
அவரும் ஏதோ ஒரு பெண்ணும் சேர்ந்து.....
(உங்கள் கண்களுக்கு மேலே உள்ள படத்தில் எலிகள் போன்று தெரிந்தால் நான் அதற்கு பொறுப்பில்லை. அதற்காக அவர்களின் அந்தரங்கங்களை ஆயிரம் தரம் போட்டு இந்த டிவி-காரர்களும் பத்திரிக்கை காரர்களும் நம் வீட்டை அசிங்கம் பண்ணியது போன்று நம்மால் இங்கே பண்ண முடியாது! )
.....ரகசியமாக எப்படி இருந்தாலும் உங்களுக்கு என்ன வந்தது என்று அந்த சிலர் கேட்கிறார்கள். ஆனால், எனது அடிப்படையான வாதம் என்னவென்றால்,
வள்ளலாரின் பக்தர் ஒருவர் பிரியாணி கடை வைக்கலாமா?
பெரியாரின் அத்யந்த சீடர் ஒருவர் அலகு குத்தி காவடி எடுக்கலாமா?
காந்தியின் உண்மைத் தொண்டர் ஒருவர் கோட்சே-வை கொண்டாடலாமா?
இந்த மாதிரி அடிப்படைக்கே விரோதமான காரியங்களை ஒருவர் செய்தால் யாருக்கும் கோபம் வருமா வராதா?
இதை ஏன் சொல்கிறேன் என்றால், நித்தியானந்த சுவாமிகள் ஒரு பிரமச்சாரி. அதோடு அவர் பிரம்மச்சர்யத்தை, பல முறை ஒசத்தியாக பேசி உள்ளார். தான் அதை முழுமையாக கடை பிடிப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றியும் வந்து உள்ளார்.
அவரது சொந்தப் பேச்சை இங்கே நீங்களும் You-Tube-இல் காண்க: http://www.youtube.com/watch?v=ve0Z6B5Q0BMஒரு வேளை
இந்தப் படம் திடீரென்று அவரது சீடர்களால் நிறுத்தப் பெற்றால் கீழ்க் கண்ட இந்த லிங்கில் பாருங்கள்: (sorry its not uploading. takes time too longer. If you unable to see from you-tube as i said, you just send me a mail. I will send you the other link)
அதுதான் அவரை நம்பி பின்னால் சென்ற பல பிரமசாரிகளின் கோபமும் ஆத்திரமும். அது மட்டும் இன்றி, பெண் வாடையே படாத சாமியார் என்ற பிராண்டுக்கு இந்தியாவில் மதிப்பு அதிகம். அந்த பிராண்ட் போலி என்று தெரியும்போது மக்களின் ஆத்திரம் பன்மடங்கு ஆகிறது.
மற்ற படி உடற் கூறு விஷயங்கள் என்பது, அது ஒரு இயற்கை உபாதை மாதிரி என்று நமக்குத் தெரியாதா? கோபம் என்னவென்றால், இயற்கையான ஒரு விஷயத்தைத் தான் அடக்கி விட்டதாகப் பீற்றிக் கொண்டு, மக்களை மடையர்களாக்கும்- மற்றும் சாதாரண மக்களின் சம்சார வாழ்க்கையை கேலி வேறு செய்யும் ஒரு மிக கேவலமான இழி செயலைத்தான் நான் இங்கு கண்டிக்க விரும்புகிறேன்!
(ஆதி காலம் தொட்டு இந்த சோம்பேறிச் சாமியார்களுக்கு சோறு போடுவதே இந்த உழைத்துப் பிழைக்கும் சாதாரண சம்சாரிகள் தான்...ஆனால் என்ன ஒரு தெனாவெட்டாக எந்த ஒரு சாமியாரும் பேசுகிறார்கள் என்று பாருங்களேன்)
இந்த சாமியார்கள் என்னமோ வேற்று கிரக வாசிகள் போலவும், எல்லாவற்றையும் அதாவது... பசி, தாகம், மூச்சு விடுவது, மல ஜலம் கழிப்பது உட்பட எல்லாவற்றையும் விட்டு விட்ட மாதிரியும் நடிப்பதை பார்த்தால் பற்றிக் கொண்டு எரிகிறது! என்னமோ இவர்கள் ஆயிரம் வருடம் வாழ்ந்தவர்களைப் போலவும், நரை, திரை, மூப்பு கடந்தவர்கள் போலவும் வெட்டி பந்தா பண்ணுகிறார்கள்!
போங்கடா, நீங்களும் உங்கள் இயற்கையை மதிக்காத வெங்காய ஆன்மீகமும் என்று எட்டி மிதிக்கத் தோன்றுகிறது!
என்ன செய்வது? நாம் ஏமாறும் வரை ஏமாற்றுக் காரர்களும் இந்த பூமியில் நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கத்தானே செய்வார்கள்?
-மோகன் பால்கி
Test: Comment:
பதிலளிநீக்கு