதெல்லாம் வெயில் காலத்துக் கதை!

மழைக் காலம் வந்தால் உபரி நீர் போக வழி இன்றி (உபரி நீர் போகும் வழி முழுவதையும்தான் இந்தப் பேராசை பிடித்த மனிதர்கள் அடைத்துக் கொண்டு இருக்கிறார்களே!) அது பாவம் அலைபாய்ந்தபடி அல்லாடி அல்லாடி கண்ட இடத்திலும் புகுந்து வழி தவறி...கடைசியில் வழி கண்டுபிடித்து கடலைச் சென்று சேர்வதற்குள் ஊரு முழுசும் நாறிப் போய்விடுகிறது!

ஒரு முரண்பாடு, வெயில் காலம் வந்ததும் ஏதோ அரபு நாடுகள் போல இங்கே தண்ணீர் பஞ்சமும் வந்து விடுகிறது! பக்கத்து மாநிலங்களில் கையேந்திப் பிச்சை எடுக்கும் நிலை! கண்டவனும் இங்கே 'பிளாஸ்டிக்' பாட்டிலில் தண்ணீரை அடைத்து 50-100 க்கு விற்க வேண்டியது!! என்னடா இது? ஒருநாள் வெள்ளம்-மறு நாள் வறட்சியா ! இந்த நவீன் உலகில் இப்படி இருந்தால் எவனாவது நம்மை மதிப்பானா?

இனி அரசுகள் செய்யவேண்டியது:

1.  அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா தருகின்ற முட்டாள் தனத்தை 
      அடியோடு நிறுத்த வேண்டும்! அது அதற்கான நிலத்தை அது-அதற்கே            
     பயன் படுத்த வேண்டும்-அது எவ்வளவு யுகங்களானாலும் சரி ! 
     அதிகாரிகள் யார் அதை reclassification போட்டு மாற்றுவதற்கு? 
      (ஏரி புறம்போக்கு, கால்வாய் புறம்போக்கு மேய்ச்சல் 
      புறம்போக்கு, குட்டை புறம்போக்கு, கோயில் புறம்போக்கு,   
      போன்ற அரசு நிலங்கள்)
      
2.  ஏற்கனவே சிட்டா-அடங்கல் புத்தகங்களில் Village A-Register இல் பதிவாகி
      உள்ள அரசு நிலங்களை கையகப் படுத்தி அதன் எல்லைகளை உறுதி 
     செய்து கல் நடவேண்டும். அரசு நில-மீட்பு, நில-காப்பு இவற்றில் அதிக 
     உறுதி தேவை. நில உரிமைச் சட்டங்களில், தண்டனைகளில் அதிக 
    கடுமை தேவை! அதிக தண்டங்கள் விதிப்பது-சொத்துக்களை ஏலம் விடுவது 
    போன்ற நடவடிக்கைகள் அவசியம்!

3.  சில நூறு மனிதர்களின் பேராசைக்கு ஒரு நாகரீகமுள்ள பெரும் 
     சமூகம் அழியத்தான் வேண்டுமா என்பதை அரசு தீர்மானிக்க 
     வேண்டும்! இங்கே ஏழைகள் என்பவர்கள் வேறு; சமூக விரோதிகள் 
     என்பவர்கள் வேறு என்பதை நாம் அறிய வேண்டும்;இரண்டையும் 
     குழப்பிக் கொள்ளக்கூடாது !

     பணம் ஒதுக்கும் தொகையில் அதை செய்து விடலாம்! வருடா வருடம் 
    மத்திய அரசிடம் நாம் பிச்சை கேட்கும் நிலையும்  இருக்காது!

5.  நீர்வழிகள் சரியாய் இருந்தால் வெள்ளம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
   
       -யோஜென் பால்கி