Translate this blog to any language

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

"என்னிடம் மந்திரக்கோல் இல்லை" என்று சொல்லும் மன்மோகன் - I have No Magic wand!!!



சில நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 15-இல் செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடியை  ஏற்றி வைத்துவிட்டு  நம்ம பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார்:


இனி நீங்களும் கீழ்க் கண்ட துறைகளில் பணியாற்றினால் கஷ்டப் பட்டு எதற்கும் மெனக்கெட வேண்டாம் இப்படிச் சொல்லுங்கள் அது போதும் :

"திருட்டை ஒழிக்க எங்களிடம் எந்தவிதமான  மந்திரக் கோலும் இல்லை" - காவல் துறை 

" எழுத்தறிவின்மையை ஒழிக்க எந்தவிதமான மந்திரக்கோலும் இல்லை"
 - கல்வித் துறை

" குடிநீர் தட்டுபாட்டை ஒழிக்க.....இல்லை" - குடிநீர் வாரியம் 

" மின்தட்டுப் பாட்டை ஒழிக்க.....இல்லை" - மின்சார வாரியம்

" வேலையின்மையை ஒழிக்க ..... இல்லை" - வேலை வாய்ப்புத் துறை

"குண்டும் குழியுமான மண் சாலைகளை ஒழிக்க......இல்லை" 
- நெடுஞ்சாலைத் துறை 

" நோய்களை ஒழிக்க எந்த விதமான மந்திரக் கோலும் இல்லை"
- சுகாதாரத் துறை

அவ்வளவு ஏன்?

நீங்கள் மாணவராய் இருந்தால் உங்கள் பெற்றோரிடம் இப்படிச்
சொல்லுங்கள்:
" அதிக மதிப்பெண்கள் பெற என்னிடம் எந்தவிதமான மந்திரக் கோலும் இல்லை".

ஒரு கணவராய் இருந்தால் உங்கள் மனைவியிடம் இப்படிச் சொல்லுங்கள்:
" இன்னும் பொறுப்புடன் நடந்து கொள்ள என்னிடம் எந்த விதமான மந்திரக் கோலும் இல்லை".

ஒரு நிறுவனத்தில் பணியாற்றினால் உங்கள் அதிகாரியிடம் இப்படிச் சொல்லுங்கள்: 
"இதைவிட நன்றாக வேலை பார்க்க என்னிடம் எந்த விதமான மந்திரக் கோலும் இல்லை"

இப்படிப்பட்ட ஒரு அருமையான பொன்மொழியை சொல்லித்தந்த "மண்ணு"
வாழ்க-வாழ்க! 

எப்படியோ நாடு நாசமாய்ப் போய் 
பேய்கள் அரசாளட்டும்!

(பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்...என்பார்கள்.
தரும நியாயம் எதுவும் பார்க்காமல் வெறும் சட்டம்/புள்ளி விவரம் மட்டும் பேசும் பேய்கள் இருந்தால் எந்த நாடும் உருப்படாது!)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: