Translate this blog to any language

திங்கள், 10 ஏப்ரல், 2023

திமுகவை விட்டால் தமிழனுக்கு வேறு கதி கிடையாது!

திமுக மீது நமக்கு ஒரு சில விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் திமுகவை விட்டால் தமிழனுக்கு வேறு கதி கிடையாது!

உலகின் பிற கட்சிகள் திமுக செய்த அளவுக்கு சாதனைகளை எந்த காலத்திலும் செய்ய முடியாது! 

உதாரணத்துக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்! உலகில் எந்த நாட்டிலும் அது அமெரிக்கா உட்பட, ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட சதுர கிலோமீட்டருக்குள் எத்தனை டாக்டர்கள் எத்தனை இன்ஜினியர்களை அந்த நாடு உருவாக்கி இருக்கிறது என்று நீங்கள் போய் கேளுங்கள்!

இங்கு கடந்த 50 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்துக்கு நடுவிலும் ஒரு டாக்டர் ஒரு இன்ஜினியர் என்று உருவாக்கியது திராவிடர் இயக்கம் ஆகும்; குறிப்பாக திமுக! 

இன்றைக்கு கூலி வேலைகள் செய்வதற்கு தமிழின இளைஞர்கள் இளம்பெண்கள் இங்கு வேலைக்கு கிடைப்பதில்லை! அந்த உடல் உழைப்பு வேலைகளை செய்ய வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்!

நமது தமிழ்நாட்டு குழந்தைகள் மருத்துவம் தொழிற்கல்வி போன்றவற்றை படித்துவிட்டு White Color Job என்று சொல்லப்படும் அலுவலகப் பணிகள் செய்து கை நிறைய சம்பாதிக்கும் நிலைமைக்கு உயர்ந்திருக்கிறார்கள்! அவர்களில் கிட்டத்தட்ட 95 சதவீதம் பேர் கூலி வேலைகளில் இன்று இல்லை!

இது போன்ற ஒரு பெரிய சமூகப் புரட்சி உலகின் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு மாநிலத்திலும் இதுவரை நிகழவில்லை!

ஒரு மரத்தை அது தரும் நற்கனிகளை கொண்டு அளவிடுவது போன்று நீங்கள் மதிக்கும் நல்லதொரு உலகத் தலைவரை அவரது நாட்டில் அவரது மாநிலத்தில் வாழும் பெரும்பான்மை மக்களின் உயர்வு நிலை, உரிமை நிலை, கல்வி மற்றும் அறிவியல் மனப்பான்மையைக் கொண்டு அளவிட்டு விட்டு, திமுகவை குறை சொல்ல பிறகு வாருங்கள்!


சரி! இத்தகு மாபெரும் சமூக புரட்சிக்கு, தமிழ் இன முன்னேற்றத்திற்கு மூல காரணம், தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான் என்க! அவர்கள் போன்று மானுட சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பெண்களின் உயர்வுக்காக முழு மனதோடு பேசி, எழுதி, நாடகங்கள் சினிமா, அரசியல் என்று ஒரு நூற்றாண்டு காலம் பாடுபட்டதன் பலன்தான் என்றும் அறிவீர்! 

அது போன்ற உன்னதமான தலைவர்கள் உலகில் ஒருவர் கூட கிடையாது என்று நான் அறுதியிட்டுக் கூற முடியும்!

அந்த மூவர் மீதும் உள்ள பெருமதிப்பின் காரணமாக, அவர்களது மூலக் கொள்கைகளை அடிநாதமாகக் கொண்டு இயங்கும் திமுக மட்டும் தான் தமிழ் இன வளர்ச்சிக்கு அனைத்து நிலைகளிலும் பேருதவியாக இருக்கும் என்பது எனது அழுத்தமான கருத்தாகும்!

வேறு எந்த கட்சியும் அந்தப் பணியை அவ்வளவு சிறப்பாக செய்வதற்கு வழியே கிடையாது! காரணம் நாம் பார்க்கிற ஒவ்வொரு கட்சிக்கும் அதன் தலைமைக்கும் வெவ்வேறு நோக்கங்களும் வெவ்வேறு உள்ளார்ந்த கொள்கைகளும் வேறு விதமாகவே உள்ளன! நடைமுறை சாத்தியமற்ற, செயல் முறையில் இதுவரையிலும் எந்த மாநிலத்திலும் சிறிதும் சாதிக்காத கட்சிகளாகவே அவை ஒரு பின் தொடர்ச்சியின்றி காணப்படுகின்றன!

மேலும் அந்த கட்சிகள், அல்லது கொள்கைகள் தொடர்ந்து வேறு நாட்டில் வேறு மாநிலங்களில் அப்படி ஏதும் பெரிய ஆணியையும் பிடுங்கி விடவில்லை!

அப்படியெல்லாம் அந்த கட்சிகளின் கொள்கைகள் வெற்றி அடைந்திருந்தால் பிற மாநிலங்களில் இருந்து தொடர்ந்து திராவிடர் இயக்கம் ஆட்சி செய்த தமிழகத்துக்கு ஏன் அவர்கள் கூட்டம் கூட்டமாக பிழைப்பதற்காக வந்து குடியேறுகிறார்கள்? 

இந்த நுட்பமான உண்மையை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்!

நம் வீட்டு குழந்தைகளை நாம் சீர்திருத்தம் செய்து கொள்வது போல திமுகவை அப்படி பிழைகள் தவறுகள் நேரும் பொழுது நாம் சீர்திருத்தம் செய்து கொள்ளலாம்! 

ஆனால், நம் வீட்டில் குறை இருக்கிறது என்பதற்காக வீட்டையே எரித்து விட முடியாது! அதை அவ்வப்போது சீர் திருத்தம் செய்து பத்திரமாக காப்பாற்றிக் கொள்ள வேண்டும்!

மேலும் திமுகவை விட்டால் வேறு எந்தக் கட்சியும், அதன் பிரதான கொள்கைகளும், Inclusive Growth கொண்டதாகவோ அல்லது ஆட்சி ஆள்வதற்கான தகுதி உடையதாகவோ இல்லை! ஒரு சில கட்சிகளில் இருக்கின்ற ஒரு சில தனி மனிதர்கள் மட்டுமே தமிழகத்தை ஆள்வதற்கான கட்சி என்று தீர்மானம் செய்ய இயலாது!

மேலும், வேறு எந்தக் கட்சியும் திமுக வெற்றி பெற்ற அளவுக்கு சமூக நீதி, அனைத்து மக்களுக்குமான கல்வி, வேலை வாய்ப்பு, பிற சாலைகள், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள், பெண்கள் விடுதலை போன்ற நிலைகளில் வேறு நாடுகளில் வேறு மாநிலங்களில் வென்றதாக உலகத்தின் சரித்திரம் இதுவரை சொல்லவில்லை!

அதனால் திமுகவை எதிர்த்து, ஒரு சில முற்போக்கு தோழர்கள் வேறு ஒரு வழியை யோசிப்பதே தவறு! 

மீண்டும் கூறுகிறேன், நமக்கு திமுகவை விட்டால் தமிழினம் மேலும் மேலும் முன்னேற வேறு கதி கிடையாது!

YozenBalki

வியாழன், 6 ஏப்ரல், 2023

தமிழக கோயில்களில் ஒரு ரகசியம்!!

நமது தொன்மை தமிழகத்தின் சிறப்புகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்!

சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள்.

அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு!

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.

தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை மாலிக்கபூர் போன்ற இஸ்லாமிய மன்னர்களால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துவரப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், குதிரைகள், துணிகள், கைவினைப் பொருட்கள், உணவுதானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.

உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.

ஏன் கோவிலை கட்டினார்கள்?
 தானிய கிடங்காக நீதிமன்றமாக மருத்துவ சேவைக்காக. 


தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.

கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ?

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ??

உலகின் குருவாக சோழநாடு ஆனது எப்படி ???

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜெட் போடுவார்கள்.

இதையேதான் தமிழர் கோயில்கள் செய்தன.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை.

நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என,
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.

தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் தமிழினக் கோயில்கள்.

ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என,
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.

இதை உடைக்கத்தான், ஆரிய பார்ப்பனர் இங்குள்ள நம் தமிழர் பாரம்பரிய முறையை கைப்பற்ற முயன்றனர் ஆங்கிலேய ஆதிக்கத்தினருடன் கைகோர்த்தனர் ..

தமிழ் சித்தர்களை வதை செய்தனர் அதனால் தான் சித்திரவதை என்ற வார்த்தையே உருவானது.

கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என ஆரிய சக்திகள் அறிந்திருந்தனர்.

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும் என நம்ப வைத்தனர்.

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம் என சொல்லி சுரண்டினர்.

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை மட்டுமே உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழ்நாடு உலக குருவாக திகழ்ந்தது.

இன்று வரை தழிழை அழிக்க துடிக்கும் வட ஆரிய பார்ப்பன சக்திகள் தயிரை "தஹி" என சொல் என்கிறார்கள். .

தமிழ் எங்கள் உயிர்..

வாழ்க தமிழ்🙏
இதுதான் உண்மையான வரலாறு...
 🙏🙏🙏🙏
Courtesy: Whatsapp University
🌸☘️😎😎