இது உளஇயல் கலைஞன் யோஜென் பால்கியின் வலைப் பூந்தோட்டம்: A Chennai Psychologist
Translate this blog to any language
திங்கள், 10 நவம்பர், 2008
தேசம் செழிப்பாயிற்று!
அது மிகவும் குறுகலான சந்து
முதல் நாள் !
இரண்டு ஆணவக் காரர்கள்
எதிர் பாராமல் சந்தித்துக் கொண்டனர்.
அங்கே
கடும் சண்டை உருவாயிற்று!
சாம்ராஜ்யங்கள் அழிந்தன!
இரண்டாம் நாள்!
ஒரு ஆணவக் காரனும், மற்றொரு நல்லவனும்
எதிர்பாராமல் மோதிக் கொண்டனர்!
அங்கே
வெறும் சலசலப்பு உண்டாயிற்று!
நாட்டில் நல்லதும் நடக்கவில்லை-
கெட்டதும் நடக்கவில்லை!
மூன்றாம் நாள்!
ஒரு நல்லவனும் இன்னொரு நல்லவனும்
எதிர்பாராமல் மோதிக் கொண்டனர்!
'குற்றம் தன்னுடையதே' என்று
இருவரும்
ஒருவரையொருவர் மன்னிப்புக் கேட்டு
மன்றாடினர்!
அங்கே
ஒரு உன்னத நட்பு உருவாயிற்று;
அவர்களது தேசம் செழிப்பாயிற்று!
-மோகன் பால்கி
நான் இயற்கையின் கூறு!
இறுக்கமாய் எனைப் பற்றி
என்னிலிருந்து
என் மேல் உயர்ந்தவன் !
எனது கிளைகளில்
பூத்துக் கனிபவன் !
என்னை
எந்த மனித சக்தியும்
திசை திருப்பி
வீழ்த்தி விட முடியாது!
சேற்றிலே பிறந்தாலும்
செந்தாமரை எப்படி
சேற்றில் ஒட்டாமல்
நீர் பரப்புக்கு மேலே உயர்ந்து
கம்பீரமாய் மலர்கிறதோ
அவ்வாறே
மனிதர்களுக்கு மத்தியில்
பிறந்தாலும்
நான்
மனிதனல்லன் !
நான்
பஞ்ச பூதங்களின் கலவை
இயற்கையின் அடையாளம்!
ஆதியந்தமற்ற
இப்பிரபஞ்சத்தின்
ஓர் உன்னதக் கூறு!
-மோகன் பால்கி
செவ்வாய், 4 நவம்பர், 2008
கூடார அடிமைகள்!
இன்னும் பயன்படுத்தாத
ஒரு வெறும் கருவியே ஆகும்!
எந்த ஒரு மனிதனும் பொருள்களும்
ஆராய்ச்சிக்கு உட்பட்டைவையே!
வெற்று நம்பிக்கைகளும்
வெறும் மூடக் கொள்கைகளும்
எவரையும் முன்னேற்றுவது இல்லை!
தன்னலமும் அதீத எதிர்பார்ப்பும் கொண்ட
சராசரி மக்கள்தான்
ஒரு சாதாரண மனிதனை
கடவுள் தன்மை கொண்டதொரு
பெரும் மகானாக சித்தரிக்க
பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள் !
காரணம் யாதெனில் ,
அது மறைமுகமாக
தனக்கே நன்மை செய்து கொள்வதற்கான
ஒரு 'தலைகீழ் முயற்சியே' எனலாம் !
அதாவது,
'இன்ன சாமியாரின் சீடன் நான்'
என்று பறை சாற்றுவதன் மூலம்
எதுவும் செய்யாமலேயே
ஒரு அங்கீகாரத்தை பெற்று விடும் சுயநலம்
அங்கு மறைந்து கிடக்கிறது!
மேலும்,
கூட்டம் அல்லது கூடாரம் என்பது
நல்லதொரு பொழுது போக்கையும்
ஒரு வித
பாதுகாப்பு உணர்ச்சியையும் தருவதனால்
மனிதர்கள்
தன்விருப்பத்துடனேயே
இதுபோன்ற
"பொய்மை கூடாரங்களைத்"
தேடியலைந்து நிரந்தரமான
அடிமையாகி விடுகிறார்கள் !
உண்மையோவெனில்,
வெட்டவெளியில்
ஒரு
"உண்மை-தேடியின்" வரவுக்காய்
தன்னந்தனியே அது
பொறுமையாய்க்
காத்திருக்கிறது!
-மோகன் பால்கி