Translate this blog to any language

திங்கள், 3 ஏப்ரல், 2023

தமிழ் அறிவு மிக்க எங்கள் கிராமத்து தேவதைகள்!

ஒரு பிரபல நாளிதழில், ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை வாசகர்களை கண்டுபிடிக்க வைத்து, அதில் பொருத்தமான தமிழ்ச் சொல்லை நீதியரசர் வெ.ராம சுப்பிரமணியன் தேர்வு செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. இது வாரம்தோறும் ‘சொல் வேட்டை’ என்ற பெயரில் வெளிவந்தது.

ஒரு வாரம் ‘போபியா’ (Pobhia) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் கேட்கப்பட்டது. 

அதற்கு ஒன்றல்ல இரண்டல்ல 47 தமிழ் வார்த்தைகளை ஒருவர் அனுப்பி இருந்தார்.  

அவர் பெயர் தமிழ்ச்செல்வி. சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம்- பொன்னமராவதி அருகே உள்ள பொன்.புதுப் பட்டி கிராமம். 

சமீபத்தில் புதுக்கோட்டை அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விழாவுக்கு தலைமையேற்க சென்றிருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அந்த பயணத்தின்போது அவரை எப்படியாவது சந்தித்துவிட எண்ணி தன்னுடைய ஆசையை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி ரவியிடம் சொல்ல, அவரும் தனது உதவியாளர் மூலமாக அந்த வாசகரை சந்திக்க ஏற்பாடு செய்தார். 

காலை 8 மணி. 60 வயது மதிக்கத்தக்க தமிழ்ச்செல்வி தனது கணவருடன் வருகிறார். 

நீதியரசர் அவர்கள், “தமிழ்ச்செல்வி அம்மா எப்படிம்மா இருக்கீங்க? உங்களை பார்க்கணும்னு பல வருஷங்களா தேடிக்கிட்டு இருந்தேன். அந்த வாய்ப்பு எனக்கு இன்னைக்குத்தான் கிடைச்சது. உங்களுடைய மொழி அறிவை எத்தனையோ இடங்களில் சொல்லி சொல்லி வியந்து வருகிறேன். 

ஆனால் இதுவரை உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. எப்படியாவது உங்களை நேரில் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால்தான் இந்தச் சந்திப்பு. காலையில்தான் சென்னையிலிருந்து இறங்கினேன். கல்லூரி நிகழ்ச்சி காலை 10 மணிக்கு. அதை முடிச்சிட்டு 1 மணிக்கு நான் திருச்சி விமான நிலையம் போகணும். நேரப்பிரச்சினை இல்லையென்றால் கட்டாயம் உங்கள் வீடுதேடியே வந்திருப்பேன். 

தப்பா நினைச்சுக்காதீங்கம்மா. 40 கிலோ மீட்டர் உங்களை அலையவைச்சிட்டேன். கோவிச்சுக்காதீங்கம்மா....!!

ஒரு ஆங்கில வார்த்தைக்கு நிகராய் 47 தமிழ்ச் சொற்களா? என்னை மலைக்க வைத்துவிட்டீர்கள் அம்மா. ஒரு சின்னக் கிராமத்தில் இருந்து கொண்டு இவ்வளவு பெரிய தமிழ் அறிவா?" 
பரவசப்பட்டுப் போகிறார் நீதியரசர்.

( அந்த 47 வார்த்தைகள்...)

(1) ஓடல், தேங்கல், ஞெரேலெனல், கூசல், திட்கல், உலமரல், அளுக்கல், ஞொள்கல், துடுக்கெனல், துட்கல், குலைதல், வெய்துறல், துண்ணெனல் என்பவை அச்சம் தோன்றுவதற்கான குறிப்புகளை உணர்த்துபவை என்றும்;
 
(2) அப்படித் தோன்றி நம் மனதை ஆக்கிரமிக்கும் அச்சத்தை வெருவு, சூர், பீர், வெறுப்பு, வெறி, வெடி, கவலை, பீதி, உருவு, பேம், பிறப்பு, கொன், உட்கு, பனிப்பு, அணங்கு, புலம்பு, அதிர்ப்பு, அடுப்பு, பயம், உரும், தரம் ஆகிய சொற்கள் அடையாளம் காட்டும் என்றும்; 

(3) அச்சம் அடைந்த மனதில் சிந்தனையும், எண்ணங்களும் மாறுபட்டு, சிதிலமடையும் போது, அது கலக்கம் என்றும், துரிதம், பிரமம், கதனம் என்று குறிப்பிடப்படுவதாகவும்;
 
(4) கலக்கமுற்ற மனதில் ஏற்படும் நடுக்கம், விதிர்ப்பு, விதப்பு, கம்பம், விதலை, கம்பிதம், பனிப்பு, பொதிர்ப்பு, உலைவு என்ற சொற்களால் உணர்த்தப்படுகிறது.

மேலும், ஃபோபியா என்ற சொல்லில் உள்ள 3 எழுத்துகளும் பேம், பீதி, பயம் என்ற 3 தூய தமிழ்ச் சொற்களின் சேர்க்கையில் உருவாகிப்பின் மருவியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டு, தமிழ்ச்சொல் அகராதி சூளாமணி நிகண்டு நுலைச் சான்றாகக் காட்டியுள்ளார்!

“ஐயா நான் பத்தாவதுதான்யா படிச்சிருக்கேன். அப்பாவுக்கு தமிழ் மீது மிகப்பெரிய ஆர்வம். அந்த ஆர்வம் தான் என்னையும் நம்ம இலக்கியம் பக்கம் கொண்டு வந்திருச்சு. பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரும் கொடை. அது வெறும் இலக்கிய இன்பம் இல்லையா. சொல்லப்போனா வாழ்வியல் முறை..”- இப்படி கூறியபடி ஏராளமான பாடல்களை மேற்கோள் காட்டுகிறார் தமிழ்ச் செல்வி. 

வடமொழியும், பிற மொழியும் தமிழ்மொழி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கொதிப்போடு பேசுகிறார். “திருவாசகத்திலும் தாலாட்டு இருக்குங்கய்யா...” அழகான குரலில் பாடியும் காட்டுகிறார். அறையிலிருந்த அனைவரும் வியந்துபோகிறார்கள்.

“நீங்க நிறைய எழுதுங்கம்மா... உங்க தமிழ் மொழி அறிவு, இலக்கிய அறிவு எல்லோரையும் போய்ச் சேர ணும்மா...” –நீதியரசரின் வேண்டுகோளை ஏற்று ‘கண்டிப்பா செய்யுறேன்ய்யா...’ என்கிறார் தமிழ்ச்செல்வி. 

தன்னுடய கட்டுரைகளை தாங்கி வெளிவந்த மலர்களையும், புத்தகங்களையும் அன்பாய் ஏற்றுக் கொள் ளுங்கள் எனப் பரிசளித்து, “ ஒரு வாசகியாய் நான் எழுதியதை மறக்காமல் இலக்கிய மேடைகளில் எல்லாம் என்னை மேற்கோள் காட்டிவாறீங்க, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி என்னைத் தேடி வந்திருக்கீங்கன்னா இது என் தமிழ் அறிவுக்கு கிடைத்த சன்மானம்ய்யா.. உண்மையில் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..” நெகிழ்ந்து போகிறார் தமிழ்ச்செல்வி.

பல ஆண்டுகளாய்த் தேடிய தமிழ்ச்செல்வி அம்மாவை நேரில் கண்டதில் நீதியரசருக்கு மெத்த மகிழ்ச்சி. விமானம் ஏறும்வரை தமிழ்ச்செல்வியின் தமிழ் அறிவில் கரைந்து போகிறார் நீதியரசர்!

பட்டிக்காட்டில் வாழ்ந்தும் மொழியில் ஆழந்த அறிவும், ஆராய்ச்சிப் போக்கும் கொண்ட தமிழ் ஞானமிக்க தமிழ்ச்செல்வி அம்மாக்களும், அவர்களை சரியான இடங்களில் அடையாளப்படுத்தும் நீதியரசர் ராமசுப்பிரமணியன் போன்றவர்களும் இருக்கும் வரை தமிழ் வாழும் – என்றும் அழியாப் புகழுடன்...!

 வாழ்க தமிழ்

Courtesy: From Whatsapp University
🌸☘️😎😎🌸☘️

வியாழன், 9 மார்ச், 2023

கூலி வேலைக்கு தமிழ்நாட்டில் தமிழ்ப் பிள்ளைகள் இல்லை!

தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு வடநாட்டு பிள்ளைகளுக்கு போவதால் தமிழர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு வளர்ச்சியில் பின்தங்கி விடும் என்றெல்லாம் சிலர் திட்டமிட்டு பேசுவது சுத்த பைத்தியக்காரத்தனம்!

உங்கள் குடும்பத்திலோ அல்லது நம் வேறு யார் குடும்பத்திலோ கூலி வேலைக்கு போகிற இளைஞர்கள் யாராவது இருக்கிறார்களா?

அப்படி இல்லாத இளைஞர்கள் எப்படி தமிழகத்தின் ஹோட்டல்களில் துணிக்கடைகளில் தள்ளுவண்டி கடைகளில் கூலி வேலைகளில் இருக்க முடியும் சொல்லுங்கள்!!

கடந்த நூறு வருட திராவிடர் இயக்க ஆட்சிகளானது கல்வியில் நம்முடைய இளைஞர்களை மேல் நோக்கி அவர்களை அதிகாரிகளாக உயர்த்தி இருக்கிறது!

வெற்றிடத்தை காற்று நிரப்புவது போல கூலி வேலைக்கு தமிழ்ப் பிள்ளைகள் கிடைக்காததால் படிப்பறிவற்ற வடநாட்டுப் பிள்ளைகள் இங்கு வந்து வேலை பார்க்கின்றனர்!

இருப்பவன் இல்லாதவனுக்கு கூலி தருகிறான்!

இதில் என்ன பொருளாதார கூந்தல் வந்து தமிழகம் பின்தங்கி விடும்?

அப்படி பார்த்தால் வெள்ளைக்காரனுடைய அச்சடித்த டாலருக்காக இங்குள்ள இந்தியர்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் எல்லாமே அல்லும் பகலும் வேலை பார்க்கின்றனரே! 
அவர்கள் எல்லாம் தன்னுடைய பொருளாதாரத்தை இழக்கின்றனரா... அல்லது வளர்கின்றனரா?

இப்படி பொத்தாம் பொதுவில் பேசி ஏதோ ஒரு வகையில் தமிழ்நாட்டை குறைத்து மதிப்பிட்டு அதன் வழியாக திமுக ஆட்சி சரியில்லை என்று சொல்ல வருவது தான் அவாளின் கெட்ட உள்நோக்கம் போல தெரிகிறது!

நமது தமிழ் பிள்ளைகள் அடுத்த கட்டத்திற்கு உயர்ந்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு மகிழ்ச்சியோடு இருங்கள்! 

நமது தமிழ்நாடு உலகத்தின் பிற எல்லா நாடுகளையும் விட கல்வியில், வேலைவாய்ப்பில் உயர்ந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்! உலகின் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டில் குறிப்பிட்ட பகுதியில் வாழும், அதிகம் படித்த இன்ஜினியர் டாக்டர் என்று உயர்ந்திருக்கிற ஒரு பகுதி தமிழகம் தவிர வேறு எங்குமே கிடையாது என்று நான் அறுதியிட்டுக் கூற இயலும்!

அதேசமயம் தமிழ்நாட்டில் பிற மாநில மக்களை உள்ளே அனுமதித்து அவர்களுக்கு ஓட்டுரிமை, வாழ்விட உரிமை எல்லாம் அளித்து ஈழத் தமிழர்களுக்கு நடந்தது போல தமிழ்நாட்டு தமிழர்கள் ஏமாளிகளாகக் கூடாது!

அதற்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து வருகின்ற அரசுகள் கவனமாக சட்டம் இயற்றி நமக்கு என்று இருக்கின்ற ஒரே ஒரு தமிழ் மாநிலத்தை ஒரு புத்திசாலித்தனத்தோடு காப்பாற்றிக் கொள்ள வேண்டும்!

இல்லாவிட்டால் நமக்கும் இலங்கையில் நடந்தது போல் நடந்து, பார்ப்பன பனியாக்களின் சூழ்ச்சியால், நாடற்றவர்களாக வீடற்றவர்களாக நாடோடிகளாக மாறும் சூழ்நிலை ஏற்படும்!

கவனம் கவனம் கவனம்!

-YozenBalki