Translate this blog to any language

புதன், 27 செப்டம்பர், 2023

நீதிபதி சந்துருவைப் போல வாழுங்கள்!

1996ல் எனக்கு திருமணம். 
அது சாதி மறுப்புக் காதல் மணம்.

அவர்கள் பெயர் பாரதி. 
பச்சையப்பன் கல்லூரியில் 
அவர் வரலாற்றுத்துறை பேராசிரியர். 

பாரதியின் வருகைக்குப் 
பிறகுதான் மறுபடியும் 
எனக்குக் குடும்பம் வந்தது. 
பொறுப்புகளும் வந்தன. தான் தோன்றித்தனமான வாழ்க்கை கட்டுப்பாட்டுக்கு வந்தது. 

எங்களுக்கு 
கீர்த்தி என்று ஒரு மகள். 

பொருளாதார ரீதியாக 
ஓரளவு நல்ல நிலை 
என்றாலும் 
பணத்துக்காக எந்த வழக்கையும் 
நான் எடுத்து நடத்தியதில்லை. 

ஏழைகளுக்காகவே அதிகம்
வாதாடி இருக்கிறேன்.

இந்நிலையில் 
அப்போது நீதிபதியாக இருந்த 
வி.ஆர்.கிருஷ்ணய்யர், 
என்னையும் நீதிபதி ஆகச் சொன்னார். 

அதை ஏற்று இருமுறை நீதிபதிக்காக 
விண்ணப்பித்தேன். 
'இவர் தீவிரவாதிகளுக்கான 
வக்கீல்’ என்று சொல்லி 
அப்போது தமிழக 
முதல்வராக இருந்த ஜெயலலிதா 
எனக்கு போஸ்டிங் போட மறுத்தார்.

பிறகு 2006 ஆம் ஆண்டில்
 ‘வழக்கறிஞர் என்பது தொழில். 

யாருக்காகவும் 
யாரும் வாதாடலாம். 
இதைக் காரணம் காட்டி 

நீதிபதி பொறுப்பைக் 
கொடுக்காமல் இருக்க முடியாது’ 
என உச்ச நீதி மன்றம் 
சொல்லிய பிறகு 
என்னை நீதிபதியாக நியமித்தார்கள். 

நீதிபதியாக நான் பணியில் 
இருந்த காலத்தில் 

*96 ஆயிரம்*
 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியிருக்கிறேன்.

இந்தியாவிலேயே 
இவ்வளவு வழக்குகளுக்கு 
யாரும் தீர்ப்புச் சொன்னதில்லை. 

ஆந்திராவைச் சேர்ந்த 
நீதிபதி ஒருவர், ‘

இந்திய நீதிமன்றங்களின் 

*சச்சின் சந்துருதான்*… 

அவரது ஸ்கோரை முறியடிக்க யாருமில்லை…’ 
என எழுதியிருக்கிறார்.

நான் அமர்ந்தால் 
எந்த வாய்தாவும் கிடையாது. 
தீர்ப்புதான். 

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட 
டிக்டேஷன் செய்வேன். 

*‘சந்துருவுக்கு மட்டும்*
*வாரத்துக்கு 8 நாள்’ என* 
வி.ஆர்.கிருஷ்ணய்யர்*
கிண்டல் அடிப்பார். 

நீதிபதிகளுக்குப் பாதுகாப்புக் 
காவலர் கொடுப்பது வழக்கம். 

எனக்கு அப்படி யாரும் வேண்டாம் 
என எழுதிக் கொடுத்தேன். 

மக்கள் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை. 

கார் கூட பயன்படுத்த மாட்டேன். 

பெரும்பாலும் 
பஸ், ரயில்தான்.

பதவிக்கு வந்ததுமே 
என் சொத்து விவரங்களைச் சமர்ப்பித்தேன். 

பல சீனியர்கள் இதனால் 
என் மீது கோபம் அடைந்தார்கள். 

கடைசியில் அனைவரும் 
சொத்துப் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் 
என வேண்டுகோள் வந்தது. 

எனது மகள் கீர்த்தி 
*பல் மருத்துவராக இருக்கிறார்*. ‘

ஒருவேளை நான் வழக்கறிஞராகி 
சுமாராக இருந்தால்… ‘

என்ன, 

சந்துரு மகளா இருந்துட்டு 
இப்படி சுமாரா இருக்க’ 
என்ற பேச்சு வரும். 
அதனால் வழக்கறிஞராக மாட்டேன்’ 
என கீர்த்தி சொல்லி விட்டார். 

என் நிழலில் வாழாமல் 
அவர் தன் துறையில் முன்னேறுவது 
மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு, 
என் மனைவிக்கு, 
மகளுக்கு 
எல்லாம் இந்த வாழ்க்கையைக் கொடுத்தது 
*கல்விதான்.*

 எங்களுக்கு மட்டுமில்லை… 
என் சகோதரர் களுக்கும் 
சகோதரிக்கும் 
கூட நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருப்பது 
*இந்த கல்வி மட்டும் தான்.*

நாம் மேற்கொள்ளும் பணியை 
எந்த அளவுக்கு சின்சியராக 
மக்கள் நலன் சார்ந்து 
செய்கிறோமோ 
அந்தளவுக்குச் சமூகத்தில் 
நமக்கு பெயர் கிடைக்கும். 
என் வாழ்க்கை 
எனக்கு உணர்த்தும் பாடம் இதுதான்.

ஓய்வுக்குப் பிறகு 
இன்றும் தினமும் படிக்கிறேன். 
படித்த நூல்களை லாரியில் 
ஏற்றி மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைப்பேன். 

இப்போது நடைபெறும் 
வழக்குகள் சார்ந்து 
என் கருத்துகளை வெளியிட்டு வருகிறேன். 

அந்த வகையிலேயே 
சமீபத்தில் 
மிசாவில் 
திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை 
என அவதூறு கிளம்பியபோது 

அதை மறுத்து ஆதாரங்களை வெளியிட்டேன். 

*மனித உரிமைகளுக்காகவும்* 
*ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்*
 என்றும் குரல் கொடுப்பேன்!

-நீதிபதி சந்துரு

கூடுதலாக அவர் 
இந்தியமாணவர்சங்கத்தில் 
SFI யில் செயல்பட்டவர் 
இடதுசாரி எண்ணம் கொண்டவர்.
 
நன்றி: 
சக்கரம்.காம்

Courtesy: Whatsapp University !!

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

சனாதன (அ) தர்மம் பெண்களுக்கு இதுதான் செய்தது!

பெண்கள் தங்களின் மார்பகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18  சாதிகள் பட்டியல் தெரியுமா?

இன்னைக்கு என்னமோ இந்து சனாதன தர்மம் பற்றி ரொம்ப பெருமையா பீத்திக்கிறானுங்க!!

(இதையெல்லாம் ஒழித்தது முற்போக்கான சில வெள்ளையர்கள், அதற்குப் பிறகு வந்த நமது நீதிக் கட்சி, அதற்கு பின் வந்த நம் பெரியார் இயக்க சிந்தனைகள் தாம்! 
தந்தை பெரியார் அவர்கள் இதே திருவாங்கூர் சமஸ்தானத்தில் குறிப்பிட்ட தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கவே கூடாது, நடந்தால் தீட்டு, என்ற கொடுமையை எதிர்த்து வைக்கம் போராட்டம் நிகழ்த்தி வெற்றி கண்டவர், என்பதும் நினைவு கூறத்தக்கது!)

அன்றைய திருவாங்கூர் சமாஸ்தானத்தின் மன்னர் ஆட்சியில் தோள் சேலை (மாராப்பு) அணிய தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள்: 

ஆக, இவர்கள் எல்லாம் மார்பகத்தை மூடாமலே எப்பொழுதும் இருக்க வேண்டும், பொது இடங்களில் வேலை பார்க்க வேண்டும் என்ற அநீதியான சட்டம் இருந்தது! ஒருவேளை அதில் ஒரு அழகிய பெண் இருந்தால் அந்த பெண்ணை மணமுடிக்கும் அல்லது வைத்துக் கொள்ளும் செல்வந்தர்கள் அந்த பெண்ணுக்கு மட்டும் சிறப்புரிமை வாங்க வேண்டும் என்றால் ம*** வரி கட்ட வேண்டும்! Breast Tax!!

அப்படி மு*** வரி கட்டாதவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு!
ஆதாரம்:
https://en.m.wikipedia.org/wiki/Breast_tax

இது ஏதோ மன்னர் காலத்தில் மட்டும் போடப்பட்ட சட்டமல்ல; ஈராயிரம் வருடங்களாக இந்த நாட்டில் இருந்த கொடுஞ்சட்டமே ஆகும்!


அந்த 18 சாதி பெண்கள் யார் யார் அறிவோமா?

1) குயவர் (மண்பாண்டம் தொழில் சாதியினர்)

2) நாடார் (மரம் ஏறும் தொழில் சாதியினர்)

3) கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் சாதியினர் (தேவர்)

4) துலுக்கப்பட்டர் (மாப்பிள்ளை) சாதியினர்.

5) இடையர் (கோனார்).

6) நாவிதர் (முடி திருத்தம்) சாதியினர்.

7) வண்ணார் ( சலவை தொழில்) சாதியினர்.

😎 சக்கிலியர் (துப்புரவு தொழில்) சாதியினர்.

9) பறையர் (பறையடிக்கும் தொழில்) சாதியினர்.

10) நசுரானியர் (சிரியன் கிறிஸ்தவர்) சாதியினர்.

11) குறவர் (கூடை முடைதல்) சாதியினர்.

12) வாணியர் (வாணிய செட்டியார்) சாதியினர்.

13) ஈழவர், தீயர் (இல்லத்து பிள்ளைமார்) மற்றும் அந்த சாதியோடு தொடர்புடைய மற்றும் போர் தொழில் செய்த தீயர் சாதியினர்.

14) பாணர் (ஆடல், பாடலுடன் கூடிய கலைத் தொழில்) சாதியினர். 

15) புலையர் (பறையருள் ஓர் உட்சாதி- வேட்டைத் தொழில்) சாதியினர்.

16) கம்மாளர் (ஆசாரி - இன்றைய காலத்தில் 'விஷ்வகர்மா' என்ற பெயரால் ஏமாற்றப்படும்) கைவினை தொழில் சாதியினர்.

17) கைக்கோளர் (முதலியார்) சாதியினர்.

18) பரவர் (முத்தரையர்) சாதியினர்.

மேலே குறிப்பிட்டுள்ள சாதியினர்கள் சனாதனம் தலைவிரித்தாடும் போது,
எந்த சனாதனிகள் இவர்களுக்குக் குலத் தொழிலைச் செய்ய நிர்பந்தித்தார்களோ, அதே சனாதனிகள்தான், அன்றைக்கு நிர்ப்பந்தித்த தொழிலை, இன்றைக்கு சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு மூலம் இப்போது 'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் ஸனாதனத் திட்டத்தை அறிவித்து, 'அவர்களுக்கான குலத் தொழிலை ஊக்குவிப்போம்' என வஞ்சகமாக அறிவித்திருக்கிறது.

மீண்டும் அனைவருக்குமான கல்வியை மறுத்து, முன்னேற விடாமல் தடுப்பதற்கு இந்த மாதிரியான சனாதன திட்டத்தை அறிவித்திருக்கிறது சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு. 

அதனால்தான், "சனாதனத்தை ஒழிப்போம்!" என்று ஓங்காரமான குரல் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது; ஒலிக்கட்டும்!

-From Twitter Friends