இது உளஇயல் கலைஞன் யோஜென் பால்கியின் வலைப் பூந்தோட்டம்: A Chennai Psychologist
Translate this blog to any language
வெள்ளி, 17 ஜூலை, 2009
தமிழின் சிறப்பு இயல்புகள் !
நண்பர்களே!
நான் ஏதோ ஒரு செய்திக்காக விக்கி பீடியாவை பார்க்க நேர்ந்த போது
தமிழ் பற்றி
நிறைய செய்திகள் இருந்தது. நீங்களும் பாருங்களேன். உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்!
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D#.E0.AE.A4.E0.AE.AE.E0.AE.BF.E0.AE.B4.E0.AF.8D_.E0.AE.AA.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.B1.E0.AE.BF.E0.AE.AF_.E0.AE.A8.E0.AF.82.E0.AE.B2.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D
அன்புடன்
மோகன் பாலு.
சென்னை.
I am primarily a social and analytical thinker. Besides I work as a Counseling psychologist & therapeutic sculptor since 1992. I devised my own Yozen techniques and methods to go to the core & solve 1001 different kinds of challenging psy-issues within few days!! Watch my media interviews.
Mail: yozenbalki@gmail.com
Mobile: +919840042904
My site: www.yozenmind.com
திங்கள், 13 ஜூலை, 2009
எனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம்
எனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம் 9.07.2009 வியாழன் அன்று காலை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள "மகேஷ் மஹால்" திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடை பெற்றது.
முன்தினம் புதன் கிழமை 8.07.2009 அன்று மாலை வரவேற்பு விழாவின் போது எடுத்த மணமக்களின் ஒளிப்படத்தை இத்துடன் தற்சமயம் இணைத்துள்ளேன். பிறகு மேலும் படங்களை இங்கு சேர்ப்பேன்.
உங்கள் நல்வாழ்த்துக்களை மானசீகமாக இங்கிருந்தே அனுப்பி வையுங்கள்!
மணமகள்: M.B.Valentina
மணமகன்: D.Vijay
I am primarily a social and analytical thinker. Besides I work as a Counseling psychologist & therapeutic sculptor since 1992. I devised my own Yozen techniques and methods to go to the core & solve 1001 different kinds of challenging psy-issues within few days!! Watch my media interviews.
Mail: yozenbalki@gmail.com
Mobile: +919840042904
My site: www.yozenmind.com
வெள்ளி, 12 ஜூன், 2009
நண்பர்களே! என் நலம் விரும்பிகளே!
நண்பர்களே! என் நலம் விரும்பிகளே!
எனது இளைய மகள் ம.பா.வானவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் வழியில் படித்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் ஆயிரம் மாணவ, மாணவியருக்கு ஊக்கப் பரிசாக மடிக் கணினிகள் அளிக்கும் திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் இரண்டாவது மாணவியாக வந்தமைக்கு தமிழக அரசின் சார்பில் 8.6.2009 திங்கட் கிழமை அன்று "மடிக் கணினி" (Lap top - Acer-Travel Mate 5730 ) வழங்கப் பெற்றது.
அவ்வமயம், தமிழக முதல் அமைச்சர் திரு.மு.கருணாநிதி அவர்கள், தமிழ் நாடு அரசு "தலைமை செயலகத்தில்" வைத்து எனது மகளுக்கும் மற்றும் ஒன்பது பேருக்கும் பரிசு வழங்கி சிறப்பித்ததை அனைத்து செய்தி ஊடகங்களும், தொலைக் காட்சிகளும் அன்று மாலையிலும் மற்றும் மறு நாளும்
வெளியிட்டு /ஒளிபரப்பின.
நிகழ்ச்சியின் போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் குற்றாலிங்கம், இயக்குனர் பெருமாள்சாமி, தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தராதேவி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மணி ஆகியோர் உடனிருந்தனர்.
( ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூன்று மூன்று பரிசுகள் வீதம் சென்னை மாவட்டம், திருவள்ளுவர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டத்துக்கு மட்டும் மேற்படி நாளில் முதல் அமைச்சர் கையால் பரிசு வழங்கப் பெற்றது. சென்னையில் மட்டும் மூன்றாம் பரிசு மற்றும் நான்காம் பரிசு பெற்ற இரண்டு மாணவர்களின் மொத்த மதிப்பெண்கள் ஒரே மாதிரி இருந்ததால் சென்னைக்கு நான்கு பரிசுகள் கிடைத்தன. மற்ற பிற மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பிறிதொரு நாளில் பரிசு தருவார்கள் என்று அறியப்படுகிறது)
அது மட்டுமின்றி சென்னை-பெரம்பூர் லூர்து பெண்கள் மேல் நிலைப் பள்ளியில், பள்ளியின் முதல் மாணவியாக தேறியமைக்கும் பள்ளியின் சார்பில் விரைவில் பரிசு வழங்கப் பெற உள்ளது.
இந்த நல்ல சேதிகளை நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மடிக்-கணினி பெறும் செய்தித் தாள் புகைப் படங்கள் சிலவற்றை இங்கு இணைத்து உள்ளேன். ( நடுவில் ரோஜா நிற சுடிதார் அணிந்து இருப்பது என் இளைய மகள் வானவி )
(With Pink colour Churidhar-standing with the Laptop at the centre, is my daughter)
Also click here to visit the URLs:http://www.dinamalar.com/ Arasiyalnewsdetail.asp?News_ id=11498
தினமலர் மற்றும் மக்கள் முரசு (இது இரண்டும்தான் ஈ-செய்தியாக எனக்குகிடைத்தது, மற்ற செய்தி தாள்கள் Hard-copy யாக என்னிடம் உள்ளன)
என்றும் அன்புடன்,
மோகன் பாலகிருஷ்ணா.
எனது இளைய மகள் ம.பா.வானவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் வழியில் படித்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் ஆயிரம் மாணவ, மாணவியருக்கு ஊக்கப் பரிசாக மடிக் கணினிகள் அளிக்கும் திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் இரண்டாவது மாணவியாக வந்தமைக்கு தமிழக அரசின் சார்பில் 8.6.2009 திங்கட் கிழமை அன்று "மடிக் கணினி" (Lap top - Acer-Travel Mate 5730 ) வழங்கப் பெற்றது.
அவ்வமயம், தமிழக முதல் அமைச்சர் திரு.மு.கருணாநிதி அவர்கள், தமிழ் நாடு அரசு "தலைமை செயலகத்தில்" வைத்து எனது மகளுக்கும் மற்றும் ஒன்பது பேருக்கும் பரிசு வழங்கி சிறப்பித்ததை அனைத்து செய்தி ஊடகங்களும், தொலைக் காட்சிகளும் அன்று மாலையிலும் மற்றும் மறு நாளும்
வெளியிட்டு /ஒளிபரப்பின.
நிகழ்ச்சியின் போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் குற்றாலிங்கம், இயக்குனர் பெருமாள்சாமி, தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தராதேவி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மணி ஆகியோர் உடனிருந்தனர்.
( ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூன்று மூன்று பரிசுகள் வீதம் சென்னை மாவட்டம், திருவள்ளுவர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டத்துக்கு மட்டும் மேற்படி நாளில் முதல் அமைச்சர் கையால் பரிசு வழங்கப் பெற்றது. சென்னையில் மட்டும் மூன்றாம் பரிசு மற்றும் நான்காம் பரிசு பெற்ற இரண்டு மாணவர்களின் மொத்த மதிப்பெண்கள் ஒரே மாதிரி இருந்ததால் சென்னைக்கு நான்கு பரிசுகள் கிடைத்தன. மற்ற பிற மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பிறிதொரு நாளில் பரிசு தருவார்கள் என்று அறியப்படுகிறது)
அது மட்டுமின்றி சென்னை-பெரம்பூர் லூர்து பெண்கள் மேல் நிலைப் பள்ளியில், பள்ளியின் முதல் மாணவியாக தேறியமைக்கும் பள்ளியின் சார்பில் விரைவில் பரிசு வழங்கப் பெற உள்ளது.
இந்த நல்ல சேதிகளை நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மடிக்-கணினி பெறும் செய்தித் தாள் புகைப் படங்கள் சிலவற்றை இங்கு இணைத்து உள்ளேன். ( நடுவில் ரோஜா நிற சுடிதார் அணிந்து இருப்பது என் இளைய மகள் வானவி )
(With Pink colour Churidhar-standing with the Laptop at the centre, is my daughter)
Also click here to visit the URLs:http://www.dinamalar.com/
தினமலர் மற்றும் மக்கள் முரசு (இது இரண்டும்தான் ஈ-செய்தியாக எனக்குகிடைத்தது, மற்ற செய்தி தாள்கள் Hard-copy யாக என்னிடம் உள்ளன)
என்றும் அன்புடன்,
மோகன் பாலகிருஷ்ணா.
I am primarily a social and analytical thinker. Besides I work as a Counseling psychologist & therapeutic sculptor since 1992. I devised my own Yozen techniques and methods to go to the core & solve 1001 different kinds of challenging psy-issues within few days!! Watch my media interviews.
Mail: yozenbalki@gmail.com
Mobile: +919840042904
My site: www.yozenmind.com
வெள்ளி, 29 மே, 2009
இந்தியா உதவியால் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் தோற்கடிப்பு !
| |||||||||||
|
நமக்கு பதவிகள் முக்கியம்; வெறும்-தமிழ் மொழி முக்கியம்.
அதை பேசும் மனிதர்கள் எங்கு செத்தாலும் நமக்கு என்ன?
நம் தமிழ் தலைவர்களுக்கு என்ன அக்கறை அங்கே இருக்கப் போகிறது.
அவர்கள்குடும்பம் ஹிந்தி, ஆங்கிலம் பேசி "ஹிந்திக் காரர்கள்"
காலடியில் உட்கார்ந்துபிழைத்துக் கொள்ளும்.
ஆனால் உலகம் முழுதும் பரவி வாழும் புலம்-பெயர்ந்த தமிழர்களுக்கு
யார் இனிகாவல் இருக்கப் போகிறார்கள்?
ஆறு கோடி தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கே - அதிலும் அவர்களுக்கு
வழிகாட்டியாக நாம் நம்பும் இங்குள்ள தலை சிறந்த தமிழ் தலைவர்களுக்கே,
இலங்கையில் நடக்கும் இனப் படுகொலையை பார்த்து மனம் பதறி
இதயம்வெடித்து 'சதை ஆடாத போது" மற்ற நாடுகளிலும் தமிழர்களுக்கு
இதே நிலை- (இதை விட மோசமான வரப் போவதில்லை) வந்தால், என்ன செய்து நாம் கிழித்துவிடப் போகிறோம்?
விதியே விதியே தமிழச் சாதியை என் செய நினைத்துலாயோ?
I am primarily a social and analytical thinker. Besides I work as a Counseling psychologist & therapeutic sculptor since 1992. I devised my own Yozen techniques and methods to go to the core & solve 1001 different kinds of challenging psy-issues within few days!! Watch my media interviews.
Mail: yozenbalki@gmail.com
Mobile: +919840042904
My site: www.yozenmind.com
திங்கள், 25 மே, 2009
இட்லர்-ராஜ-பக்ஷி ஒரு போர்க் குற்றவாளி!
இலங்கைப் பிரச்சனையை ஐக்கிய நாடுகளின் சபை தனது கைகளில் எடுத்து வைத்துக்கொண்டுள்ளது.
இது உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கு சற்று ஆறுதல் தரும் நிகழ்வாகும். 17 நாடுகளின் ஆதரவுடன் நாளை அதாவது 26.5.2009 அன்று இன்றைய இட்லர் 'ராசபக்ஷி' (Raja'butcher) இன் கொடுங்கோல் செயல்களை இனப் படுகொலைகளை வன்மையாக கண்டனம் செய்து 'போர்-குற்றவாளியாக' அவனை அறிவிக்க தீர்மானம் செய்து இருக்கிறார்கள்.
ஆனால், அந்தக் கொடியவனுக்கு ஆதரவாக களமிறங்கி ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்யப் போவது யார் தெரியுமா? கம்யூனிசம் பேசும் சீனா, ரஷ்யா ...அப்புறம் என்ன "சோனியாவின்- ஹிந்தியா" இவர்களுக்கு ஜால்ரா போடும் வேறு சில சில்லறை நாடுகள்.
தமிழன் என்றால் அவ்வளவு இளக்காரம் இந்த ஹிந்தியர்களுக்கு?
வெள்ளைக்காரன் நல்லவன் ஆகிவிட்டான்.
பிரிட்டன் தனது வரலாற்றுக் கரையை துடைத்துக்கொள்ள தயார் ஆகிவிட்டது. மேற்கு உலக நாடுகள் தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து சிங்களர்களால் நசுக்கப் படுவதை அறிந்து கொண்டு விட்டன. தமிழர்களின் மனித உரிமைகளை இலங்கையின் ஆளும் வர்க்கம் எந்த நாளிலும் மதித்து நடந்தது கிடையாது. இனியும் அது தமிழர்களை மதிக்கப் போவதில்லை.
இனிமேல் அங்கு
என்ன நடக்கப் போகிறது என்பதை நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
அமெரிக்க-அய்ரோப்ப்பியா நாடுகளின் தலையீட்டில் ஐ-நா மூலம் அங்கு ஒரு
சுதந்திர தனி நாடு அல்லது சம-உரிமை படைத்த சுயநிர்ணய தனி-மாநிலம் ஒரு சில மாதங்களில் அமைத்து தரப் படும்.
உலகத்தமிழர்களை நெகிழ்ச்சி கொள்ளத் தக்க அந்த நிகழ்வு மேற்கு நாட்டு மக்களுக்கும் அங்கு வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குமான பாசப் பிணைப்பை மேலும் அதிகரிக்கும். மேலும் தமிழகத்தில் வாழும் தமிழர்கள் உட்பட உலகில் வாழும் பத்து கோடி தமிழர்களுக்கும் ஒரு பெரும் உள்ளக் கிளர்ச்சியை அது ஏற்படுத்தும்.
தமிழர்களின் நியாயமான அந்த உரிமைகளை பெற்றுத் தந்த நாடுகளின் மீது அன்பும், அதற்க்கு எதிராக செயல் பட்ட நாடுகள் மீது வெறுப்பும், குறிப்பாக "ஹிந்தியா" மீது....வெறுப்பும் கோபமும் ஏற்படப் போவது காலத்தின் கட்டாயம்!
I am primarily a social and analytical thinker. Besides I work as a Counseling psychologist & therapeutic sculptor since 1992. I devised my own Yozen techniques and methods to go to the core & solve 1001 different kinds of challenging psy-issues within few days!! Watch my media interviews.
Mail: yozenbalki@gmail.com
Mobile: +919840042904
My site: www.yozenmind.com
புதன், 4 பிப்ரவரி, 2009
முத்துக் குமரன் - தீயை தின்றொரு தீபமானவன்!
முத்துக் குமரன்
எங்கள் - தமிழின
சொந்தங்கள் யாவர்க்கும்
சொத்துக் குமரன் !
ஈழ விடுதலைப்
போரின் எழுச்சியை
தீவிரப் படுத்திய
சித்துக் குமரன் !
உலகத் தமிழரை
ஒன்றாய் ஆக்கி
நெருப்பாய் மாற்றிய
வித்துக் குமரன்!
தமிழர் உளமெலாம்
தமிழுள நாள்வரை
தங்கி நிலைபெறும்
காவல் மதில்-அரண் !
-மோகன் பால்கி
இடுகைகள்:
Eelam-genocide Eelam-issue religious-help Why-failing,
Muthu kumaran-kavidhai,
tamil eelam,
Tamil kavidhai
I am primarily a social and analytical thinker. Besides I work as a Counseling psychologist & therapeutic sculptor since 1992. I devised my own Yozen techniques and methods to go to the core & solve 1001 different kinds of challenging psy-issues within few days!! Watch my media interviews.
Mail: yozenbalki@gmail.com
Mobile: +919840042904
My site: www.yozenmind.com
செவ்வாய், 13 ஜனவரி, 2009
உதவியா பொழுது போக்கா ?
"உதவி" என்பது
நம்முடைய ஒரு பகுதி நேரத்தையோ
அல்லது பணத்தையோ மற்றவர்களுக்காக செலவிடுவதாகும்!
அது
நிறைய நேரம் இருக்கும் போது
பொழுது போக்குக்காக மற்றவர்களுக்கு அதில் செலவிடுவதோ,
அல்லது நிறைய பணம் இருக்கும் போது புகழுக்காக
அதில் ஒரு பகுதியை செலவிடுவதோ அல்ல!
மாறாக,
நமக்கு நேரமே இல்லாத போதும், உதவி கேட்பவர்களுக்காக
நமது நேரத்தை ஒதுக்கி தருவதும்,
நம்மிடம் பணமே இல்லாத போதும்
உதவி என்று நம்மை அண்டி வருபவர்களுக்கு எப்படியேனும்
தன்னால் முடிந்த பொருளுதவி செய்வதுமே ஆகும்!
சுருக்கமாக சொல்வதானால், ஒரு கோடீஸ்வரன்
தன்னைப் பிறர் மெச்சிப் புகழ வேண்டும் என்று
திட்டமிட்டு செய்யும் பணிகள் உதவியன்று!
அது "தானம்" எனப்படும்!
அதே போன்று, ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி தனக்கு நேரம் போவதற்காக ஏதோ ஒரு சில சமூகப் பணிகளில் ஈடுபட்டு தனது நேரத்தை செலவிடுவதும் சமுதாய உதவி ஆகாது!
அது "பொழுது போக்கு" என்க!
-மோகன் பால்கி
நம்முடைய ஒரு பகுதி நேரத்தையோ
அல்லது பணத்தையோ மற்றவர்களுக்காக செலவிடுவதாகும்!
அது
நிறைய நேரம் இருக்கும் போது
பொழுது போக்குக்காக மற்றவர்களுக்கு அதில் செலவிடுவதோ,
அல்லது நிறைய பணம் இருக்கும் போது புகழுக்காக
அதில் ஒரு பகுதியை செலவிடுவதோ அல்ல!
மாறாக,
நமக்கு நேரமே இல்லாத போதும், உதவி கேட்பவர்களுக்காக
நமது நேரத்தை ஒதுக்கி தருவதும்,
நம்மிடம் பணமே இல்லாத போதும்
உதவி என்று நம்மை அண்டி வருபவர்களுக்கு எப்படியேனும்
தன்னால் முடிந்த பொருளுதவி செய்வதுமே ஆகும்!
சுருக்கமாக சொல்வதானால், ஒரு கோடீஸ்வரன்
தன்னைப் பிறர் மெச்சிப் புகழ வேண்டும் என்று
திட்டமிட்டு செய்யும் பணிகள் உதவியன்று!
அது "தானம்" எனப்படும்!
அதே போன்று, ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி தனக்கு நேரம் போவதற்காக ஏதோ ஒரு சில சமூகப் பணிகளில் ஈடுபட்டு தனது நேரத்தை செலவிடுவதும் சமுதாய உதவி ஆகாது!
அது "பொழுது போக்கு" என்க!
-மோகன் பால்கி
I am primarily a social and analytical thinker. Besides I work as a Counseling psychologist & therapeutic sculptor since 1992. I devised my own Yozen techniques and methods to go to the core & solve 1001 different kinds of challenging psy-issues within few days!! Watch my media interviews.
Mail: yozenbalki@gmail.com
Mobile: +919840042904
My site: www.yozenmind.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)