
பெங்களூருவில் நேற்று நம் சுற்று சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் மரபணு மாற்றம் செய்யப்பட்ட Bt (Bacillus Thuringenesis) கத்திரிக்காய் பற்றிய கருத்தரங்கில் ரொம்பதான் கோபப் பட்டாராம். அதாவது BT கத்திரிக்காய் எதிர்ப்பாளர்களை மனநலம் இல்லாதவர்கள் என்று தாக்கும் அளவுக்கு அவர் ரொம்பவே உணர்ச்சி வசப் பட்டு பேசியிருக்கிறார்.
இந்தியாவில் அனைத்து விவசாய அமைப்புகளும், சமுக ஆர்வலர்களும் , மற்றும் பல்வேறு விஞ்ஞானிகளும் BT கத்திரிக்காய்க்கு பெரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் . மேலும் மேற்கு வங்கம், பீகார், ஒரிசா கேரளா கர்நாடகா, மத்ய பிரதேஷ் போன்ற மாநிலங்கள் அதற்க்கு அனுமதி மறுத்துள்ளன. இந்நிலையில் அமைச்சருக்கு மட்டும் ஏன் இந்த பதைப்பு- ஆத்திரம் என்று விஷயம் தெரிந்தவர்களுக்கு தெளிவாகவே புரிந்திருக்கும்.
என்ன செய்வது ? அதிகாரம் படுத்தும் பாடு என்பதோடு காலகாலமாக மண்ணில் உழுது பாடுபடும் விவசாயிகளுக்கு ஆங்கிலம் பேசும் முழுக் கால் சட்டை அமைச்சர்கள் ..விரல் நுனியில் மண்ணு படாமல் விவசாயம் சொல்லிக்கொடுக்கிற காலமாகப் போய்விட்டது! எல்லாம் கலியின் கொடுமை!
BT கத்திரிக்காயின் வண்டவாளத்தை நீங்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்:
" Bt Brinjal is being developed in India by M/s Mahyco [Maharashtra Hybrid Seeds Company]. Now, the company wants to take up large scale field trials with the permission of the GEAC in 2006-07.......
http://www.csa-india.org/downloads/GE/bt_brinjal_briefing_paper.படப்
http://business.rediff.com/interview/2010/feb/08/inter-introducing-bt-brinjal-in-india-will-be-disastrous.ஹதம்
-மோகன் பால்கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: