மனமென்ற ஒன்றில்லை மனமே அக்து
தினம்சேரும் எண்ணம்என்று அறிவாய் நீயும்!
உடலென்ற யாதொன்றும் இல்லை அக்தோ
உறுப்புகள் ஒன்றிணைந்த கூட்டே அன்றோ?
துண்டித்த விரலன்று யாக்கைக் கிள்ளி
மண்ணிட்ட நகத் துணுக்கு விரலும் இல்லை!
உறுப்புகள் உடல் சேர்ந்த சேர்க்கை யாவும்
தருகின்ற தோற்றம்நம் யாக்கை யாகும்!
நகமின்றி விரல்வாழும் யாக்கை போலும்
விரல்இன்றி உயிர்வாழும் வாழ்க்கை நாளும்!
இருமனிதர் சிலர்சேர்க்கை குழுவாய் மாறும்
பெருங்குழுக்கள் கூடுவதை கூட்டம் என்பர்!
மனிதனிலை கூட்டமது சுட்டுச் சொல்லாம்
எண்ணமதும் மனமன்று உறுப்புக்கள் உடலிலவாம்
பிரித்துப் பார்க்கையிலே அவ்வுறுப்பும் ஐம்பூதம்
பொருந்தியது தேரிந்ததுவே மற்றும் ஆங்கே
நீர்நிலமும் தீக்காற்றும் ஆகாயப் பெருவெளியும்
வேறுவேறு எனத்தோன்றி ஒன்றுமற்று ஒன்றாகும்
அவ்வொன்றும் வெறுமைக்குள் சூன்னியத்தி னின்று
ஒவ்வொன்றாய் மறைந்திருந்து வெளியாகும் நன்று!
மாயமிது மாயனவன் லீலையிது காண்கில்லாய்
காயமிதும் இதில்வந்த நானுமதும் எல்லாம்
வெறுமையென அறிகில்லாய் மனமே நீயே!
பெருஞானம் இதுமுக்தி உணர்கின்ற நாளே!
- YozenBalki
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: