வாழ்வு ஒரு ஞானாசிரியன்!
அது
நூலகங்களில்
அடுக்கி வைக்கப் பட்டிருக்கிற
ஏராளமான புத்தகங்கள்
கற்றுத் தருவதைக் காட்டிலும்
அதிகமானதை
நமக்குக் கற்றுத் தருகிறது!
ஆயினும்
வாழ்வின் படிப்பினைகளை
நாம் நம்பத் தயாரில்லை!
மேலும்
உண்மைகளை விட
நாம் பொய்களையே
அதிகம் நேசிக்கிறோம் !
ஏனெனில்
பொய்மை எப்போதுமே
அழகு மிக்கது போன்றும்
நம்பிக்கையூட்டுவது போன்றும்
தோற்றம் அளிக்கிறது !
- மோகன் பால்கி
No comments:
Post a Comment
You can give here your comments: