Translate this blog to any language

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

Oh Tamils! Be scattered as the homeless emigrants! இனிபூமியெலாம் நாடிலியாய் சிதறிப் போவோம்!




இதுசென்னை இதுசென்னை இதுதான் சென்னை
விதிஎன்னை விதிஎன்னை வைத்த தென்னே?

எதையெண்ணி எதைஎண்ணி பீடு கொள்வேன் 
விதையெல்லாம் வீணான பூமி தன்னில்!

தமிழ்பேசும் மக்களுக்குத் தலையூர் என்பார் 
தமிழர் கூவத்தூர்சேரியிலே ஓரம் வாழ்வார்!

பிழைப்புக்கு வந்தவனை 'ஆண்டை' ஆக்கி  
உழைப்புக்கு அவன்காலை நக்குவோர் யார்?

வழிப்போக்கர்  வாழ்வதற்கு வசதி செய்தே
வழிவந்த முதுநிலத்தை இழப்பார்தான் யார்?

மண்ணரசன்  குடிசைக்குள் முடங்கிச் சாக
நாடோடி நாலடுக்கில் வாழ்வ துண்டா?
   
என்பாட்டன் முப்பாட்டன் இங்கிருந்தான் 
எண்ணற்ற சொந்தங்கள் இங்கே உண்டாம்!

அதனாலே வியப்பொன்றும் உள்ளே உண்டு 
"எதனாலே நமக்கிங்கு நிலங்கள் இல்லை?

உயர்ந்துள்ள மாளிகையில் நண்பர் இல்லை?
பெயர்கின்றோம் ஊர்விட்டு ஏனாம்" என்றே!

தெருப்பெயரில் முதலியார்கள் செட்டியார்கள் 
வன்னியர்கள் பிள்ளைமார்கள் பழைய சேதி!

அந்நியர்கள் தமிழறியார் பிழைக்க வந்தார்  
தமிழ்வீதி தமிழூர்தான் வாழ்வோன் வேற்றான்!!

புரியாத மொழிச் சத்தம் வீதியெல்லாம் 
ஒருவீட்டில் தமிழனி(ல்)லை என்ன நியாயம்?

தெருத் தெருவாய் ஊர்வூராய் கொள்ளைபோக
நறுந்தமிழர் நாடுஇனி இல்லை ஆகும்!

இலக்கியத்தோர்  'பட்டிமன்றப்' பேதையரே கேளீர்!
நம்இனமழிந்த பின்னாலே தமிழ் எதற்காம்?

சுற்றியொரு முற்றுகைக்குள் சுருங்கிக் கொண்டு
பழம்பாட்டி 'தமிழ்க் கனவு' கதைப்பார் உண்டோ?

இன்னும்நாம் 'ஒருதேசக்' கதைகள்  பேசி 
இருக்கின்ற மண்விட்டே ஓடு கின்றோம்!

உன்திண்ணை  உன்வாசல் உந்தன் கூடம் 
நீயுறங்கும் கட்டில்மேல் அந்நியன் வாசம்!

'அண்ணனுக்கு' அங்குலமும் தருவதிலை நாமே
அன்னியர்க்கோ அன்னைநிலம் தந்துவிட்டோம்!

நம்வாசல் நம்கோயில் முடிந்த தென்க!
வந்தவனோ வரலாற்றில் புரட்டு செய்வான்!

பளிங்குநிற 'மந்திர்கள்' பல்லடுக்கம்  கட்டி
தெளிவாகச்  சொல்வான் 'நீ நாடிலி' என்றே!

இனி,

வாபோவோம் பாலைவனம் ஒட்டகம் மேய்ப்போம்!
பணிவாக அன்னியர்கள் தாள்பணிவோம் வா!

ஊரூராய் நாடோடி வாழ்க்கை 'தாழ்ந்து'
நாடாண்ட பழங்கதைகள் பிதற்றுவோம் வா!

தென்னிலங்கை தமிழ்மக்கள் சீரழிந்த கதையாய் 
நாம்பூமியெலாம் அகதிகளாய்ச்  சிதறிப் போவோம்!