Translate this blog to any language

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

ஆரிய பார்ப்பன பாஜக தமிழகத்துக்கு ஆபத்து!!

நமது தமிழ் இளைஞர்கள், பொதுவாகவே திமுக ஊழல் செய்கிறது, அண்ணா திமுக ஊழல் செய்கிறது என்று யாராவது மனோவசியம் செய்தால் ஏமாந்து விடுகிறார்கள்!

ஏதோ பிற உலக கட்சிகள், இந்திய கட்சிகள் ஒரு ஊழலும் செய்யாத உத்தமர்கள் போல! சொல்லப்போனால் இந்தியாவிலேயே அதிக தொகைகளுக்கு பல லட்சம் கோடி ஊழல் செய்த கட்சி ஆரிய பார்ப்பன பாஜக கட்சி தான்!

சரி, நான் திராவிட இயக்கங்களை போற்றுபவன்! அதற்கு என்ன காரணம் என்று சொல்கிறேன்!

திராவிட இயக்கம் என்னதான் ஊழல் செய்தாலும் நான் வந்து 70% திமுக 30% அதிமுக, அதன் பிறகு எனக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, டாக்டர் திருமா அவர்களின் கொள்கை பிடிப்பு ரொம்ப பிடிக்கும்!

பாஜக என்பது பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஆர்எஸ்எஸ் ஆரம்பித்த ஒரு அமைப்பு!

நமது சூத்திரப் பிள்ளைகளின் கல்வி உரிமையை ஒழித்து நம்மை பழையபடி சனாதன (அ)தர்ம சாக்கடையில் ஆழ்த்தி பார்ப்பனர்களே உயர்ந்தவர்கள்...
பிற 97% மக்கள் தாழ்ந்தவர்கள் 
என்ற ஆரிய பார்ப்பன ஜாதீய கருத்தை நிலை நிறுத்தத் துடிப்பவர்கள்!

அதனால் எனக்கு பாஜக அறவே பிடிக்காது!

இன்னொன்று
பற்பல துறைகளில்
360°
மிகச் சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான்!

உலகத்திலேயே அதிக உயர் கல்வி படித்தவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள்! அதற்கு காரணம் தொடர்ந்து வந்த இரண்டு திராவிட இயக்க ஆட்சிகள் தாம்!

அதற்கு மூல காரணம் தேடித் தேடி குழந்தைகளை ஊக்குவித்து, பள்ளிப்படிப்பு கல்லூரி படிப்பு வேலைவாய்ப்பு என்றெல்லாம் சூத்திர குழந்தைகளை உயரத்தில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் பெரியார் அண்ணா அம்பேத்கர் கொள்கைகள் தாம்!

அதனால் தான் வடமாநிலங்கள் நம்மை விட நூறு வருடம் பின்தங்கி இருக்கின்றன! இன்னும் கூட அங்க சராசரி பொதுமக்களுக்கு கக்கூஸ் கட்டவில்லை!

வடக்கிலிருந்து இளைஞர்கள் பாஜக காங்கிரஸ் ஆட்சியில் சிக்கி சீரழிந்து படிப்பும் இல்லாமல் வேலையும் இல்லாமல் தமிழ்நாட்டை நோக்கி கோடிக்கணக்கில் வந்து கூலி வேலை செய்து பிழைப்பது ஏன்?

ஏன் அவர்களுக்கு உயர்கல்வி இல்லை வேலை வாய்ப்பு இல்லை அங்கேயே வாழ்வதற்கு வசதி இல்லை? 

சுதந்திரம் பெற்று ஒரே சமயத்தில் மொழிவாரி மாநிலங்கள் பிரித்து, மாநில வளர்ச்சிக்கு அவர்களே பட்ஜெட்டில் அதிகம் கொள்ளையடித்துக் கொண்ட போதும் அந்த வட இந்திய மாநிலங்கள் ஏன் வளர்ச்சி அடையவில்லை!

அங்குதானே இவர்கள் போற்றுகின்ற வட இந்திய பெருந்தலைவர்கள் பலரும் பிறந்தார்கள்? 

ஆக, காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் இன்று வரை வாயில் வடை சுட்டு திராவிடத்தை திட்டிக்கொண்டு பிழைத்து வருகிறார்கள் என்பது மட்டுமே தெள்ளத்தெளிவான உண்மை!

சரி! ஊழல் என்பது உலக நாடுகளில் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது! தேன் எடுப்பவன் தன் கையை நக்குவான் தானே?

பணப்புழக்கம் உள்ள வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் மற்றும் எல்லா நாடுகளிலும் ஊழல் உள்ளது; அதன் விகிதம் மட்டுமே மாறும்!

என்னைப் பொறுத்தவரை தமிழன் ஊழல் செய்தால் அந்தப் பணம் தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் தான் உலவும்! அதனால் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடையும்!
ஏனென்றால் யாரும் பணத்தை தின்று விட முடியாது! 

அந்த வகையில் தமிழர்கள் செய்கிற ஊழல் மகா குற்றம் கிடையாது!

ஊழல் செய்த பணத்தைக் கொண்டு அவர்கள் அணுகுண்டு தயாரிக்கவில்லை! கல்வி நிறுவனங்கள் கட்டி, பாதி பணம் 'கோட்டா' வழியாக சம்பாதிக்கிறார்கள், மீதி ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அறிவு வேலை வாய்ப்பு பெற்று தருகிறார்கள்!

அதனால்தான் தமிழகம் உலகத்திலேயே அதிக உயர்கல்வி படித்தவர்களைக் கொண்டிருக்கிறது!

எனவே, நான் என்றென்றும் திராவிட கொள்கைகளை, சமத்துவம் சமநீதி பேசும் தமிழக கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பவன்!

நான் *பெரியார் கண்ணாடி* வழியாக இந்தத் தமிழ்ச் சமூக முன்னேற்றத்தைப் பார்க்கிறேன்!

ஆரிய பார்ப்பன 
ஆர்எஸ்எஸ் பாஜக என்பது, தமிழ் மொழி தமிழ்ப் பண்பாடு, தமிழின உரிமை, தமிழர்களின் உணவுத் தேர்வு, தமிழினக் குழந்தைகளின் உயர்கல்வி வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், ஜாதி வேறுபாடு இல்லாத சமூகம், கருவறையில் தமிழ் பூசை போன்ற எல்லாவற்றிற்கும் எதிரானவை!

சுருக்கமாக சொன்னால் ஆர்எஸ்எஸ் பாஜக என்பது தமிழகத்துக்கு ஒரு பெரும் ஆபத்து!

Yozenbalki
💫💫🎊🎊

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

தமிழர் பாரம்பரிய அரிசி வகைகள் 1000 தெரியுமா?

நாம் உண்ணும் அரிசி வகை என்றாலே அது வெள்ளையாக தான் இருக்கும் என்று நம்மில் பலர் அப்பாவியாக நம்பிக்கொண்டு இருக்கிறோம்! 

மிகவும் முக்கியமான இரகங்களான, கறுப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா, அருங்குருவை, காட்டுயாணம் அரிசி இவை யாவும் தனித்துவமானவை, நிறங்களில் ஒன்றோடு ஒன்று வேறுபட்டவை தெரியுமா?

மேலும், நம் சாப்பாடு தட்டுக்கு வருவதற்கு முன்னாள் அரிசியானது பலவகையில் பட்டை தீட்டப்பட்டு வெறும் சக்கையாத்தான் நாம் உணவென தின்று கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் பயிரிடப்படும் அத்தியாவசிய வகைகளில் ஒன்றுதான் நெல். பாரம்பரிய நெல் சாகுபடி சில வழிமுறைகளை உள்ளடக்கியது மற்றும் மண் வளத்தை அடிப்படையாகக் கொண்டு வளரும். நமது பாரம்பரிய உணவு அரிசி அதிக ஆற்றலை அளிக்கிறது, உடல் பருமன், புற்றுநோய், அல்சைமர் நோய், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. 

செரிமான குணங்கள்:
நன்கு சமைத்த அரிசியில் 68% நீர், 28% கார்போஹைட்ரேட், 3% புரதம் மற்றும் மிகக் குறைவான கொழுப்பு உள்ளது.

அத்துணை சிறப்புகள் பெற்ற அரிசியில் இன்று நாம் முழுக்க முழுக்க பாலிஷ் செய்துவிட்டு சாப்பிடும் இந்த சக்கையினால் சக்கரை நோய் வந்ததுதான் மிச்சம். 

அந்தக் காலத்திலும் நம் மக்கள் அரிசியைத்தான் சாப்பிட்டார்கள். அவர்களுக்கு இன்று வரும் நோயெல்லாம் அப்போது வரவில்லை. காரணம் அவர்கள் அரிசியின் மேலே இயற்கை ஒட்டி வைத்திருக்கும் சத்தையெல்லாம் உதிர்த்து விடாமல், பட்டை தீட்டாமல் சாப்பிட்டார்கள்.

‘ இயற்கை வேளாண் விஞ்ஞானி ‘ 
திரு. நம்மாழ்வார் அய்யா கூறியபடி அந்தக் காலத்தில் 2000க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் நம்மிடம் இருந்தது. அவையெல்லாம் நம் ஆரோக்கியத்துக்கு அரணாக இருந்தன. 

நம் முன்னோர்கள் அந்த அரிசி வகைகளை பட்டைதீட்டமால் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அந்தப் பாரம்பர்ய நெல்வகைகள் எல்லாம் நம் கையை விட்டுப் போனதற்கு, தமிழன் தன் பாரம்பர்ய விவசாயத்தின் மீது காட்டிய அலட்சியம்தான் காரணம்.

தமிழகத்தில் இப்போதும் பலர் உங்களுக்காக அவர்களால் முடிந்த பாரம்பரிய அரிசி வகைகளை இயற்கை முறையில் விளைவித்து அரிசியாக அளித்து வருகின்றனர்.

Thooyamalli Rice – Traditional Rice - Gramiyum  https://gramiyum.in

The nine traditional rice varieties of Tamilnadu - UlaMart https://www.ulamart.com

Traditional Rice: B&B Organics https://bnborganics.com

Buy Organic Traditional Rice Online https://www.thanjaiorganics.com

Buy Organic Rice online https://www.ulamart.com

தற்போது அமேசானில் கூட கிட்டத்தட்ட இவை எல்லாமே கிடைக்கிறது!
www.amazon.in 
www.amazon.com

சரி போகட்டும்!

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாரம்பரிய அரிசி வகைகள் இவை:

மாப்பிள்ளை சம்பா
கருப்பு கவுனி
குடவாழை
துளசிவாச சீரகச்சம்பா
கண்டசாலி
கைவரச்சம்பா
வாடன் சம்பா
தேங்காய்பூச் சம்பா
வாலான்
சிங்கினிகார்
பூங்கார்
ராஜமன்னார்
 பவானி
சம்பா மோசனம்
செம்பாளை
கொட்டாரச் சம்பா
ராஜயோகம்

அரசர்களின் அரிசி:

"கறுப்பு கவுனி" அரிசியை அரசர்கள் மட்டுமே பயன்படுத்தினார்கள். அதனால் இதை, ‘அரசர்களின் அரிசி’ என்பார்கள்

மிளகுச் சம்பா
நவரா
கருங்குறுவை
சொர்ண மசூரி
அறுபதாம் குறுவை
மைசூர் மல்லி
காலா நமக்
சின்னார்
கிச்சிலிச் சம்பா
காட்டுயானம்
பொம்மி
ஒட்டடம்
பால் குடவாழை
சொர்ணவாரி
தூயமல்லி
ஆத்தூர் கிச்சிலிச்சம்பா
தங்கச்சம்பா
ராஜமுடி
குழியடிச்சான்
நீலஞ் சம்பா
குண்டுக்கார்
கொத்தமல்லிச் சம்பா
கவுனி

கல்லுண்டை
முற்றின சம்பா
சேலம் சம்பா
மரத்தொண்டி
சிவப்புக்கவுனி
இலுப்பைப் பூச்சம்பா
திருப்பதி சாரம்
சிவப்புக் குருவிக்கார்
சண்டிக்கார்
குள்ளக்கார்
அனந்தனூர் சன்னம்
கைவரச்சம்பா
ஒட்டடையான்
பனங்காட்டுக் குடைவாழை
கொச்சின் சம்பா
பொன்னி
கருடன் சம்பா

“கருங்குறுவை என்ற ரகம் தோல் வியாதி, விஷக்கடி போன்றவற்றுக்கு ஏற்றது. கிச்சிலி சம்பா உடல் ஆற்றலுக்கும், சீரக சம்பா செரிமானத்துக்கும் உகந்தது என்பது போன்ற குறிப்புகளும் ஆயுர்வேதம் மற்றும் சித்தா நூல்களில் உள்ளன”

கள்ளிமடையான்
 காட்டுச்சம்பா
 மாப்பிள்ளைச் சம்பா
 சிறுகமணி சம்பா
 சண்டிகார்
 நீலம் சம்பா
 மடுமுழுங்கி
 சேலம் சன்னா
 பாசுமுகி
 காலா ஜீரா
 கைவரச் சம்பா
 சிங்கார்
 சித்த சன்னா

மாப்பிள்ளை சம்பா

 வைகுண்டா
 தீகார்
 சன்ன சம்பா
 முற்றின சம்பா
 ராஜமன்னார்
 மிளகுச் சம்பா
 ரத்தசாலி
 பிசினி
 கொத்தமல்லிச் சம்பா
 வாழைப்பூ சம்பா
 பொலிநெல்
 பால் குடைவாழை
 காட்டுப்பொன்னி
 ராஜயோகம்
 யானைக் கொம்பன்
 வெள்ளைக் குடைவாழை
 கம்பன் சம்பா
 ஆற்காடு கிச்சிலிச் சம்பா
 ராம ஜடாலே
வாலன் சம்பா
 இரவைப்பாண்டி
 ரசகடம்
 மரநெல்
 துளசி வாசனை சம்பா
 சீரகச் சம்பா
 காட்டுயானம்
 தூயமல்லி
 கல்லுண்டைச் சம்பா
 கண்டசாலி
 கந்தசாலா
 சிவன்சம்பா
 கலர்பாலை
 சீரகச் சன்னா
 ஒட்டடம்
 அனந்தனூர் சன்னம்
 பச்சை பெருமாள்
 கருத்தகார்
 கட்டச்சம்பா

செம்புளிச் சம்பா
 காலா நமக்
 சூரக்குறுவை
 கருப்பு சீரகச்சம்பா
 ராமஹல்லி
 குருவா
 கேரள சுந்தரி
 வெள்ளசீரா
 பாராபாங்க்
 காலாபத்தி பிளாக்
 மாலாபத்தி
 வடக்கன் சீரா
 தோடா பெருநெல்லு
 ஜீமாய்நாடு
 ஜீரக சாலா
 அரிமோடன்
 ஆனமோடன்
 பாளியாறல்
 குரியாகயாமா
 காலாச்சி பிட்

மரத்தொண்டி
 செந்நெல்
 கரிகஜனவள்ளி
 வெள்ளைக்கார்
  ரக்தாசுடி
 ராணிசால்
 நாசர்பாத்
 புல்பாப்ரி
 தங்கச் சம்பா
 மஞ்சள் பொன்னி
 அறுபதாம் குறுவை
 கொடகுவிளையான்
 துளுநாடான்
 சன்ன நெல்
 விஷ்ணுபோகம்
 ஆத்தூர் கிச்சிலிச் சம்பா
 சௌபாக்கி
 ஆம்பிமோகர்
 ஹரித்திகத்தி
 எளாய்ச்சி
 பாசுபதி
 தில்கஸ்தூரி

நமது தமிழக அரிசி வகைகள் யாவும் அதிக ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ மதிப்புகளைக் கொண்டுள்ளன. நம்மிடம் 5000 அரிசி வகைகள் அந்த காலத்தில் இருந்தன, ஆனால் இப்போது கிட்டத்தட்ட 200 ரகங்களை மட்டுமே தமிழ்நாட்டில் சேமிக்க முடிந்தது. இந்த 200 வகைகளும் அழிந்துவிடக் கூடாது. 

குறைந்த பட்சம் நம் தமிழ்நாட்டின் மதிப்புமிக்க இத்தகு அரிசி இனங்களைப் பற்றி இப்போது தெரிந்து கொண்டு அதை காப்பாற்றும் பொறுப்பு தமிழர்களான நமக்கு உண்டு.

மேற்படி அரிசி வகைகளை இணையம் மூலம் தேடி கண்டுபிடித்து ஒவ்வொரு வீட்டிலும் அரை கிலோ ஒரு கிலோவாவது ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் நாம் மேற்கொண்டால் அதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அத்தகு அரிசி வகைகளை, கைவிடாமல் விளைவித்துக் கொண்டு வருவார்கள்! 

இல்லை என்றால் அந்த மிச்ச சொச்சம் இருக்கிற அரிசி வகைகளும், நம்மிடமிருந்து அழிந்து போய்விடும்! அதனால் நாம் எல்லோரும் சேர்ந்து அதை காப்பாற்ற முன்வர வேண்டுகிறேன்!

இது பற்றி நமது பற்பல அரசியல் தலைவர்களும் தமிழக அரசாங்கமும் கூடிக் கலந்து பேசி "தமிழர் பாரம்பரிய நெல் ரகங்கள் காப்பாற்றும்" ஒரு அமைப்பை ஏற்படுத்தவும் மிக்க  அன்புரிமையுடன் கோருகிறேன்!

-YozenBalki 

(இவை இணையத்தில் திரட்டப்பட்ட தகவல்கள்! இது போன்ற நம் மரபு சார்ந்த செய்திகள், கடல் கடந்த நாடுகளில் வாழும் நம் தமிழின குடும்பங்களிலும் இது பரவ வேண்டும் என்று பதிவு செய்திருக்கிறேன்!)