Translate this blog to any language

ஞாயிறு, 26 அக்டோபர், 2008

Universe - My Master ! இயற்கை - சத்குரு !

பொய்யை விரும்புவது போல
உண்மையை யாருமே
விரும்புவது இல்லை!

உண்மையைக் கண்டு நாம்
அஞ்சி நடுநடுங்குகின்றோம் !

ஏனென்றால்
உண்மை பாரபட்சம் அற்றது-

வேண்டியவர் - வேண்டாதவர்
இருவரையுமே அது
ஒரே தராசில் வைத்து
நிறுத்திப் பார்க்கிறது;
தீர்ப்பு சொல்கிறது!

பின் எப்படி நாம்
உண்மையை உண்மையாகவே
விரும்ப இயலும்?

பஞ்சபூத இயற்கையும்
பாரபட்சம் அற்றதே!
ஓரம் சாராததே!

தீயை தொட்டால்
புத்தர்களையும் அது சுடுகிறது!
பனிக்கட்டியோ
எவருக்குமே குளிர்கிறது!

ஆக,
உண்மையின் இன்னொரு பெயர்
"இயற்கை"!

அது சரி!
இயற்கைக்கு மற்றுமொரு
பெயரும் உண்டு!
அது என்ன தெரியுமா?

அதுதான் "சத்-குரு"!


- மோகன் பால்கி

எல்லையற்று விரிதலே - ஞானம்!


எல்லையற்று விரிதலே
ஞானமடைதல் ஆகும்-
சுருங்கி அடைபடுதல் அன்று!

காற்று அடைபட்டு நிற்பதில்லை-
அது
நிலங்களின் பெயர்களை
பொருட் படுத்துவதும் இல்லை!
ஐம்பூதங்களும் அவ்வாறே!

தத்துவ ஞான வார்த்தைகளில்
சிறை படாமல்
வாழ்வை
நடுவில் நின்று பார்த்தலே
தவம் எனப்படும்!

அப்படிப்பட்ட தவத்தின் பயனே
"ஞானம்" ஆகும்!

ஞானம் பிரிவுகள் அற்றது!

விழிப்பு, கனவு, உறக்கம் என்னும்
மூன்று நிலைகளிலும்
அதில்
ஒட்டியும் ஒட்டாமலும் செல்லும்
"துரியம்" என்னும்
நிலையே அக் தாகும்!

அதனையே "துரிய மெய்ஞானம்"
என்று ஆன்றோர்கள்
குறிப்பால் உணர்த்துவர்!

-மோகன் பால்கி