Translate this blog to any language

ஞாயிறு, 12 அக்டோபர், 2008

வெறும் சப்தம் !

எனது சில நூறு சொற்கள்
ஏதோ ஒரு மனிதனை
உள்ளும் புறமும் மாற்றி

அவனை மகிழ்வித்து
அடுத்தவர்களையும்
மகிழ்விக்கும் எனில்

அதற்காக நான்
ஆயிரம் சொற்களைப்
பேச தயார்!

அல்லாமல்

மனித மனங்களைப்
பண்படுத்தாத
எந்த ஒரு ஆடம்பரப் பேச்சும்

வெறும் சப்தமும்
சுய தம்பட்டமுமே ஆகும்!

- மோகன் பால்கி

Me - A son of this Soil ! நான் பூமியில் பிறந்த மனிதன்!

வானத்தில் இருப்பதாக
கருதப் படுகிற
தேவர்களைப் பற்றி
பேசுவதைக் காட்டிலும்
நான்
பூமியில் வாழ்கிற
மனிதர்களைப் பற்றி பேசுவதையே
பெரிதும் விரும்புகிறேன்!

ஏன் என்றால்
நான்
பூமியில் பிறந்த
மனிதன்!

- மோகன் பால்கி